Shadow

Tag: செழியன்

டுலெட் விமர்சனம்

டுலெட் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தாங்கள் வாடகைக்குக் குடியிருக்கும் வீட்டு உரிமையாளரிடம் உரசல், புது வீடு தேடி அலுக்கும் படலம், சொந்த வீட்டுக்கான விழைவு ஆகிய மூன்றையும் கடக்காதவர்கள், நூற்றுக்கு ஒரு சதவிகிதம் பேரே இருப்பார்கள். மீதி, தொண்ணூத்தொன்பது பேர்க்கு இந்த அனுபவம் வாய்த்திருக்கும். சொந்த ஊரில் பத்து வீட்டை வாடகைக்கு விட்டுச் சொகுசாய்க் காலாட்டிச் சம்பாதிக்கும் பாக்கியசாலிகள் கூட, என்றேனும் எப்போதாவது இன்னொரு ஊரில் இந்த அனுபவத்தைப் பெற்றிருப்பார்கள். ஆக, டுலெட் 99 சதவிகிதத்தினருக்கு நிகழ்ந்த, நிகழும் 100 சதவிகிதம் உண்மையான கதை. 100 திரைப்பட விழாக்களில், 84 பரிந்துரைகளில் இந்திய அரசின் தேசிய விருது உட்பட 32 விருதுகளைப் பெற்றுள்ளது. அதிக விருதுகளை வாங்கிய தமிழ் சினிமா என்ற பெருமையைப் பெற்றுள்ளது டுலெட் திரைப்படம். கோலிவுட்டை நம்பியிருக்கும் எண்ணற்றவர்களில் ஒருவனான இளங்கோவின் காதல் மனைவி அமுதாவிடம், ஒரு மாதத்திற்குள்...
ஜோக்கர் விமர்சனம்

ஜோக்கர் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சாமானியர்களைச் சமூகம் எப்படி ஜோக்கராக்குகின்றது என்பதே படத்தின் கதை. ‘கோண மண்டை’யாக இருப்பதால் பிடிக்கலை எனச் சொல்லிய பின்னும், மல்லிகாவைப் பின் தொடர்ந்து கொண்டே இருக்கும் வழக்கமான தமிழ் சினிமா ஹீரோதான் மன்னர்மன்னன். ‘யாருகிட்டயும் பேசாமலும், தலை நிமிராமலும் இருக்கும் பெண்ணைப் பார்க்கலாமா?’ என்று மன்னர்மன்னனின் மச்சான் கேட்கிறார். படத்தின் கதை நடக்கும் களம் தருமபுரி. படம் முழு நீள(!?) அரசியல் நையாண்டிப் படம். தமிழகத்தில் அதிகரித்து வரும் ‘கெளரவக் கொலை’ குறித்த ஒரே ஒரு வசனம் கூட வராதது எதேச்சையானதாக இருக்கலாம். ஏனெனில் படம் சமகால அரசியல் அவலங்கள் அனைத்தையும் சகட்டுமேனிக்குப் பகடி செய்கிறது. ‘அவங்க கொடுக்கலைன்னா நாமலே எடுத்துக்கணும் பைய்யா. அதுதான் பவரு’ என மன்னர்மன்னனின் அரசியல் குருவாகக் கலக்கியுள்ளார் எழுத்தாளர் பவா செல்லத்துரை. படத்தின் ஆகப் பெரிய பலம் அதன் கதாபாத்திர வடிவமைப்புகள...
சவாரி – படத்தொகுப்பாளர் கிஷோரின் கடைசிப்படம்

சவாரி – படத்தொகுப்பாளர் கிஷோரின் கடைசிப்படம்

சினிமா, திரைச் செய்தி
“இது அவருடைய கடைசிப்படம். ஈரம் படத்திற்குப் பிறகு வொர்க் சேட்டிஸ்ஃபிகேஷன் தந்த படம் எனப் பாராட்டினார் கிஷோர் சார்” என்றார் சவாரி படத்தின் இயக்குநர் குகன் சென்னியப்பன். ‘நாளைய இயக்குநர்’களில் இருந்து வந்தவர் குகன் சென்னியப்பன். நாளைய இயக்குநர்கள் எதிர் குழுவிலிருந்த கார்த்திக் யோகியுடன் இணைந்து, சவாரி கதையை உருவாக்கியுள்ளார். ‘செழியன் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய ஒத்துக்கிட்டா இந்தப்படத்தைத் தயாரிக்கிறேன்’ என கண்டிஷன் போட்டுள்ளார் தயாரிப்பாளர். ‘ஸ்க்ரிப்ட் கொடுத்துட்டுப்போங்க. நான் தேர்வு செய்துதான் ஒத்துப்பேன். பிடிச்சிருந்ததுன்னா செய்யலாம்’ எனச் சொல்லியுள்ளார் ஒளிப்பதிவாளர் செழியன். அவருக்கு திரைக்கதை பிடித்திருந்ததோடு அன்றி, “நீங்க கிஷோர்க்கிட்ட போய் இந்த ஸ்க்ரிப்ட் கொடுங்க. அவருக்குக் கண்டிப்பா பிடிக்கும். உங்களால் முடிஞ்சதைக் கொடுங்க. டிமாண்ட் செய்ய மாட்டார். நான் கிஷோர்கிட்டப்...