Shadow

சினிமா

PEDDI ராம்சரண் – சிவராஜ்குமார் | திரையில் ஓர் அட்டகாசமான குரு சிஷ்யன் உறவு

PEDDI ராம்சரண் – சிவராஜ்குமார் | திரையில் ஓர் அட்டகாசமான குரு சிஷ்யன் உறவு

அயல் சினிமா, சினிமா, திரைச் செய்தி
மெகா பவர் ஸ்டார் ராம்சரண் நடிப்பில், இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில் உருவாகியுள்ள ‘பெத்தி’, ஒரு கிராஸ்-ஓவர் தடகள வீரரின் ஊக்கமூட்டும் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. கிராமத்து விளையாட்டுப் பின்னணியுடன் ஆக்‌ஷன், உணர்வுகள் மற்றும் வெற்றிக்கான போராட்டத்தை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படம், ரசிகர்களிடையே ஏற்கெனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புச் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில் பேசிய ஒளிப்பதிவாளர் ஆர். ரத்னவேலு, "சேது, வாரணம் ஆயிரம், எந்திரன் போன்ற படங்கள் எனது திரைப்பயணத்தில் முக்கிய மைல்கற்களாக அமைந்தது போல, பெத்தி திரைப்படமும் எனக்கு மிகவும் முக்கியமான படமாக இருக்கும். இயக்குநர் புச்சி பாபு இந்தப் படத்திற்காக அற்புதமான திரைக்கதையை எழுதியிருக்கிறார். ஒரு திரைப்படம் க...
“He-Man: மனித நேயம் மிக்க சூப்பர் ஹீரோ” – பாடகர் கார்த்திக்

“He-Man: மனித நேயம் மிக்க சூப்பர் ஹீரோ” – பாடகர் கார்த்திக்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
'ஹீ-மேன் அண்ட் தி மாஸ்டர்ஸ் ஆஃப் தி யூனிவர்ஸ்' திரைப்படம் ஜூன் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தியாவில், தமிழ் உட்பட ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாகிறது. இப்படத்திற்குக் கார்த்திக் பின்னணி குரல் கொடுத்துள்ளார். முதலில், உலகளவில் ஆங்கிலத்தில் வெளியான இப்படம், இந்தியாவில் பல மொழிகளில் டப்பிங் செய்யப்படுகிறது. இதில் இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகியவை அடங்கும். தமிழ்ப் பதிப்பில் பாடகர் கார்த்திக் ஹீ-மேனுக்குக் குரல் கொடுத்துள்ளார். அவருடன் ஆதித்யா மேனன் ஸ்கெலட்டோராகவும், அர்ஜுன் சர்ஜா டங்கனாகவும் குரல் கொடுக்கின்றனர். ஹீ-மேனுக்குக் குரல் கொடுப்பது பற்றிப் பேசுகையில், தன் வாழ்க்கை ஒரு முழு வட்டத்தை அடைந்துவிட்டதென உணர்வதாக கார்த்திக் கூறுகிறார். 1980-களில் வந்த அனிமேஷன் தொடரின் தீவிர ரசிகரான கார்த்திக், 'ஹீ-மேன் அண்ட் தி மாஸ்டர்ஸ் ஆஃப் தி யூனிவர்ஸ்' தொடரில் ஒரு பகுதியாக...
காட்டாளன் விமர்சனம் | Kaattalan review

காட்டாளன் விமர்சனம் | Kaattalan review

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தமிழில், காட்டை ஆள்பவன் என்பது போல் பொருளைத் தந்தாலும், மலையாளத்தில் காட்டாளன் எனும் சொல்லுக்கு மூன்று அர்த்தங்கள் உள்ளன. ஒன்று, வேட்டைக்காரன்; இன்னொன்று, காட்டின மக்கள்; மற்றது, காட்டான் ஆகும். காட்டாளனுக்குக் கீழ், 'தி ஹன்டர்' என ஆங்கிலத்தில் வந்தாலும், மூன்று அர்த்தங்களிலும் படத்தைக் கொள்ளலாம். அதில் நாகரிகமற்றவன் என்று பொருளில் வரும் காட்டான் என்ற அர்த்தமே படத்தின் கதைக்கருவிற்குச் சால பொருந்துகிறது. ஆனக்கொல்லி காட்டில், தந்தங்களுக்காக யானைகளை வேட்டையாடுகின்றான் மாரி. யானைத்தந்தங்களைக் கடத்தும் கடத்தல் குழுமத்தின் (Cartel) தலைவனாகவும் வளர்கிறான். மாரியின் தொழிலைக் கெடுத்துக் கடத்தல் குழுமத்தின் தலைவனாகப் பார்க்கிறான் எடி. எடியின் முயற்சிகள் வெற்றி பெற்று, மாரியின் தந்தங்களை ராமேஸ்வரத்திற்குக் கொண்டு செல்ல விடாமல் செய்துவிடுகிறான். எடியை எதிர்க்க, ஆண்டனி என்பவனை அழைத்து வருகிறான் மாரி....
Blast விமர்சனம் | பிளாஸ்ட் review

