Shadow

திரை விமர்சனம்

Once More review | ஒன்ஸ் மோர் விமர்சனம்

Once More review | ஒன்ஸ் மோர் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
முதல் காதல் கைக்கூடாத விரக்தியிலும் கோபத்திலும் உள்ள ஒருவனது வாழ்க்கையில் ஒரு பெண் நுழைகிறாள். அவனுக்கு இரண்டாவது காதல் மலரும்போது, முதல் காதல், 'மீண்டும் ஒரு வாய்ப்பு வேண்டும்' எனக் கோரி நிற்பதுதான் படத்தின் ஒருவரிக்கதை. மிகவும் இறுக்கமாகவும், பிரபஞ்சத்தின் மீது கடுங்கோபத்துடனும் இருக்கும் ரகுவரனை, மிக அதிகமாகக் காதலிக்கிறார் அவரது கல்லூரி ஜூனியரான அஞ்சலி. கல்யாணமே வேண்டாம் என்றிருக்கும் ரகுவரன், அஞ்சலியை ஏற்றுக் கொள்வதில் மிகுந்த மனத்தடையுடன் தவிக்கிறார். ஆனால் அஞ்சலியின் உறுதி ரகுவரனின் இறுக்கத்தைத் தளர்த்தி விடுகிறது. ரகுவரனுக்கும் அஞ்சலிக்கும் நிச்சயம் ஆனதும், ரகுவரனை இறுக்கமாக்கிய இந்திரா எனும் அவனது கடவுளிண்ட தேசத்துக் கடந்தகாலம் மீண்டும் கரை தட்டுகிறது. இசையும் நடனமும் கனவுகளும் இளமையாயும் வேகமாக வளர்ந்த அந்த இந்திரக் காதல், அப்போது ஏனென்ற காரணமே தெரியாமல் ரகுவரனுக்கு இல்லாமல் போக...
Hi விமர்சனம்

Hi விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு, 'யாரடி நீ மோகினி' படப்பாணியில் ஒரு படம் தர முயற்சி செய்துள்ளது தயாரிப்பாளர் மற்றும் நடிகை நயன்தாராவின் குழு. ரஜினி ரசிகனாகவும், கமல் ரசிகையாகவும் நிறைய முரண்களோடு இருக்கும் கவினும் நயன்தாராவும் ஒன்று சேர்வது தான் கதையின் ஒருவரிக்கதை. காதல் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பதை வாழ்வின் லட்சியமாகக் கொண்டுள்ள கவின் ஊரைவிட்டு ஓடி வந்துவிடுகிறார். இன்னொரு புறம் தன் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் பிடிக்காமல் வீட்டை விட்டு ஓடிவருகிறார் நயன். இருவரும் சென்னையில் சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பைக் காலம் அல்ல, பழைய ஃபார்மட்டிலான திரைக்கதை வழங்குகிறது. அதன்பின் இந்த ஜோடி எப்படி ஒன்று சேர்ந்தார்கள் என்பது படத்தின் மீதிக்கதை. கதையின் நாயகியாக நயன்தாரா, பார்வையாளர்களுக்கு மிகவும் பரீச்சயமான அவரது வழக்கமான நடிப்பையே மீண்டும் அள்ளித் தெளித்துள்ளார். ஒருசில எமோஷ்னல் ஏரியாக்...
டாக்ஸிக் விமர்சனம் | Toxic review

