
காவ்ய நட்பு
குப்பன் சுப்பனெல்லாம் தங்களை உயிர் நண்பர்கள் என சொல்லிக் கொள்ளும் காலம் இது. இந்தத் துரித யுகத்தில் பெற்றவர்களையே மறந்து விடுகின்றனர். ஆனால் சில விதி மீறல்கள் எங்கும் அனைத்து காலத்திலும் இருக்க தான் செய்யும். அப்படி ஒரு அதிசயம் தான் காவிய வித்தகர்களான காந்தப்பன்னும், சாந்தப்பன்னும். அவர்களது முதல் சந்திப்பு காற்றில் ஜவ்வுத்தாள் பை பறப்பது போல ஒரு சாதாரன சந்திப்பு தான். ஆனால் மெல்ல அது வரலாறாய் மாறி வருகிறது. அவர்களின் முழு வரலாறை திரட்ட முடியாத அபாக்கியசாலியாக இருக்கின்றேன். இக்காவியத்தின் நாயகர்கள் விளை மண்ணில் இருந்து பிடுங்கிய மரவல்லி கிழங்கு போல் இன்னும் தரணி தனில் வலம் வருவதால், இக்காவியத்தின் ஆரம்ப அத்தியாயங்களை மட்டுமே அளிக்க முடியும் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். வரலாறு வளர வளர காவியமும் வளரும் என நம்புவோமாக!காந்தா சாந்தா. இது தான் அவர்களின் சுருக்கம். உலகம் வெப...







