
அனபெல் சேதுபதி விமர்சனம்
ஒரு மிகப் பெரிய அரண்மனை. பெளர்ணமி அன்று அங்கு யாரேனும் தங்கினால், அவர்கள் மரணமடைந்து விடுவார்கள். அத்தகைய அரண்மனைக்குள், திருட்டைத் தொழிலாகக் கொண்ட ஓர் ஏமாற்றுக்காரக் குடும்பம் நுழைகிறது. பின் என்னாகிறது என்பதை, பேய்ப்படத்திற்கான டெம்ப்ளேட்டில் இருந்து மாறாமல் காட்சிப்படுத்தியுள்ளார் தீபக் சுந்தர்ராஜன்.
இயக்குநர் சுந்தர்.சி-இன் அரண்மனை, அரண்மனை 2, ஜாக்ஸன் துரை, பெட்ரோமேக்ஸ் என தமிழில் வரிசை கட்டிக் கொண்டு, அண்மையில் வந்த பேய்ப்படங்களின் வரிசையே மிக நீளம். பார்த்துப் பழகி அலுத்துவிட்ட ஒரு ஜானரில், கொஞ்சம் சுவாரசியமான மாற்றத்தை வழங்கினால் கூட பார்வையாளர்களால் படத்தோடு ஒன்ற இயலும். படம் அப்புள்ளியைத் தொடுவதற்கு பதில், பார்வையாளர்களுக்கு அரண்மனையைச் சுற்றிக் காட்டுவதில் அலாதி இன்பம் காட்டுகிறது.
இதில் கொடுமை என்னவென்றால், பல காலமாக அடைப்பட்டுக் கிடக்கும் வில்லன் பேயும், நாயகியோடு சேர்ந்து ஆச...