Shadow

Tag: போதி தர்மர்

போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 8

போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 8

ஆன்‌மிகம், தொடர்
போதி தர்மா - மாஸ்டர் ஆஃப் ஜென்: 7போதி தர்மர் என்பவரை அடையாளப்படுத்திய ஏ.ஆர்.முருகதாசின் படம், 'நோக்கு வர்மம்' என்ற கலையையும் சேர்த்து பிரகடணப்படுத்தியது. ஆனால் அப்படம் போதி தர்மர் என்ற பெயரைத் தவிர்த்து அவரைப் பற்றிய எள்ளளவு குறிப்புகளையும் ஆவணப்படுத்தவில்லை. ஆக இவ்விஷயத்தில் சீனர்களின் நேர்மையைப் பாராட்டியே ஆக வேண்டும். ஏழாம் அறிவு படத்தில் முதல் 20 நிமிடங்கள் சித்தரிக்கப்பட்டுள்ள போதி தர்மர் அப்பட்டமான கற்பனை. போதி தர்மரை உணவில் விஷம் வைத்து சீனர்கள் கொன்றனர் என்பது மிகவும் அருவருக்கத்தக்க அல்லது கேவலமான புனைவு. பிரதான சீடரான வெய் ஹூவிடம் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டு போதி தர்மர் இந்தியாவிற்கு கிளம்பி விட்டார். ஆனால் போதி தர்மர் மீண்டும் இந்தியாவிற்கு வந்ததற்கான ஆதாரங்கள் இல்லை. அதற்கு இரண்டுக் காரணங்கள் இருக்கலாம்.ஒன்று போதி தர்மர் இந்தியாவை விட்டு சீனாவிற்கு சென்ற ஆதாரமே நம்மிட...
போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 7

போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 7

ஆன்‌மிகம், தொடர்
போதி தர்மா - மாஸ்டர் ஆஃப் ஜென்: 6ஒன்பது வருடங்களாக குகையில் ஆடாமல் அசையாமல் உண்ணாமல் தியானத்தில் அமர்ந்து இருக்கும் போதி தர்மரின் புகழ் பரவுகிறது. மக்கள் சாரை சாரையாக ஷவோலின் மடத்திற்குப் படையெடுத்து காணிக்கைகளை சிரத்தையாக ஷவோலின் மடத்தில் செலுத்துகின்றனர். போதி தர்மர் தன் சீடனாக சன் க்வாங்கை ஏற்றுக் கொண்ட அதே வேளையில் ஷவோலின் மடத்தைக் கொள்ளையடிக்க கொள்ளையர்கள் வருகின்றனர். தடுக்க வரும் இளம் பிக்குக்களைத் தாக்குகின்றனர். அரவத்தைக் கேட்டு எழுந்து வரும் தலைமை குரு திருடர்களைப் பார்த்து, "இந்தப் புனிதமான இடத்தில் சண்டையிடக் கூடாது. புத்தருக்கு மரியாதை செலுத்த வேண்டும்" என்கிறார்.திருடர்களின் தலைவர் கேலியாக பிக்குக்களைப் பார்த்து சிரிக்கிறார். தலைமை குரு மண்டியிட்டு திருடர்களின் தலைவர் நிற்கும் திசை நோக்கி வணங்குகிறார். மற்ற பிக்குகளும் வணங்குகின்றனர். திருடர்களின் பின்னால் போதி தர்மர்...
போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 6

போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 6

ஆன்‌மிகம், தொடர்
போதி தர்மா - மாஸ்டர் ஆஃப் ஜென்: 5'நான் என் சீடனை தேர்வு செய்யணும்' - போதி தர்மர்.'சன் க்வாங்' என்பது அவர் பெயர். ஒரு காலத்தில் புகழ் பெற்ற தளபதி. போரில் பலரின் உயிரை மாய்த்து ஒப்பற்ற வீரர் என பெயர் பெற்றவர். தன்னால் கொல்லப்படுபவர்களுக்கு குடும்பம் உள்ளது. அவர்களால் என்றேனும் தான் கொல்லப்பட வாய்ப்புள்ளது என்ற எண்ணம் சன் க்வாங்கிற்கு எழுகிறது. அந்த எண்ணம் அவருள் பெரிய மாற்றத்தை உண்டு பண்ணுகிறது. புத்த மதத்தைத் தழுவி துறவியாக மாறுகிறார்.படத்தில் 'சன் க்வாங்'கின் அறிமுகம் லாங் -ஃபெய் என்னும் மடத்தில் இருந்து தொடங்குகிறது. கிணற்றில் நீர் இறைக்கும் சன் க்வாங், தன் கைகளைப் பதற்றமுடன் கழுவுகிறார். அவர் கையில் ஏதோ அழுக்கு உள்ளதாக காண்பிக்கிறார்கள். ஆனால் அந்தக் காட்சி ஒரு குறியீடு என படுகிறது. தன் கைகளில் படிந்த இரத்தக் கறைகளைக் கழுவ முனைகிறார். அதாவது மனதில் படிந்து விட்ட குற்றவுணர...
போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 5

போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 5

ஆன்‌மிகம், தொடர்
போதி தர்மா - மாஸ்டர் ஆஃப் ஜென்: 4மனிதனுக்கு அதிசயங்கள் மீதும், ஆச்சரியங்கள் மீதும் அலாதி பிரியம். போதி தர்மர் ஒரு நாணலின் உதவியோடு ஆற்றைக் கடந்தார் என்ற விடயம் காட்டுத்தீ போல் பரவுகிறது. மக்களில் சிலர் நம்புகின்றனர். சிலர் நம்ப மறுக்கின்றனர். அதற்கு அவரின் தோலின் நிறமும் காரணமாக இருக்கிறது. எல்லாவற்றையும் கவனித்தவாறு வருகிறார் ஹங் சீ. அவர் அப்பகுதியில் பிரசித்திப் பெற்ற பெளத்த குரு."நாம் நம் மனதை லாப நஷ்டங்களோடு பிணைத்து கொள்ளக் கூடாது; புகழுக்காக ஏக்கப்பட்டால்.. அவை சுக துக்கங்களைப் பெருக்கி விடும். அதனால் தான் பிக்குகள் உலகாயுத விருப்பங்களில் இருந்து விலகி தூய்மையான மனநிலையை அடைய முனைகின்றனர்" என்று தனது சீடர்களுக்கு அறிவுரைக்கிறார் ஹங் சீ.தேநீர் அருந்திக் கொண்டிருக்கும் போதி தர்மரை தூரத்தில் நின்றவாறு மக்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களை எல்லாம் விலக்கியவ...
போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 4

போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 4

ஆன்‌மிகம், தொடர்
போதி தர்மா - மாஸ்டர் ஆஃப் ஜென்: 3போதி தர்மரைக் காண சீன மாமன்னர் வூ விழைகிறார். செருப்பு கூட வாங்க முடியாத அளவு வறுமையில் உள்ளவர்களா இந்தியப் பிக்குகள் என வியந்து போதி தர்மருக்கு ஓர் இணை செருப்பினை அளிக்கின்றனர். போதி தர்மர் அரண்மனை நோக்கி செல்கிறார்.போதி தர்மரும், மாமன்னரும் எதிர் எதிரே அமர்ந்து உள்ளனர். சுவரில் புத்தரின் படம் பெரிதாக வரையப்பட்டுள்ளது. காற்று மெலிதாக வீச, கூரையில் தொங்க விடப்பட்டிருக்கும் மணிகள் ஒலிக்கிறது. மாமன்னர் புன்னகைத்தவாறு ஒலிக்கும் மணியைப் பார்க்கிறார்."காற்று மணிகளை ஒலிக்கச் செய்கிறது.""மாட்சிமைப் பொருந்திய மன்னரின் மனம் அமைதியற்று உள்ளது என நினைக்கிறேன்" என்கிறார் போதி தர்மர்."நீங்கள் சொல்வது சரி தான். உங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.""தாங்கள் பெளத்தத்தைத் தழுவிய மாமன்னர் என ரொம்ப காலத்திற்கு முன்பே கேள்விப்பட்டுள்ளேன். அதனாலேயே பெள...
போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 3

போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 3

ஆன்‌மிகம், தொடர்
போதி தர்மா - மாஸ்டர் ஆஃப் ஜென்: 2'ஜென்' போதனையற்ற 'புத்தம்'. ஜென் குருக்கள் எதையும் யாருக்கும்போதிப்பதில்லை. ஜென் என்பது ஒரு தத்துவ விசார முறைமையோ அல்லது வாழ்வியல் நடைமுறைகளைச் சொல்லும் சித்தாந்தமோ அன்று. தன்னை அறிய முற்படும் பிரத்தியேகமான தரிசன முறையே ஜென். அது தனித்துவமான மனோதளத்தை நம்முள்உருவாக்கும். ஆனால் அது பிறர் சொல்லக் கேட்டு உருவாகாது.  பூ மலர்வது போன்று அனிச்சையாக உள்ளுக்குள் நிகழும் அக விழிப்பு அது. எப்படி ஜென்னில் போதனைகள் இல்லையோ அதே போல் வழிபாட்டுச் சம்பிரதாயங்களும், சடங்குகளும் கிடையாது. எனவே ஜென் மதம் கடந்தது என சொல்லலாம்.போதி தர்மர் ஒருமரத்தின் அடியில் அமர்ந்து தியானத்தில் இருக்கிறார். சின் மோன் சில பிக்குகளுடன் அம்மரம் அருகே வருகிறான். போதி தர்மர் தியானத்தில் இருப்பதைப் பார்த்தவாறே, "உங்களுக்கெல்லாம் ஒன்று சொல்கிறேன். தாமரை சேறுநிறைந்த குளத்தில் மலர்கிறது....
போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 2

போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 2

ஆன்‌மிகம், தொடர்
போதி தர்மா: மாஸ்டர் ஆஃப் ஜென் - 167 வருடங்களுக்குப் பிறகு, குருவின் கட்டளையை நிறைவேற்ற போதி தர்மர் சீனா கிளம்புகிறார். அவரது வயோதிகத்தைக் காரணம் காட்டி அவரது பயணத்தை ரத்து செய்யும் படி, அப்போதைய மன்னரான போதி தர்மரின் அண்ணன் மகன் வேண்டுகோள் விடுக்கிறார்."நான் என் சீடனை தேர்வு செய்யணும்" என்று நிறுத்தி விட்டு, "சீனாவில் ஜென்னைப் பரப்ப வேண்டியது என் கடமை" என்று மன்னனின் வேண்டுகோளை மறுக்கிறார் போதி தர்மர்.தர்க்கப்படி போதி தர்மர் 'ஜென்' என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்க வாய்ப்பில்லை. 'ஜென்' என்பது 'சேன் (Chan)' என்ற சீன வார்த்தையின் ஜப்பானிய உச்சரிப்பு ஆகும். Chan என்ற வார்த்தையோ 'தியான(ம்)' என்ற சமஸ்கிருத வார்த்தையின் தழுவல். கி.மு. 2ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக நம்பப்படும் பதஞ்சலி என்பவர் இயற்றிய யோக சூத்திரத்தில் வரும் அட்டாங்க யோகத்தின் 8 படிநிலைகளுள் ஏழாவது தான் தியானம் ஆகும். ...
போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 1

போதி தர்மா – மாஸ்டர் ஆஃப் ஜென்: 1

ஆன்‌மிகம், தொடர்
போதி தர்மர் பெளத்த மதத்தின் பிரிவான "ஜென்"னைத் தோற்றுவித்தவர். 'தனித்திரு; பசித்திரு; விழித்திரு' என்று வள்ளலார் 19வது நூற்றாண்டில் சொன்னதை தான் போதிதர்மர் 5வது நூற்றாண்டிலேயே நாடு கடத்தி உள்ளார். தன் குருவான ப்ரஜ்ன தாரா கட்டளையின்படி பெளத்த மதத்தைப் பற்றிப் பிராச்சாரம் செய்யவே போதிதர்மர் சீனா சென்றாரே அன்றி ஏழாம் அறிவு படத்தில் சித்தரிப்பது போல் எந்தத் தொற்றுநோயையும் தடுக்க அன்று.1994ஆம் ஆண்டு சீனர்களால் எடுக்கப்பட்ட 'மாஸ்டர் ஆஃப் ஜென்' என்ற படம் போதி தர்மரை நெருக்கமாக உணர உதவுகிறது. உண்மையிலேயே போதி தர்மரைக் கெளரவிக்கும் வகையில் எடுக்கப்பட்ட படம். படத்தின் தலைப்பு தோன்றும் முன்பே.. போதி தர்மரைப் பற்றி மிகச் சுருக்கமாகச் சொல்கிறார்கள். ஷவோலின் மட பிக்குகளுக்கு 'குங் ஃபூ' கற்று தந்தார் என்றாலும், போதி தர்மரின் தனித்துவம் ஜென் கோட்பாடுகளைப் போதித்ததிலியே இருந்தது என்கிறது வாய்ஸ்-ஓவர். சீன ப...