Shadow

Tag: இரகுராமன்

நடுநிசி மர்மம் – சவால் சிறுகதை

நடுநிசி மர்மம் – சவால் சிறுகதை

கதை, படைப்புகள்
"இப்போ நாம தயார் செய்துள்ள இந்த PX+ மருந்தை குரங்கு மேல செலுத்தி பரிசோதனை செய்து வெற்றியும் அடைஞ்சாச்சி,அடுத்து மனிதர்கள் மீது செலுத்தி பரிசோதிக்கனும்." "ஆனா தன் உடம்புல செலுத்தி பரிசோதிக்க யார் முன்வருவாங்க ஆல்பர்ட்??" என்று கேட்டார் மருத்துவர் கிருஷ்ணன். அப்பொழுது மருத்துவர் ஆல்பர்டின் அறைக்குள் இரண்டு உயரமான ஆசாமிகள் நுழைந்தனர். "வாங்க.. உங்களுக்காக தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன். இரவு நேரத்துல, ரோடுல இருக்குற பிச்சைகாரங்க, வயசானவங்க இப்படி உங்க கண்ணுல படுற யாராவது 2 பேர தூக்கிட்டு வாங்க. பத்தாயிரம் தரேன். ஆனால் எனக்கு எந்த பிரச்னையும் வராம பார்த்துக்கனும் புரியுதா??" என்று புருவங்களை உயர்த்தியபடி இருவரையும் கண்களால் ஆராய்ந்தார் மருத்துவர் ஆல்பர்ட். சரி என தலையை ஆடிவிட்டு அந்த இருவரும் அங்கிருந்து புறப்பட்டனர். "நடக்க கூட உடம்புல தெம்பில்லாம இருக்குற பிச்சைக்கார பசங்கள தூக்கிட...
புன்னகையின் பின்னால்

புன்னகையின் பின்னால்

கதை, படைப்புகள்
“எப்படியோ கஷ்டப்பட்டு கம்பெனியோட நொய்டா ஆஃபீசுல இருந்து சென்னை ஆஃபீசுக்கு ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டு வந்துட்டீங்க..இப்போ சந்தோஷம் தானே?” என்று புன்னகையுடன் கேட்டாள் ரோகினி."ஏன்? உனக்கு சந்தோஷமா இல்லையா என்ன?? நானும் அங்க 4 வருஷமா இருந்துட்டேன். இப்போ உன்ன என் தலையில கட்டிட்டாங்க, எனக்கும் அத ஒரு காரணமா காட்டி சென்னைக்கு வர வசதியா போச்சி" என்றான் விஜய்."எப்படியோ நான் வந்த நேரம்,நீங்க ஆசை பட்டமாதிரி நடந்திருக்கு பாருங்க.""சரி சரி. இப்படி செண்டிமெண்டா பேசியே அனுப்பிடலாம்னு பாக்காத. இட்லிய கொண்டா சாப்ட. ஆஃபீசுக்கு ஓடுறேன்."சென்னைக்கு மாற்றமாகி முதல் நாள் அலுவலகம் சென்றான் விஜய். எதிர்பார்ப்புகளோ கனவுகளோ அதிகமின்றி காணப்பட்டான்.நான்கு வருட அனுபவங்கள் அவனுக்கு நிறையவே கற்றுக் கொடுத்திருந்தது.அவனது புது அலுவலகத்தில் சுதர்ஷன் என்பவரை சந்தித்த விஜய் தன்னை அவரிடம் அறிமுகப்படுத்திக் ...
பிறந்த நாள் பரிசு