டாக்ஸிக் விமர்சனம் | Toxic review

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கிட்டத்தட்ட 400 கோடிக்கும் மேல் செலவு செய்து எடுக்கப்பட்ட படம். இந்தியாவே எதிர்பார்ப்போடு இருந்த ஒரு படம். இது, பான்-இந்தியப் படம் இல்லை; பான்-உலகப்படம் என்றளவுக்கு எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் எகிறியிருந்தது. இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்தும், கோவா அந்த சுதந்திர எல்லைக்குள் 1947 ஆம் ஆண்டு வரவில்லை. அங்கு வெளிநாட்டவர் கோலோச்சுகிறார்கள். கடத்தல் தொழில் கொடிகட்டிப்பறக்கிறது. கோவாவைக் கட்டியாளும் ஒரு பெரிய டான் சால்வடாரின் அடியாட்கள் போல் வலம் வருகிறார்கள் ராயாவும், அவரின் அக்கா கங்காவும்! ராயாவிற்கும், டானின் மகள் ரெபேக்காவிற்கும் இடையில் நெருக்கம் ஏற்படுகிறது. ஆனால் ராயாவை வெறுக்கிறார் ரெபேக்காவின் தாய் எலிஸபெத். எலிஸபெத்தின் தம்பியான டோனி ராயாவைக் கொல்ல முயல, டோனியைக் காப்பாற்ற முடியாமல் தனது கைகளாலேயே கொல்கிறார் அவரது சகோதரி எலிஸபெத். சர்க்கஸில் சந்திக்கும் நாடியா மீது காதல் கொள்கிறார் ர...
Insidious: Out of the Further விமர்சனம்

Insidious: Out of the Further விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
இன்சிடியஸ் என்றால் கண்ணுக்குப் புலப்படாமல் பரவித் தீங்கு விளைவிக்கும் எனப் பொருள் கொள்ளலாம். இன்சிடியஸ் படத்தொடரில் மொத்தம் ஐந்து பாகங்கள் வெளியாகியுள்ளன. ஆறாவது பாகமான இப்படம், 2023 இல் வெளிவந்த தி ரெட் டோர் படத்தின் தொடர்ச்சி என்றாலும், தனிப்படமாகப் பாவிக்கும்படியே கதை அமைக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களின் ஆவி வாழும் இடத்திற்கு ‘தி ஃபர்தர்’ எனப் பெயர். அமானுஷ்யமான ஒரு சிவப்புக் கதவினைத் திறந்தால், பூமியில் இருந்து ‘தி ஃபர்தர்’க்குச் சென்றுவிட முடியும். முந்தைய பாகத்து நாயகனுக்கு அத்தகைய சிவப்புக் கதவினாலே பிரச்சனைகள் எழும். ஃபர்தரில் சிக்கிக் கொள்ளும் தனது மகனைக் காப்பாற்றுவதற்காக நாயகன் பேட்ரிக் வில்ஸன் அரும்பாடுபடுவார். காப்பாற்றியதும் அந்தக் கதவை நிரந்திரமாக அடைப்பார்கள். ஒரு கதவு மூடினால் இன்னொரு சிவப்புக் கதவு திறக்கும் என்பதுதான் இந்தப் படத்தின் தொடக்கம். பல் மருத்துவரான கெம்மா ஹாலிற...
ONE MAN விமர்சனம்

ONE MAN விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
சினிமா மீது ஒப்பற்ற காதலும், தன் மீது அசாத்திய நம்பிக்கையும் இருந்தால் மட்டுமே சாத்தியமாகக் கூடிய மகத்தானதொரு முயற்சியை மேற்கொண்டு சாதித்துள்ளார் இயக்குநர் ராச்குமார். சினிமா என்பது பலரின் கூட்டு முயற்சியைக் கோரும் தொழிலாகும். ஆனால், சங்ககிரி ராச்குமார் தனி ஒருவராக, ஒப்பனை, VFX, ஒளிப்பதிவு, ஒலி வடிவமைப்பு என சுமார் 78 துறை சார்ந்த வேலையைக் கையாண்டுள்ளார். கற்பனைக்கு மிஞ்சியதொரு அசுரத்தனமான உழைப்பைச் செலுத்தியுள்ளார். அவரே ஒப்பனை போட்டுக் கொண்டு, கேமராவை இயக்கி, நான்கு வேடங்களில் தோன்றி, நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருக்கிறது. மனிதர்கள் அனைவரும் பூமியில் இருந்து மறைந்து விட, ராஜா, ஜாக், பூமா, ரூபி ஆகிய நான்கு நண்பர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். யாருமில்லா உலகில், பத்து நாட்கள் மகிழ்ச்சியாக வலம் வரத் திட்டமிடுகின்றனர். அதன் படி நாடு நாடாகச் சுற்றி அமெரிக்காவை அடைகின்றனர். பத்து நாட்கள் முடி...
மகுடம் விமர்சனம் | Magudam review

