Search

வீரபாண்டிய கட்டபொம்மன் விமர்சனம்

வீரபாண்டிய கட்டபொம்மன் விமர்சனம்

மே 5, 1959இல் வெளியான இப்படம் ஆகஸ்ட் 21, 2015இல் டிஜிட்டலில் ரீஸ்டோர் செய்யப்பட்டு மீண்டும் திரைக்கு வந்துள்ளது. சிவாஜியின் வீர கர்ஜனையை பெரிய திரையில் காணும் வாய்ப்பை மீண்டும் நல்கியுள்ளனர் சாய்கணேஷ் பிலிம்ஸ் பி.ஸ்ரீனிவாசலு.

கப்பம் கட்ட மறுத்ததோடு, கொள்ளையில் ஈடுபட்ட தனது அமைச்சரையும் ஒப்படைக்க மறுத்து வெள்ளையரின் கோபத்துக்கு ஆளாகிறார் வீரபாண்டிய கட்டபொம்மன். போர் மூள்கிறது.

வெள்ளையருக்கு எதிராகப் போராடிய முதல் வீரன் கட்டபொம்மன் என்ற வாய்ஸ் ஓவரோடு படம் தொடங்குகிறது. இந்த வரலாற்றுத் திரிபைக் கணக்கில் எடுக்காமல், படத்தின் கதையை சக்தி கிருஷ்ணமூர்த்தியின் ஒரு புதினமாகப் பாவித்தால் படம் மகத்தான காவியம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எனினும் டிஜிட்டலில் வெளியிடப்பட்ட கர்ணன், ஆயிரத்தின் ஒருவன் போல் இப்படம் தொடக்கம் முதல் கடைசி வரை ஈர்க்கவில்லை. காரணம், படம் ஒற்றை கருவை நோக்கமாகக் கொண்டு பயணிக்காததே! எப்பொழுதெல்லாம் சிவாஜி வெள்ளையருக்கு எதிராக கர்ஜிக்கிறாரோ அப்பொழுதெல்லாம் திரையரங்கம் அல்லோலகல்லோலப்படுகிறது.

பத்மினி, ஜெமினி கணேசன் காதல் அருமையாக காட்சிபடுத்தப்பட்டுள்ளது. ஜி.ராமநாதனின் இசையில், ‘இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே’ என பி.சுசீலா, பி.பி.ஸ்ரீநிவாஸ் பாடிய பாடல் இன்றளவும் ரசிக்க வைக்கிறது. எகிப்தின், கெய்ரோவில் நடைபெற்ற ஒரு திரைப்பட விழாவில், சிறப்பான இசையமைப்பிற்கான பரிசை இப்படம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாக்ஸன் துரையாக பார்த்திபனும், பானர் மேனாக ஜாவர் சீத்தாராமனும் அருமையாக நடிப்பை வெளிபடுத்தியுள்ளனர். எட்டப்பராக நடித்திருக்கும் வி.கே.ராமசாமி கச்சிதமாகப் பொருந்துகிறார். ராஜஸ்தான் கோட்டைகளை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையாகக் காட்டி, படத்தின் ரிச்னஸையும் கலரையும் அதிகப்பபடுத்தியுள்ளார் இயக்குநர் பி.ஆர்.பந்தலு.




சமீபத்திய பதிவுகள்

காணொளிகள்

கேலரி