32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot
செய்திப் பிரிவு

கதை

68 செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன
கர்ணன் சிறந்த நண்பனா? ஆன்‌மிகம் முக்கியச் செய்தி
26/07/2020 Dinesh R 12 நிமிட வாசிப்பு

கர்ணன் சிறந்த நண்பனா?

கர்ணன் கொடையாளியா? மைத்தடங்கண் மாதேவி வார்துகிலை யான்பிடிக்க அற்று விழுந்த அருமணிகள் – மற்றவற்றைக் கோக்கேனோ என்றுரைத்த கொற்றவர்க் கென்னாருயிரைப் போக்கேனோ வெஞ்சமத்துப் புக்கு என்று பாரத வெண்பாவில் வருகிறது. இது பாரதம் பாடிய பெருந்தேவனார் என்பவர் எழுதிய நூல். வில்லி புத்தூராரும், ‘மடந்தை பொன்-திரு மேகலை மணி உகவே மாசு அறத் திகழும் ஏகாந்த இடம்தனில் புரிந்தே நான் அயர்ந்து இருப்ப, “எடுக்கவோ? கோக்கவோ?'” என்றான்; திடம் படுத்திடு வேல் இராசராசனுக்குச் செருமுனைச் சென்று, செஞ்சோற்றுக் […]

முழுமையாகப் படிக்க
செய்திகள் வரிசை (பக்கம் 1)
தங்க ஒரு… – கிருஷ்ணன் நம்பி கதை

தங்க ஒரு… – கிருஷ்ணன் நம்பி

அன்புள்ள செல்லா, உன் கடிதம் கிடைத்தது. என்ன செய்யச் சொல்லுகிறாய்? முயற்சியில் ஒன்றும் குறையில்லைknambi . ஒவ்வொரு நாள் மாலையும், மந்தைவெளி, புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம் என்று வேகமாக அலையத்தான் செய்கிறேன். மோட்டார்காரனுக்குக் காசு கொடுத்துக் கட்டி வராது என்று விளக்கெண்ணை வேறு வாங்கி வைத்திருக்கிறேன் காலில் போட்டுத் தேக்க. என் காலைப் பிடித்துவிட நீயும் இங்கு உடனே வர வேண்டும் என்பதுதான் என் ஆசை. ஆனால் என்ன செய்யச் சொல்லுகிறாய், செல்லா, முப்பது ரூபாய்க்கு மேல் போகவும் […]

08/06/2020 Dinesh R
கத்தரிக்காய்க் கல்யாணம் (சிறார் கதை) கதை

கத்தரிக்காய்க் கல்யாணம் (சிறார் கதை)

அன்று விடிவதற்கு முன்னரே ஊரே கோலாகலமாக இருந்தது. சாரை சாரையாய் வெண்டைக்காய்கள், பாகற்காய்கள், முருங்கைக்காய்கள் என அனைத்து வகை காய்கறிகளும் ஊரின் பொதுவில் இருந்த மண்டபத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். அனைவரும் புத்தாடையுடன் ஜொலிக்கும் ஆபரணங்களுடன் பேசிச் சிரித்துக் கொண்டும், ஆடிப் பாடிக்கொண்டும் நடந்தும், வண்டியிலுமாக வந்த வண்ணம் இருந்தனர். அந்த ஊருக்கு அப்போதுதான் குடிவந்திருந்த பச்சை மிளகாய்க் குடும்பத்தினர் ‘ஆ’வென வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தனர். ஆர்வம் தாங்க முடியாத பச்சை மிளகாய்ப் பெரியவர் ஒருவர் […]

20/12/2018 Dinesh R
சுதந்திர தினம் (சிறுகதை) – கிருஷ்ணன் நம்பி கதை

சுதந்திர தினம் (சிறுகதை) – கிருஷ்ணன் நம்பி

“ஒரு கொடி செஞ்சு கொடு, அண்ணாச்சி.” “என்ன கொடி கேக்கிறே” அலுப்புடன் முகத்தைத் திருப்பிக் கேட்கிறான் பாண்டியன். ஓடிப்போய்த் தன் மூன்றாம் பாடப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு வருகிறான் கருப்பையா. ஒரு பக்கத்தைத் தன் அண்ணனிடம் நீட்டிக் காட்டுகிறான். தேசக் கொடி என்று தலைப்பு; வர்ணம் எதுவும் இல்லாமலே காகிதத்தின் வெண்மையிலும், அச்சு மையின் கருமையிலும் ‘மூவர்ண’க் கொடியின் படம் அந்தப் பக்கத்தில் இருக்கிறது. “இந்தக் கொடி செஞ்சுகொடு, அண்ணாச்சி. நாளைக்கு இஸ்கூலுக்குக் கொண்டுக்கிட்டுப் போகணும். நாளைக்கு […]

