Search

சுயம்வரம் – 3

ராஜேஷ் ஈ மெயில் அனுப்பி இரண்டு வாரங்கள் ஆகியிருந்தது. அலுவலகத்தில் வேளை பளு அதிகம் இருந்தது அவனுக்கு. 

பணி முடித்து வீடு திரும்பும் முன் அலுவலக நண்பர்களுடன் அருகே இருந்த ‘கஃபே டே(cafe day)‘ போனான் ராஜேஷ். 
அன்றைய வேலை பளுவின் அலுப்பு மிகுதியாக இருந்தது.தேனீர் அருந்திக் கொண்டே  ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். 
அப்பொழுது அவனது நண்பன் அருண், 
“உனக்கு வர போற பொண்ணு, பார்க்க எப்படி இருக்கணும்னு எதிர்பாக்குற?” என்றான் ராஜேஷிடம்.

“ரொம்ப சிம்பிள். பார்த்த உடனே ‘ஷீ இஸ் லுக்கிங் ப்யூட்டிஃபுல்‘ அப்படின்னு சொல்ல தோனனும், ‘ஷீ இஸ் சோ ஹாட்‘ ன்னு சொல்ற மாதிரி இருக்க கூடாது” என்றான் ராஜேஷ்.

“அப்போ என் ஆளு நேஹா பார்க்க எப்படி இருக்கா?”
என்று அருண் கேட்க, “வேணாம் டா சொன்னா உனக்கு கஷ்டமா இருக்கும்” என்று சொல்லி வீட்டுக்கு செல்ல தொடங்கினான் ராஜேஷ்.

அன்று வெள்ளிக்கிழமை, அடுத்த நாள் அலுவலகம் விடுமுறை என்பதால் நிம்மதியாக உறங்கினான். 

எழுந்து மின்னஞ்சலை பார்த்தால், ஞாயிறன்று  இரண்டு சுற்றுக்கும் தேர்வுநடக்கவிருப்பதாகவும் அதற்கு வருமாறு வந்திருந்த அழைப்பைப் பார்த்துமலைத்தான். 
ஐந்து நாள் கசங்கி போய் வீட்டில் வந்து சாய்பவர்களின் சுயத்திற்கு தூக்கம்தானே வரம். அந்த பொக்கிஷமான நேரத்தில் போய் தேர்வு அது, இதுவா என யோசிக்ககொட்டாவி தான் வந்தது ராஜேஷுக்கு. 
இருந்தாலும் அந்த பெண்ணை பார்க்கும் ஆவல் ஒருபுறம் சில்லென்று உணர வைத்தது. 
“ஐயோ.. முதல் சுற்று எழுத்து தேர்வாமே!! ச்சே.. பதினெட்டுவருஷமா சுத்தி சுத்தி அடிச்சுது. திரும்பியுமா?” என்று ஏதோ பழையபுத்தகங்களை எல்லாம் தேடத் தொடங்கினான்.
“என்னடா ஆச்சு. தூங்காம ஒட்டடை எல்லாம் அடிக்கிற?” என்று ஆச்சரியத்தில் மூழ்கிய அம்மாவை பார்த்து, 
“நீங்க வேற.. ஞாயித்துக் கிழம அந்த பொண்ணு டெஸ்ட் எழுத வர சொல்லியிருக்குஅம்மா. அதுக்காக தான் புக் எல்லாம் எடுத்துக்கிட்டு இருக்கேன்” என்றான்ராஜேஷ்.

சிறிது நேரத்தில் நண்பரை காண  சென்றிருந்த பத்மநாபன் வீடு திரும்பினார்.அவனது அம்மா நடந்ததை அவரிடம் கூற நேராக  அவனை நோக்கி நடந்தார்.

அவனது கையில் இருந்த புத்தகத்தை பார்த்தார்.

அந்த புத்தகத்தின் அட்டையில்  ஏதோ  “ஆர்.எஸ்.அகர்வால்” என்று ஆசிரியரின் பெயர் பதிந்திருந்தது.

சிரித்துகொண்டே, “என்ன புக் டா இது? நீ ஆளு மட்டும் தான் மாடு மாதிரிவளர்ந்திருக்க. அறிவு கொஞ்சம் கூட இல்ல” என்று அவர் கூறியவுடன் முகம்சிவந்தது ராஜேஷிற்கு.

