Shadow

Tag: பாண்டியராஜன்

சூரகன் விமர்சனம்

சூரகன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு விபத்தில் கண் பார்வை பாதிப்புக்குள்ளான நாயகன், அதை மறைத்து போலீஸ் துறையில் பணியாற்றி வருகிறார்.  அவரின் கண் பார்வை குறைபாட்டால் ஒரு அப்பாவிப் பெண் பலியாகிவிட, நாயகன் தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுகிறார். அதே நேரம் ஒரு உயிர் போய்விட்டதே என்கின்ற குற்றவுணர்ச்சி மேலெழ நாயகன் விரக்தியுடன் இருக்கிறார். அந்த சூழலில் சாலையில் அடிபட்டுக் கிடந்த ஒரு பெண்ணைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தும் அப்பெண்ணையும் காப்பாற்ற முடியாமல் போய்விடுகிறது. இந்த குற்றவுணர்ச்சியும் சேர்ந்து கொள்ள நாயகன், சாலையில் அடிபட்டுக் கிடந்த பெண் சாவில் இருக்கும் மர்மத்தை உடைத்து தன் குற்றவுணர்வில் இருந்து விடுபட நினைக்கிறான். அந்த இளம்பெண் மரணத்தின் பின்னால் இருக்கும் நபர்களை நாயகன் கண்டறிந்தானா..? தன் குற்றவுணர்ச்சியில் இருந்து விடுபட்டானா..? என்பதை விளக்குகிறது திரைக்கதை.ஒரு சந்தேகத்திற்கிடமான மரணம். அதன் பின்னா...
பாட்னர் விமர்சனம்

பாட்னர் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பாண்டியராஜன் ஒரு ஆராய்ச்சியாளர். அவரிடம் இறந்த நபர்களின் டி.என்.ஏ-வை எடுத்து உயிருள்ள மற்றொரு நபரின் உடலில் செலுத்தி இறந்தவரின் குணநலன்களையும் அறிவையும் உயிருள்ளவரின் உடலுக்குள் கொண்டு வருவதற்கான ஆராய்ச்சி முடிவுகள் அடங்கிய ஒரு பென் டிரைவ், அதை கொள்ளையடிக்க துடிக்கும் அவரின் முன்னாள் உதவியாளரான ஜான் விஜய்,   அந்த பணியை செய்ய முன்னாள் உதவியாளர் நியமிக்கும்  ரோபோ சங்கர் அடங்கிய ஒரு டம்மி டீம்,  திருடுவதையே தொழிலாகக் கொண்டு இயங்கும் ஒரு கம்பெனியில் பணியாற்றும்  யோகி பாபு, ஊரில் தன் தங்கை திருமணத்தை நிறுத்த 25 இலட்சம் தேவை என்று யோகி பாபுவை தேடி வரும் நாயகன் ஆதி.  திருட்டு கம்பெனிக்கு தன் தேவையை பூர்த்தி செய்து கொள்ள வரும் அரசியல்வாதி ரவிமரியா.  இவர்களுக்குள் நடக்கும் வழக்கமான கண்ணாமூச்சி விளையாட்டும்,  அதற்கிடையேயான ஆள்மாறாட்ட விளையாட்டும், அதன் பிறகு அ...
“மச்சான் தயவு எவ்வளவு முக்கியம்?” – பாண்டியராஜன்

“மச்சான் தயவு எவ்வளவு முக்கியம்?” – பாண்டியராஜன்

சினிமா, திரைச் செய்தி
உதய் புரொடக்ஷன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயகுமார், கீதா உதயகுமார் மற்றும் எம். பி. வீரமணி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் 'தெய்வ மச்சான்'. அறிமுக இயக்குநர் மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தில் விமல், பாண்டியராஜன் 'ஆடுகளம்' நரேன், பால சரவணன், அனிதா சம்பத், வத்சன் வீரமணி, தீபா சங்கர், கிச்சா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கேமில் ஜெ அலெக்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு காட்வின் ஜெ. கோடன் இசையமைத்திருக்கிறார். இப்படத்திற்குப் பின்னணி இசை அஜீஸ் கவனித்திருக்கிறார். இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. இந்தத் திரைப்படத்தை பிவிஆர் பிக்சர்ஸ் வெளியிடுகிறது. ஏப்ரல் 21ஆம் தேதி அன்று தி...
“சீனியர் எனக்கில்லாத ஃபீலிங்கா?” – பாக்கியராஜ்

