Shadow

சினிமா

பொன்னர் சங்கர் விமர்சனம்

பொன்னர் சங்கர் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பொன்னர் சங்கர் - கலைஞரின் கைவண்ணத்தில் அண்ணன்மார் கதை.கொங்கு நாட்டின் செவி வழி கதைகளால் உந்தப்பட்டு, அதைப் பற்றி மேலும் தேடிப் பிடித்துப் படித்து கலைஞர் அவர்களால் எழுதப்பட்ட பொன்னர் சங்கர் என்னும் வரலாற்று காவியம் இயக்குநர் தியாகராஜனால் திரைப்படமாக்கப்பட்டுள்ளது.நிச்சயிக்கப்பட்ட மாந்தியப்பன் என்பவரை மறுத்து தன் மனதிற்கு உகந்த மணாளான அப்பாவி நெல்லியன் கோடனை மணக்கிறார் தாமரை நாச்சியார். அதனால் சினமுறும் தாமரையின் மூத்த சகோதரனான சின்னமலை கொழுந்து, தங்கையை வீட்டை விட்டு வெளியேற்றுகிறான். பொன்னி வளநாட்டை ஆளும் தாளையார் காளி மன்னன், தாமரையின் மைந்தர்களால் மரணம் ஏற்படும் என்ற ஆருடத்தை நம்பி பிறந்தவுடன் அக்குழந்தைகளை அழிக்க சதி திட்டமிடுகிறார். அச்சதித் திட்டத்தில் இருந்து இரட்டையர்களான அக்குழந்தைகள் எப்படி எவரால் தப்பித்து, வளர்ந்து தாளையார் காளியுடன் போரிட்டு வெல்கிறார்களா என்ற கேள்விக்க...
ஆடுகளம் விமர்சனம்

ஆடுகளம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஆடுகளம் - விளையாடுபவர்கள், பயிற்சியாளர்கள், ஆதரவாளர்கள், நடுவர்கள், ரசிகர்கள், ஆடுகளத்தினைப் பராமரிப்பவர்கள் என ஆடுகளம் வகை வகையான மனிதர்களை எப்பொழுதுமே  தன்னுடன் வைத்திருக்கும். அதனாலேயே ஆடுகளத்தின் ஆரவாரத்தினை, ஆளரவமற்ற இரவிலும் உணர முடியும். காரணம் மனிதர்கள் அனைவரும் சதா விளையாடிக் கொண்டே தான் இருக்கிறார்கள். ஆடுகளங்கள் தான் ஒருவரிலிருந்து மற்றவருக்கு மாறுபடுகிறது. வெற்றிமாறன் சேவல் சண்டை நடக்கும் திடல், அத்திடலில் உள்ள மனிதர்களின் மனம் என இரண்டு ஆடுகளத்தினைத் தனது படத்தில் காட்டியுள்ளார்.பேட்டைக்காரர் தயார்ப்படுத்தும் சேவல்களும், அவைப் பெறும் வெற்றிகளும் அப்பிராந்தியத்தில் அவருக்கென ஒரு தனி செல்வாக்கை ஏற்படுத்துகின்றன. காவல்த் துறை அதிகாரியான ரத்தினசாமி தனது தாயாரின் பழம்பெருமை புலம்பல்களைப் பொறுக்க முடியாமல், தாயாரின் கடைசி ஆசையாக எண்ணி பேட்டைக்காரருடன் சேவல் சண்டைக்கு ஒரு யு...
மன்மதன் அம்பு விமர்சனம்

