Shadow

Tag: ஜான்சன்

பன் பட்டர் ஜாம் விமர்சனம் | Bun Butter Jam review

பன் பட்டர் ஜாம் விமர்சனம் | Bun Butter Jam review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
நல்ல கலகலப்பான யூத்-ஃபுல்லான படம். ராஜு ஜெயமோகன் பாவ்யாவைக் காதலிக்கிறார். ராஜுவின் நண்பனும் அதே பெண்ணைக் காதலிக்கிறார். ராஜுவின் பக்கத்து வீட்டுப் பெண்ணான ஆதியா, VJ பப்புவைக் காதலிக்கிறார். யார் யாருடன் இணைந்தார்கள் என்பதுதான் படத்தின் முடிவு. படத்தில் வரும் பிரதான கதாபாத்திரங்கள் அனைத்தையும் மிக நேர்த்தியாக எழுதியுள்ளார் இயக்குநர் ராகவ் மிர்தாத். சார்லி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, கெளரவத் தோற்றத்தில் நடித்துள்ள விக்ராந்த், ராஜுவின் நண்பனாக வரும் மைக்கேல் தங்கதுரை, VJ பப்பு, பப்புவின் கோவக்கார அப்பா என கதாபாத்திர வடிவமைப்பிலேயே படத்தின் கலகலப்பிற்கு உறுதி செய்துள்ளார் ராகவ் மிர்தாத். இரண்டாம் பாதியில், காதலியின் வீட்டில் மாட்டிக் கொண்டு, VJ பப்பு திண்டாடும் காட்சிகள் ஓர் உதாரணம். முதற்பாதியில், ஆதியாவும் ராஜுவும் சந்தித்துக் கொள்ளும் காட்சிகள் அனைத்துமே கலகலப்பிற்கு உத்திரவாதமளிக்கி...
பேரன்பும் பெருங்கோபமும் விமர்சனம் | Peranbum Perungobamum review

பேரன்பும் பெருங்கோபமும் விமர்சனம் | Peranbum Perungobamum review

சினிமா, திரை விமர்சனம்
குழந்தையைக் கடத்தினான் என அரசு மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரியும் ஜீவாவைக் காவல்துறை கைது செய்கிறது. குழந்தையைத் தான் கடத்தவில்லை ஆனால் தனக்கு என்ன நேர்ந்தது, தானென்ன செய்தேன் என்று ஒரு பெரும் பஞ்சாயத்தை இழுத்து விடுகிறான் ஜீவா. ஜாதி வெறி பிடித்த ஒரு கிராமத்தினின்று அதிகாரத்திற்கு வருபவர்களை ஜீவா பெருங்கோபம் கொண்டு எப்படிப் பழிவாங்குகிறான் என்பதுதான் படத்தின் கதை. சாதிவெறி பிடித்த சகோதரர்கள் முத்துப்பாண்டி, ரத்னவேலுவாக முறையே மைம் கோபியும், அருள்தாஸும் நடித்துள்ளார்கள். சகோதர வில்லன்களாக நடிக்க மிகப் பொருத்தமானவர்கள். கேங்கரஸ் படத்திலும் பணத்தாசை பிடித்த சகோதர வில்லன்களாக நடித்திருப்பர். தாடி வைத்திருக்கும்போது இனிகோ பிரபாகரை நினைவுப்படுத்தும் முகச்சாயலில் உள்ளார் விஜித் பச்சன். நாற்பதுகளில் இருப்பது போன்ற தோற்றத்தில், ஒரு சோர்வையும், அனைத்தையும் இழந்து பழிவாங்கும் வெறியை மட்டும் தக...
ஜப்பான் விமர்சனம்

