Shadow

திரை விமர்சனம்

ராயன் விமர்சனம்

ராயன் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
D50 எனும் தனது ஐம்பதாவது படத்தை தனுஷே இயக்கியுள்ளார். இது இயக்குநராக அவருக்கு இரண்டாம் படம் என்பது குறிப்பிடத்தக்கது. காத்தவராயன், முத்துவேல்ராயன், மாணிக்கவேல்ராயன் என ராயன் சகோதரர்கள் மூவர். அவர்களுக்கு துர்கா எனும் தங்கை பிறக்கிறாள். அவள் கைக்குழந்தையாக இருக்கும்போதே, அவளைத் தூக்கிக் கொண்டு ராயன் சகோதரர்கள் சென்னை வந்துவிடுகின்றனர். வளர்ந்ததும், குடிகாரரான முத்துவேல்ராயனால் ஒரு பெரும்பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டி வருகிறது. அதை ஒன்றாகச் சேர்ந்து எதிர்கொள்ளும் ராயன் சகோதரர்கள், ஒரு கட்டத்தில், கதையில் எதிர்பாராத திருப்பமும், அதிர்ச்சி மதிப்பீடும் வேண்டுமெனக் கருதி தொலைந்து போகிறார்கள். படம் தொடங்கி இடைவேளை வரை நறுக்கு தெறித்தாற்போல் உள்ளது. ஃபாஸ்ட் ஃபுட் கடை வைத்திருக்கும் ராயன் சகோதரர்களின் வாழ்க்கை, அந்த வாழ்விடம், முத்துவேல்ராயனுக்கும் மேகலாவுக்கும் இடையேயான காதல் என முதற்பாதி கச்சித...
இந்தியன் 2 விமர்சனம்

இந்தியன் 2 விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இந்தியன் தாத்தா முதல் பாகத்தில் தன் காலடியில் வளர்ந்த களையை தான் வெட்டி எறிந்ததைப் போல் ஒவ்வொருவரும் அவரவர் வீட்டில் உள்ள களையை வெட்டி எறிய வேண்டாம்; குறைந்தபட்சம் வெளிச்சத்திற்காவது கொண்டு வாருங்கள் என்று சொல்வதும், அதைத் தொடர்ந்த விளைவுகளும் தான் இந்தியன் 2 திரைப்படத்தின் கதை.நீண்ட நெடுங்காலமாக தயாரிப்பில் இருந்து வந்த படம். படப்பிடிப்பு துவங்கியதில் இருந்தே 360 டிகிரியில் சுற்றி சுற்றி பிரச்சனைகள் சூழ்ந்த படம். ரோபாட் 2, ஐ போன்ற படங்களின் சுமாரான வெற்றிக்குப் பிறகு இந்தியாவின் பிரம்மாண்ட இயக்குநரான ஷங்கர் தன்னை மீண்டும் நிருபிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அனைத்தையும் கொண்ட படம். பொதுவெளியில் மிகப்பெரிய விவாதத்தையும், லஞ்சம் ஊழல் குறித்தான பிரச்சனைகளை திரை வழியே தெருக்கோடியில் வாழும் கடைக்குடிக்கும் கொண்டு போய் சேர்த்த மாபெரும் வெற்றிப்படமான இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம், உ...
கல்கி 2898 AD விமர்சனம்

கல்கி 2898 AD விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கடவுளின் அவதாரக் கதைகளில் மிகவும் பிரசித்தி பெற்ற இரண்டு கதைகள் உண்டு. ஒன்று வசுதேவர் தேவகிக்கு பிறந்த கிருஷ்ணரின் கதை. மற்றொன்று யோசேப்பு – மரியாவிற்கு பிறந்த இயேசுவின் கதை. இந்த இரண்டிலுமே பொதுவான அம்சங்கள் என்று பார்த்தால் குழந்தையை கொல்லத் துடிக்கும் மன்னர்கள், குழந்தையை காப்பாற்ற போராடும் தாய் தந்தையரின் போராட்டம், வானில் தெரியும் அடையாளங்கள் என பல உண்டு. இந்த பொதுவான அம்சங்களின் பின்னணியில் இந்து சமயத்தின் பிரதான நம்பிக்கைகளில் ஒன்றாக இருக்கும் கலியுகத்தின் கல்கி அவதாரத்திற்கு கற்பனையாக ஒரு உரு கொடுத்தால் அது தான் “கல்கி 2898 AD திரைப்படத்தின் கதை.படம் குருஷேத்திரப் போரில் அபிமன்யு மனைவியின் கருவில் இருக்கும் குழந்தையை அழித்த அசுவத்தாமனுக்கு கிருஷ்ணர் சாகா வரமென்னும் சாபமளித்து, கல்கியாக தான் கருவில் தோன்றும் போது என்னைக் காப்பதின் மூலம் உனக்கு சாப விமோசனமும் கிடைக்கும் என்று...
லாந்தர் விமர்சனம்

