Shadow

Author: Dinesh R

மட்டற்ற மகிழ்ச்சியில் சிம்பு

மட்டற்ற மகிழ்ச்சியில் சிம்பு

சினிமா, திரைத் துளி
சிம்புவின் படம் வந்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டது. ஆனாலும் அவருடைய படத்தின் டீசர் வெளி வந்த சில நாட்களிலேயே பெரிய அளவில் எல்லோருடைய கவனத்தையும் ஈர்ந்துள்ளது. இது சிம்புவால் மட்டுமே இயலும். இளம் ரசிக ரசிகைகளின் இதய துடிப்பைத் துல்லியமாகக் கணித்து வைத்திருக்கும் எஸ் டி ஆரின் மூன்று படங்கள் வெளிவர உள்ளது. 2015, எஸ் டி ஆருக்கு அதிர்ஷ்டமான வருடமான அமையவுள்ளது. 'இது நம்ம ஆளு' திரைப்படத்தின் டீசர் ரசிகர்கள் இடையே ஏகோபித்த வரவேற்பு பெற்று இருக்கிறது. தன் மனதில் பட்டதை சரி என்று பட்டென உடைத்திடும் எஸ் டி ஆருக்கு அந்தக் குணத்துக்காகவே கூடிடும் ரசிகர் கூட்டம் ஏராளம். அந்த வகையில் 'இது நம்ம ஆளு' டீசரில் வரும் எஸ் டி ஆரின் வசனங்களுக்கும், அவரைக் குறித்த வசனங்களுக்கும் ஏராளமான வரவேற்ப்பு கிட்டியது. 'என் படத்துக்கு ரசிகர்கள் இடையே கிடைத்து உள்ள இந்த வரவேற்பு மகத்தானது. என் ரசிகர்களுக்கு மட்டுமின்றி எ...
பூக்குழி – பெருமாள் முருகன்

பூக்குழி – பெருமாள் முருகன்

கட்டுரை, புத்தகம்
பூக்குழி என்பது பூக்களைக் கொண்ட குழி அல்ல. நெருப்புக் கங்குகளால் நிரப்பி, சாம்பல் பூக்காமல் கவனமாக விசிறப்பட்டு கனன்று கொண்டிருக்கும் குழி. மங்கல வழக்காய் பயன்படுத்தும் போதிலும் ஒருவிதமான அச்ச உணர்ச்சியை விதைக்கிறது. நாம் வாழ்ந்து வரும் சமகாலத்துக்கு சில பத்தாண்டுகள் முன் நடக்கும் காலமும் களமும்; நம் சமூகத்தில் இருக்கும் இறுக்கமான சாதிய மனோபாவத்தையும், அது யாரிடம், எங்கு, எவ்வாறு வெளிப்படுகிறது என்பதையும் கலப்புமணம் புரிந்து கொண்ட இருவரின் வாழ்வனுபவமாக விவரிக்கிறது. காலமும் களமும் மாறியிருப்பினும் மனோபாவங்களில் பெரும் மாறுதல் எதுவும் ஏற்பட்டுவிடவில்லை என்கிற வருத்துடனே ஆசிரியர் இந்நாவலை முன்வைக்கிறார். கலப்புமணம் புரிந்த குற்றத்துக்காய் மரணித்த தருமபுரி இளவராசனுக்கு இந்நாவலை சமர்ப்பித்திருக்கிறார். இரு வேறு சாதிகளைச் சேர்ந்த குமரேசனும் சரோஜாவும் மணம் முடித்து, குமரேசனின் ஊருக்கு தம்பதியாய...
அஜித் சார்ன்னா பாசிடிவ்