மகுடம் விமர்சனம் | Magudam review

சினிமா, திரை விமர்சனம்
ஊருக்கு நல்லது செய்யும் ஒருவரின் மரணத்திற்குப் பிறகு, அவ்வொருவரைத் தவறாக நினைத்து ஒதுங்கி வாழும் அவரது மகன்தான் அடுத்து தலைமையேற்று ஊருக்குக் காவலாக இருக்கவேண்டுமென மகுடம் சூட்டுகின்றனர் மக்கள். கிருபாவின் குடும்பத்திற்கு ஒரு கார் வாங்க வேண்டும் என்பது ஆசை. பொருளாதாரச் சூழல் உவப்பாக இல்லாத சூழலிலும், ஒரு பயன்படுத்தப்பட்ட BMW காரை வாங்குகிறார் கிருபா. அந்தக் கார், கிருபா மறக்க விரும்பும் அவரது பால்யத்துடன் மீண்டும் தொடர்பை உருவாக்கிப் பெரும் இழப்பை ஏற்படுத்துகிறது. அவருக்கு ஏற்படும் இழப்பு என்ன, அது அவரை எங்கு இட்டுச் செல்கிறது என்பதே படத்தின் கதை. இந்தப் படத்திற்கு, 185 நிமிடங்கள் கால அளவு என்பது ரொம்பவே அதிகம். படத்தொகுப்பாளர் N.B.ஸ்ரீகாந்த் மிகக் கறாராகப் படத்தின் நீளத்தைக் கட்டுக்குள் வைத்திருந்திருக்கலாம். கிருபாவின் நண்பராக வரும் அர்ஜெய்க்கு ஒரு பில்டப் காட்சி வருகிறது. ஆனால் அதன் ப...
விஸ்வநாத் & சன்ஸ் விமர்சனம் | Vishwanath & Sons review

விஸ்வநாத் & சன்ஸ் விமர்சனம் | Vishwanath & Sons review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
விஸ்வநாத் எனும் தொழிலதிபர், சான் பிரான்சிஸ்கோ சென்று வாடகைத்தாய் மூலமாகக் குழந்தை பெற்றுக் கொள்கிறார். திடீரென அக்குழந்தைக்கு மிக அரிதான நோய் ஒன்று வர, அதற்குத் தீர்வாகத் தாயின் எலும்பு மஜ்ஜை வேண்டும் என்ற நிலை ஏற்படுகிறது. விஸ்வநாத், வாடகைத்தாயான மதனகாமேஸ்வரி ஜோதிலிங்கம் எனும் மேடி J-வைக் கண்டுபிடித்து இந்தியா அழைத்து வருகிறார். மேடியின் வரவால், விஸ்வநாத் வாழ்க்கையில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதே படத்தின் கதை. கச்சிதமான கதாபாத்திரத் தேர்வுகள் படத்தின் பெரும்பலம். சூர்யா, ராதிகா சரத்குமார், மமிதா பைஜு, ரவீனா டாண்டன், பவானிஸ்ரீ ஆகியோர் தங்கள் ஏற்றப் பாத்திரத்திற்கு மிக நிறைவான பங்களிப்பை அளித்துள்ளனர். அந்த மாளிகையின் உட்புறத்தோற்றமான ஹால் மட்டும் ஓர் அந்நிய உணர்வை ஏற்படுத்துகிறது. ஆனால் நடிகர்கள் அதைத் தங்களது நடிப்பால் மறக்கடித்து விடுகின்றனர். இயல்பாகவே ஓர் அப்பாவித்தனம் அப்பி...
டிசி விமர்சனம் | DC review

