Shadow

Author: Dinesh R

மக்கள் இவ்ளோ நல்லவங்களா இருக்காங்களே! – 4 போலிஸ்

மக்கள் இவ்ளோ நல்லவங்களா இருக்காங்களே! – 4 போலிஸ்

திரைத் துளி
தமிழ்த் திரை உலகில் தற்போது உலா வரும் புதிய சிந்தனை உடைய நவீன கதைகளுக்கு முன்னோடியாக இருக்கும் ஜே.எஸ்.கே. பிலிம் கார்ப்ரேஷன் நிறுவனமும், லியோ விஷன் நிறுவனமும் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், இதற்குத்தான் ஆசைப்பட்டாய் பாலகுமாரா…, தற்போது தயாரிப்பில் இருக்கும் 'அண்டாவ காணோம்' ஆகிய படங்களைத் தொடர்ந்து அடுத்து தயாரித்து வெளியிட இருக்கும் படம் 'நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்'. சிந்தனையைத் தூண்டும், குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைக்கும் நகைச்சுவைச் சித்திரமான இந்தப் படத்தின் தலைப்பே கதை சொல்லும். 'நல்ல பொருத்தமான தலைப்பே படத்தின் வெற்றியை 50 சதவீதம் தீர்மானிக்கும்' என்கிறார் லியோ விஷன் ராஜ்குமார். அவரது முந்தைய படங்களும் இதைப் போலவே நீண்ட தலைப்பு உடைய படங்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 'நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும் இதுவரை கேட்டிராத, பார்த்திராத ஒரு புதிய கதையாகும். புதிய இயக்குநர் ஸ்ரீ ...
வியாசன் பறந்த வானில்

வியாசன் பறந்த வானில்

கட்டுரை, புத்தகம்
தினம் ஓர் அத்தியாயமென, தொடர்ந்து பத்தாண்டுகள் மகாபாரதம் எழுதும் கற்பனைக்கெட்டாத மகத்தான இலக்கை வகுத்துக் கொண்டு இந்தாண்டின் முதல் நாளிலிருந்து எழுதி வருகிறார் ஜெயமோகன். "வெண்முரசு" என பெயரிடப்பட்டிருக்கும் அத்தொகுப்பு, சுமார் 35000 பக்கங்களுடன் 40 நாவல்களாக வருமெனத் தோராயமாகக் கணக்கிடப்பட்டுள்ளது. தொடங்கிய 10 மாதங்களுக்குள், முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம் என 4000 பக்கங்கள் கொண்ட 4 நாவல்களை எழுதிவிட்டார். கமல் பாணியில் சொல்வதெனில், மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித உழைப்பே அல்ல; அதையும் தாண்டி அசுரத்தனமானது. அதே பிரமிப்புத்தான் பி.ஏ.கிருஷ்ணனுக்கும். "என் புருஷனும் கோர்ட்க்குப் போறார்னு சொல்றதுபோல, என் மனைவி என்னை எழுத்தாளர்னு நினைச்சிட்டிருக்கா. ஆனா ஒருநாளைக்கு 500 வார்த்தைகள் எழுதுவதற்குள்ளாகவே மூச்சு முட்டித் திணற வேண்டியிருக்கு. ஆனா ஜெயமோகனோ தினம் மகாபாரதம் எழுதுறார், கட்டுரைகள் ...
நைட் க்ராலர் (Nightcrawler) விமர்சனம்

