Shadow

Author: Dinesh R

இசை விமர்சனம்

இசை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தனக்குக் கிடைக்கும் புகழுக்கும் அங்கீகாரத்துக்கும் தனது திறமை மட்டுமே காரணமென நம்பும் ஒருவன், அவனுக்கு ஏற்படும் தொய்வுக்கும் இயலாமைக்கும் மட்டும் மற்றவர் செய்யும் சதிதான் காரணமென நம்புவான். செயலூக்கம் குறைந்த சாமானிய மனிதனின் கற்பிதமிது. அப்படித்தான் மகத்தான இசைக் கலைஞரான வெற்றிச்செல்வன் தன் சறுக்கலுக்கு தனது சிஷ்யன் ஏ.கே.ஷிவாதான் காரணமென கோபம் கொள்கிறார். தனது கோபத்தை வெற்றிச்செல்வன் எப்படித் தணித்துக் கொள்கிறார் என்பதுதான் இசை படத்தின் கதை. சுமார் பத்தாண்டுகளுக்குப் பின் மீண்டும், எஸ்.ஜே.சூர்யாவின் இயக்கத்தில் படம் வந்துள்ளது. சம கால பாணி பற்றிலாம் கவலைப்படாமல், தனது பிரத்தியேக முத்திரையுடன் அசராமல் களமிறங்கியுள்ளார். ரத்தமும் சதையுமாக பழி வாங்கப் புறப்படும் தமிழ்ப்பட வில்லன்களைப் போலன்றி, நாயகனுக்கு உளவியல் பாதிப்புகளை ஏற்படுத்த முயல்கிறார் எஸ்.ஜே.சூர்யாவின் வில்லன். இது போன்ற உளவியல...
யுரேகாவின் தொப்பி

யுரேகாவின் தொப்பி

சினிமா, திரைச் செய்தி
மதுரை சம்பவம் எடுத்த இயக்குநரின் மூன்றாவது படம் தொப்பி. படத்தில் நாயகனாக முரளிராம் அறிமுகமாகிறார்; நாயகியாக மலையாள வரவான ரக்ஷா நடிக்கிறார்.  நியூசிலாந்தில் 25 வருடங்களாக ஹோட்டல் நடத்தி வரும் நாமக்கலைச் சேர்ந்த பரமராஜ் இப்படத்தைத் தயாரித்துள்ளார். அவர் பாக்கியராஜ் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர். தனது சினிமா எடுக்கும் கனவை நனவாக்கியதோடு, தனது அபிமான நடிகரும் இயக்குநருமான பாக்கியராஜையே தன் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு தலைமை தாங்க வைத்திருந்தார். அதே போல், படத்தின் இசையமைப்பாளரான ராம்பிரசாத் சுந்தரு, வெளிநாட்டில் வாழ்பவரே! அமெரிக்க வாழ்த் தமிழரின் இசையில், பாடல்கள் நேட்டிவிட்டி (Nativity) இசையுடன் ஒலிக்கிறது என்பதை விட, வைரமுத்துவின் பாடல் வரிகளைக் கேட்க முடிகிறது என்பது கூடுதல் விசேஷம்.  Denotified criminals என குற்றப் பரம்பரையில் சேர்க்கப்பட்டவர்களைப் பற்றி கள ஆய்வு செய்தே திரைக்கதை அம...
அப்போ காதல் மன்னன் இப்போ காவல் மன்னன்

