வணக்கம்,
தீபாவளி வந்தாச்சு, பருவ மழையும் வந்தாச்சு… அப்படியே மழை பெய்யறப்போ, மொறு மொறுன்னு கொஞ்சம் காரமா பக்கோடாவும், டீயும் குடிச்சா.. எப்படி இருக்கும்…? இதோ செய்திடலாமே, ரொம்ப ஈஸியா….
தேவையான பொருட்கள்:
அரிசி மாவு- 1 படி
பொட்டுகடலை மாவு -1 படி
இஞ்சி -கையளவு
பச்சைமிளகாய் – 15
பூண்டு -2 கட்டி
சின்ன வெங்காயம் -1/4 கிலோ
உப்பு -தேவைக்கேற்ப
கறிவேப்பிலை -1 கட்டு
செய்முறை:
Step 1:
இஞ்சி,பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் இதை எல்லார்தையும், நல்லா தட்டி எடுத்துக்கோங்க. மிக்சியில் அரைச்சுடாதீங்க.. டேஸ்டே போயிரும்.. தட்டி எடுத்தால்தான் சுவையும் மணமும் கூடும்.
step 2:
அரிசி மாவு, பொட்டுகடலை மாவு, தட்டி வச்சது, உப்பு எல்லார்த்தையும் போட்டு நல்லா கலக்குங்க. கொஞ்சம் கொஞ்சமா தண்ணீர் தெளிச்சு கலக்குங்க.
step 3:
வர மாவு.இருக்க கூடாதுங்க, ரொம்ப தண்ணியும் விட்றகூடாது. தண்ணி இருந்தும் இல்லாமலும் இருக்கறாப்ல, இருக்கனும்.. கிள்ளி போட்டா உதிரியா வரணும்.
step 4:
இப்போ, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இந்த மாவை கொஞ்சம் கொஞ்சமா.. தேய்த்த வாக்கில் கிள்ளி போடவும்… நல்லா வேக விட்டு, முறுகலா எடுக்கவும்..
அவ்வளவுதாங்க… ரொம்ப ஈஸியா. செஞ்சர்லாம்…காற்றுபோகாதமாதிரி அடைச்சு வச்சா, 1 மாசத்துக்கு வச்சிருந்தாலும், நல்லா இருக்கும்…
– வசந்தி ராஜசேகரன்