நைட் க்ராலர் (Nightcrawler) விமர்சனம்

அயல் சினிமா, திரை விமர்சனம்
நைட் க்ராலர் என்பது பிரபலமான மார்வல் காமிக்ஸ் பாத்திரம். ஆனால் இப்படத்தின் தலைப்போ, இரவு வேளையில் வேலை செய்யும் சுவாரசியமான மனிதன் ஒருவனைச் சுட்டிக் காட்ட வைக்கப்பட்டுள்ளது. தமிழில் பிரபலமாகி வரும் 'சூது கவ்வும்' பாணி திரைப்படமிது! லூ என்கிற லூயிஸ், தொழில்முறை திருடன் அல்லன். அவனுக்கு ஒரு வேலை தேவைப்படுகிறது. சாலையில் நடக்கும் ஒரு விபத்தில், எதேச்சையாகப் பார்க்கும் ஒன்றைத் தனக்கான தொழிலாக வரித்துக் கொள்கிறான். அதற்கு மூலதனமாக ஒரு சைக்கிளைத் திருடுகிறான். எதையும் விரைந்து கற்றுக் கொள்ளும் லூ, நினைத்ததை சாதிக்க எதையும் செய்யத் தயாராக உள்ளவன். பெரிதும் திருப்பங்கள் அற்ற கதை எனினும், விறுவிறுப்பான திரைக்கதையாக அதை மாற்றியுள்ளார் அறிமுக இயக்குநர் டேன் கில்ராய். ஜேக் க்லைன்ஹால் தனியொருவராக படத்தைச் சுமக்கிறார். அவரது முக பாவனைகளும், வசனம் உச்சரிக்கும் த்வனியும்தான் படத்தின் மீது ஈர்ப்பு உண்டாக...
இதே ஊர்தான்டா..!

இதே ஊர்தான்டா..!

அரசியல், கட்டுரை
ஒரு சுவரை ஆக்கிரமிக்க இரண்டு கட்சிகளுக்குள் நடக்கும் போட்டிதான் கதையின் மைய இழை. ஆனால் அது மட்டுமே கதை அல்ல. சுவரில் வரையப்படும் படமும் அதன் மூலம் கட்சியின் பெயரும் அதிகாரமும் அங்கேயே நிலை பெற செய்ய என்னென்ன அரசியல் நடக்கிறது அதில் எளிய மக்களின் நம்பிக்கைகள் எப்படிப் பயன்படுத்தப் படுகின்றன என்பதை விலாவாரியாகப் பேசுகிறது மெட்ராஸ் படம். அது வெறும் சுவர் இல்ல.. அதிகாரம். காளியும் அவன் நண்பன் அன்பும் மைய கதாபாத்திரங்கள். அன்பு நடுவிலே கொலை செய்யப்படுவதால் காளியை கதாநாயகனாக கொள்ளவேண்டி இருக்கிறது. இரண்டு நாயகன்கள் போலவே இரண்டு நாயகிகளுக்கும் சமமான பாத்திரங்கள். காதல்? படத்தில் காதல் இருக்கிறது. வாழ்க்கையில் வருவது போல. இப்ப தான் அப்பா அம்மாக்கு முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தார் என்று குழந்தை சாதாரணமாக சொல்லுமளவுக்கு இயல்பாக வருகிறது. ஆனால் படத்தைக் கொண்டு செல்வது காதல் அல்ல. காளி படித்த, நல்ல...
டிராகுலா – சாத்தானின் மகன்

டிராகுலா – சாத்தானின் மகன்

சினிமா, திரைத் துளி
டிராகுல் என்றால் ரொமேனிய மொழியில் டிராகன் என்று பொருள். மனித ரத்தம் குடிக்கும் குணம் கொண்ட காட்டேரிகளுக்கு, டிராகுலா என்ற பெயர் வந்தது வலாக்கிய அரசாங்கத்தின் மன்னான மூன்றாம் விளாட்டி என்னும் சிற்றரசனால். நாடோடிக் கதைகளும் பழம்பாடல்களும் விளாடின் ‘பெருமை’களை இன்னும் ஊதிப் பெரிதாக்கிவிட்டன. டிராகுலா என்பதற்கு சாத்தானின் மகன் என்ற அர்த்தத்தையும் கொடுத்துவிட்டன. மனித ரத்தம் குடிக்கும் டிராகுலா பற்றிய படங்கள் பல முறை திரையில் உலா வந்ததுள்ளன. ஆனால் டிராகுலாவின் முந்தைய சரித்திரத்தைப் பற்றி விவரிக்கிறது, “டிராகுலா அன்டோல்ட் (Dracula Untold)” என்ற புதிய படம். கதை, 1492இல் நடக்கிறது. ட்ரான்சில்வேனியா வில் ஆட்சி புரிந்த அரசன், மூன்றாம் விளாட், டிராகுலாவாக மாறுவதாகக் காட்டப்பட்டுள்ளது. ட்ரான்சில்வேனியாக்கு அருகே உள்ள ஒட்டோமான்அரசாங்கம் மூன்றாம் விளாடு க்கு பல கஷ்டங்களைக் கொடுக்கிறது. இதற்கிடையே, இ...
5 வயது கின்னஸ் தமிழ் சிறுவன்