ஜப்பான் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கடந்த வருடத்தின் தீபாவளி வெற்றியாளரான ‘சர்தார்’ படத்தின் நாயகனான கார்த்தியின் படமென்பதாலும், குக்கூ, ஜோக்கர் முதலிய படங்களை இயக்கிய எழுத்தாளர் ராஜுமுருகனின் படமென்பதாலும், ஜப்பான் மீதோர் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது. இருநூறு கோடி ரூபாய் பெறுமானமுள்ள நகைகள், ராயல் நகைக்கடையின் சுவரைத் துளையிட்டுத் திருடப்பட்டுவிடுகின்றன. முதற்கட்ட விசாரணையில், கொள்ளை நடந்த பாங்கினைக் கொண்டு, கொள்ளையடித்தது ஜப்பான் என உறுதி செய்கின்றது காவல்துறை. ஜெகஜால கில்லாடியான ஜப்பானைக் காவல்துறையால் பிடிக்க முடிந்ததா என்பதுதான் படத்தின் கதை. கங்காதரராக ஜித்தன் ரமேஷ் நடித்துள்ளார். படத்தின் அசுவராசியத்திற்குக் காரணம், கங்காதரர் போல் முழுமை பெறாத கதாபாத்திரங்களே காரணமாகும். பிரதான கதாபாத்திரம் ஏற்றிருக்கும் ஜித்தன் ரமேஷைக் கூட சரியாகப் பயன்படுத்தாதது, திரைக்கதையின் பலவீனத்துக்கு அச்சாரம் இட்டுள்ளது. ‘அண்ணாமலையா...
ரெஜினா விமர்சனம்

ரெஜினா விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஒரு வங்கிக் கொள்ளைச் சம்பவத்தில், ரெஜினாவின் கணவரும் வங்கி ஊழியருமான ஜோ கொடூரமாகக் கொல்லப்படுகிறார். ஒரே நாளில் தன் வாழ்வை ஒட்டுமொத்தமாக நிர்மூலமாக்கின கொள்ளையர்களைத் தேடிச் சென்று எப்படிப் பழிவாங்குகிறார் என்பதுதான் ரெஜினா படத்தின் கதை. ரெஜினாவாக சுனைனா நடித்துள்ளார். மீனுக்காக ஒற்றைக் காலில் காத்திருக்கும் கொக்கு போல் பழி வாங்குவதற்கான தருணத்தை எதிர்நோக்கிப் பொறுமையாகக் காத்துள்ளார் சுனைனா. ரிது மந்தாராவைக் கடத்தி, நிவாஸ் ஆதித்தனை மிரட்டி தன் பழிவாங்கும் பயணத்தை நகர்த்துகிறார் சுனைனா. நண்பர்கள் உதவி செய்கின்றனர் எனக் காட்டப்பட்டாலும், சுனைனா தன் இரையை மிகச் சுலபமாக நெருங்குவது திரைக்கதையின் பலவீனத்தைக் காட்டுகிறது. பவா செல்லத்துரை, டெர்மினேட்டர் அர்னால்டை நினைவுறுத்துவது போல் ஆடாமல் அசையாமல் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு வசனம் பேசுபவராக உள்ளார். ‘ஐயோ, பாவம்’ என அவர் இரக்கப்பட்டாலும...
ஃபர்ஹானா விமர்சனம்

ஃபர்ஹானா விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஆஃபீஸ் ரூமில் இருந்து வகுப்பறைக்கு அறிக்கை வந்து, ஃபீஸ் கட்டாதவர்களின் பெயர் படிக்கப்பட்டுக் குற்றவாளிகள் போல் மாணவர்கள் எழுந்து நிற்க வைக்கப்படுவது என்பது மிகக் குரூரமான உளவியல் தாக்குதல். அத்தகைய தாக்குதல்களில் இருந்து தன் குழந்தைகளைப் பாதுகாக்க, ஃபர்ஹானா வேலைக்குச் செல்ல முடிவெடுக்கிறார். டீமானிடைசேஷன், ஜி.எஸ்.டி., கொரோனா கால ஊரடங்குகள் என வாழ்க்கை, குறிப்பாக சிறு தொழிலில் ஈடுபட்டோரை நிலைகுலைய வைத்துள்ளது. அப்படி, செருப்புக் கடை வைத்துள்ள ஃபர்ஹானாவின் தந்தைக்கும் வருமானத்தில் இழப்பு நேரிடுகிறது. வங்கியின் பிபிஓ (BPO)-வில் வேலைக்குச் சேரும் ஃபர்ஹானாவிற்கு, ஓர் அவசரத் தேவைக்காகக் கூடுதல் பணம் தேவைப்படுகிறது. பொருளாதாரச் சுமையைச் சமாளிக்கும் பொருட்டு, ஊக்கத்தொகை அதிகம் கிடைக்கும், அலுவலகத்திற்குள்ளேயே இயங்கும் வேறொரு பிரிவிற்குப் பணிக்குச் செல்கிறார் ஃபார்ஹானா. தனிமையில் வாடுபவர்கள் நட்பு...
விருமன் விமர்சனம்

