
“அருண்பாண்டியன் ஐயா பலாப்பழம் போன்றவர்” – கார்த்திக் நேத்தா | அஃகேனம்
A&P குரூப்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் உதய். K இயக்கத்தில், அருண் பாண்டியனும் கீர்த்தி பாண்டியனும் சவாலான வேடத்தில் நடித்திருக்கும் 'அஃகேனம்' எனும் திரைப்படம், ஜூலை மாதம் நான்காம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தத் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு சென்னையில் நடைபெற்றது.
பாடலாசிரியர் கார்த்திக் நேதா, “இந்தத் திரைப்படம் அமைதியான மற்றும் ஆழமான உணர்வைப் பேசக்கூடியது. இந்தப் படத்தில் இடம்பெற்ற நான்கு பாடல்களும் வெவ்வேறு வகைமைக்குள்ளான பாடல்களாக இருக்கிறது. மேற்கத்திய இசை, ராக் இசை, இந்திய நாட்டார் இசை, இந்தியச் செவ்வியல் இசை என வெவ்வேறு வகைமையியான இசை வடிவம் இந்தப் படத்தில் பாடல்களாக இடம் பிடித்திருக்கிறது. இசையமைப்பாளர் பரத் வீரராகவன் மிகுந்த திறமைசாலி. இந்த ஆண்டிற்கான சிறந்த பாடலாசிரியர் என்ற ஆனந்த விகடன் வழங்கும் விருதினைப் பெற்ற...








