Shadow

சினிமா

“நூறு சாமி: அதன் உணர்வுகளால் தனித்துவமான படம்” – விஜய் ஆண்டனி

“நூறு சாமி: அதன் உணர்வுகளால் தனித்துவமான படம்” – விஜய் ஆண்டனி

OTT, சினிமா, திரைத் துளி
உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான இயக்குநர் சசி எழுதி இயக்கிய மனதைத் தொடும் குடும்ப நாடகமான நூறு சாமி, தாய்மை, இரண்டாவது வாய்ப்புகள் மற்றும் தாய்-மகன் உறவின் பிணைப்பைப் பேசும் படமாக அமைந்துள்ளது. இப்படம், ஆகஸ்ட் 7 முதல் ZEE5-இல் திரையிடப்படுகிறது. பிச்சைக்காரன் திரைப்படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலத்திற்குப் பிறகு, புகழ்பெற்ற இயக்குநர் சசி மற்றும் விஜய் ஆண்டனி மீண்டும் இப்படத்திற்காக இணைந்தனர். விஜய் ஆண்டனி மற்றும் பாத்திமா விஜய் ஆண்டனி ஆகியோர், விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ள இந்தத் திரைப்படம், தற்போது ZEE5-இல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமிங் ஆகிறது. இப்படம், தனது குடும்பத்தை வளர்ப்பதற்காக வாழ்நாளை அர்ப்பணித்த விதவைத் தாயான செல்வியைப் பற்றியது. வாழ்க்கையின் பின்-கட்டத்தில் அவர் துணை...
I am Game – துல்கர் சல்மானின் ஸ்டைலிஷ் மலையாளப்படம்

I am Game – துல்கர் சல்மானின் ஸ்டைலிஷ் மலையாளப்படம்

Trailer, காணொளிகள், சினிமா, திரைத் துளி
துல்கர் சல்மானின் 'ஐ ஆம் கேம் (I am Game)' திரைப்படத்தின் அதிரடி ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இப்படம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 20, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. துல்கர் சல்மானின் Wayfarer Films நிறுவனம் தயாரித்துள்ள இந்த மெகா பட்ஜெட் ஃபேன்டஸி த்ரில்லர், அவரது திரைப்பயணத்திலேயே மிகப்பெரிய திரைப்படமாக உருவாகியுள்ளது. நஹாஸ் ஹிதாயத் இயக்கியுள்ள இப்படத்தைத் துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து தயாரித்துள்ளனர். சஜிர் பாபா, இஸ்மாயில் அபூபக்கர், பிலால் மொய்து ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ள நிலையில், வசனங்களை சஜிர் பாபா, ஆதர்ஷ் சுகுமாரன், ஷபாஸ் ரஷீத் ஆகியோர் எழுதியுள்ளனர். கண்கவர் காட்சியமைப்புகள், பிரம்மாண்டமான ஆக்‌ஷன் காட்சிகள், அதிவேக சேஸ் சீக்வென்ஸ்கள் என இதற்கு முன் மலையாள சினிமாவில் அரிதாகக் காணப்பட்ட ஸ்டைலிஷ் ஃபேன்டஸி த்ரில்லராக இப்படம் உருவாகியுள...
Spider-Man: Brand New Day விமர்சனம்

