Shadow

Author: Dinesh R

காட்சியின் மொழி – நுட்பமும் ரசனையும்

காட்சியின் மொழி – நுட்பமும் ரசனையும்

தொழில்நுட்பம்
நான் எடுக்கும் சில புகைப்படங்களுக்கு பின்னூட்டமாக 'அழகான புகைப்படம், என்ன கேமரா வைத்துள்ளாய்?' என்று அடிக்கடி வரும் கேள்வியானது, சில வருடங்களாகவே என்னை ஆயாசப்படுத்தினாலும், இப்பொழுதெல்லாம் ஏதாவது ஒரு பதிலைச் சொல்லிவிட்டு ஒதுங்கி விடுவதே சரி என்று ஒதுங்கியும் விடுகிறேன். தற்காலத்தைய ஃபேஸ்புக் யுகத்தில் அத்தகைய கேள்விகளுக்கு விளக்கமான பதிலை அளித்தாலும், கேள்வி கேட்பவர்கள் அந்த பதில்களை கிரகிப்பவர்களாக எனக்குத் தோன்றவில்லை -- என் நண்பர்களில் பலர் இதே கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்பதை என்னவென்று சொல்வது? நன்றாகத் தோன்றும் புகைப்படங்களைப் பார்த்து உடனடியாக ஆஹா, ஓஹோ என்று புகழ்ந்து தள்ளுவோர் பலர் அது வெறும் அபிப்பிராயமன்றி ஒரு ரசனைக்குரிய விஷயமும் ஆகும் என்பதை அறிந்திருப்பதில்லை. விலை உயர்ந்த ஒரு கேமராவினால் எடுக்கப்படும் புகைப்படங்கள் அவ்வாறாக இருக்கும் என்ற எண்ணமே அவர்களில் சிலரை அத்தகைய கே...
இளவரசி ஹன்சிகா!

இளவரசி ஹன்சிகா!

சினிமா, திரைத் துளி
தனது வசீகரத்தால் இளைய உள்ளங்களின் மனதைக் கவர்ந்திருந்தாலும், ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவும் மனப்பான்மை மூலம் எல்லோருடைய அன்பையும் ஈன்றவர் ஹன்சிகா. அவர் பிறக்கப் போகும் 2015 ஆம் ஆண்டை எண்ணி மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார். ஏனெனில் அடுத்த வருடம் தனக்கு மிகவும் பொன்மயமாக அமையும் என்ற அவரது நம்பிக்கையே மகிழ்ச்சித் திளைப்பிற்குக் காரணம். அரண்மனை படத்தில் அவர் நடித்த கதாபாத்திரம் பெற்றுத் தந்த விசாலமான இடத்தை, இந்த ஆண்டு டிசம்பரில் வெளிவரவிருக்கும் “மீகாமன்” படம் தக்க வைக்க உதவுமென நம்பிக்கையுடன் இருக்கிறார். ஹாலிவுட படத்துக்கு இணையான அப்படத்தில், ஆர்யாக்கு நிகரான பாத்திரத்தில் நடித்துள்ளதே அவர் மகிழ்ச்சிக்கு காரணம். நடிக ஜெயப்ரதாவின் மகன் சித்துவுக்கு ஜோடியாக நடிக்கும் ‘உயிரே.. உயிரே..’ படத்தில், அவரது வயதுக்கும் துள்ளலுக்கும் ஏற்ப பப்லியான பாத்திரத்தில் வருகிறார். 2015 பொங்கல் நாளன்று வெளியாகும...
சதுராச்சலம்: ஓர் அனுபவம்