Blast விமர்சனம் | பிளாஸ்ட் review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
143.50 UA தனது மகள் நிலாவைத் தைரியம் மிக்கவராகவும், பிறருக்கு உதவி செய்பவராகவும் வளர்க்கிறார் கராத்தே மாஸ்டரான ராஜாராமன். தனது நகையை அபகரிக்க நினைக்கும் டோபியிடமிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்கிறார் இளைஞியான நிலா. அந்தத் தற்காப்பு நடவடிக்கை, அவர்கள் வீட்டுக்கு ஆறு கொலையாளிகள் வரக் காரணமாகி விடுகிறது. கொலை செய்ய வந்தவர்கள் யார், அந்தப் பெரிய கொலைகாரக் கும்பலிடம் ராஜாராமனது குடும்பம் எப்படித் தப்புகிறது என்பதுதான் படத்தின் கதை. படத்தின் முதற்பாதி உண்மையிலேயே ஒரு பிளாஸ்ட் போல் வெடிப்புற வேகமாகப் பயணிக்கிறது. படத்தின் தொடக்கத்தில் வரும் ராஜாராமனுக்கும், அவரது மகள் சிறுமியான நிலாவிற்குமான அத்தியாயம் பார்வையாளர்களை வசீகரித்துத் தனக்குள் இழுத்துக் கொள்கிறது. சிறுமி ஆக்ரோஷமாகவும் அட்டகாசமாகவும் அசத்தலாகவும் நடித்துள்ளார். ப்ரீத்தி முகந்தனிடம் கூட அந்த ஆட்டிட்யூட் மிஸ்ஸிங். அறிமுக இயக்குநர் சுப...
He-Man: எட்டர்னியா உலகிற்குக் குரல் கொடுத்தவர்கள்

He-Man: எட்டர்னியா உலகிற்குக் குரல் கொடுத்தவர்கள்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
'ஹீ-மேன் அண்ட் தி மாஸ்டர்ஸ் ஆஃப் தி யூனிவர்ஸ்' திரைப்படம், இந்தியா முழுவதும் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஜூன் 5, 2026 அன்று வெளியாகவுள்ளது. இப்படத்தின் ஆங்கில ட்ரெய்லர், தீவிர 'ஹீ-மேன்' ரசிகர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், 'எட்டர்னியா (Eternia)' உலகின் மீதான ஒரு விறுவிறுப்பான முன்னோட்டத்தையும் ரசிகர்களுக்கு வழங்கியது; அதே வேளையில், சமீபத்தில் வெளியான தமிழ் ட்ரெய்லரும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தைச் சுற்றியுள்ள எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் கார்த்திக் தலைமையிலான வலிமையான தமிழ்க் குரல் கலைஞர்கள் குழு அமைந்துள்ளது. இவர், அந்தப் புகழ்பெற்ற சூப்பர் ஹீரோ கதாபாத்திரமான 'ஹீ-மேன்'-க்குத் தனது குரலை வழங்கியுள்ளார். 'ராவண்' படத்தில் வரும் "Behene De", 'கஜினி' படத்தில...
BLAST: பெண்களை எப்படி வளர்க்க வேண்டும் | ஆக்‌ஷன் கிங் அர்ஜுன்

BLAST: பெண்களை எப்படி வளர்க்க வேண்டும் | ஆக்‌ஷன் கிங் அர்ஜுன்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், 'ஆக்‌ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோரின் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் உருவாகி, வரும் 28 ஆம் தேதி, உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது 'பிளாஸ்ட்' திரைப்படம். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் பேசிய இயக்குநர் சுபாஷ் கே. ராஜ், ''இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் தான் என்னுடைய திரையுலக குரு. அவருடைய 'லவ் டுடே' படத்தில் பணியாற்றினேன். அதன் பிறகு கதை எழுதி அவரிடம் சொன்ன போது, அவர்தான் ஏஜிஎஸ் நிறுவனத்தில் கதை சொல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். இந்தப் படத்தை எந்த இடத்திலும் சமரசம் எல்லாம் முழுச் சுதந்திரத்துடன் உருவாக்கியிருக்கிறேன். என்னுடைய முதல் படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.'பிளாஸ்ட்' ஆக்ஷன் படம் தான். ஆனால...
சட்டென்று மாறுது வானிலை விமர்சனம்