லாந்தர் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மின்சாரம் இல்லாத காலத்திலும், மின்சாரமே இன்னும் கிடைக்காத கிராமங்களிலும் இரவின் ஊடான பயணத்திற்கு லாந்தர் விளக்குகள் பெரும் உதவியாக இருக்கும். அது போல் ஓர் இரவில் கோயம்புத்தூர் நகரில் நடக்கும் தொடர் குற்றங்களை தேடிச் செல்லும் போலீஸ் அதிகாரி ACP விதார்த்தின் பயணம் தான் இந்த “லாந்தர்”சின்ன சின்ன விசயங்களுக்கு கூட பயப்பட்டு மயங்கி விழும் ஒருவித போஃபியாவினால் பாதிக்கப்பட்டுள்ள மனைவியுடன் வாழ்ந்து வரும் போலீஸ் அதிகாரி விதார்த் அன்றைய இரவை மனைவியின் அருகாமையில் கழிக்க முற்பட, நகரில் ஒரு மர்ம நபர் எதிர்ப்படும் அத்தனை பேரையும் கொடூரமாக தாக்கியபடி செல்லும் தகவல் வருகிறது. வேறு வழியின்றி தன் மனைவியை தனியாக வீட்டில் விட்டுவிட்டு, அந்த மர்மநபரை தேடிச் செல்கிறார் விதார்த். விதார்த் அந்த மர்ம நபரை கண்டுபிடித்தாரா..? அந்த மர்ம நபருக்கு என்ன பிரச்சனை..? எதனால் அவன் எதிர்ப்படும் அத்தனை பேரையும் தாக்...
பயமறியா பிரமை விமர்சனம்

பயமறியா பிரமை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கொலையை கலையாகக் கருதி 25 வருடங்களில் 96 கொலைகள் செய்த ஒரு கைதியை பேட்டி எடுத்து, அதை கதையாக எழுதும் ஒரு எழுத்தாளரும், அதை படிக்கும் வாசகர்களும் அந்த கொலையாளியைப் போல் கொலையை கலையாகக் கருதி கொலைகள் செய்யத் துவங்கினால் அதுதான் “பயமறியா பிரமை” படத்தின் கதை.இதுதான் கதையா என்று கேட்டால், படத்தின் ஆரம்பத்தில் காட்டப்படும் ஸ்லைடு அப்படித்தான் கூறுகிறது. ஆனால் அதற்கு எதிர்மாறாக காட்சிகள் காட்டப்படுகின்றன. படத்தில் எழுத்தாளர் புத்தகம் எழுதுவதாகவோ, அல்லது அவரும் அந்த கதாபாத்திரமாகவே மாறினார் என்பதோ காட்சிகளில் இல்லவே இல்லை. அவர் வெறுமனே படத்தின் துவக்கத்தில் இருந்து இறுதிவரை பேட்டி என்கின்ற பெயரில் உப்பு சப்பில்லாத ஏன்..? எப்படி..? என்கின்ற கேள்விகளை கேப்பதும், இது மனிதாபிமானமற்ற செயல் என்று கொலையாளியை சபிப்பதுமாகவே இருக்கிறார்.இதற்கு இடையில் வேறு வேறு கதைமாந்தர்களாக வரும் குரு சோமசுந்தர...
ரயில் விமர்சனம்