விருமன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஏழு வருடங்களிற்குப் பிறகு, கார்த்தியுடன் மீண்டும் இணைந்துள்ளார் இயக்குநர் முத்தையா. அடித்து வெளுக்கும் நாயகன், குலச்சாமியாக ஒரு பெண் கதாபாத்திரம், தறிகெட்டு திரியும் வில்லன் என்ற தனது டெம்ப்ளட்டிற்குள் விருமனையும் அடைத்துள்ளார். தனது தாயின் மரணத்திற்குத் தந்தை முனியாண்டி தான் காரணமென்ற எண்ணம், சிறுவன் விருமனின் மனதிலே ஆழமாகப் பதிகிறது. சாகும் முன், விருமனிடம், பணத்தை விட உறவுகள் புடை சூழ வாழ்வதே சிறந்தது என தந்தைக்கு உணர்த்தும்படி ஒரு வேண்டுகோளை வைக்கிறார் அவனது அம்மா முத்துலக்ஷ்மி. சுயநலத்தையும் அகங்காரத்தையும் ஆணவத்தையும் மொத்தமாகக் குத்தகை எடுத்திருக்கும் முனியாண்டியை விருமன் எப்படி தன் வழிக்குக் கொண்டு வருகிறார் என்பதுதான் படத்தின் கதை. இந்தப் படத்தின் அச்சாணி என்றால் முனியாண்டியாக நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ்தான். அவரது பாத்திர அமைப்பை இன்னும் ஸ்திரப்படுத்தியிருந்தால், தானாக விருமனுக...
“சூரியை ஓட விட்ட அதிதி” – கார்த்தி | விருமன்

“சூரியை ஓட விட்ட அதிதி” – கார்த்தி | விருமன்

இது புதிது
2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யா தயாரித்து வழங்கும் படம் ‘விருமன்’. இயக்குநர் முத்தையா இயக்கும் இப்படத்தில் கார்த்தி, அதிதி சங்கர், சூரி, சரண்யா பொன்வண்ணன், ராஜ்கிரண், இளவரசு, பிரகாஷ் ராஜ், மனோஜ் பாரதிராஜா, சிங்கம் புலி மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகவிருக்கும் இந்த ‘விருமன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அச்சந்திப்பில் பேசிய விருமன் பட நாயகன் கார்த்தி, “இப்படத்தின் ட்ரைலர் வரும்வரை பதட்டமாகத்தான் இருந்தது. அயல் நாட்டு மொழிப் படங்களைப் பார்த்து நம் கலாச்சாரம் மாறி விட்டதோ? நமது மண் சார்ந்த படங்களுக்கு ஆதரவு இருக்காதோ? என்ற சந்தேகம் துவக்கத்தில் எங்களுக்குள் இருந்தது. ஏனென்றால், தற்போது கிராமத்தில்கூட ஸ்விக்கி, ஸொமேட்டோ வந்துவிட்டது. ஆனால், இந்த ‘விருமன்’ படத்தின் ட்ரெயிலர் வெளியாகி வெ...
இளையராஜா பாடிய டைட்டில் பாடல் – நெகிழ்ச்சியில் இயக்குநர் முத்தையா | விருமன்