Spider-Man: Brand New Day விமர்சனம்

அயல் சினிமா, இசை விமர்சனம், இது புதிது, சினிமா
மார்வெல் லோகோ வரும் பொழுதே கதை சொல்லத் தொடங்கிவிடுகின்றனர். பொதுவாக லோகோவில் வரும் முப்பரிமாண M A R V E L எழுத்துகளில், மார்வெல் காமிக்ஸின் சூப்பர் ஹீரோக்கள் அனைவரும் வருவார்கள். இம்முறை பீட்டர் பார்க்கரைக் காட்டி அவர் மறைந்து போவது போல் வருகிறது. இப்படியாகப் படத்தின் தொடக்கமே அட்டகாசம். முந்தைய பாகங்களின் ஸ்பைடர் மேன் போலல்லாமல், கூடுதல் முதிர்ச்சியுடன், அண்டை அயலார் மீது அதே நட்புடனும் நியூ-யார்க்கைக் காப்பாற்றுகிறார் பீட்டர் பார்க்கர். ஆனால், நண்பனாலும் காதலியாலும் மறக்கப்பட்ட வலியையும், மே பார்க்கரை இழந்த துக்கத்தையும் சுமந்து திரிகிறார். அவரைப் போலவே, பிரிவின் வேதனையில் இருக்கும் ஒரு நபரால் டேமேஜ் கன்ட்ரோல் துறை தொடர் தாக்குதலுக்கு உள்ளாகிறது. அந்நபர், ஒருவரது மூளைக்குள் ஊடுருவி அவரைத் தன் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொண்டு இயங்க வைக்கிறார். அதுவும் மின்னல் வேகத்தில், ஒருவரது மூளைய...
The Odyssey விமர்சனம்

The Odyssey விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
வால்மீகி ராமாயணம் கி.மு. ஆறாம் நுற்றாண்டு வாக்கில் எழுதப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால் அதற்கும் முன்பே பல நுற்றாண்டுகளாக வாய்வழிக்கதையாக ராமாயணம் மக்களிடையே புழங்கி வந்தது. அதே போல, கிரேக்க இதிகாசங்களான ஹோமர் எழுதிய இலியட், ஒடிசி என்ற இரண்டு காவியங்களும் சற்றேறக்குறைய அதே காலக்கட்டத்தில் எழுதப்பட்டது. இந்த இந்தியக் கிரேக்க இதிகாசங்களுக்குள் ஆச்சரியமான ஒற்றுமைகள் பல உள்ளன. கதையின் நாயகி கடத்தப்படுதல், அவளை மீட்க நடக்கும் போர், கதை நாயகன் குடும்பத்தை, நாட்டைப் பிரிந்து அலைந்து திரிதல், பல சவால்களைச் சந்தித்தல், திருமணம் புரிய வில்லை வளைத்து நாண் ஏற்றும் போட்டியை எதிர்கொள்ளுதல் என பல ஒற்றுமைகள் உள்ளன. இந்து மதத்தைப் போலவே, கிரேக்க மதத்திலும், ஒரு மனிதனின் வாழ்க்கையை தீர்மானிப்பவையாக விதி, கடவுளின் அருள், தனிமனித முயற்சி ஆகிய மூன்றும் விளங்குகின்றன. இந்த மூன்றின் வலைப்பின்னல் போலவ...
அருள்வான் விமர்சனம் | Arulvaan review

அருள்வான் விமர்சனம் | Arulvaan review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
அருள் என்பது இறைவனின் எல்லையற்ற கருணை, இரக்கம் மற்றும் ஆசீர்வாதத்தைக் குறிக்கும் ஆன்மிகச் சொல்லாகும். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் கடவுளின் ஐந்தொழில்களில் மிக மேன்மைமிக்க ஒன்றாகும். அத்தகைய தெய்வத்தின் தொழிலை, ஒரு மனிதனால் செய்ய முடியுமா? 'புண்ணியம் கோடிஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்' எனும் பாரதியின் வரிகளை மேற்கோள் காட்டி, 'முடியும்' என்கிறார் இயக்குநர். பூங்கொடி எனும் மலைக்கிராமத்தில் வாழும் குறிஞ்சி எனும் சிறுமி, கல்வியே தங்களுக்கான விடியலைத் தரும் எங்கின்ற முயற்சியில் மேற்கொள்ளும் நம்பிக்கைப் பயணமே இப்படத்தின் கதையாகும். காளி வெங்கட்டைக் கதையின் நாயகனாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படமிது. ஆரவும் அருள்நிதியும் படத்திற்குள் வர, காளி வெங்கட்டிற்குப் பத்திரிகையாளர் தன்ராஜ் எனும் சிறு வேடமே வாய்த்துள்ளது. மருத்துவமனைக் காட்சியில், குறிஞ்சியின் நிலைமையைக் குறித்து உருக்...
அன்பே டயனா விமர்சனம் | Anbe Diana review