டிசி விமர்சனம் | DC review

சினிமா, திரை விமர்சனம்
நட்சத்திர இயக்குநரான லோகேஷ் கனகராஜ் இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகியுள்ளதால், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பார்வையாளர்கள் மத்தியில் தாறுமாறாக எகிறியவண்ணம் இருந்தது. அதற்குத் தீனி போடும் வகையில், ரத்தம் தெறிக்கத் தெறிக்க ஒரு ஆக்சன் மேளாவை அரங்கேற்றியுள்ளார் இயக்குநர் அருண் மாதேஸ்வரன். தாஸ் (D), சந்திரா (C) எனும் மையப் பாத்திரங்களினுடைய பெயர்களின் முதலெழுத்தே தலைப்பாகும். லோகேஷ் கனகராஜ் மற்றும் மூவர் 2011-இல் ஒரு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபடுகிறார்கள். கொள்ளையடித்தது காவலர்களிடமிருந்து. பெரும் ஆயுதங்களைக் கொள்ளையடித்த அவர்களைக் காவல்துறை வலை வீசித் தேடுகிறது. சென்னையில் லோகேஷ் & டீமை கொஞ்சநாள் கமுக்கமாக இருக்கச் சொல்கிறார் அவர்களது லீடரான தலைவாசல் விஜய். சென்னைக்குச் செல்லும் லோகேஷ் ஒரு லாட்ஜில் தங்குகிறார். அந்த லாட்ஜில் பாடகியாகப் பணி புரியும் சஞ்சனா ஏ.கே மீது காதல் கொள்கிறார். அத...
வதந்தி | Vadhandhi Season 2 – The Mystery of Mani review

வதந்தி | Vadhandhi Season 2 – The Mystery of Mani review

OTT, Web Series, சினிமா, திரை விமர்சனம்
முதல் முறையாகச் சசிகுமார் காவல்துறை அதிகாரியாகவும், ஓர் ஓடிடி தொடரில் நாயகனாகவும் நடித்துள்ளார். தமிழ்நாடு அரசின் எதிர்ப்பை மீறி ஒன்றிய அரசு நிலங்களைக் கையகப்படுத்தி எட்டு வழிச்சாலைக்கான அடிக்கல் நாட்டுவிழாவை வைக்கிறது. அப்பொழுது அடிக்கல் நாட்டத் தோண்டும்பொழுது, மனித எலும்புக்கூடு ஒன்று கிடைக்கிறது. அந்த எலும்புக்கூடு யாருடையது என்ற விசாரிக்க துணை ஆய்வாளர் மூசா ராசா நியமிக்கப்படுகிறார். அவரது விசாரணையின் முடிவால், 'முடக்கத்தான்' மணி என்பவர்க்கு ஆயுள் தண்டனை கிடைக்கிறது. ஆனால், மணி அந்தக் கொலைகளைச் செய்திருக்க மாட்டான் என நம்பும் மூசா ராசா மிகுந்த சிரமங்களுக்கு இடையில், அவ்வழக்கை மீண்டும் திறக்கிறார். மணியின் மீது மூசா ராசா வைத்த நம்பிக்கை பொய்த்ததா, வென்றதா என்பதே தொடரின் முடிவு. முந்தைய சீசன் போலவே கலகலப்பிற்கு உதவியுள்ளார், தேநீர் பிரியான துணை ஆய்வாளர் ராமர் கதாபாத்திரத்தில் நடித்திருக...
Spider-Man: Brand New Day விமர்சனம்

Spider-Man: Brand New Day விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மார்வெல் லோகோ வரும் பொழுதே கதை சொல்லத் தொடங்கிவிடுகின்றனர். பொதுவாக லோகோவில் வரும் முப்பரிமாண M A R V E L எழுத்துகளில், மார்வெல் காமிக்ஸின் சூப்பர் ஹீரோக்கள் அனைவரும் வருவார்கள். இம்முறை பீட்டர் பார்க்கரைக் காட்டி அவர் மறைந்து போவது போல் வருகிறது. இப்படியாகப் படத்தின் தொடக்கமே அட்டகாசம். முந்தைய பாகங்களின் ஸ்பைடர் மேன் போலல்லாமல், கூடுதல் முதிர்ச்சியுடன், அண்டை அயலார் மீது அதே நட்புடனும் நியூ-யார்க்கைக் காப்பாற்றுகிறார் பீட்டர் பார்க்கர். ஆனால், நண்பனாலும் காதலியாலும் மறக்கப்பட்ட வலியையும், மே பார்க்கரை இழந்த துக்கத்தையும் சுமந்து திரிகிறார். அவரைப் போலவே, பிரிவின் வேதனையில் இருக்கும் ஒரு நபரால் டேமேஜ் கன்ட்ரோல் துறை தொடர் தாக்குதலுக்கு உள்ளாகிறது. அந்நபர், ஒருவரது மூளைக்குள் ஊடுருவி அவரைத் தன் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொண்டு இயங்க வைக்கிறார். அதுவும் மின்னல் வேகத்தில், ஒருவரது மூளைய...
The Odyssey விமர்சனம்