சதுராச்சலம்: ஓர் அனுபவம்

ஆன்‌மிகம், தொடர்
காணாத அருவினுக்கும்       உருவினுக்குங் காரணமாய் நீணாக மணிந்தார்க்கு       நிகழ்குறியாஞ் சிவலிங்கம் லிங்கங்கள் மீதான ஈர்ப்பு எந்த வயதில் தொடங்கியது என சரி வர ஞாபகம் இல்லை. வரிசையாக வெவ்வேறு உருவங்களில் நீண்ட வரிசையில் வைக்கப்பட்டிருக்கும் சிவலிங்கங்களைப் பார்த்தாலே அலாதியான உணர்வு ஏற்படும். அதைப் பார்க்கவே பெரிய சிவன் கோயில்களுக்குச் செல்வதுண்டு. கருங்கல்லில் செய்யப்பட்ட பெரிய லிங்கங்கள் ஒரு பிரகாரம் நெடுக்கே வரிசையாக அக்கோயில்களில் வைக்கப்பட்டிருக்கும். சற்றே ஒளி குறைந்த பிரகாரத்தில் லிங்கங்களைப் பார்த்துக் கொண்டு நடப்பது ஓர் அமானுஷ்ய உணர்வைத் தரும். அதுவும் நாம் மட்டுமே தனியாக அந்த இடத்தில் நிற்கும்போது அதைத் துல்லியமாக உணரலாம். அச்சமயம் பார்த்து வெளவால்கள் உரசிக் கொண்டு பறந்தால் சொல்லவே வேணாம். லிங்கங்களின் அச்சுறுத்தும் கம்பீரமும், சலனமற்ற அழகும் மனதை ஏதோ செய்துவிடும். இப்பட...
சிக்ஸ்-பேக் அருண் விஜய்

சிக்ஸ்-பேக் அருண் விஜய்

சினிமா, திரைத் துளி
2015 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வரவிருக்கும் என்னை அறிந்தால்.. படத்தில் அஜித்துடன் இணைந்து நடிக்கிறார் அருண் விஜய். கடந்த ஆறு மாதங்களாக, ஒரு நாளைக்கு 6 முதல் 7 மணி வரை உடற்பயிற்சிக் கூடத்தில் செலவிடுகிறார் அருண் விஜய். அப்படி உடற்பயிற்சிக் கூடத்தில் செலவிடுவதை தான் மிகவும் விரும்புவதாக கூறும் அருண் விஜய், “ஷூட்டிங் நாட்களிலும், இரவு ஜிம்க்கு வந்து என் பெர்ஸனல் ட்ரெயினர் ஷிவக்குமாரின் உதவியுடன் வொர்க்-அவுட் செய்வது மிகவும் பிடித்திருக்கிறது” என்கிறார்....
கேரளத் திரைப்பட விழாவில் பண்ணையாரும் பத்மினியும்

கேரளத் திரைப்பட விழாவில் பண்ணையாரும் பத்மினியும்

சினிமா, திரைத் துளி
திக்கெட்டும் பயணித்து, 'பண்ணையாரும் பத்மினியும்’ படம் பல விருதுகளை அள்ளி வருகிறது. ஹபிடெட் ஃபிலிம் ஃபெஸ்டிவல், ப்ரேகு ஃபிலிம் ஃபெஸ்டிவல், ஜாக்ரான் ஃபிலிம் ஃபெஸ்டிவல் என பல நாடுகளின் திரைப்பட விழாக்களைப் பார்த்த பண்ணையாரும் பத்மினியும், இந்த வருடம் பெங்களூருவில் நடந்த சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்தியப் படங்களுக்கான வரிசையில் தேர்வுக்குழு சிறந்த திரைப்படம் என்ற விருது வாங்கியது. இந்த வருடம் கேரளா சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்படும் ஒரே தமிழ் படம் என்ற அந்தஸ்தையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. தனது அடுத்த படத்தின் வேலைகளில் இறங்கியுள்ள அருண் கூறுகையில், “இவ்வகையான விருதுகள் எங்களைப் போலுள்ள வளரும் கலைஞர்களுக்கு ஒரு ஊக்கமாய் அமைகிறது” என்கிறார். இப்படம் வரவிருக்கும் சென்னை சர்வதேசத் திரைப்பட விழாவிலும் திரையிடப்படவுள்ளது. இவ்வாறான திரைப்படங்கள் அதிகம் தமிழில் வருமானால் தமிழ் ...
ஹீரோவாகும் சிம்ஹா!

ஹீரோவாகும் சிம்ஹா!