5 வயது கின்னஸ் தமிழ் சிறுவன்

கட்டுரை, சமூகம்
ஐந்து வயதாகும் K.L.தீரஜ், கே.கே.நகரில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளியில் யூ.கே.ஜி. படிக்கிறான். தேசிய அளவில் மூன்று ரெக்கார்ட்கள் முன்னமே படைத்து, India Book of Records இல் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தீரஜ் தனது முதல் ரெக்கார்ட்டை, பிறந்த இரண்டு வருட ஒன்பது மாதங்களில் படைத்துள்ளான். இளவயதில் அதிக எண்ணிக்கையில் அடையாளம் கண்டுகொண்டதுதான் அவனின் முதல் ரெக்கார்ட். 215 தேசிய கொடிகளை, 2 நிமிடம் 15 நொடிகளில் அடையாளம் கண்டுள்ளார். தீரஜ் தனது இரண்டாவது ரெக்கார்டை, மூன்று வருடம் ஏழு மாதங்கள் என அவன் வயதிருந்த பொழுது படைத்துள்ளான். படைப்புகளைப் பார்த்து அதைப் படைத்த படைப்பாளர்களின் பெயர்களை, ஒரு நிமிடத்திற்குள் அதிகளவில் சொல்லியுள்ளான். அதே தினத்தில் தனது மூன்றாவது ரெக்கார்டையும் படைத்துள்ளான். தீரஜின் மூன்றாவது ரெக்கார்ட், உலக வரைப்படப் புதிரை மிக இளவயதில் விடுவித்துள்ளான். டாக்டர் ப...
ஜீவா விமர்சனம்

ஜீவா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மீண்டுமொரு பள்ளிப் பருவக் காதலையும், தமிழ்நாடு ரஞ்சி அணியில் இடம்பெறும் சாதி அரசியலையும் மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம். ஜீவாவாக விஷ்ணு விஷால். மீசை தாடியை நன்றாக ஷேவ் செய்துவிட்டு, பதினோறாம் வகுப்பு படிக்கும் மாணவராக திரையில் அறிமுகமாகிறார். என்னடா இது சோதனை என்றிருந்தாலும் திரைக்கதை ஓட்டத்தில் அந்த எண்ணம் மெல்ல மறையத் தொடங்குகிறது. கல்லூரிக்கு வந்து கிரிக்கெட்தான் வாழ்க்கை என ஜீவா முடிவெடுத்து, அரசியலால் காயப்படும் பொழுதெல்லாம் மனதில் அப்பாத்திரமாகவே நிற்கிறார். நான் மகான் அல்ல படத்தில், ‘இறகை போல் அலைகிறேன்’ என்ற பாடலில் செய்த மாயத்தை, இப்படத்தில் ஸ்ரீதிவ்யாவைக் கொண்டு செய்துள்ளார் சுசீந்திரன். பள்ளி மாணவியாக அவர் காட்டும் குறும்புத்தனமான முகபாவங்கள் ரசிக்க வைக்கின்றன. விஷ்ணு பள்ளி மாணவர் என்ற கொடுமையை சகிக்க வைக்க பெரிதும் உதவி செய்பவர் ஸ்ரீதிவ்யாவே! ஆனால் என்ன, நாயகனின் தாய் ...
தமிழ்த் திரைப்படப் பத்திரிகையாளர் சம்மேளனத்தின் கண்டன அறிக்கை

