Shadow

Author: Sathish Lucky

பிரச்சார கூட்டத்தில் திடீரென அமைச்சரை கட்டிப்பிடித்த பெண்.. கண்கலங்கிய அமைச்சர்!!

பிரச்சார கூட்டத்தில் திடீரென அமைச்சரை கட்டிப்பிடித்த பெண்.. கண்கலங்கிய அமைச்சர்!!

அரசியல்
ராயபுரம் தொகுதியில் ஏழாவது முறையாக அமைச்சர் ஜெயக்குமார் தேர்தலை சந்திக்கிறார்.ஏற்கனவே நடந்து முடிந்த ஆறு தேர்தலில் ஐந்து முறை அதே தொகுதியில் வெற்றி பெற்று மக்களின் செல்லப்பிள்ளையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் காலை தொடங்கி இரவு வரையிலும் வீதி தோறும், வீடுகள் தோறும் சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.நேற்று பஜனை தெருவில் அவர் பிரச்சாரத்திற்காக வந்தபோது உள்ள கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென ஒரு பெண்மணி அவர் அருகே வந்து அவள் கையை பிடித்து, "எங்க தெய்வம் நீதானய்யா நீதானய்யா கொரோனா காலத்துல எல்லா உதவியும் செஞ்சு எங்கள காப்பாத்துன தெய்வம் நீ தான நீ ஜெயிக்கணும்ய்யா என்று சொல்லி ஜெயக்குமாரின் கைகளை பற்றிக் கொண்டார். அங்கிருந்த அனைவரும் இந்த காட்சியை பார்த்து உறைந்து போனார்கள் அத்தோடு நிறுத்திக் கொள்ளாத அந்தப் பெ...
கலைஞர் கருணாநிதி வழியில் அமைச்சர் ஜெயக்குமார்….நம்ப முடியாத உண்மை!

கலைஞர் கருணாநிதி வழியில் அமைச்சர் ஜெயக்குமார்….நம்ப முடியாத உண்மை!

அரசியல்
திமுக தொண்டர்களுக்கு கருணாநிதி கடிதம் எழுதுவதை தன்னுடைய வழக்கமாக கொண்டிருருந்தார். உடன்பிறப்பே என்று தொடங்கும் அந்த வரிகளில் தான் கோடிக்கணக்கான தொண்டர்களை தன்வசப்படுத்தி இருந்தார். அதேபோல இப்போது அமைச்சர் ஜெயக்குமார் தன் ராயபுரம் தொகுதி மக்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை வீடுதோறும் அனுப்பியுள்ளார்.அந்தக் கடிதத்தில் இடம் பெற்றுள்ள வரிகள் இதோ!என்னுடலின் உயிர்மூச்சாய் என்னை இயக்கிக் கொண்டிருக்கும் ராயபுரம் தொகுதி சொந்தங்களே!1991 முதல் இதே தொகுதியில் உங்கள் பெருவாரியான ஆதரவோடு சட்டமன்ற உறுப்பினராக இப்போது வரை இருந்து கொண்டிருக்கிறேன். இதோ இந்த முறை ஏழாவது தடவையாக புரட்சித்தலைவர், இதயதெய்வம் அம்மா ஆகியோர் நல்லாசியுடன் உங்கள் வேட்பாளராக உங்களை தேடி வருகிறேன்.நினைவிருக்கிறதா? இத்தனை ஆண்டுகளில் எத்தனை தேர்தல் வந்தபோதும் தேர்தல் நேரத்தில் மட்டும் உங்களை சந்திக்க நான் வருகிறேன். யோசித்துப் பாருங்கள்,...
ராயபுரம் மக்களிடம் அதிகமான செல்வாக்கோடு அமைச்சர் ஜெயக்குமார்.. இந்த முறையும் அவர் தான்!!

ராயபுரம் மக்களிடம் அதிகமான செல்வாக்கோடு அமைச்சர் ஜெயக்குமார்.. இந்த முறையும் அவர் தான்!!

அரசியல்
தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கி இருக்கும் நேரம். கொளுத்தும் வெயில் அனல் பறக்கும் பிரச்சாரம் என தமிழகம் முழுக்க தேர்தல் களைகட்டியிருக்கும் நேரத்தில் ராயபுரம் தொகுதியின் நிலை எப்படி இருக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக சென்றோம் . கொளுத்தும் வெயிலில் வீதி வீதியாக நடந்தும், தொண்டர்கள் புடைசூழ சைக்கிளில் வலம் வந்தும் அமைச்சர் ஜெயக்குமார் பிரச்சாரம் செய்து கொண்டிருந்ததைப் பார்த்தோம். ஏழாவது முறையாக ஒரே தொகுதியில் ஜெயக்குமார் போட்டியிடுகிறார் என்பதைக் கேள்விப்பட்டோம். கடந்த 6 முறை ராயபுரம் தொகுதியில் போட்டியிட்டு 5 முறை வெற்றி பெற்றிருக்கிறார். இப்போது ஏழாவது முறையாக அவரே போட்டியிடுகிறார் எப்படி சாத்தியம் என்பது குறித்து பொதுமக்களிடம் பேச ஆரம்பித்தோம். அப்போது அவர்கள் சொன்ன பதில் இதோ உங்கள் பார்வைக்கு… 68 வயதான தங்கம் என்ற பெண்மணியிடம் ஏன் ஜெயக்குமாருக்கு ஓட்டு போடுறீங்க வேற யார...
ஒரே தொகுதியில் ஏழு முறை களம் காணும் மனிதர்!!