மன்மதன் அம்பு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மன்மதன் அம்பு - தசாவதாரத்தினைத் தொடர்ந்து இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் மற்றும் உலக நாயகன் கூட்டணியில் வெளிவரும் படம். யாவரும் கேளிர், காருண்யம் என தொடங்கி, படத்தின் பிரதான பாத்திரங்களான மூவரின் பெயர்களில் இருந்து மன், மதன், அம்பு என்பதை எடுத்துக் கோர்த்து தலைப்பாக்கி உள்ளனர்.கோடீஸ்வரரான மதனகோபால் விடுமுறைக்கு செல்லும் தனது காதலியான அம்புஜாக்ஷியைக் கண்காணிக்க மேஜர் இராஜ மன்னாரை நியமிக்கிறார். சந்தேகிக்கும் மதனகோபாலுடனான காதலை அம்புஜாக்ஷி ஏற்கிறாரா, இல்லையா என்ற கேள்விக்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது.மேஜர் ஆர்.மன்னார் ஆக கமல் ஹாசன். ஆர்ப்பாட்டம் இல்லாத அறிமுகத்தில் அசத்தலாக திரையில் தோன்றுகிறார். அவருக்கு மிகவும் பழக்கப்பட்ட அல்வா சாப்பிடுவது போன்றதொரு பாத்திரம். அனுபவம் காரணமாக நடிக்க அதிகம் சிரமப்படாமல் படு இயல்பாய் திரையில் வலம் வருகிறார். 'தகுடு தத்தம்..' என்ற பாடலை எழுதி பாடிய கமல...
ப்ரெடேட்டர்ஸ்

ப்ரெடேட்டர்ஸ்

அயல் சினிமா, சினிமா
திடீரென வானத்தில் இருந்து மயக்கமுற்ற மனிதர்கள் தரை நோக்கி வீசப்படுகின்றனர். தரை தட்டும் முன் விழிப்படைவர்கள் அவசர அவசரமாக 'பாராச்சூட்'டினை இயக்கி காட்டினுள் இறங்குகின்றனர். அவர்கள் மொத்தம் 8 பேர். அந்த காட்டில் இருந்து வெளியேற ஏதேனும் வழி உள்ளதா என தேடி மலை உச்சியினை அடைகின்றனர். அங்கு அவர்கள் காணும் காட்சி அவர்களை உறைய வைக்கிறது.அவர்கள் வெறொரு கிரகத்தில் உள்ளனர். விசித்திர மிருகக் கூட்டம் ஒன்றால் தாக்கப்படுகின்றனர். அந்த கிரகத்தில் வேட்டையாடப் படுவதற்காக வரவழைக்கப் பட்டிருப்பதை உணர்கின்றனர். ஒருவர் பின் ஒருவராக இறக்க நாயகன் நாயகி மட்டும் உயிருடன் மிஞ்சும் பாரம்பரிய 'ஹாலிவுட் படம். வேற்று கிரகம், ப்ரெடேட்டர்ஸ், ஸ்பேஸ் ஷிப் என்ற வார்த்தைகள் எல்லாம் வருவதால் 'சையின்ஸ்- ஃபிக்ஷன் பிரிவில் இப்படம் அடக்கும்.ப்ரெடேட்டர்ஸ் முற்றும்.நாயகன், நாயகியை தவிர்த்து மீதமுள்ள ஆறு பேர் யார் என்ற...
எந்திரன் விமர்சனம்

எந்திரன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், ஏ.ஆர்.ரஹ்மான், இயக்குநர் ஷங்கர் என கடந்த இரண்டு வருடமாக எதிர்பார்ப்பை எகிற வைத்த படம். வசீகரன் என்னும் விஞ்ஞானி பத்து வருடம் முயன்று 'சிட்டி' என்னும் அன்ட்ரோ- ஹியூமனாய்ட் வகை ரோபோவை இந்திய இராணுவத்திற்கு சேவை செய்ய வைக்கும் நோக்கில் தயாரிக்கிறார். பார்ப்பதற்கு மனிதனை போலவே இருக்கும் அந்த வகை ரோபோக்கள் அதற்கு கொடுக்கும் கட்டளைகள் சிரமேற் கொண்டு, அப்படியே செய்யும் அடிமைகள் போன்றன. மனித உணர்ச்சிகள் பற்றிய பிரக்ஞை இல்லாத ஓர் இயந்திரத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என ஆய்வாளர்கள் குழு மறுக்கிறது. வசீகரன் மீண்டும் 'சிட்டி' மனித உணர்ச்சிகளை புரிந்துக் கொள்ளும் படி பயிற்சியளிக்கிறார். உணர்ச்சி வந்ததும் வசீகரனின் காதலியான் சனா மேல் 'சிட்டி' ரோபோவுக்கு காதல் வருகிறது. காதல் வந்து எடக்கு செய்யும் 'சிட்டி' ரோபோவை கடுப்பாகி, வெறுப்பாகி அழித்து விடுகிறார் வசீகரன்....
ரத்த சரித்திரம் விமர்சனம்