சினிமா, திரைத் துளி
இயக்குநரும் தயாரிப்பாளருமான மனோபாலா அவர்களின் மனோபாலா பிக்சர் ஹவுஸ் மற்றும் R.சரத்குமார், R.ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீஃபன் ஆகியோரின் மேஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் பாம்பு சட்டை. “சதுரங்க வேட்டை” திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மனோபாலா தொடுக்கும் புதிய வேட்டையான ‘பாம்பு சட்டை’ படத்தை புதுமுக இயக்குனர் ஆடம் தாசன் இயக்குகிறார், இவர் இயக்குநர் சங்கரின் இணை இயக்குநர் ஆவார். பல படங்களில் குணசித்திர நடிகராக நடித்து வந்த பாபி சிம்ஹா இப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். இவருக்கு கச்சிதமாகப் பொருந்தும் வண்ணம் அமைந்துள்ளது இந்த கதாபாத்திரம். ஏர்டெல் சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றி பெற்ற அஸீஸ் அசோக் இசையமைப்பளாராக அறிமுகமாகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பதிவு நாளை முதல் ஆரம்பமாகிறது. திட்டமிட்டப்படி படமெடுத்து வெளியிடும் மனோபாலா இப்படத்தை கோடை வ...
லிங்கா விமர்சனம்

லிங்கா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பேரன் லிங்கா திருடன்; அவனது தாத்தா லிங்கேஸ்வரனோ மஹாராஜா. மஹாராஜாவின் பேரன் ஏன் திருடனானான் என்பதுதான் கதை. கன்னக்கதுப்புகளில் வயோதிகம் எட்டிப் பார்த்தாலும், ரஜினியின் சின்ன கண்களின் ஷார்ப்னெஸும், துள்ளலான உடல்மொழியும் ஈர்க்கவே செய்கிறது. அதனால்தான் மூன்று மணி நேரம் திரையரங்கில் அமர முடிகிறது. ரஜினிக்கு நிச்சய வெற்றிய அளிக்கும் இரு வேடங்களில் வருகிறார். ஃபிளாஷ்-பேக்கில் பணக்காரராகவும், நடப்பில் சாமானியாகவும் வருகிறார். ஆனால் சாமானியன் திருடனாக உள்ளான் இப்படத்தில். 'சூது கவ்வும்' காலத்துக்கு ஈடு கொடுக்க இருக்குமோ என்னவோ? நறுக்கு தெறித்தாற்போல் இருக்கும் பணக்கார ரஜினியின் ஃபிளாஷ்-பேக். ஆனால் லிங்காவில் படமே அதன் நீண்ட ஃபிளாஷ்-பேக்தான். அத்தனை பெரிய கூட்டத்திலும் தனித்து ஜொலிக்கிறார் சோனாக்ஷி சின்ஹா. ஆனால் தன் வயது காரணமான பிரக்ஞையுடன் ரஜினி நடித்திருப்பது படத்தின் சுவாரசியத்தை மட்டுபடுத்தவே...
கூகுளாண்டவரின் ‘விலையில்லா இணையதளம்’

கூகுளாண்டவரின் ‘விலையில்லா இணையதளம்’

தொழில்நுட்பம்
உலகத்தின் மிகப் பெரிய கம்பெனியில் இருந்து உள்ளூர் ஊறுகாய் வியாபாரி வரை தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள ஓர் இணையதளம் அவசியமாகிறது. என்னதான் ‘ப்ளாக்கர்’, ‘வேர்ட்ப்ரஸ்’ போன்றவைகள் இலவசமாய் தகவல் பக்கங்களை உருவாக்கிக் கொள்ளும் வசதிகளை அளித்தாலும். டபிள்யு டபிள்யு டபிள்யு டாட் பிச்சுமணி டாட் காம்  என சொல்லிக் கொள்வதில் ஒரு பெருமைதான். ஒரு இணையதளம் துவக்க என்னவெல்லாம் வேண்டும். முதலில் ஒரு நல்ல பெயராய்ப் பார்த்து பதிவு செய்ய வேண்டும். நம் கொடுப்பினையைப் பொறுத்து பேரை பதிவு செய்து கொண்ட பின்னர், நம் தளத்தை வலையேற்ற ஓர் இடம் பார்க்க வேண்டும். அந்த இடம்தான் சர்வர். நம் தகவல்களின் அளவு மற்றும் ட்ராஃபிக்கை பொறுத்து சர்வரில் இடம் வாங்கிக் கொள்ள வேண்டும். இவை இரண்டுமே காசு கொடுத்து வாங்க வேண்டியவை.  இந்த வெப் ஹோஸ்டிங் சர்வர் கம்பெனிகள் ஆளுக்குத் தகுந்தாற்போல காசு கறந்துவிடுவார்கள். விண்டோஸ் ஹோஸ்டிங் ச...
நண்பேன்டா ரஜினி!!