சட்டென்று மாறுது வானிலை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நாயகியைக் கண்டதும் சட்டெனக் காதல் கொள்ளும் நாயகன், 'கல்யாணம் பண்ணிக்கலாமா?' எனக் கேட்டதும், நாயகியும் சட்டெனச் சம்மதம் தெரிவிக்கிறார். டக்கெனத் திருமணம் செய்து பட்டென வாழ்க்கையைத் தொடங்கினால், சட்டென அவர்கள் வாழ்க்கையில் வானிலை மாறி பிரச்சனை தொடங்குகிறது. அவ்வானிலை மாற்றத்தில் இருந்து எப்படி மீள்கின்றனர் என்பதே படத்தின் முடிவு. மூன் ஸ்டே எனும் பெயரில் பல ஹோட்டல்கள் வைத்துள்ள கருடா ராம், புதுமணத் தம்பதிகளுக்குத் தங்கள் ஹோட்டலில் தங்குவதற்குச் சலுகை தருகிறார். அறைகளில் கேமரா பொருத்தி, தம்பதியின் அந்தரங்கமான தருணங்களை வீடியோவாக்கிப் பணம் சம்பாதிக்க நினைக்கிறார். சின்ன பகவதி சிண்ட்ரோமில் இருந்து வெளியில் வராத ஜெய்யின் மேனரிசங்களைப் பார்த்துப் பனையூருக்குச் சென்று இளைய தளபதியை எப்படியாவது மீண்டும் நடிக்க அழைத்து வந்துவிட வேண்டுமெனப் படத்தில் கலாய்த்துக் கொண்டே இருக்கிறார் யோகிபாபு. இயக்குநரும...
கருப்பு விமர்சனம் | Karuppu review

கருப்பு விமர்சனம் | Karuppu review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
நீதித்துறையைத் தன் இஷ்டத்திற்கு ஆட்டுவிக்கும் ஓர் ஊழல் படிந்த வக்கீலான பேபி கண்ணன், சிஸ்டத்தை மாத்த முடியாது என நீதிமன்றத்தின் வளாகத்தில் இருக்கும் வேட்டைக்கருப்பு எனும் எல்லை தெய்வத்திடம் சவால் விடுகிறான். சவாலில் சறுக்கும் வேட்டைக்கருப்பின் ஆட்டமே கருப்பாகும். பினு எனும் கேரளத்து இளம்பெண், சென்னைக்குக் கல்லீரல் மருத்துவச் சிகிச்சைக்காக அவரது தந்தையோடு சென்னை வருகிறார். மருத்துவச் செலவுகளுக்குப் பணமெடுத்து வராமல், 60 பவுன் நகையை எடுத்து வருகின்றனர். அந்நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுக் கிடைத்துவிடுகிறது. அதை நீதிமன்றத்தில் இருந்து பெற பேபிகண்ணனின் உதவியை நாடிச் சிக்கிக் கொள்கின்றனர். நான்கு மாதமாகியும் நகைகள் கிடைத்தப்பாடில்லை. கருப்புக்கு மிளகாய் அரைத்துப் பூசி நியாயம் வேண்டுகிறார் பினுவின் தந்தையாக நடித்துள்ள இந்திரன்ஸ். பினுவாக நடித்துள்ள அனகா மாயா ரவியும், இந்திரன்ஸும், தங்களது நடிப்பால் ...
EXAM விமர்சனம் | Amazon Prime Video