தமிழ்த் திரைப்படப் பத்திரிகையாளர் சம்மேளனத்தின் கண்டன அறிக்கை

அரசியல், சமூகம்
சினிமாவை விட பல பயனுள்ள பொழுதுபோக்குகள் வந்து விட்டன என்று தமிழக மக்கள் நினைக்க ஆரம்பித்து இருக்கும் இந்தச் சூழலில், தமிழ் சினிமாக்கள் , தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிக நடிகையர், தயாரிப்பாளர்கள் பற்றிய செய்திகளை, திரைப்பட பூஜை, ஆடியோ வெளியீடு, விளம்பர நிகழ்ச்சிகள், முன்னோட்ட விழா ஆகிய திரைப்பட நிகழ்வுகளை மக்களுக்கு தொடர்ந்து கொடுத்து, மக்களின் சினிமா ஆர்வத்தை இன்னும் மங்காமல் காத்துக் கொண்டிருக்கும் மகத்தான பணியைச் செய்பவர்கள் திரைப்பட ஊடகவியலாளர்கள் என்ற உண்மை அறிவார்ந்த அனைவருக்கும் தெரிந்ததே! நாளிதழ்கள், வார/மாத இதழ்கள், தொலைக்காட்ச , இணையத்தளம், பண்பலை உள்ளிட்ட ஊடகங்களில் பணியாற்றும் இந்த சினிமா ஊடகவியலாளர்கள் வெயிலென்றும் மழையென்றும் பாராமல் ஓய்வொழிச்சல் இல்லாமல் திரையுலக பிரமுகர்கள் கூப்பிடும் இடங்களுக்கெல்லாம் ஓடி ஓடி செய்திகளைக் கொடுத்து சினிமா உலகுக்கும் மக்களுக்கும் பாலமாக இருப்பத...
அரண்மனை விமர்சனம்

அரண்மனை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
படத்தில் கதை என்று பார்த்தால் நமக்கு மிகவும் பரிச்சயமான ஒன்றே! கொலை செய்யப்பட்ட பெண் பேயாகி பழிவாங்குகிறார். தன் பரம்பரை சொத்தான அரண்மனையை விற்க கிராமத்திற்கு வருகிறான் முரளி. வந்த இடத்தில் அமானுஷ்யமான சம்பவங்கள் அரங்கேறுகின்றன. பேயின் பிடியில் இருந்து அந்தக் குடும்பம் எப்படித் தப்பிக்கிறது என்பதுடன் படம் முடிகிறது. சுந்தர்.சி படத்தில் என்ன எதிர்பார்ப்போமோ அதை அவர் ஏமாற்றாமல் வழங்கியுள்ளார். சந்தானம், கோவை சரளா, மனோபாலா, சாமிநாதன் ஆகிய நடிகர்களைக் கொண்டு நகைச்சுவைக்கு உறுதியளிக்கிறார். படத்தைக் காப்பாற்றுவது பேய் அல்ல. சந்தானமும் கோவை சரளாவுமே! அதுவும் மனோபாலா சந்தானம் வாயில் மாட்டும் பொழுதெல்லாம் திரையரங்கம் அதிர்கிறது. “முருங்கை காய் சாப்பிட்டா மூடு வரும்; இங்க முருங்கை காய்க்கே மூடு வந்துடுச்சே!” என மனோபாலாவைக் கலாய்க்கிறார். வெங்கட் ராகவனின் வசனங்களில், “மூடு (mood)” என்ற வார்த்தையை ...
‘உண்மை’ படக்குழுவினர்

‘உண்மை’ படக்குழுவினர்

சினிமா
நடிகர்கள்:>> P.ரவிக்குமார் >> சுஜிபாலா >> ராதாரவி >> சார்மிளா >> கோட்டா சீனிவாசராவ் >> ஷகிலா >> சிங்கம் புலி >> வாசு விக்ரம் >> வையாபுரி >> மீனாட்சி தேசாய் >> பாண்டு >> சங்கீதா பாலன் >> 'சூப்பர் குட்' லட்சுமணன் >> சிந்து >> அன்வர் ராஜாபணிக்குழு:>> கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு - P.ரவிக்குமார் >> தயாரிப்பு நிறுவனம் - மதர் கிரீன்லேண்ட் மூவி மேக்கர்ஸ் >> தயாரிப்பு நிர்வாகம் - அஷ்ரப் >> ஒளிப்பதிவு - அன்பு ஸ்ரீராம் >> இசை - ஸ்ரீராம் >> படத்தொகுப்பு - சிகா >> கலை - ராஜசேகர் >> நடனம் - ராபர்ட், ராக் சங்கர் >> சண்டைப் பயிற்சி - மிரட்டல் செல்வா & லோகு...