பிறந்த நாள் பரிசு

கதை, படைப்புகள்
"என்ன பாஸ்கர்.. நாளை ஆபீசுக்கு வருவியா?""திடீர்னு.. ஏன் சார் இந்த கேள்வி?""இல்ல.. நாளைக்கு உன் பிறந்த நாள் வேற, எதாவது பிளான் இருக்குமே!! அதான் கேட்டேன்.""அப்படி பிளான் இருந்திருந்தா லீவ் கேட்டு நானே உங்ககிட்ட வந்திருப்பேனே சார். எங்கயும் போகல நாளைக்கும் ஆபீஸ் வருவேன்.""வேணும்னா நாளைக்கு லீவ் எடுத்துக்கோ. ஒன்னும் பிரச்சனை இல்ல. ஆனா சனிக்கிழமை வொர்க் பண்ணி காம்பென்செட் பண்ணிடு.""எனக்கு அப்படி ஒரு லீவ் தேவையே இல்ல சார், நான் வரேன்.""டேய் பாஸ்கர், நான் அருண் பேசுறேன்டா. நீ எங்க  இருக்க??""இப்போ  தான் ஆபீஸ்ல இருந்து வீட்டுக்கு வந்தேன். ஏன்டா?""உனக்காக நாங்க விக்னேஷ் வீட்டு மொட்ட மாடியில வெயிட் பண்ணிட்டு இருக்கோம். சீக்கிரமா வந்து சேர்." "10 நிமிஷத்துல இருப்பேன்.""டேய் அருண். போன்ல அவன் என்னடா சொன்னான்?""இப்போ தான் ஆபீசுல இருந்து வீ...
அழுமூஞ்சி விளையாட்டு

அழுமூஞ்சி விளையாட்டு

கதை, படைப்புகள்
சீதாவிற்கு பள்ளியில் இருந்து வீடு திரும்பும் பொழுது, அவங்க ஊரை பற்றியே யோசனையாக இருந்தது. ஏன் அவங்க ஊரில் ஒரு பள்ளிக்கூடம் இல்லை என்றும், தான் ஏன் அத்தை வீட்டில் தங்கி படிக்க வேண்டும் என்றும் எவ்வளவு யோசித்தும் புரியவில்லை. மூன்றாம் வகுப்பு படிக்கும் அவளுக்கு இது மட்டும் புரியாத புதிராகவே இருந்தது.பெற்றோர்களை பிரிந்து இருந்த  ஏக்கம் தானோ என்னவோ ,சராசரி குழந்தையை போல் அல்லாமல் ஏதோ ஒரு வேற்று உலகில் வாழ்வது போல் இருப்பாள். படிப்பிலும் கொஞ்சம் மந்தம் தான்.அவளது ரேங்க் கார்டில் சிகப்பு மை பேனாவினால் எழுதபட்டிருந்த "NIL"  என்பது என்ன என்று கூட புரியாது இருந்தாள்.அவள் அத்தை மகன் குமார் எப்பொழுதும் துறு துறு என்று சுற்றிக்கொண்டிருப்பான். இருவரும் ஒரே பள்ளியில் தான் மூன்றாவது படித்து வந்தனர். சிறு வயதில் குழந்தைகளுக்கு சொந்தமான துடிப்பும் சுட்டி தனமும் அவனிடத்தில் நிறைந...
மொழியும் பழியும்

மொழியும் பழியும்

கதை, படைப்புகள்
மதிய நேரம், உண்ட உணவு தனது தாக்கத்தை என்னுள் ஏற்படுத்த,மெல்ல மெல்லஎன் முன்னே இருந்த அலுவலகத்தின் கணினி, மேஜை என அனைத்தும் மங்கலாகி கொண்டேபோகும் மாயம் நிகழத்தொடங்கியது.அமைதி என்னை சூழ்ந்த அந்த நேரத்தில் மேஜை அதிர.ச்சே,இந்த நேரத்துல தான் நமக்கு போன் வரணுமா!!. உள்ளத்தில் இருந்த எரிச்சலை பேச்சில் காட்டாமல்,"சொல்லு டா" என்றேன். "டேய் என் நண்பன் ஒருத்தனுக்கு ஏதோ ப்ரோக்ராம்மிங்ல (programming)டவுட் இருக்காம், அவன் கிட்ட உன் நம்பர் கொடுத்து இருக்கேன். போன்பண்ணுவான் பேசிக்கோ சரியா??"   "ஹ்ம்ம் சரி பேசுறேன்".அழைப்பை துண்டித்து இரண்டு நிமிடங்கள் கூட ஆகவில்லை,வேறொரு க்ரஹதிர்க்கு பயணிக்க தயாரானேன்.மீண்டும் அதே அதிர்வு,வேறு வழியில்லை தற்காலிகமாக பயணத்தை ரத்து செய்துவிட்டு அழைப்புக்கு செவி சாய்த்தேன்.தன்னை ஆங்கிலத்தில் அறிமுகப்படிதிக்கொண்டவன், மேலும் ஆங்கி...
ஒரு காதல் பிரயாணம்

ஒரு காதல் பிரயாணம்

கதை, படைப்புகள்
வெள்ளியன்று இரவு இல்லத்தையடைந்து, பாசம் கலந்த அந்த உணவை  உண்டு,இரண்டு நாட்கள் ஓய்வெடுத்த  பின்னர் மீண்டும் திங்களன்று  காலை  சென்னைக்கு பிரயாணம் செய்ய வேண்டும். சற்றே கடினமான ஒன்று தான் இது.அடுத்த வெள்ளியை நினைவில் கொண்டு இடையில்  வரும்  நான்கு நாட்களை கடத்த வேண்டும்.இப்படி ஒரு ஏக்கத்தோடு நான்கு நாட்கள் (வெள்ளிகிழமை கணக்கில்  வருவதில்லை) பனி புரியும் பலருள் நானும் ஒருவன்.சென்னையிலிருந்து  புறப்படும் பேருந்து சரியாக இயங்கினால் (ஓட்டுனரும் சரியான வேகத்தில் இயக்கினால்) அதிகபட்சம் 3.30 - 3.45 மணி நேரத்தில்  விழுப்புரம்   சென்றடையலாம்.(விழுப்புரத்தில் புறப்படும் பேருந்திற்கும் சென்னையை அடைய இதே நேரம் தான்  தேவை படும் என நான் நம்புகிறேன்).  வழக்கம்போல் அந்த வாரமும் வெள்ளியன்று ...
சுயம்வரம் – 5

சுயம்வரம் – 5

கதை, தொடர், படைப்புகள்
உணவு உண்ட பின் இருவரும் ரிசல்ட் வரும் வரை காத்திருந்தனர்.திடிரென்று ஒரு இடத்தில் அனைவரும் கூட்டமாக செல்ல,அருணும் கூட்டத்துள் புகுந்தான்.வேகமாக ராஜேஷை நோக்கி ஓடிவந்தவன்,"மச்சி.. நீ  செலக்ட் ஆயிட்ட." என்றான்"நீ?""என் தலையில நேஹான்னா தான் எழுதியிருக்கு போல!! சரி விடு. என் கஷ்டம் என்னோட. நீயாவது செல்க்ட் ஆகுடா. உனக்கு சான்ஸ் அதிகமா இருக்கு.""எப்படி சொல்ற?""ஏன்னா.. ரெண்டே பேர் தான்டா ஷார்ட்- லிஸ்ட் ஆகி இருக்காங்க.""நீ சீரியசாவே பேச மாட்டியா?" என்று அவனே தகவல் பலகையை காண சென்றான். அருண் சொன்னது உண்மை என்று அறிந்ததும் அவனால் ஆச்சரியத்தில் இருந்து மீளவே முடியவில்லை."டாய்.. ஃபர்ஸ்ட் ரவுன்டுக்கு ட்ரீட் தந்துட்டு செகன்ட் ரவுன்டுக்கு போறியா அல்லது ரெண்டுக்கும் சேர்த்து அப்புறமா தர்றியா?""டேய்.. நானே டென்ஷன்ல இருக்கேன். இருபது பேர்ல...
சுயம்வரம் – 4

சுயம்வரம் – 4

கதை, படைப்புகள்
வினாத் தாளை திறந்ததும்,தேர்வு அறையில் இருந்த அனைவரும் சிரித்தனர். ராஜேஷ், 'அப்படி என்ன இருக்கு?' என ஆச்சரியமாகி வேகமாக வினாக்களை படித்தான்.1. சிறு வயதில் உங்களுக்கு பிடித்த லாலி பாப்பின் நிறம் என்ன?2. அமெரிக்கா ஏன் இப்படி இருக்கு?3. இந்தியாவின் முதுகெலும்பான விவசாயத்தை எப்படி நிமிர வைக்கலாம்?4. பெண்களிடம் சொல்லக் கூடாத ரகசியம்?5. ஒருவேளை இந்த தேர்வில் வென்று மணப்பெண்ணை பிடிக்கவில்லை எனில்?'அடப்பாவிங்களா.. என்ன இது உலக மகா மொக்கையா இருக்கே!!' என ராஜேஷும் சிரித்தான். அப்பொழுது அந்த அறையே அதிருவது போல ஒருவன் வினாத் தாளை வீசி எறிந்து,"வாட் தி ஹெல் இஸ் திஸ்? டோட்டல் ஹம்பக்!! டூ யூ திங்க் வீ  ஹேவ் நோ ஜாப்!! ரிடிகுலஸ். நான்சென்ஸ். ஐ ரைஸ் எ கொஸ்டின்.. கூ கேவ் யூ பெர்மிஷன் டூ ப்ளே வித் மை ப்ரிசீயஸ் டைம்" என்று ஆங்கிலத்திலே கத்தோ கத்...
சுயம்வரம் – 3

சுயம்வரம் – 3

கதை, தொடர், படைப்புகள்
முதல் பகுதி.. இரண்டாம் பகுதி.. ராஜேஷ் ஈ மெயில் அனுப்பி இரண்டு வாரங்கள் ஆகியிருந்தது. அலுவலகத்தில் வேளை பளு அதிகம் இருந்தது அவனுக்கு. பணி முடித்து வீடு திரும்பும் முன் அலுவலக நண்பர்களுடன் அருகே இருந்த 'கஃபே டே(cafe day)' போனான் ராஜேஷ். அன்றைய வேலை பளுவின் அலுப்பு மிகுதியாக இருந்தது.தேனீர் அருந்திக் கொண்டே  ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவனது நண்பன் அருண், "உனக்கு வர போற பொண்ணு, பார்க்க எப்படி இருக்கணும்னு எதிர்பாக்குற?" என்றான் ராஜேஷிடம். "ரொம்ப சிம்பிள். பார்த்த உடனே 'ஷீ இஸ் லுக்கிங் ப்யூட்டிஃபுல்' அப்படின்னு சொல்ல தோனனும், 'ஷீ இஸ் சோ ஹாட்' ன்னு சொல்ற மாதிரி இருக்க கூடாது" என்றான் ராஜேஷ்."அப்போ என் ஆளு நேஹா பார்க்க எப்படி இருக்கா?" என்று அருண் கேட்க, "வேணாம் டா சொன்னா உனக்கு கஷ்டமா இருக்கும்" என்று சொல்லி வீட்டுக்கு செல்ல தொடங்கி...
காதல் தூதன்

காதல் தூதன்

கதை, தொடர், படைப்புகள்
மாலை நேரம், சில்லென்று வீசும்  தென்றலை ரசித்தப்படி பூங்காவினுள்   நுழைந்தேன். வாயிலில் படர்ந்திருந்த  கொடிகள் புன்னகைத்தவாறே  வரவேற்றன. மழையை எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த மயில் அப்பொழுது  தான் தன் மீது விழும் தூறல்களை உணரத் தொடங்கியது போலும். மெல்ல தன் தோகையை விரிக்க ஆரம்பித்தது.நான் அருகிலிருந்த  புல் தரையில் அமர்ந்துக் கொண்டு ஒரு நொடி கண்களை மூடினேன்.குழந்தையை  பாசத்துடன்  தனது  மடியில்  தாங்கிக்கொள்ளும் அன்னையை   போல், இயற்கை அன்னை  அவள்  மடியில் என்னை தாங்கிக்  கொண்டிருப்பதை உணர்தேன். சுகமான  நொடிகள் அவை.கண் திறந்து சுற்றும்  முற்றும்  பார்த்த போது ,அருகே &nb...
சுயம்வரம் – 2

சுயம்வரம் – 2

கதை, தொடர், படைப்புகள்
"அவன் எங்க சாப்பிட்டானா??" என்று தன் மனைவியிடம் கேட்டார் பத்மநாபன்."வீட்டுக்கு வந்ததுல இருந்து அந்த பொட்டிய வச்சிக்கிட்டு என்னமோ பண்ணிட்டு இருக்கான்" என்றார் அவன் தாய்.மடி கணினிக்கு ராஜேஷின் தாய் வைத்த பெயர் "பொட்டி".ராஜேஷின் அறைக்கு சென்றவர், "என்ன ஆபீஸ் வேலையா??"  என்று கேட்டார்.அசடு வழிந்துகொண்டே, "அந்த பொண்ணுக்கு அனுப்ப என்னுடைய தகவல்கள் அனைத்தையும் தயார் படுத்திகிட்டு இருக்கேன்" என்றான். "அட.. உனக்கு கூட பொறுப்பு வந்துடுச்சு போல!! சரி.. சரி.. காட்டு பார்ப்போம்" என்று அதனை பார்க்க தொடங்கியவர்,"டேய்.. ராஜேஷ்  என்னடா இதெல்லாம். நீ எந்தெந்த கம்பெனில எத்தன வருஷம் வேலை பார்த்த என்ன கிழிச்சன்னு யாரு கேட்டா ??" என்றார் கடுப்பாக."அவ தான் ஈ மெயில் அனுப்ப சொல்லி இருக்காளே!!" என்றான் ராஜேஷ்... "அதுக்காக ஏதோ வேலைக்கு அப்ளை பண்ற மாதி...
சுயம்வரம் – 1

சுயம்வரம் – 1

கதை, தொடர், படைப்புகள்
வழக்கம் போல் அன்று காலை "The Hindu" நியூஸ் பேப்பர் படித்துகொண்டிருந்தார் பத்மநாபன்.திடிரென்று பலமாக சிரிக்க தொடங்கியவர், தன் மகனிடம்,"டேய் ராஜேஷ் நீ இன்டெர்வியுக்கு ரெடியாக வேண்டிய நேரம் வந்துடுச்சி  டா " என்றார்."இன்டெர்வியூவா?? என்னப்பா சொல்லுறீங்க??  இப்போ நான் இருக்கும் கம்பெனிநல்லா தானே இருக்கு, நான் ஏன் வேற கம்பெனி மாறனும்" என்றான் குழப்பத்துடன்.ஹா ஹா சரி இதை பாரு என்று செய்தித்தாளை அவனிடம் நீட்டினார்.அதில் கீழ்கண்டவாறு ஒரு விளம்பரம் கொடுக்கபட்டிருந்தது.26 yrs old gal working as a HR in a MNC looking for a bridegroomInterested candidates can forward their details to crazy....gal@gmail.com   Shortlisted profiles will be called up for selection procedure which comprises of following rounds 1. Written test 2. Group Discussion   Can...
ஒரே கூத்து தான் போங்க

ஒரே கூத்து தான் போங்க

கதை, படைப்புகள்
மார்கெட்டிலிருந்து மதிய உணவுக்காக வீட்டிற்க்கு வந்தான் நல்லதம்பி .அடியேய் சீக்கிரம் சோத்த போடு என்றான் தன் மனைவி சுமதியிடம்.ஏனுங்க இந்தாங்க என்று  3000 ரூபாய் எடுத்து நீட்டினாள். யாரு கொடுத்தா என்று கேட்டவனிடம்,"ம.மு.க  கட்சி ஆளுங்க வந்தாங்க, தேர்தல்ல  அவங்க கட்சிக்கு வாக்களிக்க சொல்லி கொடுத்துட்டு போனாங்க" என்றால்.பணத்தை பார்த்து எரிச்சல்கொண்ட நல்லதம்பி, "எப்போ வந்தாங்க வீட்டுக்கு" என்று கேட்டான் கோவமாக.கால்மணிநேரம் இருக்கும் என்றால் சுமதி.தட்டில் இருக்கும் உணவை கூட கண்டுகொள்ளாமல், பணத்தை எடுத்துக்கொண்டு வண்டியில் வெளியே புறபட்டான் நல்லதம்பி.நாலு தெரு தாண்டி ஒருவரிடம், "ம.மு.க  கட்சி ஆளுங்க இந்த பக்கம் வந்தாங்களா" என்று கேட்டான்.அவரும் வழி சொல்லி அனுப்பி வைத்தார்.சிறுது நேரத்தில் அவர்களை கண்டுபிடித்த நல்லதம்பி,...
கனவே கலையாதே

கனவே கலையாதே

கதை, படைப்புகள்
தொலைபேசி அழைப்பில்"டேய் எங்க இருக்க ? மணி 11 ஆகுது எப்போ வீட்டுக்கு வருவ ? " என்றார் அர்ஜுனின் தாய்." ஆபீஸ்ல கொஞ்சம் வேலை இருக்கு, முடிச்சிட்டு  அரை மணி நேரத்துல கெளம்பிடுவேன்".  என்றான் அர்ஜுன்."சீக்கிரம் சீக்கிரம் வந்து சேரு .. ராத்திரி நேரம் பஸ்சு கூட இருக்காது, ஆட்டோ புடிச்சி வா" என்றார் அவர்.  சரியாக அரைமணிநேரம் கழித்து ஆபீசில் இருந்து புறபட்டான் ஆட்டோவில். நல்ல சோர்வுடன் காணபட்டான்.ஆட்டோவில் வீடு திரும்பி கொண்டிருக்க வழியில் ஒரு பெண் ஆட்டோவை நோக்கி கையை நீட்டியதை கண்டான் அர்ஜுன்."வண்டிய நிறுத்துங்க" என்றான் ஆட்டோ டிரைவரிடம்.வண்டியை நிறுத்திய பெண்,  "நேதாஜி நகர் போகணும் என்றால்".அவளை பார்த்ததும் அர்ஜுனுக்கு பேச்சி வரவில்லை.. தடுமாறியபடியே ஐயோ வாங்க, வாங்க ஒன்னும் பிரச்சனை இல்லை என்றான்.ஆட்டோவில் இருவருக்கும் இடையில் சிறு இடைவ...
காதலும் காயமும்

காதலும் காயமும்

கதை, படைப்புகள்
சரி ராம். நாளைக்கு காலேஜ்ல பாக்கலாம் என்று கூறிவிட்டு  அவன் வீட்டை விட்டு புறப்பட்டால் ப்ரீத்தி.அவள் சென்றதும்,மாடியில் உள்ள தனது அறைக்கு சென்றான் ராம்.டேய் என்னடா இதெல்லாம் ? என்றால் புஷ்பா.உனக்கு தான் எல்லாம் தெரியும்ல அப்புறம் என்ன கேள்வி என்றான் ராம்.புஷ்பா -தெளிவா சொல்லு என்ன நடக்குது?ராம் - இன்னும் என்ன தெளிவா சொல்லணும்.. நான் அவல லவ் பண்றேன். போதுமா ??.புஷ்பா - அவளும் உன்ன லவ் பண்றாளா? .ராம் - இல்ல, ஆனா சீக்கிரமே அது நடக்கும்.புஷ்பா - எனக்கு அவல சுத்தமா பிடிக்கல.  ராம் - உன் விருபத்த யார் கேட்டா? எனக்கு பிடிச்சி இருக்கு அவ்ளோ தான்.புஷ்பா - டேய், நீ இப்படி எல்லாம் என்னோட பேசினதே இல்லையே டா.. இப்போ மட்டும் எப்படி?ராம் - சரி உனக்கென்ன அவ மேல இப்படி ஒரு கோவம்.புஷ்பா - எனக்கு தெரியும்..பல பேரை  நான் பாத்திருக்கிறேன். அவ ...