
அடியேய் சீக்கிரம் சோத்த போடு என்றான் தன் மனைவி சுமதியிடம்.
ஏனுங்க இந்தாங்க என்று 3000 ரூபாய் எடுத்து நீட்டினாள்.
யாரு கொடுத்தா என்று கேட்டவனிடம்,
பணத்தை பார்த்து எரிச்சல்கொண்ட நல்லதம்பி,
“எப்போ வந்தாங்க வீட்டுக்கு” என்று கேட்டான் கோவமாக.
கால்மணிநேரம் இருக்கும் என்றால் சுமதி.
தட்டில் இருக்கும் உணவை கூட கண்டுகொள்ளாமல், பணத்தை எடுத்துக்கொண்டு வண்டியில் வெளியே புறபட்டான் நல்லதம்பி.
நாலு தெரு தாண்டி ஒருவரிடம், “ம.மு.க கட்சி ஆளுங்க இந்த பக்கம் வந்தாங்களா” என்று கேட்டான்.
அவரும் வழி சொல்லி அனுப்பி வைத்தார்.
சிறுது நேரத்தில் அவர்களை கண்டுபிடித்த நல்லதம்பி, கோவத்துடன் அவர்களை பார்த்து,
“யோவ்இதெல்லாம் உங்களுக்கே நல்லா இருக்கா, மத்திய அரசு, மாநில அரசுக்குஒதுக்கும் பணத்தை ஆட்டைய போடுறது பத்தாதுன்னு , இப்போ மாநில அரசு கட்சிநிதியிலிருந்து மக்களுக்கு ஒதுக்கும் பணத்தை கட்சி காரங்க நீங்க ஆட்டையபோடுறீங்களே இது உங்களுக்கே நியாயமா ??” என்றான் நல்லதம்பி.
ஒன்னும் புரியாமல் குழப்பத்தில் இருந்த கட்சி காரர் ஒருவர், “ஏனுங்க அண்ணா என்ன ஆச்சி, ஏன் கோவிசிக்குறீங்க ” என்று கேட்க,
“சும்மா இல்ல, நாலு வோட் இருக்கு என் வீட்டுல யோசிச்சிபாருங்க”, என்றுநல்லதம்பி கூறியதும் அதிர்ந்து போனார்கள் கட்சி காரர்கள், ஐயோ இந்தாங்கதெரியாம தப்பு நடந்துடுச்சி என்று கூறி சமாதானம் சொல்லி அனுப்பிவைத்தார்கள்.
இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் இன்னொருவர்
கட்சி காரர்களுள் ஒருவர், நிலைமை இப்படியே போனா தமிழ் நாடு நிலைமை ரொம்ப கஷ்டம் தான் என்று புலம்பியபடி நடையை கட்டினார்கள்.