ரத்த சரித்திரம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மண்ணில் குருதி படாமல் எந்த சரித்திரமும் முழுமை அடைவதில்லை. எல்லைகளை விரிவுபடுத்துதல், இளைத்தவர்களை ஏய்த்தல், தலைமைப் பதவிக்கு விழைதல், ஆளைத் திணறடிக்கும் அழகியப் பெண்களிடம் மயங்குதல் என ஒவ்வொரு சரித்திரத்திற்குப் பின்னும், தனி மனிதன் ஒருவனின் ஆழ்ந்த அக வேட்கையே அடிநாதமாக இருக்கும். நட்பு, துரோகம், காதல், சூழ்ச்சி போன்ற சகல தந்திரங்களையும் கையாண்டு அவ்வேட்கையை தணித்துக் கொள்ள முயலும் பொழுது அடுத்த தலைமுறையினர்களுக்கு ஒரு படிப்பினையாக சரித்திரம் அங்கே உருவாகிறது. அப்படி ஐந்தாண்டுகளுக்கு (2005) முன் ஆந்திர மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய ஓர் உண்மைச் சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு 'ரத்த சரித்திரம்' என்னும் படத்தினை இயக்கியுள்ளார் ராம் கோபால் வர்மா. ஏழைப் பங்காளனான வீரபத்ராவும், அவரது மூத்த மகனும், ஆனந்தபுர மாநில அரசியல் பிரமுகர்களான நாகமணி மற்றும் நரசிம்ம தேவன் ஆகியோரால் கொல்லப்படுகின்றனர்...
இரத்த வைரம்

இரத்த வைரம்

அயல் சினிமா, சினிமா
ப்ளட் டைமன்ட் - சியாரா லியோன் என்னும் கடலோர ஆஃப்ரிக்கா நாட்டில் நடந்த 11 வருட உள்நாட்டுப் போரை (1991- 2002) அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம். போரினால் ஏற்படக்கூடிய அனைத்து வித அக்கிரமங்களையும் தன் சமீபத்திய வரலாற்றில் பதிந்துள்ளது சியாரா லியோன். மேலோட்டமாக பார்த்தால் புரட்சிக்காரர்களுக்கும் அந்நாட்டு அரசிற்கும் நடக்கும் உள்நாட்டுப் போராக தெரிந்தாலும், அதன் பின்னால் உள்ள பலமான அரசியலில் அந்நாட்டில் கிடைக்கக் கூடிய வளமான கனிம வளங்களே அனைத்திற்கும் காரணமாய் உள்ளது. அதில் முக்கியமாக வைரம், தங்கம், டைட்டானியம், பாக்ஸைட் (bauxite), ருட்டைல் (rutile) போன்ற பொருட்கள் அடங்கும். ஆனால் உள்நாட்டுப் போரை தீர்மானித்தப் பொருள் அங்கு கிடைத்த வைரங்களே. ஒரு நாட்டின் வளமே அந்நாட்டிற்கு சாபமாய் மாறும் கொடுமை, கொழுத்த வல்லரசுகளின் பார்வையில் அவை விழும் பொழுதே!!உலகின் மூன்றாவது மிக நீளமான இயற்கை துறைமுக...
சுறா கண்டேன் – மு.க