அஜித் சார்ன்னா பாசிடிவ்

சினிமா, திரைத் துளி
எதிர்பாராத விதமாக அஜித் படத்தில் பாடல் எழுதக் கிடைத்த வாய்ப்பை எண்ணி ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் உள்ளார் விக்னேஷ் சிவன். “நான் பாடல் ஆசிரியர் எல்லாம் கிடையாது. சில நேரம் சில விஷயங்கள் நமக்கே தெரியாமல் நடந்து விடும். இப்பவும் எனக்கு இந்த வாய்ப்பு எப்படி வந்தது என்று புரியவில்லை எல்லாம் கடவுளின் செயல். கௌதம் சார் பாட்டு எழுதச் சொன்னவுடன் தலை, கால் புரியவில்லை. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று அவுட்-லைன் எழுதிக் கொடுத்தேன். பின்னர், ஹாரிஸ் சார் மெட்டுக்கு ஏற்றார்போல் சில வார்த்தைகளைச் சேர்த்து மாற்றியதும் பாடல் பதிவு செய்யப்பட்டது.” கௌதம் சாரின் படத்தில் பாட்டு கதையை நகர்த்திச் செல்லும். இப்பாட்டு ஒரு குத்துப் பாடல் மட்டும் கிடையாது. கதையின் முக்கியமான கதாபாத்திரங்களைப் பற்றி எடுத்துரைக்கும் வகையில் அமைந்திருக்கும். பாட்டு எழுதப்படுவது ‘தல’ அஜித் சாருக்கு என்பதாலோ என்னவோ எனக்கு பாட்டு 'Po...
தொடங்கியது டார்லிங் இன்னிங்ஸ்

தொடங்கியது டார்லிங் இன்னிங்ஸ்

சினிமா, திரைத் துளி
இந்த மாதம் 22 ஆம் தேதி துவங்க உள்ள த்ரிஷா இல்லன்னா நயன்தாரா எனும் படத்தில் ஜி.வி.பிரகாஷ் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக கயல் படத்தின் ஆனந்தியும் நடிக்கவுள்ளனர். டமால் டுமீல் படத்தைத் தயாரித்த கேமியோ ஃபிலிம்ஸ் (Cameo Films) நிறுவனம் சார்பில் சி.ஜே.ஜெயக்குமார், தங்களது நிறுவனத்தின் இரண்டாவது படமான 'த்ரிஷா இல்லன்னா நயன்தாரா' படத்தை எளிமையான பூஜையுடன் துவக்கினர். பல்வேறு இயக்குநர்களிடம் இணை இயக்குநராகப் பணி புரிந்த ஆதிக் ரவிsசந்திரன் இந்தப் படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார். பல்வேறு விளம்பரப் படங்களைத் தயாரித்த 'த்ரிஷா இல்லன்னா நயன்தாரா' படத்தின் தயாரிப்பாளர் ஜெயக்குமார் கூறும்போது, “இந்தக் கதையை நான் கேட்கும் போதே இந்தப் படம் ரசிகர்கள் இடையே எவ்வளவு வரவேற்பு பெறும் என்பதை நிர்மாணித்துக் கொண்டேன். இப்போதைய தமிழ் சினிமாவில் ஜி.வி. பிரகாஷ் குமார் அளவுக்கு இந்தப் பாத்திரத்துக்கு வேறு யாரும் பொர...
வானவில் வாழ்க்கை ஜனனி

வானவில் வாழ்க்கை ஜனனி

சினிமா, திரைத் துளி
“எனது சிறு வயது முதலே இசை மீது எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. 13 வருடமாக கர்நாடக இசை கற்று வருகிறேன். பள்ளி, கல்லூரி காலங்களிலிருந்தே பல இசை நிகழ்ச்சிகள் பாடியுள்ளேன். இந்தப் படத்தில் வாய்ப்பு கிடைத்ததும் இசையால்தான். இங்குப் பாடவும் நடிக்கவும் தெரிந்தவர்களே மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று ஜேம்ஸ் சார் ஆரம்பத்திலயே கூறிவிட்டார். பாட மட்டும் அனுமதி கொடுத்த பெற்றோர் முதலில் நடிக்க அனுமதிக்கவே இல்லை. நிறைய பாட்டு வாங்கி நிறைய ஆட்டம் ஆடி வாங்கிய அனுமதி இது. நிச்சயம் நல்ல பெயர் வாங்காமல் விட மாட்டேன்” என்று ராகத்தோடு கூறினார் ஜனனி....
அஜித் படத்தில் கின்னஸ் சாதனையாளர்