அப்போ காதல் மன்னன் இப்போ காவல் மன்னன்

சினிமா, திரைத் துளி
விவேக்கின் கால்ஷீட் கிடைக்காததால்தான் வி.டி.வி.கணேஷை விண்ணைத் தாண்டி வருவாயாவில் நடிக்க வைத்ததாக இயக்குநர் கெளதம் மேனன் தன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். ‘ஆனால் எப்போ கெளதம் என்னிடம் கேட்டார்? ஒருவேளை நான் மறந்திருப்பேன்’ எனச் சமாளித்தார் விவேக். மின்னலே இயக்கிய கெளதம்க்கும், என்னை அறிந்தால் அறிந்தால் கெதம்க்கும் என்ன வித்தியாசமெனக் கேட்ட பொழுது, “மின்னலே கௌதம் 13 வருடம் சின்னவர்; புதியவர் பரபரப்பும், படபடப்பும் உள்ளவர். என்னை அறிந்தால் கௌதம் 13 வருடம் கடந்து வந்து இருக்கிறார்; பக்குவம் வந்திருக்கிறது. ஆனால் மாற்றமில்லாத அதே அன்பு” என்றார் விவேக். என்னை அறிந்தால் படத்தில் நடித்த பிரதான கதாபாத்திரங்களைப் பற்றி, “அன்று துடிப்பான காதல் மன்னன். இன்று பொறுப்பான காவல் மன்னன். ஆனால் என்றும் அவரெனக்கு நண்பர். இனிமை, பெண்மை – திரிஷா. அழகு, அறிவு – அனுஷ்கா. ஒரு சீரியசான, குசும்புமிக்க கதாப்...
சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது – படக்குழுவினர்

சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது – படக்குழுவினர்

சினிமா
நடிகர்கள்:>> பாபி சிம்ஹா >> லிங்கா >> பிரபஞ்ஜெயன். DN >> சரண்யா >> பனிமலர் >> நிஷா >> அல்போன்ஸ் புத்ரன் >> கார்த்திக IB >> வத்ஸன் வீரமணி >> செல்வம் >> மகுடபதி >> விஜயலஷ்மி >> சுகன்யா >> ஜவஹர் >> சார்லஸ் சுரேஷ் >> மாஸ்டர் ஸ்ரீராம் >> ரவி ஸ்ரீநிவாசன்பணிக்குழு:>> எழுத்து, இயக்கம், தயாரிப்பு – M. மருதுபாண்டியன் >> தயாரிப்பு நிறுவனம் – கரியாம்பட்டி ஸ்டுடியோஸ் >> வெளியீடு – ஏ.டி.எம். புரடக் ஷன்ஸ் >> ஒளிப்பதிவு – வினோத் ரத்னசாமி >> இசை – கேம்லின் – ராஜா >> படத்தொகுப்பு – கிரண் K.N. >> பாடல் வரிகள் – கார்த்திக் நேத்தா...
இயக்குநர் பாரதிராஜா வியக்கும் ஜெமோ வாசகன்

இயக்குநர் பாரதிராஜா வியக்கும் ஜெமோ வாசகன்

சினிமா, திரைத் துளி
“எங்க ஊர்ல படம் பார்த்துட்டு வருபவர்களிடம், படமெப்படின்னு கேட்பேன். அவங்க நல்ல படம் எனச் சொன்னால், படத்தின் எத்தனை சண்டைக் காட்சி எத்தனை கற்பழிப்புக் காட்சின்னு கேட்பேன். அவங்களும் நாலு சண்டைக் காட்சி, ரெண்டு கற்பழிப்புக் காட்சி என கணக்கு சொல்வாங்க. இந்த மாதிரி படம்லாம் நான் ரசிச்சுப் பார்த்துட்டு இருந்தேன். அப்போ நான் பதினொன்னாவது படிக்கிறப்ப மண் வாசனைன்னு ஒரு படம் பார்த்தேன். ஜெயமோகன் சார் ஓரிடத்தில் சொல்லியிருப்பார். வியாபார நோக்கத்தோடு எழுதப்படுற எழுத்த மட்டும் தொடர்ந்து வாசிச்சுட்டு, ஓர் இலக்கியப் படைப்பைப் படிக்கு நேரும்பொழுது அவன் திடுக்கிட்டு மிரண்டிடுவான். இதுவரைதான் படித்தது அனைத்தும் ஒன்னுமில்லே என அவனுக்குத் தோன்றும். உண்மைன்னா என்னன்னு காட்டும் இலக்கியம். அதுபோல், இயக்குநர் இமயத்தின் “மண்வாசனை” படம் எனக்கு நிஜத்தைக் காட்டியது. இதுவரைக்கும் பார்த்தது படமே கிடையாதுன்னு தோணுச்ச...
துறுதுறு மலபார் அழகி நேஹா