சுறா கண்டேன் – மு.க

சினிமா, மற்றவை
உடன்பிறப்பே,நான் முன்பு போல அவ்வளவாக திரைப்படங்களைப் பார்க்க என்னுடைய நேரங்களை செலவிடுவதில்லை. தொடர்ந்து இடையறாத அலுவல் பணி இருந்து வருவதனால் அவைகளுக்காக நான் தனியாக நேரத்தை ஒதுக்குவதில்லை. ஏன் என் எழுத்தில் உருவான படங்களைக் கூட சிறப்புக் காட்சியின்பொழுது திரை நட்ச்சத்திரங்களை வரவைத்து என்னுடன் சேர்த்து அவர்களையும் பார்க்க வைத்து நான் எவ்வளவு உறுதி படைத்த கல்நெஞ்சம் கண்டவன் என நிரூபிப்பதோடு சரி. ஆனால் தம்பி விஜயின் ஐம்பதாவது படமான சுறாவை நேற்று அண்ணா அறிவாலயத்தில் குறுந்தகடு மூலம் பார்த்து ரசித்தேன்.இது ஒன்று போதும் நான் தமிழ் மக்களின் மீது வைத்துள்ள பற்றை அவதூறு பேசிவரும் எதிர்க் கட்சிகள் புரிந்துகொள்ள. முதலில் இது போன்றதொரு படத்தை தாயாரிக்க ஒப்புக்கொண்ட தம்பி சங்கிலி முருகனுக்கு என்னுடைய பாராட்டை நான் தெரிவித்துக் கொள்கிறேன். எஸ்.எ.சந்திரசேகர் என அழைக்கப்படுகிற திரைப்பட இயக்குனரும்,...
தி ஹர்ட் லாக்கர்

தி ஹர்ட் லாக்கர்

அயல் சினிமா, சினிமா
  ஒவ்வொரு வேலை உணவிற்கும் போராடியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஆதி மனிதனிடம் போர்க் குணங்கள் நிரம்பி இருந்தது. தற்காப்பிற்காகவோ, உணவிற்காகவோ வேட்டையாடி பழக்கப்பட்ட மனிதனிடம் நாகரீகம் என்ற பெயரில் சாத்வீக குணங்கள் கொஞ்சம் தோன்றினாலும் மிருக குணங்கள் முற்றிலும் விடைப் பெறவில்லை. உள்ளிருக்கும் மிருகம் அடிக்கடி தனது பலத்தை சோதித்து பார்த்துக் கொள்ள துடித்த வண்ணம் உள்ளன. அந்த துடிப்பு தரும் போதை காரணமாக இராணுவத்தில் சிலர் ஆர்வத்தோடு சேர்கிறார்கள். அப்படி வந்தவர்களையும்.. எங்கிருந்தோ தாக்கும் நவீன ஆயுதங்களின் முன் தன் முழு வீரத்தையும் வெளிப்படுத்த முடியாத சோர்வும், மறைந்திருந்து தாக்குபவர்களால் ஏற்படும் எரிச்சலும், கண் முன் சக மனிதர்கள் சிதறும் கோரமும் தளர்வுற செய்யும். ஒரு வெடிகுண்டு அகற்றும் குழுவில் ஏற்படும் இத்தகைய தளர்வுறல்களை அழகாக சொல்லியிருக்கும் படம்'. வியட்னாம் போரில் வெடிகுண்...
சினிமா, மற்றவை
இது நான் எழுதும் விமர்சனமல்ல ஒரு ரசிகனாக நான் உணர்ந்ததை உங்களிடம் சொல்கிறேன் அவ்வளவுதான்.திரைக்கதை எழுதுவது எப்படி என்ற புத்தகத்தில் திரு.சுஜாதா அவர்கள் இப்படி சொல்லியிருப்பார்  எல்லோரிடமும் ஒரு நல்ல கதை இருக்கும் அதை எப்படி சொல்கிறோம் என்பதில்தான் பிரச்சினையே, அதாவது வெற்றியா தோல்வியா என்று. அந்த வகையில் பார்த்தால் இந்த படம் பல நல்ல கதைகளை கொண்டுள்ளது நல்லவிதமாகவும் சொல்லியுள்ளது.ஒரு சிறந்த படம் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு  உண்டான எல்லா தகுதி தராதரங்களுடன் வெளிவந்து வெற்றிப்  பெற்றுள்ள படம் அங்காடித் தெரு. அதாவது  ஓர் ஓவியம் எப்படி தனக்குள் அனைத்தையும் வைத்துக்கொண்டு பார்க்கும் பலரின் மனதில்  பாதிப்புகளை ஏற்படுத்துகிறதோ, உணர்வுகளை சுண்டி எழுப்புகிறதோ அதேபோலான ஒரு படைப்புத்தான் அங்காடித் தெரு. பிரச்சாரமில்லாமல் பல உன்னத கருத்துக்களை மக்கள் மனதில் தூவுகின்றது. எந்த ஒரு சிறந...
முன்தினம் பார்த்தேனே விமர்சனம்

