Shadow

Tag: ஆந்திரா மெஸ்

ஆந்திரா மெஸ் விமர்சனம்

ஆந்திரா மெஸ் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
யானையிடம் இருந்து நான்கு எறும்புகள் பணத்தை எடுத்துக் கொண்டு ஒரு வயதான ஜமீன்தாரிடம் அடைக்கலம் கோருகின்றன. யானை எறும்புகளைத் தேடி வருகின்றது. அந்தப் பணத்தால் யானை வாழ்ந்ததா அல்லது நான்கு எறும்புகள் வாழ்ந்தனவா என்பதே படத்தின் கதை. கதாப்பாத்திரங்களைக் காமிக்கலாக அறிமுகம் செய்கின்றனர். ஆனால், அந்த ஃப்ளோ படம் முழுவதும் தொடர்வதில்லை. இடையில் இயக்குநர், "நதி ஒரே திசையில் தான் நகரமுடியும். நதியில் இருக்கிற படகு இரண்டு திசையில் நகரும். நதியில் இருக்கிற மீன் நாலு திசையில் நகர முடியும். அதைக் கொத்திட்டுப் போற பறவை அஞ்சு திசையில நகரலாம். ஆனா கரையோரம் உட்கார்ந்து இதையெல்லாம் பார்த்துட்டிருக்கிற ஒருத்தனோட மனசு, எல்லாத் திசையிலும் நகரும்" என்று சீரியசான குரலில் வாய்ஸ்-ஓவர் தருகிறார். நதி, படகு, மீன், வேடிக்கை பார்ப்பவனின் மனது போன்றவை எதைக் குறிக்கிறது என்ற தெளிவில்லை. மனதில் எதையும் பதிய விடாமல் கலைத்த...
ஆந்திரா மெஸ் – தோற்ற ஆண்களின் கதை

ஆந்திரா மெஸ் – தோற்ற ஆண்களின் கதை

சினிமா, திரைச் செய்தி
நான்கு சுவருக்குள், பெண்ணால் அவமதிக்கப்படும் ஓர் ஆண் இயலாமை குமைய வெளியேறுகிறான். வெளியில் வந்து, அந்த இயலாமையைக் கோபமாகத் தன்னை விட பலவீனமான நபரிடம் காட்டுகிறான். அந்த நபர் மற்றொரு ஆணாக இருப்பான். ஓர் ஆண் தோற்க, அவனுக்குச் சம்பந்தப்பட்ட பெண் காரணமாக இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை. அந்த ஆணுக்குத் தெரிந்த மற்றொரு ஆணுக்குச் சம்பந்தப்பட்ட பெண், பல ஆண்கள் தோற்கக் காரணமாக இருப்பாள். "உன்னால மீனுக்கு ஒரு பொறி கூட வாங்கிப் போட முடியாது" என்ற வசனத்தில் தொடங்குகிறது தோற்ற ஆண்களின் கதை. எத்தனை பேர் வந்தாலும், தெறிக்க விடும் நாயகர்களுக்குப் பழக்கப்பட்ட சினிமா ரசிகர்களுக்கு, இந்தப் படம் நிச்சயமாகப் புதுமையான திரை அனுபவத்தைத் தருமென நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் படக்குழுவினர். ராஜ் பரத், தேஜஸ்வினி, ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர், பூஜா தேவரியா ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘அங்கமாலி டைரீஸ்’, ‘சகாவு’...
அடுத்த தலைமுறை தமிழ் சினிமா

அடுத்த தலைமுறை தமிழ் சினிமா

சினிமா, திரைத் துளி
“படத்தின் பெரும் பகுதிகள் படமாக்கப்பட்டுவிட்டன. இனி சில காட்சிகளும் ஒரு பாடலும் மட்டுமே படமாக்கப்படவுள்ளது. அதற்காகப் படக்குழுவினர் இந்த மாத இறுதியில் பூனே புறப்பட்டுச் செல்கின்றனர். படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்று ஹிந்தியில் இடம்பெறுகிறது. அப்பாடலில் ராஜ்பரத்தையும் தேஜஸ்வினியையும் நடிக்க வைத்துப் படமாக்கப்பட்டுள்ளது. நெருக்கமான காட்சிகளைக் கொண்ட பாடலாகவும் அதேசமயம் மிக அழகாகவும் படமாக்கப்பட்டுள்ளது. டான்ஸ் மாஸ்டர் விஜி இதற்கு நடனம் அமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் முகேஷின் ஒளிப்பதிவும், ஆர்ட் டைரக்டர் செந்திலின் அழகான அரங்க வடிவமைப்பும் படம் பார்ப்பவர்களைச் சொக்கவைக்கும். இது அடுத்த தலைமுறைக்கு சினிமாவைக் கொண்டு செல்லும் முயற்சி. இதில் மாற்று சினிமாவிற்கான முக்கிய கூறுகளோடு அழகியல் சார்ந்து புதிய பாணியில் கதை சொல்ல முயன்றிருக்கிறேன். இது முழுக்க முழுக்க எப்படி ஒரு கதைசொல்லி, கேட்பவர்களுக்க...