அஜித் படத்தில் கின்னஸ் சாதனையாளர்

சினிமா, திரைத் துளி
பார்வதி நாயர். அபுதாபியில் மலையாளக் குடும்பத்தில் பிறந்தகர். இவரது தந்தை பொறியாளர், தாய் கல்லூரி ஆசிரியர் ஆவர். படிப்பில் இருந்த ஆர்வத்தினால் எஞ்ஜினீயரிங் பயின்றார். ஒரு மாடலுக்கான அனைத்து அம்சங்களையும் பெற்றிருந்த பார்வதி பல விளம்பரப் படங்களில் நடித்து வந்தார். பின்னர் கன்னட, மலையாளப் படங்களில் நடித்தார். பல படங்களில் நடித்து வந்தாலும் ஓவியம் தீட்டுவதைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். பள்ளிப்பருவத்தில் உலகின் மிக நீளமான ஓவியம் தீட்டும் குழுவில் இடம் பெற்று கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் பெற்றுள்ளார். “காலம் என்னைக் கனிவாய் வழி நடத்தி வந்துள்ளது. எனது முதல் தமிழ்ப்படமே அஜித் சார் மற்றும் கௌதம் சார் உடன் அமைத்திருக்கிறது. எனக்கு தமிழ்ப் படங்களில் நடிக்கவேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாகவே இருந்து வந்தது.” அஜித் சார் அனைவரிடமும் மிக அன்பாக நடந்து கொள்வார். அஜித் சார் நகைச்சுவை உணர்வு கொண்ட...
இயக்குநர் ராதா மோகனின் லட்சியப் பயணம்

இயக்குநர் ராதா மோகனின் லட்சியப் பயணம்

சினிமா, திரைத் துளி
மனதின் மென்னுணர்வுகளை வருடிவிட்ட படங்களான அழகிய தீயே, மொழி, அபியும் நானும் போன்ற படங்களை மறக்க இயலுமா? அதனாலேயே தமிழ்த் திரைப்பட இயக்குநர்களில் ராதா மோகன் தனக்கென ஒரு தனி இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். அவருடைய அடுத்த படம் உப்பு கருவாடு. ராம்ஜி நரசிம்மனின் First copy pictures மற்றும் ராதா மோகனின் Night show pictures ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து தயாரிக்கும் 'உப்பு கருவாடு' ரசிகர்களைக் கவரும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படமாகும். இந்தப் படத்தின் கதை ஒருவருடைய லட்சியத்துக்கும், அந்த லட்சியப் பயணத்தைத் தொடர விடாமல் சிறு பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போது நமக்குள் நாமே மேற்கொள்ளும் சமரசத்துக்கும் இடையே நடக்கும் போராட்டத்தைப் பற்றிய கதை ஆகும்.“லட்சியம் உள்ளவர்கள் அதில் சமரசம் ஆகி விடக் கூடாது. இந்த சமரசமே நம்மை லட்சியப் பயணம் மேற்கொள்ள விடாமல் தடுக்கும்.இந்தக் கதையை நகைச்சுவை கலந்து வழ...
தி தியரி ஆஃப் எவரிதிங்