“நாளைக்கு ரிட்டன் டெஸ்ட்க்கு நான் வேற என்ன தான் படிக்க?” என்றான் அவரிடம்.

“நீ இதுக்காக புதுசா எதையும் படிக்க வேணாம். போய் நிம்மதியா தூங்கு” என்றார் அவர். 
ராஜேஷின் இத்தனை வருட அனுபவத்தில் அவர் இப்படி சொன்னதே கிடையாது. 
ஆனால் அதை நினைத்து மகிழ முடியாத நிலையில் இருந்தான். அவனாலும் படிக்க முடியவில்லை. 
புத்தகத்தில் படிந்திருந்த தூசி அவனை பார்த்து சிரித்து வெறுப்பு வேறு ஏற்றியது.
மறுநாள் காலை எத்தனை பேர் வந்திருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டே தேர்வு நடக்கவிருக்கும் ஹோட்டலுக்கு சென்றான். 
வாகனத்தை பார்கிங்கில் நிறுத்திவிட்டு உள்ளே சென்றான். எத்தனை பேர்வந்திருப்பார்கள் என தோராயமாக எண்ணிப் பார்த்த பொழுது சுமார் 100 பேருவந்திருந்து பயமுறுத்தினார்கள்.
அங்கே ஒரு இருக்கையில் அமர்ந்திருந்த நபரை நோக்கி பின்புறத்திலிருந்து சென்ற ராஜேஷ்,  தலையில் ஓங்கி அடித்தான். 
யார் அது தலையில அடிக்கறது என்று கோவத்துடன் அந்த நபர் திரும்ப, 

“டேய் அருண் நாயே, நீ இங்க என்னடா பண்ற?”
என்றான் ராஜேஷ்.

“நீயா?? ம்ம்.. நீ எதுக்கு வந்தியோ அதுக்கு தான்” என்று கண் சிமிட்டினான் அருண்.

“டேய் உனக்கு தான் உன் ஆளு நேஹா இருக்காளே? பின்ன ஏன்டா வந்த.. இங்க!!”என்று ராஜேஷ் கேட்க, “அதெல்லாம் நீ கேட்க கூடாது” என்றான் அருண்.

“என்னமோ பண்ணு. எப்படியும் உனக்கு ஊத்திக்க தான் போவுது.”

“பொறாமையில் வெம்பாதடா.”

இவர்கள் பேசிக்கொண்டே இருக்க, ஒரு குரல் அனைவரையும் அறைக்குள்ளே வருமாறு அழைத்தது. 

இருவரும் அறைக்குள் சென்றனர். அருணும், ராஜேஷும் அடுத்தடுத்த இருக்கையில் அமர்ந்துக் கொண்டனர்.
அருண் ராஜேஷிடம் செய்கையில்,
“எனக்கு கொஞ்சம் அப்போ அப்போ காமி டா” என்று கேட்க, அவனை முறைத்தவாரே அனைத்து விரல்களையும் மடக்கி கொண்டு நடு விரலை மட்டும் உயர்த்தி  காட்டினான் ராஜேஷ்.

பெரியவர் ஒருவர் அறையிலிருந்த மேடையில் நின்றுக் கொண்டு, ஏதோ ஆங்கிலத்தில்ரொம்ப நேரம் ஆற்றிக் கொண்டிருந்தார்.பாவம் யாருமே கவனித்தது போல்தெரியவில்லை. 

அந்த பெண் அங்கே வருவாளா என்ற எண்ணம் அனைவர் இடையேயும் இருந்தது. ஆனால் அவள் வருவது போல் தெரியவில்லை.

தேர்வுக்குரிய  வினாத் தாளும், விடையளிக்க இரண்டு வெள்ளை தாள்களும் கொடுக்கப்பட்டன. 

பரீட்சைக்கு ஒரு மணி நேரம் அளிக்கப்பட்டது. தேர்வு தொடங்கியது என்றுஅறிவித்ததும், வெள்ளை காகிதங்களில் தங்கள் பெயரை எழுதிக் கொண்டிருந்தஅனைவரும் வினாத் தாளை திறந்தனர்.

தொடரும்…