இளையராஜா பாடிய டைட்டில் பாடல் – நெகிழ்ச்சியில் இயக்குநர் முத்தையா | விருமன்

சினிமா, திரைத் துளி
2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யா தயாரித்து வழங்கும் படம் ‘விருமன்’. இயக்குநர் முத்தையா இயக்கும் இப்படத்தில் கார்த்தி, அதிதி சங்கர், சூரி, சரண்யா பொன்வண்ணன், ராஜ்கிரண், இளவரசு, பிரகாஷ் ராஜ், மனோஜ் பாரதிராஜா, சிங்கம் புலி மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகவிருக்கும் இந்த ‘விருமன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இயக்குநர் முத்தையா, “இப்போது இருக்கும் காலகட்டத்தில் இரு பிள்ளைகளை வளர்ப்பது சிரமமாக இருக்கிறது. இப்போது ஒரு குழந்தை. பிறகு குழந்தையே வேண்டாம். நாம் இருவர் நாமே இருவர் என்ற நிலையும் வரலாம். இப்படத்தின் கதை உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைதான். என் வீட்டிற்கு பக்கத்தில் நேரில் நடந்ததைதான் இப்படத்தில் எடுத்திருக்கிறேன். கார்த்தி சாரிடம் இக்கதையைக் கூறியதும் ஒப்புக் கொண்டார். ...
மண் சார்ந்த படங்கள் – அப்போது பாரதிராஜா இப்போது முத்தையா | விருமன்

மண் சார்ந்த படங்கள் – அப்போது பாரதிராஜா இப்போது முத்தையா | விருமன்

சினிமா, திரைச் செய்தி
2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யா தயாரித்து வழங்கும் படம் ‘விருமன்’. இயக்குநர் முத்தையா இயக்கும் இப்படத்தில் கார்த்தி, அதிதி சங்கர், சூரி, சரண்யா பொன்வண்ணன், ராஜ்கிரண், இளவரசு, பிரகாஷ் ராஜ், மனோஜ் பாரதிராஜா, சிங்கம் புலி மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகவிருக்கும் இந்த ‘விருமன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய நடிகர் ராஜ்கிரண், “இந்தப் படம் மூலமாக 2-டி நிறுவனம் எனக்கு முதல் வாய்ப்பினைக் கொடுத்திருக்கிறார்கள். இதற்காக சூர்யா, ஜோதிகா மற்றும் ராஜா அவர்களுக்கும் நன்றி. தம்பி முத்தையாவும், கார்த்தியும் கொம்பனில் முதல் வாய்ப்பு கொடுத்தார்கள். இரண்டாவது படமாக இந்த ‘விருமன்’ படத்திலும் கொடுத்ததற்கு நன்றி. 2டி நிறுவனம் படத்தயாரிப்பினை ஒரு கடமையாக செய்யாமல் அனைவரையும் தன் குடும்பத...
“அம்மாவாகவே வாழும் சரண்யா அக்கா” – சூரி | விருமன்

“அம்மாவாகவே வாழும் சரண்யா அக்கா” – சூரி | விருமன்

சினிமா, திரைச் செய்தி
2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யா தயாரித்து வழங்கும் படம் ‘விருமன்’. இயக்குநர் முத்தையா இயக்கும் இப்படத்தில் கார்த்தி, அதிதி சங்கர், சூரி, சரண்யா பொன்வண்ணன், ராஜ்கிரண், இளவரசு, பிரகாஷ் ராஜ், மனோஜ் பாரதிராஜா, சிங்கம் புலி மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகவிருக்கும் இந்த ‘விருமன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. நடிகை இந்திரஜா, “இப்படத்தில் சூரி மாமாவிற்கு ஜோடியாக நடிக்கிறேன். ஆனால், உங்கள் அனைவருக்கும் தெரியாத ரகசியம் அவர் மடியில் அமர்ந்துதான் நான் 2 ஆவது மொட்டை அடித்தேன். என்னை அழகாகக் காண்பித்த ஒளிப்பதிவாளர் செல்வா சாருக்கு நன்றி” என்றார். நடிகை சரண்யா, “பெரும் நம்பிக்கையுடன் இப்படத்தில் நடித்திருக்கிறேன். கார்த்தியுடன் ஏற்கனவே அம்மாவாக நடித்திருக்கிறேன். இப்படத்தில் நடித்ததும் மகிழ்ச்சி....
“அமெரிக்கால படிச்ச தம்பியா இது?” – சிங்கம்புலி | விருமன்