தி தியரி ஆஃப் எவரிதிங்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
The THEORY of EVERYTHING ஸ்டீஃபன் ஹாக்கிங் – நம் காலத்தின் மாபெரும் விஞ்ஞானி (கோட்பாட்டு இயற்பியலாளர்). அவரது மனைவி ஜேன் ஹாக்கிங்ஸ், ஸ்டீஃபன் ஹாக்கிங்குடன் வாழ்ந்த வாழ்க்கையை நினைவுகூரும் விதமாக எழுதிய Travelling to Infinity: My Life with Stephen என்ற நூலினை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை எடுத்துள்ளனர். பத்தொன்பது வயது கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவரான ஸ்டீஃபனுக்கு சக மாணவியான ஜேன் மீது காதல் வருகிறது. இருபத்தியொரு வயதில் ஸ்டீஃபன் ஹாக்கிங், நரம்பியல் இயக்க நோயால் (Motor neuron disease) பாதிக்கப்படுகிறார். அவர் அதிகபட்சம் இரண்டு வருடம்தான் வாழ்வாரென மருத்துவர் கெடு விதிக்கிறார். அச்சூழ்நிலையில் ஜேன், ஹாக்கிங்கின் பெற்றோர்களைச் சந்தித்து ஹாக்கிங்கை திருமணம் செய்து கொள்ள அனுமதி பெறுகிறார். இருவருக்கும் திருமணம் நடக்கிறது. பின்னர்தான் படத்தின் உண்மையான கதை தொடங்குகிறது. அத்தம்பதிக்குள் நிலவும...
உழுத வயலின் சேறு வாசனை

உழுத வயலின் சேறு வாசனை

சினிமா, திரைத் துளி
தமிழர் திருநாளாம் பொங்கல் அன்று நம் நாசியைத் துளைத்திடும் வாசனைகள் பல உண்டு. மண்பானை வாசனை, பொங்கல் வாசனை, கரும்பு வாசனை, மஞ்சள் கிழங்கு வாசனை, ஜல்லிக்கட்டு வாசனை என சொல்லிக் கொண்டே போகலாம். ஜேம்ஸ் வசந்தன் இயக்கி இசையமைத்துள்ள வானவில் வாழ்க்கை திரைப்படத்தில் கவிஞர் யுகபாரதி எழுதியுள்ள வாசனை என்னும் பாடல் தமிழர் மரபின், மண்ணின் வாசனைகளை எடுத்துக் கூறும் வரிகளைக் கொண்டுள்ளது. "அறுவடை திருநாளாம் பொங்கல் அன்று கிராமங்களில் வைக்கோல் வாசனை, வெல்லம் வாசனை, காளைமாட்டு கொம்பு வாசனை என தொன்மையான பல வாசனைகள் வீசக்கூடும். அதை மையமாகக் கொண்டு தினசரி வாழ்வில் நாம் நுகரும் பல வாசனைகளைப் பட்டியலிட்டிருக்கிறோம் இப்பாடலில் " என்கிறார் கவிஞர் யுகபாரதி. வாசனை ஈச்சம்பழத்து ஈர வாசனை இஞ்சி முரபா கார வாசனை எலந்தபழத்து புளிப்பு வாசனை பலா இனிப்பு வாசனை கரிச காட்டு மண்ணு வாசனை காத்திரு அடிச்ச நெல்லு வாச...
ஐ விமர்சனம்

ஐ விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இயக்குநர் ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம் என்றாகிவிட்டது. அதை ஐ படத்தில் மீண்டும் நிரூபித்துள்ளார். தியாவுக்கும் லிங்கேசனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டதும், லிங்கேசனின் அழகையும் உடற்கட்டையும் ஐவர் கூட்டணி இணைந்து உருக்கலைக்கின்றனர். பின் என்னாகிறது என்பதுதான் கதை. அந்நியன் அம்பி கூவக்கரையில் பிறந்தால் எப்படியிருக்கும்? அதுதான் லீ எனும் லிங்கேசன். ஆனால் விக்ரமுக்கு சென்னைத் தமிழ்தான் கொஞ்சம் ஒட்டவில்லை. கட்டுடல், மெல்லுடல், கோர முகமென விக்ரம் அபிரிதமான உழைப்பைக் கொட்டியுள்ளார். சுமார் இரண்டே முக்கால் வருட தவம் இவருக்கு! எல்லாத் தவத்திற்கும் வரம் கிடைத்துவிடுவதில்லை என்பதுதான் துரதிர்ஷ்டமான விஷயம். அந்நியனில், மல்டிபிள் பெர்ஸனாலிட்டி செய்த வேலையை இப்படத்தில் நாயகியும் வில்லன்களும் செய்கின்றனர். அம்பியை நாயகியே ரெமோவாக்குகிறாள்; வில்லன்கள் அந்நியன் ஆக்குகின்றனர். தியாவாக எமி ஜாக்சன். ஷங்கர்...
பிசிராந்தையாரும் கூஜா விஸ்கியும்

