
காட்சியின் மொழி – நுட்பமும் ரசனையும்
நான் எடுக்கும் சில புகைப்படங்களுக்கு பின்னூட்டமாக 'அழகான புகைப்படம், என்ன கேமரா வைத்துள்ளாய்?' என்று அடிக்கடி வரும் கேள்வியானது, சில வருடங்களாகவே என்னை ஆயாசப்படுத்தினாலும், இப்பொழுதெல்லாம் ஏதாவது ஒரு பதிலைச் சொல்லிவிட்டு ஒதுங்கி விடுவதே சரி என்று ஒதுங்கியும் விடுகிறேன்.
தற்காலத்தைய ஃபேஸ்புக் யுகத்தில் அத்தகைய கேள்விகளுக்கு விளக்கமான பதிலை அளித்தாலும், கேள்வி கேட்பவர்கள் அந்த பதில்களை கிரகிப்பவர்களாக எனக்குத் தோன்றவில்லை -- என் நண்பர்களில் பலர் இதே கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்பதை என்னவென்று சொல்வது?
நன்றாகத் தோன்றும் புகைப்படங்களைப் பார்த்து உடனடியாக ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து தள்ளுவோர் பலர் அது வெறும் அபிப்பிராயமன்றி ஒரு ரசனைக்குரிய விஷயமும் ஆகும் என்பதை அறிந்திருப்பதில்லை. விலை உயர்ந்த ஒரு கேமராவினால் எடுக்கப்படும் புகைப்படங்கள் அவ்வாறாக இருக்கும் என்ற எண்ணமே அவர்களில் சிலரை அத்தகைய கே...
