நண்பேன்டா ரஜினி!!

சினிமா, திரைத் துளி
'நினைத்தாலே இனிக்கும்' உட்பட பல படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் இணைந்து நடித்தவர் நடிகை ஜெயப்ரதா. இவர்களின் நட்பு இன்றளவும் தொடர்ந்து வருவது உலகமறிந்ததே! மேலும் லிங்கா படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்த பல படங்களிலும் ஜெயப்பிரதா நடித்திருக்கிறார். சில தினங்களுக்கு முன்பு, ஜெயப்பிரதா அவர்கள் ரஜினிகாந்தை நட்பு ரீதியாக லிங்கா படப்பிடிப்பின்போது சந்தித்துள்ளார். அப்போதுதான் தயாரித்துக் கொண்டிருக்கும் உயிரே.. உயிரே.. படத்தின் முன்னோட்டத்தைக் காண்பித்துள்ளார். படத்தை வெகுவாகப் பாரட்டிய சூப்பர் ஸ்டார் ‘உயிரே.. உயிரே..’ படத்தின் முன்னோட்டத்தை தன் படம் லிங்கா வெளியாகும் திரையரங்குகளில் இணைக்குமாறு தயாரிப்பு தரப்பிடம் கேட்டுள்ளார். சூப்பர் ஸ்டாரின் பெருந்தன்மையைக் கண்டு பெருமகிழ்ச்சியுற்ற நடிகை ஜெயப்ரதா தனது நன்றியைத் தெரிவித்தார். ஏனெனில் அப்படத்தில் அவரின் மகன் சித...
நிறம் மாறாத நிறபேதமும், சில நிஜங்களும்..

நிறம் மாறாத நிறபேதமும், சில நிஜங்களும்..

கட்டுரை, சமூகம்
கடந்த நவம்பர் மாதக்கடைசியில் வெளியான ஒரு தீர்ப்பு அமெரிக்க மண்ணில் கொந்தளிப்பான சூழலை உருவாக்கிவிட்டது. நாடெங்கும் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள், கலவரங்கள் என எங்கும் பதட்டம். எரிகிற நெருப்பில் எண்ணெய்யை ஊற்றியதைப் போல ஊடகங்களும் தங்களால் முடிந்த வரை பிரச்சினையை ஊதிப் பெருக்க, அதிபர் ஒபாமாவே டிவியில் தோன்றி மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டுகோள் விடுக்கும் அளவுக்கு நிலவரம் கலவரமாயிருந்ததென்றால் பார்த்துக் கொள்ளுங்கள். பிரச்சினை இதுதான்.. மிசௌரி மாகாணத்தில் உள்ள பெர்குசன் எனும் ஊரில், ஒரு கடையில் திருடியதாக சந்தேகிக்கப்பட்ட கருப்பின இளைஞன் ஒருவனைப் பிடிக்க போலிசார் மேற்கொண்ட நடவடிக்கையில் அந்த இளைஞன் சுட்டுக் கொல்லப்பட்டான். சுட்ட அதிகாரி வில்சன் வெள்ளை இனத்தவர். வில்சன் தன்னுடைய வாக்கு மூலத்தில் அந்த இளைஞன் தன்னைத் தாக்கி தன் துப்பாக்கியைப் பறிக்க முயன்றபோது, வேறு வழியில்லாமல் தற்காப்புக்க...