துறுதுறு மலபார் அழகி நேஹா

சினிமா, திரைத் துளி
ஆறு, அருவி என முற்றிலும் நீர் வரப்பின் ஈரத்தில் வளர்ந்து நிற்கும் தென்னை மரங்களுடைய மலபார் பகுதியைச் சேர்ந்தவர் நேஹா ரத்னாகரன். இவர் VVR சினி மாஸ்க் தயாரிக்கும், ‘இவனுக்கு தண்ணில கண்டம்’ திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். சின்னத்திரைப் புகழ் தீபக் நாயகனாக நடிக்கிறார். “மாடல், விளம்பரப் படம் என நடித்துக் கொண்டிருந்தேன். எதையும் செய்து பார்க்கலாம் என்ற எண்ணம் எனக்கு அதிகம் உண்டு. அப்படியே சினிமாவிலும் நடித்துப் பார்க்கலாம் என்று முடிவு செய்தேன். கேரளத்துப் பெண்கள் நடித்தால் பிரபலமாவது தமிழில் தானே!! வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்.. என்னை விட்டு விடுமா என்ன? இவனுக்கு தண்ணில கண்டம்’ படத்தில் வாய்ப்பு கிடைத்தது. இப்படத்தில் ‘தீபிகா’ என்னும் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். நான் ஒரு துறுதுறு வாயாடி சென்னைப் பெண்ணாக வருகிறேன். ‘மிஸ் மலபார்’ போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தாலும், தமிழ் ...
நல்லா இருந்த ஊரின் டீச்சர்

நல்லா இருந்த ஊரின் டீச்சர்

சினிமா, திரைத் துளி
“நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும், ஒரு சிறந்த பயணமாகவும் அனைத்தையும் கற்றுக் கொள்ளும் வாய்ப்பாகவும் அமைந்தது. இப்படத்தில் நான் ஒரு ஸ்கூல் டீச்சராக வருகிறேன். ‘குள்ளநரி கூட்டம்’ திரைப்படத்துக்கு பிறகு நான் ஒரு கிராமத்துச் சாயலில் ஒரு கதாபாத்திரம். நான் இவ்வகையான நகைச்சுவைத் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என நெடு நாளாய்க் காத்திருந்தேன். இயக்குநர் ஸ்ரீகிருஷ்ணா இந்தக் கதையைக் கூறும்பொழுதே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சற்றும் யோசிக்காமல் நான் நடிக்க ஒப்புக் கொண்டேன்” என்றார் ரம்யா நம்பீசன். படம் முடியும் தருவாயில் உள்ளது. “இன்னமும் எனக்கு தமிழில் உச்சரிப்புகள் சற்று தடுமாற்றமே அத்தகைய நேரங்களில் பேருதவி புரிந்துள்ளார் அருள்நிதி. இந்தப் படம் கண்டிப்பாக குழந்தைகளுக்குப் பிடிக்கும்” என்றார் ரம்யா....
சக்கர வியூகம் – ஐயப்பன் கிருஷ்ணன்

சக்கர வியூகம் – ஐயப்பன் கிருஷ்ணன்

புத்தகம்
நிறைய புத்தகங்கள் வாசிக்கும் பழக்கமுடைய தோழியொருவர், தான் மகாபாரதமோ இராமாயணமோ படித்ததே இல்லை எனச் சொன்னார். ஆனால் அவர் மகாபாரதத்தின் கிளைக் கதைகள் மட்டுமன்றி, கூடுதலாகவே மகாபாரதத்தைப் பற்றி பதிப்பில் வந்திராத சில வட்டாரக் கதைகளையும் தெரிந்து வைத்திருக்கிறார். காரணம், ஜீஜா பாய்களைக் கொண்ட தேசமிது! வேலூரைச் சேர்ந்த ஐயப்பனின் தந்தை ஒரு பாரதக் கூத்துக் கலைஞர். தெருகூத்து பாரதக் கதைகளைக் கேட்டு வளர்ந்தவர். கதைகளுக்கு காது கொடுப்பது போன்ற மகிழ்வான விஷயம் வேறெதுவும் இருக்க இயலாது. அதுவும் மகாபாரதக் கதைகளைக் கேட்பதோ, படிப்பதோ எப்பொழுதும் பரவசமான ஒன்று. அதனால் தான் வியாசர் பறந்த வானில் பறக்க தைரியமாக முயல்கிறார் ஜெயமோகன். தெரிந்த கதைகள் தானெனினும், சொல்பவரின் கற்பனைக்கேற்ப புதிய நிறங்களைப் பெற்ற வண்ணமிருப்பதே பாரதத்தின் சிறப்பு. அத்தகைய சிறப்பு, ஐயப்பனின் சிறுகதைத் தொகுப்பான சக்கர வியூகத்திற்கும் ...
ஏழு நாட்கள் நட்பைப் பற்றிய ஒரு படம்