EXAM விமர்சனம் | Amazon Prime Video

OTT, Web Series, இது புதிது, திரை விமர்சனம்
அமேஸான் ப்ரைம் வீடியோவில் வெளியாகும் எக்ஸாம் இணையத் தொடரைப் புஷ்கர் - காயத்ரி இணையின் வால்வாட்ச்சர் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. தைகாராவிற்குச் சென்னையில் இருந்து மாற்றலாகி வரும் துணை காவல் கண்காணிப்பாளரான (DSP) மரமல்லியைக் கடத்தி விடுகிறார் ஜான்சி. மரமல்லிக்குப் பதிலாக ஆள் மாறாட்டம் செய்து ஜான்சி பதவியேற்கிறார். பிராந்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (RPSC) நடக்கும் ஊழல்களைக் கண்டுபிடிக்க மெனக்கெடுகிறார் ஜான்சி. யாரிந்த ஜான்சி, ஏன் அவர் இந்த ஊழலை வெளிக்கொண்டு வரப் போராடுகிறார், மரமல்லியை ஏன் கடத்தினார் என கதை நீள்கிறது. டி.எஸ்.பி.யாகத் தைரியமாக ஆள் மாறாட்டம் செய்ய உதவுவதோடு, ஜான்சியை உடலளவிலும் மனதளவிலும் தயார்ப்படுத்தும் ஜெயசந்திரனாக அப்பாஸ் நடித்துள்ளார். அவருக்கும் ஜான்சிக்கும் என்ன உறவு என்ற அத்தியாயம் ரசிக்க வைக்கிறது. மரமல்லியாக அதிதி பாலன் நடித்துள்ளார். அதிகாரச் செருக்கு, கோபம்...
இரண்டு நிமிடங்களுக்குக் கெட்ட வார்த்தை பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ் | Jolly O Gymkahana

இரண்டு நிமிடங்களுக்குக் கெட்ட வார்த்தை பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ் | Jolly O Gymkahana

OTT, சினிமா, திரைத் துளி
'வடசென்னை 2' படம் குறித்த ஒரு புதிய தகவலை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 'ஜாலி ஓ ஜிம்கானா' நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளார். இது தொடர்பான நிகழ்ச்சி மே ஏழாம் தேதி அன்று சன் நெக்ஸ்ட் (SUN NXT) டிஜிட்டல் தளத்தில் பிரத்தியேகமாக ஒளிபரப்பாகிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் குறித்துத் தொடர்ச்சியான யூகங்கள் நிலவி வரும் நிலையில், தொகுப்பாளர் ஜெகன் கிருஷ்ணனுடனான ஒரு வெளிப்படையான மற்றும் தணிக்கையற்ற உரையாடலில், ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த கேள்விக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் இறுதியாகப் பதிலளித்து, இப்படம் குறித்த தெளிவையும், புதிய உற்சாகத்தையும் ஏற்படுத்தி உள்ளார். இந்தப் பரபரப்பான அறிவிப்பைக் கடந்து இந்த நிகழ்ச்சி ஐஸ்வர்யா ராஜேஷின் திரையுலகப் பயணத்தை பற்றிய உரையாடல் ஆச்சரியமூட்டுவதாகவும், அதே சமயத்தில் சுவாரசியமானதாகவும் இருக்கின்றது. வடசென்னை பட...
சட்டென்று மாறுது வானிலை – சமகால பிரச்சனைகளைப் பேசும் ரொமான்டிக் த்ரில்லர்

சட்டென்று மாறுது வானிலை – சமகால பிரச்சனைகளைப் பேசும் ரொமான்டிக் த்ரில்லர்

சினிமா, திரைச் செய்தி
BV ஃப்ரேம்ஸ் நிறுவனத்தின் கீழ், இயக்குநர் பாபு விஜய் தயாரித்து இயக்க, நடிகர் ஜெய் - மீனாட்சி கோவிந்தராஜன் நடிப்பில், இன்றைய சமகால பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசும் புதுமையான ரொமான்டிக் த்ரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “சட்டென்று மாறுது வானிலை” ஆகும். மனித வாழ்வில் தொடர்ந்து நிகழும் அதிர்வுகள், ஆச்சரியங்கள் மற்றும் உணர்வுகளின் பயணமே இப்படத்தின் மையக் கருத்தாக அமைந்துள்ளது. மேலும், நாட்டில் நடைபெறும் மற்றும் நடைபெறவிருக்கும் முக்கிய பிரச்சனைகளை இப்படம் தைரியமாக எடுத்துரைக்கிறது. வரும் மே 15 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் சசி, “பாபு விஜய் என்னிடம் வந்து ‘நான் ஒரு படம் இயக்கப் போகிறேன்’ என்று சொன்னபோது, முதலில் நான் ‘யார் தயாரிப்பாளர்?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘நான்தான் சார் தயாரிப்பாளர்’ என்றார். அதைக் கேட்டவுடன் எனக்குக் கொஞ்...
29* விமர்சனம் | 29 Tamil movie review

