Shadow

Tag: இயக்குநர் மதுமிதா

புத்தம்புது காலை விடியாதா… விமர்சனம்

புத்தம்புது காலை விடியாதா… விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
முதல் லாக்-டவுனை அடிப்படையாகக் கொண்டு, 'புத்தம்புது காலை' எனும் ஐந்து குறும்படங்கள் கொண்ட ஆன்தாலஜி திரைப்படம் வெளியானது. தற்போது, பொங்கல் 2022 இன் சிறப்பு வெளியீடாக, 'நியூ நார்மல்' ஆகிவிட்ட இரண்டாவது லாக்-டவுனை மையமாக வைத்து, 'புத்தம்புது காலை விடியாதா..' எனும் ஆன்தாலஜி திரைப்படம் வெளியாகியுள்ளது. காதல், சுற்றி இறுக்கும் தனிமை, உற்றாரின் இழப்புகள், அவர்களது நினைவுகள் தரும் தாக்கம் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்தும் படம். லாக்-டவுனையும் 'மாரி'த்தனமாக விளையாட்டாக அணுகியுள்ளார் இயக்குநர் பாலாஜி மோகன். அவரது முககவச முத்தம் என்ற குறும்படம், லாக்டவுன் இல்லா நாட்களுக்கும் பொருந்தும். அதாவது, பசுமாட்டைத் (காதல் கதை) தென்னை மரத்தில் (லாக்-டவுன்) கட்டிவிட்டார். இயக்குநர் ஹலிதா ஷமீமின் 'லோனர்ஸ்' படத்தில், பிரேக்-அப் ஆன ட்ராமாவில் இருந்து மீளாத நல்லதங்காளும், தன் வலியை வெளிப்படுத்திக் கொள்ளத் தெரியாமல்...
புத்தம் புது காலை விடியாதா @ அமேசான் ப்ரைம் – ஜனவரி 14 முதல்

புத்தம் புது காலை விடியாதா @ அமேசான் ப்ரைம் – ஜனவரி 14 முதல்

சினிமா, திரைச் செய்தி
அமேசான் ப்ரைம் வீடியோவில், விரைவில் வெளிவரவுள்ள தமிழ் குறும்படங்கள் தொகுப்பான ‘புத்தம் புது காலை விடியாதா’ படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. இப்படத்திலுள்ள ஒவ்வொரு கதையும் தனித்துவமானது, இருப்பினும் அவை அனைத்தும் தனிப்பட்ட முறையில் நம்பிக்கையைக் கண்டறிதல் மற்றும் மனித இணைப்பின் மூலம் புதிய தொடக்கங்களைப் பெறுவதைக் கருப்பொருளாகக் கொண்டுள்ளன. இவை நம்பிக்கை, காதல் மற்றும் இரண்டாவது வாய்ப்புகள் பற்றி இரண்டாவது கோவிட்-19 லாக்டவுனைச் சுற்றி அமைக்கப்பட்ட கதைகள். ஐந்து அத்தியாயங்கள் கொண்ட இந்தத் தொகுப்பு, பொங்கல் பண்டிகைக் காலமான ஜனவரி 14 ஆம் தேதி அன்று ப்ரைம் வீடியோவில் இந்தியாவிலும், உலகம் முழுவதும் 240க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகவுள்ளது. கதைகளில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி, அர்ஜுன் தாஸ், திலீப் சுப்பராயன், கௌரி G கிஷன், ஜோஜு ஜார்ஜ், லிஜோமோல் ஜோஸ், நதியா மொய்து, நிர்மல் பிள்ளை, சனந்த் மற்றும் டீஜ...
கே.டி. (எ) கருப்புதுரை விமர்சனம்

கே.டி. (எ) கருப்புதுரை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கோமாவில் உள்ள கருப்புதுரை எனும் முதியவரைத் தலைக்கு ஊத்திக் கொல்லப் பார்க்கின்றனர். கோமாவில் இருந்து எழும் கருப்புதுரை, பிள்ளைகளின் திட்டம் அறிந்து மனம் நொந்து வீட்டை விட்டு வெளியேறுகிறார். ஒரு கோயிலின் பிரகாரத்தில் சந்திக்கும் குட்டி எனும் அனாதை சிறுவனுடனான நட்பு, ஆவர் வாழ்வில் புது வசந்தத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வருகிறது. சிறுவனுக்கும், பெரியவருக்குமான அழகான நட்பின் பயணம்தான் படத்தின் கதை. தலைக்கூத்தல் என்பதை கருணைக் கொலை (Euthansia) என்ற வகைமைக்குள் கொண்டு வந்துவிட்டார்கள். விருப்ப மரணத்தினைத்தான் அப்படிச் சொல்லமுடியும். இங்கு தமிழகத்தில் நிலவும் இப்பழக்கம், சுமை எனக் கருதும் பெரியவர்களை அகற்ற நடக்கும் குடும்பத்தினரால் திட்டமிடப்பட்ட கொலைகள். படத்தின் தொடக்கத்தில், ஓர் ஆவணம் போல் ‘தலைக்கூத்தல் அவசியமா? ஏன் அவசியம்?’ என்ற கேள்விகளை அணுகியுள்ளனர். அந்த ஆவணம் அதற்கு ஆதரவான குரலைத் தர...