ரயில் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
எப்பொழுதும் போதையில் இருந்து, தனக்கு வரும் வேலை வாய்ப்புகளை இழக்கும் நாயகன், பஞ்சம் பிழைக்க தன் ஊருக்கு வந்து ஒழுக்கமாக வேலை பார்த்து வரும் வட இந்திய தொழிலாளிகளால் தான் தன்னை போன்றோருக்கு வேலை இல்லை என்று வஞ்சம் வளர்க்கிறான். அந்த வஞ்சத்தினால் விளைந்தது என்ன..? என்பது தான் ரயில் திரைப்படத்தின் கதை.தேனி மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிற்றூரில் குடியும் கூத்துமாக வாழ்ந்து வரும் நாயகன் குங்குமராஜுக்கு வீடுகளுக்கு வயரிங் செய்யும் வேலை. ஆனால் அந்த வேலையை ஒழுங்காக செய்யாமல் தன் நண்பன் ரமேஷ் வைத்யாவுடன் கூட்டணி அமைத்து குடிப்பதிலேயே குறியாக இருக்கிறார். இதனால் அவருக்கு வர வேண்டிய வேலைகள் கூட வட இந்திய தொழிலாளர்களுக்குப் போய்விடுகிறது. சற்று வசதிபடைத்த மனைவி வீட்டிலிருந்து வந்த நகை, பணம் மற்றும் இரு சக்கர வாகனம் முதற்கொண்டு குடித்து அழித்துவிட்ட காரணத்தால் மனைவி வைரமாலாவுடனும் இணக்கமான உறவு இ...
மகாராஜா விமர்சனம்

மகாராஜா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தன்னை மூன்றுபேர்  அடித்துப் போட்டுவிட்டு, தன் வீட்டில் இருந்த லட்சுமியை  தூக்கிச் சென்றுவிட்டார்கள் என்று காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வருகிறார் விஜய் சேதுபதி. லட்சுமி என்பது என்ன, அந்தப் புகாரைக் காவல்துறை ஏன் எடுத்துக் கொள்ள மறுக்கிறது, பின்னர் ஏன் அந்தப் புகாரை எடுத்துக் கொள்கிறது, அந்தப் புகாரின் பின்னால் ஒளிந்திருக்கும்  உண்மை என்ன என்பது தான் இந்த மகாராஜாவின் கதை. கதையை விரிவாகப் பேச முயன்றால் திரைக்கதையின் சுவாரசியங்கள் கெட்டுவிடும் என்பதால், கதை என்ன என்பதைப் பெரிதாக விவாதிக்காமல் காட்சிகளையும், திரைக்கதை யுக்தியையும், கதாபாத்திர வடிவமைப்பையும் பற்றி அதிகமாக விவாதிக்கலாம் என்று நினைக்கிறேன். காட்சிகளைப் பற்றிப் பேசத் துவங்கினால், ஒவ்வொரு காட்சியுமே Half Way-இல் துவங்குகிறது. அதாவது ஒரு சம்பவத்தின் பாதியிலிருந்து காட்சி துவங்குகிறது. அதுபோல் ஒரு காட்சி துவங்கு...
ஹரா விமர்சனம்

ஹரா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கல்லூரிக்குப் படிக்கப் போன இடத்தில் தற்கொலை செய்து கொண்டு இறந்து போகும் தன் மகளின் மரணத்தின் பின்னால் உள்ள மர்மத்தை அவிழ்க்க பயணப்படும் ஒரு தந்தையின் பயணமே இந்த “ஹரா” திரைப்படம்.“மைக் மோகன்” என்றும் “வெள்ளிவிழா நாயகன்” என்றும் புகழப்படும் நடிகர் மோகன் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நாயகனாக நடித்திருக்கிறார். இளமை காலங்களிலேயே அவர் ஆக்‌ஷன் எல்லாம் அவ்வளவாக செய்த்தே இல்லை. வயோதிகத்தில் அழைத்து வந்து வலுக்கட்டாயமாக ஆக்‌ஷன் காட்சிகளை கொடுத்திருக்கிறார்கள். அவரது உடலும் வயதும் அதற்கு ஒத்துழைக்கவில்லை என்பது காட்சிக்கு காட்சி தெரிகிறது. கதை நாயகனாகவும், காதல் நாயகனாகவும் அறியப்பட்டவரை கமர்ஸியல் நாயகனாக மாற்றுவதற்கு எடுக்கப்பட்ட முயற்சி கை கொடுக்கவில்லை.அப்பாவிற்கும் மகளுக்குமான பாசப் பிணைப்பிற்கு வைக்கப்பட்டிருக்கும் காட்சிகள் அனைத்துமே அயர்ச்சியைக் கொடுக்கின்றன. துடுப்பற்ற ஓடம் போல் தி...
அக்காலி விமர்சனம்