15/08/2018 Dinesh R
அவள் பெயர் அபிராமி – 2 கதை

அவள் பெயர் அபிராமி – 2

முடிவு செய்து வைத்தபடியே கதிரேசு வீட்டிற்குள் வந்ததும் வராததுமாய் ஆரம்பித்து வைத்தாள் ராமாயி. “எலே கதிரேசு! அகிலாண்டேஸ்வரிக்கு வயசாயிகிட்டே போகுது! சீக்கிரமா ஒரு கண்ணாலத்தைப் பண்ணிப் பாக்கோணும்னு இல்லாம இப்படிக் கிணத்துல போட்ட கல்லு கணக்கா இருந்தா எப்படி?” தாழியில் இருந்த தண்ணீரை இரு கைகளால் அள்ளி முகம் கழுவிக் கொண்டிருந்த கதிரேசு நிமிர்ந்து ராமாயியை ஒரு கணம் கூர்ந்து நோக்கினான். “ஆத்தா! இப்ப அவளுக்கு என்ன வயசாயிட்டு! இப்பதானே பன்னெண்டாப்புப் போறா! கண்ணால பேச்செடுத்தா கலெக்ட்டர் […]

30/06/2016 Dinesh R
அவள் பெயர் அபிராமி – 1 கதை

அவள் பெயர் அபிராமி – 1

“ஏய் அகிலாண்டேஸ்வரீ.. இன்னும் என்னடீ பண்றவ, நேரங்காலமா இஸ்கூலுக்குப் போய்ச்சேர வேண்டாமா? ஊஞ்சிநேதக்காரி வந்துட்டா பாரு..” வெளியில் இருந்து கத்திய அப்பாத்தாவின் குரலைப் பொருட்படுத்தாது தனது முகத்தில் அப்பிய அதிகப்படியான பவுடரை ரசம் தேய்ந்த கண்ணாடியில் பார்த்துச் சரி செய்து கொண்டிருந்தாள். மடித்து ரிப்பன் கட்டியிருந்த ரெட்டை ஜடைகளை இணைக்கும் விதமாய்க் குண்டுமல்லிச் சரமொன்றைத் தொடுத்திருந்தாள்.  அகிலாண்டேஸ்வரி என்றழைக்கப்பட்ட அகிலா அந்த வீட்டின் ஒரே பெண் வாரிசு. பெரியப்பா கண்ணைய்யனுக்கு இரண்டு ஆண் வாரிசுகள். சித்தப்பா செல்வராசுவிற்கு […]

09/06/2016 Dinesh R
நிவேதா கதை

நிவேதா

ஒரு மாலைப் பொழுது. வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டு இருந்தாள் நிவேதா. அவளுக்கு 21 வயது. மாநிறமாய் இருந்தாலும் பார்ப்பதற்கு அழகாக இருப்பாள். பழைய டிவிஎஸ் 50இல் மிகவும் நிதானமாக, பொறுமையாக வாகனத்தை இயக்கும் பழக்கம் கொண்டவள். அன்றைக்கும் அதே நிதானமான வேகத்துடன் வீடு திரும்பிக் கொண்டு இருந்தாள். வழியில் தோழியைச் சந்தித்து சிறிது நேரம் பரஸ்பரம் பேசி மகிழ்ந்து விட்டு, ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தாள். மொத்தமும் இரு அறைகளே கொண்ட எளிமையான […]

02/06/2014 Dinesh R
அட ஆண்டவா!! இது உண்மையா? அப்படின்னா..!!? கதை

அட ஆண்டவா!! இது உண்மையா? அப்படின்னா..!!?