“சீனியர் எனக்கில்லாத ஃபீலிங்கா?” – பாக்கியராஜ்

சினிமா, திரைச் செய்தி
ஆணவக்கொலைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம் "தொட்ரா". இயக்குநர் பாக்கியராஜின் சீடரான மதுராஜ் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். நடிகர் பாண்டியராஜனின் மகன் ப்ரித்வி நாயகனாக நடித்துள்ளார்.  அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பாண்டியராஜன், “ப்ரித்வி இவ்வளவு நண்பர்களைச் சேர்த்து வைத்திருப்பான் என நினைத்தே பார்க்கவில்லை. என் கவலையெல்லாம் இன்னும் அவன் சினிமாவில் ஒரு நல்ல நிலைக்கு வரவில்லையே என்பதுதான். வெற்றி அவ்வளவு சாதாரணமாக வந்துவிடாது. உடனே வந்துவிட்டால் அதற்கு மரியாதையும் கிடையாது. எதற்கும் ஒரு நல்ல நேரம் வரவேண்டும். ஆனால் இந்தப் படத்தை பார்த்ததும் பிருத்விக்கு அந்த நல்ல நேரம் வந்துவிட்டது என்றே தோன்றுகிறது. அந்த அளவுக்கு இந்தப் படத்தில் பிருத்வியைப் பார்க்கும்போது புது தேஜஸ் தெரிகிறது” என ஒரு தகப்பனாக தனது உணர்வுகளை நெகிழ்ச்சியுடன் கூறி கண் கலங்கினார். நிகழ்ச்சிய...
டியூப்லைட் விமர்சனம்

டியூப்லைட் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு விபத்தில் அடிபட்டு, நாயகனுக்குக் கேட்டல் குறைப்பாடு ஏற்படுகிறது. அதாவது, சத்தத்தை அவரது மூளை உள்வாங்கிக் கொள்ள சுமார் 5 நிமிடங்கள் ஆகும். இந்த நொடி நீங்க நாயகனிடம் ஹலோ சொன்னால், அவருக்கு ஐந்து நிமிடங்கள் கழித்தே கேட்கும். ‘சாவு செய்தி சொன்னால் கருமாதி அன்று தான் அவருக்குக் கேட்கும்’ என்பதால், அவருக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர் “டியூப்லைட்” என நாயகனுக்குப் பட்டப்பெயர் சூட்டுகிறார். அத்தகைய நாயகன், ஒரு பெண் மீது, கண்டதும் காதல் வயப்படுகிறார். பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை. நாயகனைச் சுற்றியே கதை நகர்கிறது. அவரது அறிமுகமும், அப்பொழுது அவரது ஆட்டமும், படம் நெடுகே அவருக்கு ஏற்படும் இக்கட்டினை அவர் முகத்தில் பிரதிபலிக்கும் விதத்திலும் அசத்தியுள்ளார். ராம் எனும் டியூப்லைட் பாத்திரத்தில் நாயகனாக அறிமுகமாகியிருக்கிறார் இந்த்ரா. கார்பொரேட் கம்பெனிகளில் பணி புரியும் ஊழியர்களின் ஆ...
பனிவிழும் நிலவு விமர்சனம்

பனிவிழும் நிலவு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
காதல், ஊடல், பின் இணைதல்தான் படத்தின் கதை. ‘ஆதியும் அந்தியும்’ படத்தின் இயக்குநர் கெளஷிக்கின் மற்றுமொரு படம். முதல் படத்திற்கும் இதற்கும்தான் எவ்வளவு வித்தியாசம்? சைக்காலஜிக்கல் த்ரில்லரிலிருந்து எந்த சீரியஸ்னசும் இல்லாத ஜாலியான கதைக்குத் தாவியுள்ளார் கெளசிக். ஜம்போ என்கிற ஜம்புலிங்கமாக வெண்ணிறாடை மூர்த்தி நடித்துள்ளார். நல்லவேளையாக இவரைக் கல்லூரிப் பேராசிரியராக நடிக்க வைக்காமல் போனார் இயக்குநர். ஆனால் தன்னைச் சுற்றியுள்ள ஆண் மம்முட்டிகளால் (மண்வெட்டி) தனக்கு ஏதேனும் சேதாரமாகிவிடுமோ என்ற திகிலுடனுள்ள கதாப்பாத்திரம். படத்தின் முதற்பாதியைத் தனது விபரீதக் கற்பனையால் ஓரளவு சுவாரசியப்படுத்துவது வெண்ணிறாடை மூர்த்தி என்றால், இரண்டாம் பாதியைக் கலகலப்பாக்குவது மீனா அக்காவாக வரும் கோவை சரளா. அவர் வந்த பிறகு படத்தின் வேகம் கூடுகிறது. அவரது கண்ணுக்கு மட்டும் தெரியும் அவரது கனவரது பெயர் கமல் என்கிற ...