
“அடிமைக்கு ஏன் மேலாடை?” – கர்ணன்
(Image Courtesy: https://detechter.com/)
கர்ணனைப் பற்றி நாம் உருவாக்கிக் கொண்டுள்ள பிம்பத்திற்கு, சிவாஜி கணேசன் நடிப்பில் 1964 இல் வெளிவந்த “கர்ணன்” திரைப்படமே முக்கிய காரணம். அந்தப் படத்தில் சுட்டிக் காட்டப்பட்டது போல்தான் இதிகாசங்களும், காவியங்களும் கர்ணனை அடையாளப்படுத்துகின்றதா எனப் பார்ப்போம்.
பெற்றவர் பிள்ளையை வீதியில் விட்டெறிந்தால்
குற்றம் உடையோர் குழந்தைகளா? பெற்ற மக்கள்
சுற்றமும் அற்றுச் சுயமதிப்பும் விட்டனரே!
அர்ப்பணம் செய்தோம் அவர்க்கு.
என்ற வெண்பாவுடன் ஆரம்பிக்கும் படம்.
கர்ணன் தேர்த்தட்டில் சாய்ந்திருக்க, கிருஷ்ணன் அந்தணனாய் வந்து கையேந்தி நிற்கும் போது, இந்தக் குரலில், ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ பாடலைக் கேட்டு கண்ணில் நீர் வழியாதோர் குறைவாகவே இருக்க முடியும்.
படம் முழுக்க வசனங்கள் அப்படி விளையாடும்.
“வளர்த்த தந்தையே, வளர்த்த தாய் சொன்னதைக் கேட்டுக் கொண்டு தான் வந்தேன்...