Shadow

Tag: செண்ட்ராயன்

தூக்குதுரை விமர்சனம்

தூக்குதுரை விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பழங்கால காதல் கதை, பழங்கால பேய்க்கதை இரண்டும் சேர்ந்தால் அதுதான் தூக்குதுரை திரைப்படத்தின் கதை. இனியாவின் குடும்பம் திருவிழாக்களில் ஊரின் முதல் மரியாதையைப் பெறும் ஜமீன்தார் குடும்பம். திருவிழாக்களில் புரொஜெக்டர் மூலம் படம் ஓட்டிக் காட்டும் யோகிபாபுவிற்கும் இனியாவிற்கும் காதல் மலர்கிறது. தங்கள் காதலைக் குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்பதைத் தெரிந்துகொண்டு ஊரைவிட்டு  ஓட முயற்சி செய்கிறார்கள். ஊர் மக்களிடம் மாட்டிக் கொள்ளும் அவர்களில் யோகிபாபுவை இனியா குடும்பம் ஊர் மக்களோடு சேர்ந்து ஒரு கிணற்றில் வைத்து எரித்துக் கொன்றுவிடுகிறார்கள்.  அந்த கிணற்றுக்குள் ஜமீன் குடும்பத்திற்குச் சொந்தமான ஒரு விலைமதிப்புமிக்க கிரீடம் மாட்டிக் கொள்கிறது. அதை எடுக்க வருபவர்களை யோகிபாபு பேயாக வந்து மிரட்டுகிறார். அதை மீறி கிரீடத்தை கைப்பற்றினார்களா இல்லையா என்பது மீதிக்கதை. யோகிபாபு இருந்தாலே ...
பிக் பாஸ்: சீசன் 2 – நாள் 1

பிக் பாஸ்: சீசன் 2 – நாள் 1

சமூகம், தொடர்
மூடர்கூடத்து செண்ட்றாயன் பிக் பாஸ் நிகழ்ச்சியை இன்னும் நெதர்லாந்துக்காரர்கள் நடத்துவதாகவே நினைத்துக் கொண்டிருப்பார் போல! இதற்கே அவர் ஸ்டார் விஜய் டி.வி. மூலமாகக் கமல் ஹாசனைச் சந்தித்து விட்டு தான் பிக் பாஸிற்குள் வந்தார். எனினும், மற்ற அனைவரும் தமிழில் பேசும்பொழுது, கேமிரா முன் பிக் பாஸிடம்ஆங்கிலம் மட்டுமே பேசுகிறார். ஆனால் அவர் நாமினேட் செய்யும் பொழுது, ‘மமதி எனக்குப் புரியாத மாதிரி இங்கிலீஷ் கலந்து பேசுறாங்க; ரம்யாவோட ஹேர்ஸ்டைல், பாடி லேங்வேஜ் எல்லாம் இங்கிலீஷ்க்காரங்க மாதிரி இருக்குது’ எனத் தெள்ளத்தெளிவாகக் காரணத்தைத் தமிழில் அடுக்குகிறார். இதில் ஆகப் பெரிய நகைச்சுவை என்னவென்றால், வீட்டின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனனி ஐயர், வைஷ்ணவியை நாமினேட் செய்து சொன்ன காரணம், ‘அவங்க நிறைய இங்கிலீஷ்ல பேசுறாங்க’ என்பது. முதல் நாளிலேயே, யார்க்கு யாரைப் பிடிக்கவில்லை என லேசாகக் கோடி...
காத்திருப்போர் பட்டியல் விமர்சனம்

காத்திருப்போர் பட்டியல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
'வெயிட்டிங் லிஸ்ட்' என்பதன் தமிழாக்கமாகத் தலைப்பைப் புரிந்து கொள்ளலாம். படம் இரயில்வே ஸ்டேஷனில், அதாவது இரயில்வே ஸ்டேஷனில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் நிகழ்கிறது. சின்னச் சின்ன குற்றங்களுக்குக் கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதற்காகக் காத்திருக்கின்றனர். காதலைச் சொல்லிவிட்டுப் பதிலுக்காகக் காத்திருப்போரின் பட்டியல் என்றும் தலைப்பிற்கு ஓர் உபப்பொருளை ஒரு பாடலின் வரியில் அளித்துள்ளனர். சத்யாவும் மேகலாவும் காதலிக்கின்றனர். அவர்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் மிக முக்கியமான நாளன்று தாம்பரம் இரயில்வே போலீஸாரினால் கைது செய்யப்படுகிறான் சத்யா. அவர்களின் காதல் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை. இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான படம். புதுமையான கதைக்களன், கலவையான கதாபாத்திரங்கள் எனச் சுவாரசியமாகத் தொடங்குகிறது. எனினும் படம், 'தன்னைப் பார்த்து பொதுமக்கள் பயப்பட வேண்டும்' எ...