
“தடயம்: இன்னும் பல தூரம் அழைத்துச் செல்லும்” – சமுத்திரக்கனி
ஜீ5 -இல் கடந்த பிப்ரவரி 27 அன்று வெளியான தடயம் இணைய தொடர் வெளியான சில நாட்களிலேயே ரசிகர்களின் பெரும் வரவேற்பில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
தமிழில் உருவாகும் க்ரைம் த்ரில்லர் கதைகளிலிருந்து மாறுபட்டு, உண்மைச் சம்பவங்களின் பின்னணியுடன், பரபரப்பும் மர்மமும் நிறைந்த அனுபவத்தை வழங்கும் இந்தத் தொடர், ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இவ்வெற்றியைக் கொண்டாடும் நிகழ்வினில், ஜீ5 சார்பில் பேசிய கௌஷிக் நரசிம்மன், "பொதுவாக ஒரு சீரிஸ் வெளியான பிறகு, அதன் முழு வரவேற்பையும் பல வாரங்கள் கடந்த பிறகுதான் நாம் பார்க்க முடியும். ஆனால் தடயம் சீரிஸில், இன்னும் ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், அதுவும் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களை எட்டியுள்ளது. இது மிகப் பெரிய சாதனை என்று நான் நினைக்கிறேன்.
இதற்கு முன்பு ஜீ5 தளத்த...
