‘ஆர்வக் கோளாறில் இப்படி வந்து மாட்டிக் கொண்டோமே! இப்போது இங்கிருந்து எப்படி வெளியே போவது?’ என்று தெரியாத பதட்டத்தில் அல்லாடிக் கொண்டிருந்தான் வெங்கடேஷ். சுமாவிற்கு மட்டும் இது தெரிந்தால் அவ்வளவு தான்! நேரம் வேறு ஓடிக் கொண்டிருந்தது. வெங்கட் என்ற வெங்கடேஷ் ஃபோட்டோ எடுப்பதில் அதீத ஆர்வம் கொண்டவன். காமெரா என்பது ஒரு சாதனமே. நம் பார்வையில் தெரியும் காட்சிகளை மிக அழகான கோணத்தில் படமாக்குவதுதான் கலை என்று பாலுமகேந்திரா எப்போதோ ஒரு பேட்டியில் சொன்னதை வேதவாக்காகக் […]

24/02/2014 Dinesh R
சிங்கமுக ஆசிரியர் கதை

சிங்கமுக ஆசிரியர்

ஆரம்பக்கல்வியை யாழ்ப்பாண மண்ணில் தொடங்கிய நான் சில சந்தர்ப்பச் சூழ்நிலைகளால் இடம்பெயர்ந்து நாவலப்பிட்டி எனும் ஊருக்கு குடும்பத்துடன் இடம்பெயர்ந்தேன். அங்கே அடுத்த வகுப்பினில் ஓராண்டு படித்தேன். பின் தந்தையின் வேலை மாற்றத்தால் எட்டியாற்தோட்டை எனும் ஊருக்குச் சென்றோம். அங்குள்ள தமிழ்ப் பாடசாலையில் அடுத்த இரண்டாண்டுகள் படித்தேன். மீண்டும் மாற்றலான தந்தையைப் பின்தொடர்ந்த நாங்கள் இரத்தினபுரி என்ற நகரில் சுமார் ஆறாண்டுகள் வாசம் செய்தோம். இரத்தினபுரி தமிழ் மத்திய மகா வித்தியாலத்தில் கல்விப் பொதுத்தராதர சாதாரணத் தரம் வரை […]

28/10/2013 admin
ஜொள்ளன் கதை

ஜொள்ளன்

மு.கு.: நேசம் + யுடான்ஸ் இணைந்து வழங்கும் புற்றுநோய் விழிப்புணர்வு கதை, கட்டுரை, குறும்பட போட்டி்களுக்காக எழுதப்பட்ட கதை. ‘இன்னிக்கு தான் அவனுங்களுக்கு கடைசி எக்ஜாமாம். சீனுவ தவிர மத்த பயலுவலாம் ஊருக்குப் போயிடுவானுங்க. ஜொள்ளனும் தூக்கணாம்பாளையத்தில் இருக்கிற அவன் மாமா வீட்டுக்குப் போயிட்டான். வர நாலஞ்சு நாள் பிடிக்கும். எல்லோரும் சேர்ந்து என்னைத் திண்ணையில தனியா உட்கார்ந்து புலம்ப விட்ருவானுங்க போல’ என்று திண்ணையில் கால் நீட்டி சுவரோடு சாய்ந்துக் கொண்டார். திண்ணையை ஒட்டிய சாளரம் […]

10/02/2012 admin
அடையாளங்கள் கதை

அடையாளங்கள்

‘ஊர சுத்தி ஒரே கடன்..எல்லாம் கழுத்த நெறிக்க ஆரம்பிச்சிட்டாங்கா!’ ‘எதிர் வீட்ல கார் வாங்கிட்டாங்க..பக்கத்து வீட்ல மோர் வாங்கிட்டாங்கன்னு பொன்டாட்டி ஒரே தொனதொனப்பு.’ ‘மனுஷன் ரொம்ப மாறிட்டான் சார்..விலைவாசி எல்லாம் ரொம்ப ஏறிப் போச்சு..சமாளிக்க முடியல.’ இவையாவும் என் பொழுதுப்போக்கின் போது பொதுவாக காதில் விழுபவைகள். முகத்தில் ஒரு பொய்யான ஆர்வத்தோடு இவை அனைத்தையும் கேட்பேன். ஆனால் இதையெல்லாம் நினைத்து பிறகு சிரிப்பேன்.எனது பொழுதுப்போக்கு தெருவில் வித்தியாசமாக போவோரை உரிமையோடு அழைத்து ஒரு வேளை உணவு வாங்கி […]