அன்பே டயனா விமர்சனம் | Anbe Diana review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பெரம்பூர் பையனுக்கும், ஆங்கிலோ இந்தியன் பெண்ணுக்கும் கெமிஸ்ட்ரி வொர்க் ஆச்சா என்பதே அன்பே டயனா படத்தின் ஒரு வரிக்கதை. பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட ஏரியாவில் குடியிருக்கிறது ஹீரோ பாரி இளவழகனின் குடும்பம். அம்மா ரோஜா, அவர் சாதிப்பற்றுக் கொண்ட கண்டிப்பான அம்மா. கதாநாயகனுக்கு அம்மா என்றால் பயம். அதே போல்தான் கதாநாயகனின் அப்பா சேத்தனுக்கும். அக்கா ஒருவர், தன் கணவனோடு ஒரு மனக் கசப்பில் மூளை சார்ந்த நோய்மை கொண்ட மகளோடு தாய்வீட்டிலேயே இருக்கிறார். கதாநாயகனின் தம்பி அநியாயத்திற்கு சமர்த்து. இப்படியான கதாநாயகனின் குடும்பத்திற்குக் குட்டைப்பாவடையும், குடும்பக் குடியுமாக வாழும் நாயகி ரம்யா ரங்கநாதன் எப்படி செட்டாவார் என்ற கேள்விக்கான பதில் தான் படத்தின் மீதிக்கதை. ஜமா படத்தில் கதாபாத்திரத்தோடு அவரைப் பிரித்துப் பார்க்க முடியாத படி நடித்திருந்தார் பாரி இளவழகன். அப்படம் இன்றும் நெஞ்சில் பசுமையாக நிற்பதற...
இதயம் முரளி விமர்சனம் | Idhayam Murali review

இதயம் முரளி விமர்சனம் | Idhayam Murali review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
‘இதயம்’ எனும் படம், 1991 இல் வெளியாகி அந்தக் கால இளைஞர்களின் இதயங்களை வென்றது. மறைந்த நடிகர் முரளியின் திரைவாழ்வில் ஒரு மைல்கல் அப்படம். அப்படத்தின் நாயகனின் குணாதிசயத்தைக் கதைக்கருவாகக் கொண்டு அதர்வாவை வைத்து இதயம் முரளியாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன். 90’ஸ் கிட்ஸ் அதர்வாவிற்கு சிறுவயது பெண்களிடம் காதலைச் சொல்வதற்கு தயக்கம். அந்த தயக்கமே அவரின் காதல்களுக்குத் தடையாக மாறுகிறது. பள்ளிவாழ்வில் பாடமெடுக்கும் மிஸ்ஸிடம் காதலைச் சொல்லத் தவறுகிறான். அதன்பின் பருவ வயதில் ட்யூஷன் ஜோடியான ப்ரீத்தி முகுந்தனிடம் காதலைச் சொல்லாமல் அந்தக் காதலையும் தவறவிடுகிறார். முத்தாய்ப்பாக இளைஞர்களின் கனவு நாயகியான கயாடு லோகரிடம் காதல் சொல்லும் வாய்ப்பு வருகிறது. அதையும் தவறவிடுகிறார். ஒரு கட்டத்தில் துணிச்சலை வர வைத்துக் காதலைச் சொல்லச் செல்கிறார் அதர்வா. ஆனால் காதலிகள் என்ன நிலையிலிருந்தார்கள் எ...
அந்தரன் விமர்சனம் | Andharan review