“அமெரிக்கால படிச்ச தம்பியா இது?” – சிங்கம்புலி | விருமன்

சினிமா, திரைத் துளி
2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யா தயாரித்து வழங்கும் படம் ‘விருமன்’. இயக்குநர் முத்தையா இயக்கும் இப்படத்தில் கார்த்தி, அதிதி சங்கர், சூரி, சரண்யா பொன்வண்ணன், ராஜ்கிரண், இளவரசு, பிரகாஷ் ராஜ், மனோஜ் பாரதிராஜா, சிங்கம் புலி மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆகஸ்ட் 12 ஆம் தேதி வெளியாகவிருக்கும் இந்த ‘விருமன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இயக்குநரும் நடிகருமான சிங்கம் புலி, “மண் சார்ந்த படைப்புகளுக்கு சரியான தேர்வாக முத்தையாவை 2டி தேர்ந்தெடுத்திருக்கிறது. இப்படத்தைப் பற்றி முத்தையா கூறும்போது நாமும் இப்படத்தில் இடம் பெற வேண்டும் என்று அவருடன் தொடர்பில் இருந்தேன். முத்தையா ஒருவரிடம் கதை கூறினால், அவர் அப்படத்தில் நடிக்கப் போகிறார் என்று அர்த்தம். ஒரு காட்சியை அவரிடம் கூறினால், அதற்கு பல காட்சிகளைக் கூறுவார். எல்லாவற்றைய...
ஜாம்பி விமர்சனம்

ஜாம்பி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
விஷமேற்றப்படும் கோழியைச் சமைத்துச் சாப்பிட்டதால் சிலர் ஜாம்பி ஆகிவிடுகிறார்கள். அவர்களிடம் இருந்து நாயகியும், ஐவரைக் கொண்ட நண்பர்கள் குழுவும் எப்படித் தப்பிக்கிறார்கள் என்பதுதான் கதை. பறவைக் கோணத்தில், ஒற்றையடி பாதை கொண்ட நிலப்பரப்பில் ஒரு வாகணம் செல்வதைக் காட்டுகின்றனர். இப்படியாகப் படத்தின் தொடம்கம் செமயாக உள்ளது. அவ்வாகனத்தில் இருந்து தூக்கி எறியப்படும் கோழி, உணவகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு தயாராகிறது என மிக ப்ரொஃபஷ்னல் படமாகத் தொடங்குகிறது. பின் திரையில் கொட்டை எழுத்தில் கேரக்டர் பெயரைப் போட்டு கதாபாத்திரங்களைத் தொன்மையான முறையில் அறிமுகம் செய்கின்றனர். அங்கிருந்து டாஸ்மாக். டாஸ்மாக்கில் இருந்து மரக்காணத்தில் ஒரு லாட்ஜ். மட்டையாகி அக்கதாபாத்திரங்கள் விழித்தால் சுற்றிலும் வாயில் ரத்தம் வடிய சுற்றிக் கொண்டிருக்கும் ஜாம்பிகள். ஆனால், இந்தக் கட்டத்திற்குள் வருவதற்குள் ஒருவழியாக்கி விட...
ராட்சசி விமர்சனம்

ராட்சசி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பெரும்பாலானோரின் பொதுப்புத்தியில் ஓர் அரசுப்பள்ளியைப் பற்றிய பிம்பம் எவ்வாறு பதிந்துள்ளதோ, அப்படி ஓர் அரசுப்பள்ளி தான் விருதுநகர் மாவட்டம் R.புதூரில் இருக்கும் அந்தப் பள்ளி. அங்கு தலைமை ஆசிரியையாக கீதா ராணி பொறுப்பெடுத்துத் தன் சாட்டையைச் சுழற்ற, அவருக்கு 'ராட்சசி' எனும் அடைமொழி கிடைக்கிறது. சாட்டை படத்தை நிறையவே ஞாபகப்படுத்துகிறது. குறைந்தபட்சம், அதையொரு சவாலாக எடுத்துக் கொண்டு வேறு பரிமாணத்தில் பயணிக்கக் கூடப் படம் முயற்சி செய்யவில்லை. நேரடியாக, 'இது தவறு, இப்படிச் செய்யலாம்' எனச் சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார் தலைமை ஆசிரியையான கீதா ராணி டீச்சர். படத்தில் ஏகத்துக்கும் வில்லன்கள் உண்டு. துணைத் தலைமை ஆசிரியர், தனியார் பள்ளி நிறுவனர், உள்ளூர் அரசியல்வாதி போன்றோர் தலைமை ஆசிரியைக்குக் குடைச்சல் தருவதை முதன்மை லட்சியமாகக் கொண்டுள்ளனர். உண்மையின் உரைகல்லாகவும், அவலங்களைச் சுட்டிக் காட...
தர்மபிரபு விமர்சினம்

