
ஒரு இயக்குநரின் காதல் டைரி விமர்சனம்
வேலுபிரபாகரனின் காதல் கதையையே கொஞ்சம் மாற்றங்களுடன் ஒரு இயக்குநரின் காதல் டைரியாக மாற்றிவிட்டார்.
பெண் ஆணின் உடைமை அல்ல; அப்படி ஆண்கள் நினைப்பதால் தான் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மிகுந்து காணப்படுவதோடு, கொல்லப்படும் பெண்களின் எண்ணிக்கையும் இங்கே அதிகமாக உள்ளது. "காதல்" என்பது பெண்களை அனுபவிக்கவும், அவர்களின் உடலைத் தெரிந்து கொள்ளவும், முதிரா இளம் ஆணின் மனம் கற்பித்துக் கொள்ளும் கற்பனை. அக்கற்பனையில் இருந்து ஆண்கள் மீள (பெண்கள் மேலாடை அணியாமல் இருந்தால் தேவலை என முந்தைய படத்தில் சொன்னவர்), சிற்பங்களில் ஓவியங்களில் திரைப்படங்களில் எனக் கலைகளில் பெண்ணின் நிர்வான உடம்பைப் பரவலாக பதின் பருவத்தினர்க்கு அறிமுகம் செய்ய வேண்டும் என்கிறார் இயக்குநர் வேலுபிரபாகரன். அப்படிச் செய்வதன் மூலம், பெண்களின் உடல்கள் அறிமுகமாகி விடுவதால் அதன் பின் ஆராய ஆண்களுக்குத் தோன்றாது; பாலியல் கொடுமைகள...