The Odyssey விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
வால்மீகி ராமாயணம் கி.மு. ஆறாம் நுற்றாண்டு வாக்கில் எழுதப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால் அதற்கும் முன்பே பல நுற்றாண்டுகளாக வாய்வழிக்கதையாக ராமாயணம் மக்களிடையே புழங்கி வந்தது. அதே போல, கிரேக்க இதிகாசங்களான ஹோமர் எழுதிய இலியட், ஒடிசி என்ற இரண்டு காவியங்களும் சற்றேறக்குறைய அதே காலக்கட்டத்தில் எழுதப்பட்டது. இந்த இந்தியக் கிரேக்க இதிகாசங்களுக்குள் ஆச்சரியமான ஒற்றுமைகள் பல உள்ளன. கதையின் நாயகி கடத்தப்படுதல், அவளை மீட்க நடக்கும் போர், கதை நாயகன் குடும்பத்தை, நாட்டைப் பிரிந்து அலைந்து திரிதல், பல சவால்களைச் சந்தித்தல், திருமணம் புரிய வில்லை வளைத்து நாண் ஏற்றும் போட்டியை எதிர்கொள்ளுதல் என பல ஒற்றுமைகள் உள்ளன. இந்து மதத்தைப் போலவே, கிரேக்க மதத்திலும், ஒரு மனிதனின் வாழ்க்கையை தீர்மானிப்பவையாக விதி, கடவுளின் அருள், தனிமனித முயற்சி ஆகிய மூன்றும் விளங்குகின்றன. இந்த மூன்றின் வலைப்பின்னல் போலவ...
அருள்வான் விமர்சனம் | Arulvaan review

அருள்வான் விமர்சனம் | Arulvaan review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
அருள் என்பது இறைவனின் எல்லையற்ற கருணை, இரக்கம் மற்றும் ஆசீர்வாதத்தைக் குறிக்கும் ஆன்மிகச் சொல்லாகும். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் கடவுளின் ஐந்தொழில்களில் மிக மேன்மைமிக்க ஒன்றாகும். அத்தகைய தெய்வத்தின் தொழிலை, ஒரு மனிதனால் செய்ய முடியுமா? 'புண்ணியம் கோடிஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்' எனும் பாரதியின் வரிகளை மேற்கோள் காட்டி, 'முடியும்' என்கிறார் இயக்குநர். பூங்கொடி எனும் மலைக்கிராமத்தில் வாழும் குறிஞ்சி எனும் சிறுமி, கல்வியே தங்களுக்கான விடியலைத் தரும் எங்கின்ற முயற்சியில் மேற்கொள்ளும் நம்பிக்கைப் பயணமே இப்படத்தின் கதையாகும். காளி வெங்கட்டைக் கதையின் நாயகனாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படமிது. ஆரவும் அருள்நிதியும் படத்திற்குள் வர, காளி வெங்கட்டிற்குப் பத்திரிகையாளர் தன்ராஜ் எனும் சிறு வேடமே வாய்த்துள்ளது. மருத்துவமனைக் காட்சியில், குறிஞ்சியின் நிலைமையைக் குறித்து உருக்...
அன்பே டயனா விமர்சனம் | Anbe Diana review