ஏழு நாட்கள் நட்பைப் பற்றிய ஒரு படம்

சினிமா, திரைத் துளி
ஆக்க்ஷன் படங்களை இயக்குவதில் வல்லவரான இயக்குநர் A. வெங்கடேஷ், ரொம்ப நல்லவன்டா நீ என்ற காமெடி த்ரில்லர் படத்தை இயக்குகிறார். இப்படத்தில் நாயகனாக மிர்ச்சி செந்தில், கதாநாயகியாக சுருதி பாலா நடிக்கிறார்கள். முக்கியமான கதாப்பாத்திரத்தில் ரோபோ சங்கர் நடிக்க வில்லனாக எத்தன் புகழ் சர்வஜித் நடிக்கிறார். அங்காடி தெரு படத்தில் வில்லனாக மிரட்டிய வெங்கடேஷ் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். காமெடி த்ரில்லராக தயாராகி வரும் முக்கியமான கதாபாத்திரத்தில் ரோபோ சங்கர் நடிக்க வில்லனாக எத்தன் புகழ் ‘ சர்வஜித்’ நடிக்கிறார். பல வெற்றிப் படங்களை இயக்கியதோடு, 'அங்காடி தெரு' படத்தில் வில்லனாக மிரட்டிய வெங்கடேஷ் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்“என் படங்களில் நகைச்சுவைக்கு முக்கிய இடம் உண்டு. எனினும் முழு நீள காமெடி படம் நான் இயக்கியதில்லை. இது எனக்கு முற்றிலும் புதிய அனுபவமாக இருந்தது. முன்பின் ...
தொட்டால் தொடரும் விமர்சனம்

தொட்டால் தொடரும் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நாயகி எதைத் தொட்டதால் என்ன தொடர்கிறது என்பதே படத்தின் கதை. காதல், அதனால் எழும் ஊடல், மெகா சீரியலில் காட்டப்படும் குடும்பப் பிரச்சனை, தமிழ்த் திரைப்படங்களின் ஆதிகாலம் தொட்டே வரும் சித்தி கொடுமை, மொக்கை போட்டே சாகடிக்கும் நாயகனின் நண்பன், கொல்லத் துரத்தும் வில்லன் என அக்மார்க் தமிழ்ப்படத்துக்குரிய சகல விஷயங்களையும் ஒன்று விடாமல் காட்சிப்படுத்தியுள்ளார் கேபிள் சங்கர். இதில் புதுமை எனப் பார்த்தால், வில்லனாக வரும் வின்சென்ட் அசோகன் ஒரே ஒரு வார்த்தை கூடப் பேசாமல் மிரட்டியுள்ளார். படத்தின் தொடக்கத்திலேயே பாத்திரங்களைச் சுலபமாக ஏற்றுக் கொள்ள முடிகிறது. ஹீரோக்கு அநாவசியமான அறிமுகப் பாடல் கிடையாது; நாயகியும் லூசு போலவோ, கவர்ச்சி உடையிலோ அறிமுகமாகவில்லை. நாயகனைக் காதலிக்க மட்டுமே அவர் படத்தில் இல்லை. துக்கம், மகிழ்ச்சி, பொறுப்புணர்ச்சி, குறும்புத்தனம், கோபதாபமுள்ள பெண்ணாக உள்ளார் நாயகி. ஆனால் படத்த...