ஒரே தொகுதியில் ஏழு முறை களம் காணும் மனிதர்!!

அரசியல்
அரசியல் வரலாற்றில் பலரும் தொடர்ந்து, பலமுறை தேர்தலில் வேட்பாளராக நிற்பது உண்டு. ஆனால் எவ்வளவு பெரிய விஐபியாக இருந்தாலும் அவர்களும் கூட அவ்வப்போது தொகுதிகளை மாற்றிக் கொண்ட வரலாற்றை நாம் அறிந்திருப்போம்.ஆனால் தான் பிறந்த மண்ணில் தொடர்ந்து ஏழுமுறை தொகுதி மாறாமல் களம் காணும் ஒரே மனிதர் யார் என்றால் அவர்தான் அமைச்சர் ஜெயக்குமார்.1991 முதல் 2021 வரை ஏழு முறை ராயபுரம் தொகுதியின் ஒரே வேட்பாளர் யார் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லாமல் அதிமுக தலைமை இவரைத்தான் வெற்றி வேட்பாளராக களம் இறங்குகிறது. காரணம் தொகுதி மக்களின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் இவர்தான் என்பது அசைக்க முடியாத ஆணித்தரமான உண்மை. அதை நிரூபிக்கும் வகையில் கடந்த ஆறு தேர்தல்களில் போட்டியிட்டு 5 முறை வெற்றி பெற்றிருக்கிறார். இப்போது 7-வது முறையாக சந்திக்கும் இவர் ராயபுரம் மக்களின் குறைதீர்க்கும் மனுநீதிச்சோழனாய் வலம் வந்து கொண்டிருக்கிறார்...
ஒவ்வொரு நாளும் மகளிர் தினம் தான் – அமைச்சர் ஜெயக்குமார் பாராட்டு!

ஒவ்வொரு நாளும் மகளிர் தினம் தான் – அமைச்சர் ஜெயக்குமார் பாராட்டு!

அரசியல்
அமைச்சர் ஜெயக்குமார் எழுதிய மகளிர் தின வாழ்த்து மடல்.. அன்னையாய், சகோதரியாய், தோழியாய், மனைவியாய், மகள்களாய் வாழ்வின் எல்லா காலகட்டங்களிலும் நமக்கு உற்ற துணையாய் உயிர் துடிப்பாய் உடன் பயணிப்பது பெண்கள் தாம். கருவறை தொடங்கி, கல்லறை வரையிலும் ஆணினத்தின் அணுவாய் அடையாளமாய் இருப்பது பெண்கள். எங்கெங்கு காணினும் சக்தியடா, ஏழுகடல் அவள் வண்ணமடா என்றான் பாரதி. ஆம் திரும்பிய திசையெங்கும் பெண்கள் இல்லையேல் ஆண்கள் யார் என்பதே இந்த உலகிற்கு தெரியாமல் போய்விடும். அந்த வகையில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி என்று பாடிய பாரதியின் வரிகளை வாழ்நாளில் வாழ்க்கையாய் மாற்றிக் காட்டியவர் புரட்சித்தலைவி இதய தெய்வம் நம் அம்மா. சமூகநீதி, பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு அரசியல், அதிகாரம், ஆட்சி பீடம் என அடித்தட்டு முதல் அத்தனை பெண்களையும் தோல்வி பள்ளத்தாக்கில் இருந்து கைத்தூக்கி, வெற்றி சமவெளியின...
இஸ்லாமிய வீட்டு திருமண நிகழ்வில் அமைச்சரை பாராட்டிய பாக்யராஜ்!

இஸ்லாமிய வீட்டு திருமண நிகழ்வில் அமைச்சரை பாராட்டிய பாக்யராஜ்!

அரசியல்
நேற்று ஞாயிற்றுக்கிழமை மார்ச் 7 ம் தேதி மதியம் ஒரு மணி இருக்கும், சென்னை புரசைவாக்கம் தனியார் திருமண மண்டபத்தின் வாசல் முன்பு வந்து நிற்கிறது அமைச்சர் ஒருவரது கார்... அது இஸ்லாமிய பிரமுகர் ஒருவரது குடும்பத்தின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி. வந்தவர் யாரென அனைவரும் பாக்கிறார்கள்.... காரில் இருந்து இறங்கியவர் அமைச்சர் ஜெயக்குமார் என்பதை பார்த்ததும் மேடையில் பாடிக்கொண்டிருந்த இசைக் கலைஞர்கள் அப்போதே முடிவுக்கு வந்துவிட்டனர்,இனிமேல் நமக்கு வேலைக்காகாது அவரே பாடி விடுவார் என்று தங்களுக்குள் பேசிக்கொண்டது அவர்களை அறியாமல் மைக்கில் லேசாக ஒலித்தது. ஆனால் அதை கண்டுகொள்ளாமல் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த அமைச்சர் ஜெயக்குமார் மணமக்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டார். மற்றபடி அவருக்கு பாடும் நோக்கம் எதுவுமில்லை. ஆனால் இவர் ஏற்கனவே பல மேடைகளில் பாடல்களைப் பாடி மக்களை, தொண்டர்களை ரசிக்க...
இவர் யாரென்று தெரிகிறதா???