தர்மபிரபு விமர்சினம்

சினிமா, திரை விமர்சனம்
  வாரிசு என்ற அடிப்படையில் தர்மராஜாவின் மகனான தர்மபிரபு, எமன் பதவிக்கு வருகிறார். ஒரு சிறுமியின் உயிரைக் காப்பாற்றப் போக, அவளோடு சேர்த்து ஒரு சாதி கட்சித் தலைவரையும் காப்பாற்றி விடுகிறார் எமன். அரக்கனான அந்தத் தலைவரை ஏழு நாளுக்குள் கொல்லவில்லை எனில் எமலோகத்தைக் கொளுத்தி விடுவேன் என சிவன் சொல்லிவிட, தர்மபிரபு எப்படி அந்த சாதிக்கட்சித் தலைவரின் உயிரை எடுக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. இயக்குநர் முத்துக்குமரன் தன்னை ஒரு தீவிர பெரியாரிஸ்ட் எனச் சொல்லிக் கொள்கிறார். நீதியின் காவலனான தர்மபிரபு, எமக்கோட்டைக்கு ஓர் இக்கட்டான சூழல் நேரும் பொழுது, பெரியார், அம்பேத்கர், நேதாஜி, காந்தி ஆகியோரைக் கூப்பிட்டு யோசனை கேட்கிறார். பெளத்தரான அம்பேத்கரும், நாத்திகவாதியான பெரியாரும், அவர்களின் வாழ்நாள் முழுவதும் பேசிய அரசியல் அனைத்தும் மிகப் பெரிய காமெடி என நிறுவப்படுகிறது. நால்வரும் தாங்கள் வரித்துக் ...
“அம்மா, பெண், நடிகை என்ற வரிசை” – மகிழ்ச்சியில் ஜோதிகா

“அம்மா, பெண், நடிகை என்ற வரிசை” – மகிழ்ச்சியில் ஜோதிகா

சினிமா, திரைச் செய்தி
சூர்யா, கார்த்தியை மட்டும் வைத்து ட்ரீம் வாரியர் நிறுவனம் படம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். நானாக தான் போய் வாய்ப்பைக் கேட்டேன். அவர்கள் எந்த சின்ன படங்கள் தயாரித்தாலும் வெற்றியடைகிறது. அவர்களது கதைத் தேர்வு அற்புதமாக இருக்கிறது. ஆகையால் தான் முதல் முறையாக புது இயக்குநருடன் பணிபுரிகிறேன். தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, பிரகாஷ் இருவருமே அரசுப் பள்ளியில் படித்தவர்கள். அவர்களது உதவி இந்தப் படத்தில் நிறையவே இருந்தது. இயக்குநர் கெளதம் எனக்கு 2 மணி நேரம் கதை சொன்னார். அரசாங்கப் பள்ளி எப்படி நடக்க வேண்டும் என்ற மெசேஜ் ஏற்கெனவே வந்திருக்கிறது. ஆனாலும், இந்தக் கதை அவ்வளவு புதிதாக இருந்தது. இதிலிருக்கும் சின்னச் சின்ன விஷயங்கள் அற்புதமாக இருக்கும். இதிலுள்ள காதல் ட்ராக் புதிதாக இருக்கும். ஒரு அப்பா, பெண்ணோட ரிலேஷன்சிப் புதிதாக இருக்கும். இயக்குநர் கல்யாணத்துக்கு முன்பு எப்படி இவ்வளவு அனுபவமாக வாய்ந்தவரா...