முன்தினம் பார்த்தேனே விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
முன்தினம் பார்த்தேனே - கெளதம் மேனன் ஏற்படுத்திய விண்ணைத் தாண்டும் ஞாலங்கள் அடங்கும் முன் அவரிடம் துணை இயக்குனராக இருந்த மகிழ் திருமேனி தனது பயணத்தை தொடங்கி விட்டார். சுவரொட்டிகளில் தெரியும் அழகும், தமணின் பாடல்களும் எதிர்பார்ப்பின் ஏனைய காரணிகள். சஞ்சய். ஐ.டி.யில் வேலை செய்யும் சாமான்யன்களில் ஒருவன். நண்பர்கள், வேலை, கிசுகிசு என செல்லும் வாழ்க்கையில் காதல் வராதா என ஏங்குபவன். நிச்சயமானவள் எனத் தெரியாமல் ஒரு பெண்ணிடம் பழகி அவள் விலக, பலரால் தூற்றப்படும் ஆர்த்தி எனும் பெண்ணின் மீது மீண்டும் மிக மெதுவாக காதல் மல்ர்கிறது. அவளது கடந்த காலம் சஞ்சயை சிறிது சலனப்படுத்தும் சமயத்தில் ஆர்த்தியின் மீதான பலரின் வதந்தி உண்மை என சஞ்சயிற்கு தெரிய வருகிறது. அந்த குழப்பத்திலேயே தன் மேல் ஈர்ப்புள்ள அனு எனும் உடன் பணி புரியும் பெண்ணிடம் அவசர அவசரமாக காதலை வெளிப்படுத்துகிறான். இதனிடையில் ஆர்த்தி நல்லவள் என தெ...
ஜவ்வுத்தாள் பை உலகம்

ஜவ்வுத்தாள் பை உலகம்

அயல் சினிமா, சினிமா
மாட மாளிகைகள் நேற்று. விண்ணை முட்டும் கட்டிடங்கள் இன்று. குப்பை கூல கோபுரங்கள் நாளை.குப்பைகளால் மனித இனம் சூழப்பட்டு மீள இயலாமல் ஸ்தம்பித்துப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை. மக்குவதற்கு முக்கி திணரும் மக்காத ஜவ்வுத்தாள் பைகள் நம்மை எங்கு சென்றாலும் துரத்துக்கின்றன. தொங்க விடப்பட்டிருக்கும் கயிறை ஒரு முனையில் பொசுக்கி சிகரெட் பிடிக்க உதவும் பெட்டிக் கடைகள் முதல் வக்கனையாய் மெருகேத்தப்பட்ட 'டிசைன் கவர்களுள் அடைப்பட்டிருக்கும் எண்ணற்ற பொருட்களை கண்காட்சியில் வைப்பது போல் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் குளிர் சாதன பல்பொருள் அங்காடி வரை ஜவ்வுத்தாள் பை நம் மீது செலுத்தும் அக்கிரமிப்பு உடம்பெங்கும் முளைக்கும் ரோமம் போல் கட்டுக்கடங்காமல் போய் விட்டது.  நாம் தூக்கிப் போடும் இந்த பைகள் காற்றில், பேருந்தில், தெருவோரங்களில், சீரனமாகாமல் மாட்டின் வயிற்றில், கோவில் குளங்களில், பசுமை படர்ந்தோங்...
என் பெயர் ஹான்