இவர் யாரென்று தெரிகிறதா???

அரசியல்
அசாத்தியங்களை சாத்தியங்களாக்கும் மனிதன்...விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கு முக்கியமான சான்றாக இருப்பவர்களில் இவரும் ஒருவர்.இந்த படம் எடுக்கும் போது வயது 15,ஒன்பதாம் வகுப்பு மாணவன்.பாரத சாரண சாரணியர் இயக்கத்தில் முனைப்போடு செயல்பட்டு அணித்தலைவராக கோலோச்சிய காலகட்டமது. எப்போதுமே இருக்குமிடத்தில் தான் முன் வரிசையில் நிற்க வேண்டும்.தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் இருந்திருக்கிறது. அதன் காரணமாகவே பள்ளியில் படிப்பிலும் சரி விளையாட்டு போட்டிகளிலும், பேச்சிலும் சரி அனைத்திலுமே முதல் மாணவனாக திகழ்ந்து வந்திருக்கிறார் இந்த சிறுவன். சென்னை ராயபுரத்தில் டான்பாஸ்கோ ஆரம்பப் பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பை முடித்துவிட்டு, ராயபுரம் கே.சி.சங்கரலிங்கம் நாடார் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை படித்து வந்த காலகட்டம் மிக முக்கியமானதாக இவருக்கு...
தருணத்தில் சிக்கிய தம்பதிகள்… மர்ம உருவத்தால் நேர்ந்த கொடுமை!

தருணத்தில் சிக்கிய தம்பதிகள்… மர்ம உருவத்தால் நேர்ந்த கொடுமை!

சினிமா
அகஸ்தியா கிரியேஷன்ஸ் சார்பில் டெல்லி பஞ்சாப் ரோட் லைனர் நிறுவனர் வெங்கட் செல்லப்பா தயாரிக்கும் படம் ‘தருணம்’. கன்னடம் மற்றும் தமிழில் தயாராகிறது. புதுமணத் தம்பதிகள் தேனிலவுக்காக பயணம் செய்கிறார்கள். அவர்கள் தங்கும் அறையில் ஒரு கருமையான உருவம் அவர்களை மிரட்டுகிறது. தம்பதிகள் அங்கிருந்து தப்பித்து ஊருக்கு வருகின்றனர். ஆனால், தம்பதிகள் வருவதற்கு முன்பே அந்த உருவம் ஊருக்கு வந்து விடுகிறது. அதை பார்த்து மிரளும் தம்பதிகள் அங்கிருந்து தப்பித்து வேறு ஒரு இடத்திற்கு சென்று விடுகின்றனர். அங்கும் அந்த கருப்பு உருவம் வந்து நிறுகிறது. இந்த தம்பதிகள் எங்கு சென்றாலும் அந்த உருவம் துரத்திக் கொண்டே செல்கிறது. அந்த உருவத்திடம் இருந்து தம்பதிகள் தப்பித்தார்களா இல்லையா..? என்பதே படத்தின் மீதிக் கதை. இதுவரை வெளியான பேய் படங்களிலேயே முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் உருவாகியுள்ளது ...
12,000 பேருக்கு வேலைவாய்ப்பு; அதிரடியாக களம் இறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்!

12,000 பேருக்கு வேலைவாய்ப்பு; அதிரடியாக களம் இறங்கிய அமைச்சர் ஜெயக்குமார்!

அரசியல்
உலகமே கொரோனா பாதிப்பால் அச்சத்தில் உறைந்து கிடக்கிறது. இந்த நேரத்தில் பல்வேறு நிறுவனங்களில் ஊதியக் குறைப்பு, ஆட்குறைப்பு போன்ற நடவடிக்கைகளால் தங்கள் எதிர்காலத்தை இழந்து நிற்பவர்கள் ஏராளம். இவர்களுக்கே இந்த நிலை என்றால் பெரும் கனவோடு, படித்து முடித்து வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கும் இளைஞர்கள் பலர் இன்று விரக்தியின் விழும்பில் நின்று எதிர்காலம் என்னவாகும் என்பதற்கு விடை தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் மக்கள் நலனை எப்போதும் நினைவில் வைத்துக்கொண்டு,அரசியல் கடந்து அனைவருக்கும் பொதுவான மனிதராக வலம் வரும் அமைச்சர் ஜெயக்குமார் புதிய முயற்சியை துவக்கியிருக்கிறார். அவரது சீரிய முயற்சியால் இதோ உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு காத்திருக்கிறது. ஆம் 12 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தருவதற்கு மிகப்பெரிய வாய்ப்பை கொடுத்திருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார...