இது தமிழ் ⚡ AMP

ஜோதி – 10800 குழந்தைகள் எங்கே?

By Dinesh R | Jul 23, 2022

சில ஆண்டுகளுக்கு முன்பாகக் கடலூர் அரசு மருத்துவமனையில் நடந்த மனதை உலுக்கும் உண்மைச் சம்பவமாகிய குழந்தைக் கடத்தலை மையமாக வைத்து உருவாகியுள்ள எமோஷ்னர் த்ரில்லர் படம் ‘ஜோதி.’ இந்தப் படத்தை எஸ்.பி.ஆர். ஸ்டூடியோ புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் பிரபல படத்தொகுப்பாளரான எஸ்.பி.ராஜா சேதுபதி தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் நாயகனாக வெற்றி நடிக்கிறார். மேலும் ஷீலா ராஜ்குமார், கிருஷா குரூப், மைம் கோபி, எஸ்.பி.ராஜா சேதுபதி, இளங்கோ குமரவேல் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

ஜோதி படத்தை டிக்-டாக் பிரபலமான ஜி.பி.முத்து பார்த்துவிட்டு படத்தையும், படக் குழுவினரையும் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

“படத்தில் இருக்கும் சஸ்பென்ஸ் கடைசி வரையிலும் நீடித்திருக்கிறது. எதிர்பாராத சில திருப்பங்களும் படத்தைக் கடைசி வரையிலும் பார்க்க வைக்கிறது.

இதுவரையிலும் நம் நாட்டில் 11 ஆயிரம் குழந்தைகளைக் கடத்தியிருக்கிறார்கள். அதில் இன்று வரையிலும் 10,800 குழந்தைகளைக் கண்டுபிடிக்கப்படாதது வேதனைக்குரிய ஒன்று.

இன்றைக்கு நம் நாட்டிற்கு இது தேவையான கதைதான். குழந்தைகளைக் கடத்தி விற்கும் கும்பல் இன்று அதிகமாகிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் இந்தப் படம் நம் நாட்டுக்கு நிச்சயமாக தேவையான படம்தான்” என்றார் ஜி.பி.முத்து.