10/12/2011 Dinesh R
அந்தி நேர சாயை – 3 கதை

அந்தி நேர சாயை – 3

அந்தி நேர சாயை – 2 என் பெயர் சுதன். பிறந்தது, வளர்ந்தது எல்லாம் இந்த ஊர்ல தான். நான், எங்கம்மா.. இவ்ளோ தான் என் உலகம். ஆனா உலகம் ரொம்ப பெருசு இல்ல!! அப்ப என்னோட அழகான சின்னக் கூடுன்னு சொல்லிக்கலாம் தான? இந்தக் கூட்டுல யாரோ கல் எறிஞ்ச மாதிரி எங்கம்மாக்கு கிட்னி ஃபெய்லியர் ஆயிடுச்சு. அவங்க காலுலாம் வீங்க ஆரம்பிச்சுது. பெருசா அவங்க கண்டுக்கல. நாள் ஆக ஆக சோர்வு அதிகமாயி உடம்புக்கு […]

07/12/2011 Dinesh R
அந்தி நேர சாயை – 2 கதை

அந்தி நேர சாயை – 2

அந்தி நேர சாயை – 1 முதல்ல இந்த ஊருக்கு வெளியில் இருக்கிற பெரிய பெரிய மரத்தை எல்லாம் வெட்டணும். இல்லன்னா பேய் இருக்கு, பிசாசு இருக்குன்னு கதைய கிளப்புறவங்க நாக்க வெட்டணும். வீட்டுத் தோட்டத்துல பயமுறுத்திக்கிட்டு இருந்த பேயெல்லாம் டார்ச்-லைட் வந்தப்புறம் இந்த மாதிரி ஊருக்கு வெளியில இருக்கிற பெரிய மரத்துக்கு குடி வந்துடுச்சுன்னு எங்க தாத்தா விளையாட்டா சொல்வார். சரி தான். பேய்ன்னு தனியா ஏதாச்சும் இருக்கா என்ன? மனசுல இருக்கிற பயத்துக்கு பேர் […]

06/12/2011 Dinesh R
அந்தி நேர சாயை – 1 கதை

அந்தி நேர சாயை – 1

எப்பவுமே தூங்காத ஆளை நீங்க எங்கயாச்சும் பார்த்திருக்கீங்களா? கப்பூரார் அப்படித் தான். கப்பூரார எங்க வீட்டு சமையற்காரர்னு சொல்லலாம். ஆனா அவர் என்னோட சமையற்காரர் மட்டும் தான். என்னோட 4 வயசுல நான் சாப்ட்டது ஏதோ பாய்சன் ஆகி சாகற ஸ்டேஜுக்கு போயிட்டேனாம். அதுக்கு அப்புறம் என் சாப்பாடு மாறிடுச்சு. ஏகப்பட்ட பத்தியம். எது சாப்டாலும் சுத்த பத்தமா இருக்கணும்னுட்டு.. கலப்படம் இல்லாத சமையல் பொருள வாங்க ஒரு ஆளுயும், அதை சமைக்கறதுக்கு கப்பூராரயும் தாத்தா புதுசா […]

05/12/2011 Dinesh R
மாயப் புன்னகை கதை

மாயப் புன்னகை

தர்மம் தன் இயல்பை மறைத்து கோப வேடத்தினை அணியத் தெரியாமல் அணிந்தது போலிருந்தது. எதிரில் நிற்கும் தர்மனைப் பார்க்கவே கர்ணனுக்கு வேடிக்கையாக இருந்தது. பரிதாபமாகவும் இருந்தது. இன்றே சண்டையை முடித்து விடும் தீவிரத்துடன் தர்மர் தன்னுடன் போர் புரிய ஆயுத்தமாவது போல் கர்ணனுக்குத் தோன்றியது. ஆனால் கர்ணன் மனதில் அன்று ஏனோ இனம் புரியா சோர்வு. பதினாறே நாட்களில் கணக்கில்லா இழப்புகள். பீஷ்மர், துரோனர் போன்ற உத்தம மகா வீரர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. அநாவசியமாக […]

18/03/2011 Dinesh R