அன்பே டயனா விமர்சனம் | Anbe Diana review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பெரம்பூர் பையனுக்கும், ஆங்கிலோ இந்தியன் பெண்ணுக்கும் கெமிஸ்ட்ரி வொர்க் ஆச்சா என்பதே அன்பே டயனா படத்தின் ஒரு வரிக்கதை. பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட ஏரியாவில் குடியிருக்கிறது ஹீரோ பாரி இளவழகனின் குடும்பம். அம்மா ரோஜா, அவர் சாதிப்பற்றுக் கொண்ட கண்டிப்பான அம்மா. கதாநாயகனுக்கு அம்மா என்றால் பயம். அதே போல்தான் கதாநாயகனின் அப்பா சேத்தனுக்கும். அக்கா ஒருவர், தன் கணவனோடு ஒரு மனக் கசப்பில் மூளை சார்ந்த நோய்மை கொண்ட மகளோடு தாய்வீட்டிலேயே இருக்கிறார். கதாநாயகனின் தம்பி அநியாயத்திற்கு சமர்த்து. இப்படியான கதாநாயகனின் குடும்பத்திற்குக் குட்டைப்பாவடையும், குடும்பக் குடியுமாக வாழும் நாயகி ரம்யா ரங்கநாதன் எப்படி செட்டாவார் என்ற கேள்விக்கான பதில் தான் படத்தின் மீதிக்கதை. ஜமா படத்தில் கதாபாத்திரத்தோடு அவரைப் பிரித்துப் பார்க்க முடியாத படி நடித்திருந்தார் பாரி இளவழகன். அப்படம் இன்றும் நெஞ்சில் பசுமையாக நிற்பதற...
இதயம் முரளி விமர்சனம் | Idhayam Murali review

இதயம் முரளி விமர்சனம் | Idhayam Murali review

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
‘இதயம்’ எனும் படம், 1991 இல் வெளியாகி அந்தக் கால இளைஞர்களின் இதயங்களை வென்றது. மறைந்த நடிகர் முரளியின் திரைவாழ்வில் ஒரு மைல்கல் அப்படம். அப்படத்தின் நாயகனின் குணாதிசயத்தைக் கதைக்கருவாகக் கொண்டு அதர்வாவை வைத்து இதயம் முரளியாகக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரன். 90’ஸ் கிட்ஸ் அதர்வாவிற்கு சிறுவயது பெண்களிடம் காதலைச் சொல்வதற்கு தயக்கம். அந்த தயக்கமே அவரின் காதல்களுக்குத் தடையாக மாறுகிறது. பள்ளிவாழ்வில் பாடமெடுக்கும் மிஸ்ஸிடம் காதலைச் சொல்லத் தவறுகிறான். அதன்பின் பருவ வயதில் ட்யூஷன் ஜோடியான ப்ரீத்தி முகுந்தனிடம் காதலைச் சொல்லாமல் அந்தக் காதலையும் தவறவிடுகிறார். முத்தாய்ப்பாக இளைஞர்களின் கனவு நாயகியான கயாடு லோகரிடம் காதல் சொல்லும் வாய்ப்பு வருகிறது. அதையும் தவறவிடுகிறார். ஒரு கட்டத்தில் துணிச்சலை வர வைத்துக் காதலைச் சொல்லச் செல்கிறார் அதர்வா. ஆனால் காதலிகள் என்ன நிலையிலிருந்தார்கள் எ...
அந்தரன் விமர்சனம் | Andharan review

அந்தரன் விமர்சனம் | Andharan review

சினிமா, திரை விமர்சனம்
அந்தரன் என்றால் மறைந்திருந்து தாக்கும் வேட்டைக்காரன் என்று பொருள். கார்த்திகா எனும் இளம்பெண்ணிற்குத் திருமணம் நிச்சயமாகும் பொழுதெல்லாம், கல்யாணத்திற்கு முன் அந்த மாப்பிள்ளை கொலை செய்யப்பட்டோ, தற்கொலை செய்தோ, தற்செயலாகவோ இறந்து விடுகின்றனர். இந்த மரணங்களின் பின்னணியைத் துப்புத் துலக்கக் காவல்துறை அதிகாரி செழியன் நியமிக்கப்படுகிறார். மறைந்திருந்து வேட்டையாடுபவரை எப்படி உடனின்று கண்டுபிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. அந்தரனிற்கு முன், அந்தரனிற்குப் பின் என தன் வாழ்க்கை மாறுமென செழியனாக நடித்துள்ள பிரஜின் தீர்க்கமாக நம்புகிறார். அவரது நம்பிக்கை மிகையில்லை எனச் சொல்லுமளவிற்குப் படத்தின் கதை சுவாரசியமாகவும், நடிகர்களின் பங்களிப்பு சிறப்பாகவும் அமைந்துள்ளது. பிரதான போலீஸ் கதாபாத்திர வேடத்திற்குக் கச்சிதமாகப் பொருந்துகிறார் பிரஜின். ஒரு போலீஸ்காரராகவும், காதலைப் பல வருடம் மனதில் சுமந்து திரிப...