32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

இரண்டு நிமிடங்களுக்குக் கெட்ட வார்த்தை பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ் | Jolly O Gymkahana

Dinesh R சேலம் Published: 13/05/2026 2 நிமிட வாசிப்பு OTT
எழுத்து அளவு:

‘வடசென்னை 2’ படம் குறித்த ஒரு புதிய தகவலை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்துள்ளார். இது தொடர்பான நிகழ்ச்சி மே ஏழாம் தேதி அன்று சன் நெக்ஸ்ட் (SUN NXT) டிஜிட்டல் தளத்தில் பிரத்தியேகமாக ஒளிபரப்பாகிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் குறித்துத் தொடர்ச்சியான யூகங்கள் நிலவி வரும் நிலையில், தொகுப்பாளர் ஜெகன் கிருஷ்ணனுடனான ஒரு வெளிப்படையான மற்றும் தணிக்கையற்ற உரையாடலில், ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த கேள்விக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் இறுதியாகப் பதிலளித்து, இப்படம் குறித்த தெளிவையும், புதிய உற்சாகத்தையும் ஏற்படுத்தி உள்ளார்.

இந்தப் பரபரப்பான அறிவிப்பைக் கடந்து இந்த நிகழ்ச்சி ஐஸ்வர்யா ராஜேஷின் திரையுலகப் பயணத்தை பற்றிய உரையாடல் ஆச்சரியமூட்டுவதாகவும், அதே சமயத்தில் சுவாரசியமானதாகவும் இருக்கின்றது. வடசென்னை படத்திற்காக இயக்குநர் வெற்றிமாறனுடன் ‘ஆடிஷன்’ செய்ததை அவர் நினைவு கூர்ந்தார். அதில் இரண்டு முழு நிமிடங்களுக்குத் தடையின்றிக் கெட்ட வார்த்தையைப் பேசும் படி அவரிடம் கேட்கப்பட்டது. இது ஓர் அசாதாரணமான பணி என்றாலும், அவர் தயக்கமின்றி அதை ஏற்றுக் கொண்டு, மனதில் நீடித்த ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினார்.

மேலும், ஐஸ்வர்யா தனது கல்லூரிக்கால நினைவை வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். பல வருடங்கள் பெண்கள் மட்டும் படிக்கும் கல்லூரிகளில் படித்த பிறகு அந்தச் சூழலுக்கு அப்பாற்பட்ட வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையால் உந்தப்பட்டு, தொடர்ந்து பத்து நாட்கள் வகுப்புகளைத் தவிர்த்து இருக்கிறார். அந்தத் தருணத்தை நேர்மையுடனும் நகைச்சுவையுடனும் வெளிப்படுத்தினார்.

ஜெகன் கிருஷ்ணனின் எளிமையான மற்றும் ஈர்க்கும் பாணியால் வழிநடத்தப்பட்டு, ‘ஆஃபீஸ் கானா’ இசைக்குழுவின் ஆற்றல் மிக்க பங்களிப்பால் மெருகேற்றப்பட்ட இந்த அத்தியாயம், புதிய தகவல்களையும் பொழுதுபோக்கையும் தடையின்றி வழங்குகிறது.

இந்தக் கொண்டாட்டம் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் நின்று விடவில்லை. ‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியில் அடுத்தடுத்து வருபவர்கள், துருவ் விக்ரம், ரவி மோகன், மிர்ச்சி சிவா, பிரேம்ஜி அமரன், ஹரிஷ் கல்யாண், மகத் ராகவேந்திரா, வைபவ் ரெட்டி, அஸ்வின் காகுமனு மற்றும் அனைவரின் விருப்பத்திற்குரிய டிஜிட்டல் திரை இரட்டையர்களான கோபி, சுதாகர் என பட்டியல் நீள்கிறது. ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஒரு புதிய விருந்தினர், ஒரு புதிய கதை என முற்றிலும் தவற விடக்கூடாத நிகழ்ச்சியாக ‘ஜாலி ஓ ஜிம்கானா’ விளங்குகிறது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.