பிசிராந்தையாரும் கூஜா விஸ்கியும்

கட்டுரை
யாரும் எதிர்பாராத சமயத்தில், திடீரென குழந்தை ‘தாத்தா’ என மழலையில் அழைத்து அவரைப் பரவசத்தில் ஆழ்த்தும். “இன்னொரு முறை அப்படிக் கூப்பிடுடா கொழந்த?” என தாத்தா ஆசையாகக் கேட்டால், அவரைக் கண்டுக்காமல் தன் வேலையைப் பார்க்கத் தொடங்கிவிடும் குழந்தை. அது குழந்தையின் வெட்கமா அல்லது போதுமென்ற குழந்தையின் ஞானமா என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம். அக்குழந்தையைப் போல்தான், எவரும் எதிர்பார்க்காத சமயத்தில் அனைவரையும் ‘பல நேரங்களில் பல மனிதர்கள்’ எனும் தன் புத்தகத்தால் பரவசத்துக்கு உள்ளாக்கினார் பாட்டையா. அவருக்கு ஏற்பட்ட இன்ஃபைனட் அனுபவங்களின் ஒரு சிறு துளிதான் அப்புத்தகம். ‘ஒரு துளி போதுமா பாட்டையா? கத்துக்கிட்ட மொத்த வித்தையும் இறக்கிற இந்தக் காலத்தில் ஏன் இந்தக் கஞ்சத்தனம்? தளும்பும் நினைவுக் கடலில் இருந்து ஒரு டம்ளராவது இறக்கிட வேணாமா?’ என பலர் கேட்டுப் பார்த்தனர். ஆனால் பாரதி மணியோ, “I am one book wond...
வளரும் கலைஞர்கள்…

வளரும் கலைஞர்கள்…

சினிமா
கடந்த 2014 ஆம் ஆண்டில் தமிழில் சுமார் 200 திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றது. இவற்றில் பெண் இயக்குநர்கள் இயக்கிய படங்களின் எண்ணிக்கை நான்குதான். துணை இயக்குநர்கள், இணை இயக்குனர்கள் மட்டத்தில் பெண்களின் பங்களிப்பு இருந்தாலும் கூட, ஏனோ இயக்குநர்களாக பெரிய அளவில் பெண்கள் வரவில்லை என்பது ஏமாற்றம்தான். முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் கடந்த ஆண்டில் தமிழ்த் திரையுலகில் பெண் இயக்குநர்களின் பங்களிப்பு கவனிக்கத்தக்க வகையில் இருந்தது என்பது கொஞ்சம் ஆறுதலான செய்தி. கோச்சடையான் - நூற்றாண்டைக் கொண்டாடும் இந்திய சினிமாவின் முதல் ‘மோஷன் கேப்சர்’ படம் ஒரு தமிழ்படம், அதிலும் ஒரு பெண் இயக்குனர் இயக்கிய படம் என்கிற வகையில் கோச்சடையான் இந்திய சினிமா வரலாற்றின் முக்கியமான மைல்கல். இந்தப் படத்தை இயக்கியதன் மூலம் இந்திய சினிமா வரலாற்றின் முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறார் செளந்தர்யா அஸ்வின். இனி இந்திய சின...