29* விமர்சனம் | 29 Tamil movie review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மேயாத மான், ஆடை, குலு குலு ஆகிய படங்களைத் தொடர்ந்து ரத்ன குமாரின் இயக்கத்தில் உருவாகியுள்ள நான்காவது படமாகும். இருபத்தொன்பது வயதான சத்யா, தனது வாழ்வின் லட்சியத்தை ஒரு காதல் தோல்வியில் இருந்து கண்டடைவதே படத்தின் கதை. இந்தக் காதல் கதையைப் பத்து அத்தியாயங்களாகப் பிரித்துச் சொல்லியுள்ளார். நீ நான் மழை குடை (1), கடல், காதல் ரோமம், ஆச்சரியக்குறி! (2), அண்ணா சாலை பேருந்து கிறுக்கல்கள் (3), சீலே.. (4), ஒரு முத்தம் 4 உதடுகள் (5), கூதிர் காற்று, அறுந்த காற்றாடி (6), கவிழ்த்துப் போட்டா ரோஜாக்கள் (7), காதல் மனசின் அதிகபிரசங்கித்தனம் (8), நெருப்பின் நடனம் (9), சான்றோன் எனக் கேட்ட காதலி (10) என்பனவே அவ்வத்தியாயங்களுக்கு ரத்ன குமாரிட்ட தலைப்புகளாகும். அயோத்தி படத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த ப்ரீத்தி அஸ்ரானி, 21 வயது பெண் விஜியாக இப்படத்திலும் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். The Wo...
சேயோன் படத்தில் இணைந்த பாக்யஸ்ரீ போர்ஸ்

சேயோன் படத்தில் இணைந்த பாக்யஸ்ரீ போர்ஸ்

சினிமா, திரைத் துளி
நடிகை பாக்யஸ்ரீ போர்ஸின் பிறந்தநாள் அன்று, அவர் 'சேயோன்' திரைப்படத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார் என்பதை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஒரு சக்திவாய்ந்த புதிய கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்து, சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் ‘சேயோன்’ ஒரு பிரம்மாண்டமான கிராமியப் பின்னணி கொண்ட பொழுதுபோக்குத் திரைப்படமாகவும், 2026 ஆம் ஆண்டின் மிக அதிகம் எதிர்பார்க்கப்படும் வெளியீடுகளில் ஒன்றாகவும் அமைகிறது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் கீழ் கமல்ஹாசன் மற்றும் ஆர்.மகேந்திரன் தயாரிக்கும் இப்படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.பாக்யஸ்ரீ போர்ஸை ‘சேயோன்’ குடும்பத்திற்கு அன்புடன் வரவேற்று மகிழ்வதுடன், இத்திறமைமிக்க நடிகை இந்த விறுவிறுப்பான திரைப்படத்தின் ஓர் அங்கமாக இணைந்திருப்பதால், படக்குழுவினர் ஒரு உற்சாகமான ...
The voice of Hind Rajab – நடுக்கத்தை ஏற்படுத்தும் ஒரு சிறுமியின் குரல்

The voice of Hind Rajab – நடுக்கத்தை ஏற்படுத்தும் ஒரு சிறுமியின் குரல்

அயல் சினிமா, அரசியல், இது புதிது, சமூகம், சினிமா, திரை விமர்சனம்
யாரோ ஒருவர் யாருக்கோ அழைத்த சில நொடி தொலைபேசி உரையாடல், உங்கள் மனதைக் கனக்கச் செய்துவிடும் என்று சொன்னால் நம்புவீர்களா? ஜெர்மனியில் இருந்து வரும் அப்படிப்பட்ட ஓர் அழைப்பு, எமர்ஜென்சி ரெட் கிரெஸென்ட் கால் சென்ட்டரில் பணி புரியும் ஓமரைப் பாதிப்பது போலவே படம் பார்ப்பவர்களையும் பாதிப்படையச் செய்கிறது. பின், மறுபடியும் ஒரு தொலைபேசி அழைப்பு. துப்பாக்கிச் சூடு ஒலிகளுக்கு நடுவில், ஆறு வயது பெண் குழந்தை ஒன்று, தன்னை வந்து அழைத்துச் செல்லும்படி இறைஞ்சுகிறது. தன்னுடன் காரில் வந்த ஆறு பேரும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் உடம்பெல்லாம் ரத்தம் என்கிறது அக்குழந்தை. ஆறு பிணங்களுக்கு மத்தியில் காருக்குள் ஒரு ஆறு வயது குழந்தை மட்டும் கால் சென்ட்டர் ஆட்களுடன் பேசிக் கொண்டிருக்கிறது என படம் தொடங்கிய 25 ஆவது நிமிடத்தில், நம் மொத்த உலகத்தையும் காலுக்கடியில் நழுவ வைத்து விடுகிறது. சுமார் இரண்டரை மணி நேரம...