என் பெயர் ஹான்

அயல் சினிமா, சினிமா
"என் பெயர் ஹான். நான் பயங்கரவாதி இல்லை." இதை அமெரிக்க ஜனாதிபதியை சந்தித்து சொல்லத் துடிக்கும் 'ரிஸ்வாஸ் கான்' என்ற முஸ்லீம் இளைஞனை பற்றிய படம். யார் அவன்? ஏன் அப்படி சொல்ல நினைக்கிறான்? என்று கதை முன்னும் பின்னும் பயணிக்கிறது. 'அஸ்பெர்ஜர் சின்ட்ரோம்'. ரிஸ்வாஸ் ஹானுக்கு உள்ள குறை. இந்த குறை உள்ளவர்கள் மற்றவர்களின் முகத்தை பார்த்து பேச முடியாதவர்களாகவும், சமூகத்தில் சஜமாக பழக முடியாதவர்களாகவும் இருப்பர். ஆனால் மிகுந்த அறிவாளிகளாக இருப்பர். எனினும் தனக்கு மிகவும் பிடித்த விஷயத்தை மீண்டும் மீண்டும் மற்றவர்கள் கேட்க விழைகிறார்களா என்ற கவலையின்றி சொல்லிக் கொண்டே இருப்பார்கள். இத்தகைய குறை உள்ள ரிஸ்வாஸ் ஹான் என்னும் இளைஞனாக படத்தில் வலம் வருகிறார் ஷாருக். நடிப்பின் முதிர்ச்சி அநாசயமாய் வெளிப்படுகிறது. தாயின் இறப்பிற்கு பின் தம்பியிடம் அமெரிக்கா வரும் ஷாருக்கிற்கு, தம்பி மனைவி தான் ஆறுதல் அளிக்க...
தமிழ்படம் விமர்சனம்

தமிழ்படம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
"தமிழ்படம்" - பொதுப்பெயரையும், தனிப்பெயரையும் ஒருங்கே பெற்றுள்ள முழுநீள நகைச்சுவைப் படம். சினிமா பட்டி என்னும் ஊரில் ஆண் குழந்தைகளைக் கள்ளிப் பால் கொடுத்துக் கொல்கின்றனர். அங்கு ஓர் ஆண் குழந்தை, நாயகன் ஆகும் ஆசையோடு பிறந்து சென்னை வருகிறது. அந்தக் குழந்தை தனது லட்சியத்தில் வென்றதா என்பது தான் படத்தின் முடிவு. சிவா. சென்னை 600028 மற்றும் சரோஜாவைத் தொடர்ந்து நாயகனாக விஸ்வரூபம் எடுத்துள்ள படம். முந்தையப் படங்கள் போல் அல்லாமல் தனி நாயகனாக இப்படத்தில் கலக்கியுள்ளார். கேலி செய்த பின் பொதுவாக அனைவருக்கும் எழும் மென்னகையை எப்பொழுதும்  முகத்தில் அணிந்தவாறே படம் முழுவதும் வருகிறார். கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருந்தியதோடு மட்டுமல்லாமல் படத்தின் தன்மையை முழுவதுமாக உள்வாங்கி வெளிப்படுத்தியுள்ளார். திஷா பாண்டே அறிமுக கதாநாயகியாக. திரைக்கதையில் அடித்து வரப்படும் சிறு மீன். அவ்வளவே!! பரிச்சயமற்ற...
உன்னைப்போல் ஒருவன் விமர்சனம்

உன்னைப்போல் ஒருவன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
"உன்னைப்போல் ஒருவன்" என்பது உலக நாயகன் கமல் அவர்களின் படம் என்று நினைத்தால் அது பாதி தான் உண்மை. ஒரு நல்ல படத்தை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்த கமல் எடுத்த முயற்சி என்பது தான் மீதி பாதி உண்மை. இப்படத்தின் ஆதாரமான பாலிவுட்டின் "வெட்னஸ்டே" படத்தின் உரிமையை ராஜ்கமல் நிறுவனம் வாங்கித் தமிழுக்கு ஏற்றாற்போல் சின்னஞ்சிறு மாற்றம் செய்து வெளியிட்டுள்ளனர். கொடுக்கும் பணத்திற்கு நல்ல தக்காளியாக வாங்க வேண்டும் என்று கவலைப்படுபவன் சாதாரண மனிதன். எது நடந்தாலும் தனக்கேன் வம்பு என முகத்தைத் திருப்பிக் கொண்டு வேறு திசையில் செல்லும் அந்த சாமானிய மனிதன், சமூகத்தில் நடக்கும் அவலங்களைப் பார்த்து மனம் நொந்து, தன்னால் முடிந்த பதில் நடவடிக்கை எடுக்க தீவிரம் காண்பித்தால் என்னாகும் என்பது தான் இப்படத்தின் ஒரு வரிக் கதை. 'சி4' என அழைக்கப்படும் செக்கோஸ்லோவக்கியன் ப்ளாஸ்டிக் குண்டுகளை சென்னையில் ஆறு இடத்தில் வைக...