அந்தரன் விமர்சனம் | Andharan review

சினிமா, திரை விமர்சனம்
அந்தரன் என்றால் மறைந்திருந்து தாக்கும் வேட்டைக்காரன் என்று பொருள். கார்த்திகா எனும் இளம்பெண்ணிற்குத் திருமணம் நிச்சயமாகும் பொழுதெல்லாம், கல்யாணத்திற்கு முன் அந்த மாப்பிள்ளை கொலை செய்யப்பட்டோ, தற்கொலை செய்தோ, தற்செயலாகவோ இறந்து விடுகின்றனர். இந்த மரணங்களின் பின்னணியைத் துப்புத் துலக்கக் காவல்துறை அதிகாரி செழியன் நியமிக்கப்படுகிறார். மறைந்திருந்து வேட்டையாடுபவரை எப்படி உடனின்று கண்டுபிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. அந்தரனிற்கு முன், அந்தரனிற்குப் பின் என தன் வாழ்க்கை மாறுமென செழியனாக நடித்துள்ள பிரஜின் தீர்க்கமாக நம்புகிறார். அவரது நம்பிக்கை மிகையில்லை எனச் சொல்லுமளவிற்குப் படத்தின் கதை சுவாரசியமாகவும், நடிகர்களின் பங்களிப்பு சிறப்பாகவும் அமைந்துள்ளது. பிரதான போலீஸ் கதாபாத்திர வேடத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார் பிரஜின். ஒரு போலீஸ்காரராகவும், காதலைப் பல வருடம் மனதில் சுமந்து திரிப...
“சகமனிதன் திருந்துவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும்” – தயாள் பத்மனாபன் | லஷ்மிகாந்தன் கொலை வழக்கு

“சகமனிதன் திருந்துவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும்” – தயாள் பத்மனாபன் | லஷ்மிகாந்தன் கொலை வழக்கு

சினிமா, திரைச் செய்தி
கொன்றால் பாவம், மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன் முதலிய படங்களை இயக்கிய தயாள் பத்மனாபன், “லஷ்மிகாந்தன் கொலை வழக்கு” எனும் படத்தை இயக்கியுள்ளார். கவிதா பாரதியுடன் இணைந்து இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளார் தயாள் பத்மனாபன். என்கவுன்ட்டரையும், மரண தண்டனையையும் வியந்தோதும் தமிழ் சினிமாகளுக்கு இடையில், குற்றவாளி திருந்த வாய்ப்பளிக்க வேண்டிய அவசியத்தையும் அறத்தையும் பேசும் அற்புதமான திரைப்படமாக வரவுள்ளது. தண்டனை கடுமையானாலோ, மரண தண்டனை அளிக்கப்பட்டாலோ, என்கவுன்ட்டர் செய்தாலோ குற்றங்கள் குறையும் என்பதற்கான அறிவியல் சான்றுகள் இல்லை. ‘குற்றவாளியைச் சீர்திருத்துவது, அவனிடமிருந்து சமூகத்திற்குப் பாதுகாப்பளிப்பது, அவனைப் பயமுறுத்தித் தவறுகளைச் செய்யாமல் தடுப்பது’ ஆகியவையே தண்டனையின் நோக்கமாக இருக்கவேண்டும் என்கிறார் என்கிறார் வழக்கறிஞர் யுக் மோகித் சவுத்ரி. இந்தப் படத்தின் பேசுபொருளும் அதுவே! சக மனிதனின...
நாகபந்தம் – மர்மத்தைத் தேடும் பயணம்

நாகபந்தம் – மர்மத்தைத் தேடும் பயணம்

அயல் சினிமா, சினிமா, திரைச் செய்தி
புராணக் கதைகள், மர்மங்கள் மற்றும் பிரம்மாண்டமான ஆக்சன் காட்சிகளின் கலவையாக உருவாகியுள்ள பான்-இந்தியா திரைப்படம் “நாகபந்தம்” ஆகும். இயக்குநர் அபிஷேக் நாமா இயக்கத்தில், இளம் நடிகர் விராட் கர்ணா கதாநாயகனாக நடிக்கும் இப்படம், இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவிலான காட்சியமைப்புகள் மற்றும் தொழில்நுட்ப பிரம்மாண்டத்துடன் உருவாகியுள்ளது. வரும் ஜூலை 3 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய கலைப்புலி எஸ். தாணு, “நாகபந்தம் படத்தின் காட்சிகளைப் பார்த்தபோது, மிகப்பெரிய பிரம்மாண்டம் கண்ணெதிரே தோன்றியது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் அதன் உழைப்பையும் தரத்தையும் வெளிப்படுத்துகிறது. தயாரிப்பாளர் அபிஷேக் நாமா அவர்கள் இந்தப் படத்தை மிகுந்த அர்ப்பணிப்புடன் உருவாக்கியிருக்கிறார். அவருடன் எனக்கு நீண்டகால நட்ப...
Con City – பணம் அச்சிடும் இயந்திரம் கிடைத்தால்?

