
உலகத்தரத்துக்கு இணையாக தொழில்நுட்பத்தில் முன்னேறி வருகிறது தமிழ் சினிமா. அம்புலி 3D படம் மூலம் தமிழ்த் திரைப்பட உலகின் கவனத்தை ஈர்த்த தயாரிப்பாளர்கள் கே.டி.வி.ஆர். Creative Frames நிறுவனமும், இயக்குநர்கள் ஹரி-ஹரேஷ் இரட்டையரும் மீண்டும் இணைந்து வழங்கும் படம் இது. ‘ஆ ‘ என்ற சத்தம் அலறலாக வெளிப்படும்போது பயத்தையும், பயங்கரத்தையும், வலியையும் உணர்த்தும், இந்த வார்த்தையை விட பலமாக பயம் என்ற உணர்வை வெளிப்படுத்தும் வார்த்தை கிடையாது என்று கூறுகின்றனர் இயக்குநர்கள் ஹரி மற்றும் ஹரேஷ்.
‘ஆ‘ ஐந்து வித்தியாசமான தளத்தில் நடக்கும் திகில் கதை. ஜப்பான், துபாய், ஆந்திராவில் உள்ள ஓர் ஆளரவமற்ற நெடுஞ்சாலை, வங்கக் கடல் நடுவே, மற்றும் தமிழகத்தின் தென்கோடியில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள ATM ஆகிய இடங்களில் நடைபெறும் சம்பவங்களின் தொகுப்பு தான் ‘ஆ’. ஆவியுலகைப் பற்றி ஆராய மூன்று இளைஞர்கள் எங்கும் சுற்றி வர, அதில் அவர்களுக்கு ஏற்படும் பயங்கரமான அனுபவம் தான் ‘ஆ’ .
திறமையான கலைஞர்கள் என பெயர் எடுத்த அம்புலி கணேஷ், சிம்ஹா, மேக்னா, பாலா, எம்.எஸ்.பாஸ்கர், பாஸ்கி மற்றும் பலர் நடிக்கும் ‘ஆ’ அடுத்த மாதம் வெளிவரவுள்ளது.