Con City – பணம் அச்சிடும் இயந்திரம் கிடைத்தால்?

சினிமா, திரைச் செய்தி
கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு குடும்பத்தின் வாழ்க்கையில் எதிர்பாராத விதமாக ஒரு பணம் அச்சிடும் மெஷின் கிடைப்பதை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘கான் சிட்டி’ படம், அதன்பிறகு நடக்கும் சம்பவங்களை நகைச்சுவை மற்றும் பரபரப்புடன் சொல்கிறது. இத்திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய நடிகை அன்னா பென், “இது எனது இரண்டாவது தமிழ்த் திரைப்படம். கொட்டுக்காளி படத்தில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்தபோது நீங்கள் கொடுத்த அன்பும் பாராட்டும் எனக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருந்தது. அந்த மீனா கதாபாத்திரத்திற்கு முற்றிலும் எதிர்மாறான ஒரு வேடத்தில் தான் ‘கான் சிட்டி’ படத்தில் நடித்திருக்கிறேன். இயக்குநர் ஹரிஷ் முதன்முதலில் இந்தக் கதாபாத்திரத்தை என்னிடம் கூறியபோது எனக்கு மிகவும் பதற்றமாக இருந்தது. இதுவரை நான் நடித்திராத ஒரு புதிய பரிமாணத்தில் இருக்கும் கதாபாத்திரம் அது. நடி...
Brand New Day: உலகம் மறந்த ஸ்பைடர்-மேன்

Brand New Day: உலகம் மறந்த ஸ்பைடர்-மேன்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
'பிராண்ட் நியூ டே' திரைப்படம், இதற்கு முன் பீட்டர் பார்க்கர் எதிர்கொள்ளாத அளவிற்கான பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகள், மிரட்டலான புதிய வில்லன்கள் மற்றும் சவால்களை அள்ளி வழங்கவுள்ளது. இந்த ஆண்டின் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றான 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே', உலகளவில் ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளது. அதிலும் குறிப்பாக, இந்தத் திரைப்படத் தொடருக்கு மிக வலுவான சந்தையாக இந்தியா விளங்குகிறது. இந்த நிலையில், சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை ஒரு நாள் முன்னதாக மாற்றியுள்ளதாக அறிவித்தபோது, ரசிகர்களின் உற்சாகம் புதிய உச்சத்தைத் தொட்டதுடன் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.பீட்டர் பார்க்கருக்கு இது ஒரு புத்தம் புதிய நாள் (BRAND NEW DAY). தன்னை யாருக்கும் நினைவில்லாத ஒரு உலகில், முழ...
Spider-Man: Brand New Day – ட்ரெய்லர்

Spider-Man: Brand New Day – ட்ரெய்லர்

Trailer, அயல் சினிமா, காணொளிகள், சினிமா, திரைத் துளி
நான்கு வருட நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, அன்பிற்குரிய சூப்பர் ஹீரோவை மீண்டும் அதிரடி ஆக்ஷனில் காட்டும் 'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' திரைப்படத்தின் இரண்டாவது ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்ற ஒரு சிறப்பு விழாவில் மிகுந்த ஆரவாரத்திற்கு மத்தியில் வெளியிடப்பட்ட இந்த ட்ரெய்லர், பீட்டர் பார்க்கரின் பயணத்தின் அடுத்த சுவாரசியமான அத்தியாயத்தை ரசிகர்களுக்குக் காட்டியது.  ட்ரெய்லரில், 'ஸ்பைடர் மேன்: நோ வே ஹோம்' சம்பவங்களின் விளைவுகளுக்குப் பிறகு, பீட்டர் பார்க்கர் தனது வாழ்க்கையை எதிர்கொள்ளும் அதே வேளையில், புதிய அச்சுறுத்தல்களுக்கு எதிராக மீண்டும் அந்தப் புகழ்பெற்ற ஸ்பைடர் மேன் உடையை அணிந்து களமிறங்குவதைக் காட்டுகிறது. ஒட்டுமொத்த உலகமும் பீட்டர் பார்க்கரின் அடையாளத்தை மறந்துவிட்ட நிலையில், இந்த சூப்பர் ஹீரோ தனது புதிய யதார்த்தத்தை ஏற்றுக் கொண்டு, தன் பகுதியைத் தொடர்ந்து எ...
Balan: The Boy விமர்சனம்

Balan: The Boy விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
மஞ்ஞுமள் பாய்ஸ் இயக்குநர் சிதம்பரத்தின் படமென்பதால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இப்படத்தின் கதையை, ரோமஞ்சம், ஆவேஷம் முதலிய படங்களை எழுதி இயக்கிய ஜித்து மாதவன் இயற்றியுள்ளார்.  சிறையில் இருந்து தனது மகனுடன் வெளியேறும் இளம் தாய், புதுப்புது அடையாளங்களுடன் தன் வசிப்பிடத்தை மாற்றிய வண்ணமே உள்ளார். ஒரு வீட்டில் பாட்டியம்மாவைப் பார்த்துக் கொள்ளும் தாதியாகச் செல்லும் இடத்தில், தனது பால்ய வயது மகன் பாலனை எதிர்பாராதவிதமாகப் பிரிந்து விடுகிறார். பதின் பருவத்தை அடையும் அந்த மகன், தனது தாயைத் தேடி வருகிறான். பாலன் தனது தாயைத் தேடிக் கண்டுபிடித்தானா இல்லையா என்பதே படத்தின் கதை. 'பாலன்: தி பாய்' எனும் தலைப்பு,  ஒரு நிரந்தர பெயரற்ற பாலகன்/ பையன் என்பதைக் குறிக்கும் பொதுப்பெயராகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.  பாட்டிம்மாவாக நடித்துள்ள டாலி ஜூனும், சிறுவனாக நடித்துள்ள K.R.ஆதிசேஷனும் அசத்...
நூறு சாமி விமர்சனம் | Nooru Saami review

நூறு சாமி விமர்சனம் | Nooru Saami review

சினிமா, திரை விமர்சனம்
'நூறு சாமிகள் இருந்தாலும் அம்மா உன்னைப்போல் ஆகிடுமா?' எனப் பத்தாண்டுகளுக்கு முன் 'பிச்சைக்காரன் (2016)' படத்தில் ஏகாந்த்ராஜ் எழுதிய பாடல் வரிகளில் இருந்து தலைப்பு எடுத்தாளப்பட்டுள்ளது. அம்மாவைத் தெய்வமாகப் பார்த்தால் பிச்சைக்காரன், அம்மாவை மனுஷியாகப் பார்த்தால் நூறு சாமி என்று சசியே விளம்பரப்படுத்தியுள்ளார்.இரண்டு படங்களுமே உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. தனது தாய் செல்விக்கும் ஒரு வாழ்க்கை உண்டென உணர்ந்து, அவரை மறுமணம் செய்யக் கட்டாயப்படுத்துகிறான் மூத்த மகன் பாஸ்கர். முதலில் தயங்கும் செல்வி, பின் அதற்கு மெல்ல செவி சாய்க்கிறார். ஊரும் உறவினர்களும் அதற்கு எப்படி எதிர்வினையாற்றுகின்றனர் என்றும், செல்விக்கு மறுமணம் ஆனதா இல்லையா என்பதே படத்தின் கதை. நூறு சாமியின் அச்சாணியாக விளங்குகிறார் செல்வியாக நடித்துள்ள லப்பர் பந்து சுவாசிகா. படத்தின் குறைகளை எல்லாம் மறக்கச் செய்து,...