அக்காலி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சாத்தான் வழிபாட்டின் மூலமாக தங்களை சக்தி வாய்ந்த மனிதராக மாற்றிக் கொள்ள முயலும் கூட்டத்தைப் பற்றிய கதை.சாத்தான் வழிபாடு, ப்ளாக் மேஜிக் என வெகுஜன யதார்தத்திற்கு வெகு தொலைவில் இருக்கும் கதைக்களம். ஒரு கல்லறையில் புதைக்கப்பட்ட பிணங்கள் எல்லாம் காணாமல் போகின்றன என ஒரு வழக்கு வருகிறது. அந்த பிதை குழியில் போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கலாம் என்ற கணக்கில் அங்கு வேட்டைக்கு வரும் போலீஸாருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. ஒரு கும்பல் பிணங்கள் மற்றும் மண்டை ஓட்டைக் கொண்டு விசித்திரமான பூஜை செய்து கொண்டிருக்க, அதே இரவில் அமானுஷ்யமாக நடந்து கொள்ளும் ஒரு இளம் பெண் கடத்தப்படுகிறாள். அந்த இளம் பெண் ஏன் கடத்தப்பட்டாள்; அந்த விசித்திர பூஜையில் ஈடுபட்ட கூட்டத்தினர் யார் என்பதை அந்த வழக்கை விசாரித்த போலீஸ் இன்ஸ்பெக்டரின் வாயிலாக கதை சொல்லும் பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.9...
கருடன் விமர்சனம்

கருடன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நீதியா, விசுவாசமா என்பதற்கு இடையில் மாட்டிக் கொண்டு முழிக்கும் ஒரு விசுவாசமான வேலைக்காரனின் தடுமாற்றமும் தடமாற்றமும் தான் இந்த கருடன். நாயகனுடன் இருந்து கொண்டே தீங்கிற்கு துணை போன துரோகிகளைத் தமிழ் சினிமா வால்டர் வெற்றிவேல் திரைப்படத்திற்கு முன்பிருந்தே பார்த்து வருகிறது. ஆக, கதையாக இது பழைய ஃபார்முலா கதை தான். ஆனால் அந்த தீங்கிற்கு துணை போகுமளவிற்கு அவர்கள் துரோகிகள் ஆகும் அந்த மனமாற்றத்திற்கான திரைக்கதை தான் இந்த கருடனை கருட சேவைக்குரியவனாக மாற்றுகிறது. மீண்டும் பழைய ஃபார்முலா தான். மனிதனுக்கு வரக்கூடாத மூணு ஆசை மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்று ரஜினி பேசும் அந்த வசனங்கள், அதே மாடுலேஷனுடன் நம்மில் பலருக்கு இன்றும் நினைவில் இருக்கும். இந்த மூன்று ஆசைகளில் எதுவும் மனிதனுக்கு வந்துவிடக் கூடாது என்று இவர் சொல்ல, இந்த மூன்று ஆசைகளுமே முந்தியடித்துக் கொண்டு பிரச்சனைகளுக்கு தூபம் போடுகிறது. த...
பகலறியான் விமர்சனம்

பகலறியான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நாயகன் தான் காதலித்த பெண்ணைக் கூட்டிக் கொண்டு ஓரிரவில் ஓடிப் போக தயாராகிறான். ஓடிப் போன தன் தங்கையை தன் சகாக்களுடன் தேடி அலைகிறான் அண்ணன். இந்த நாயகன் கதாபாத்திரமும் அண்ணன் கதாபாத்திரமும் தவறான தொழில் செய்பவர்கள் என்பதால், தொழில் சார்ந்த பகையும் அந்த இரவில் இருவருக்கும் தொல்லை கொடுக்க மேற்கொண்டு நடந்தது என்ன..? என்பது தான் பகலறியானின் கதை.இப்படத்தின் கதையை வேறு மாதிரியும் கூற முடியும். சற்று ஆழமாகப் பார்த்தால் அதுதான் இப்படத்தின் கதை. ஆனால் பிரச்சனை என்னவென்றால் அதைத் தான் இயக்குநர் ட்விஸ்ட் ஆக வைத்திருக்கிறார் என்பதால் மேற்கொண்டு அது குறித்து மேலதீக தகவல்கள் கொடுக்க முடியவில்லை. கதைகளில் ட்விஸ்ட் இருக்கலாம். ஆனால் கதையவே ட்விஸ்ட் ஆக கூறும் முதல்படம் நான் பார்த்த வரையில் இதுதான்.படத்தின் கடைசி 20 நிமிடம் வரை படத்தின் கதை இதுதான் என்பது புரியாது. ஒரு காதல் ஜோடி ஓடப் பார்க்கிறது....
PT சார் விமர்சனம்

PT சார் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தன் பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகத்தில் நடக்கும் பாலியல் அத்துமீறல்களை ஒரு உடற்கல்வி ஆசிரியர் எதிர்த்து நீதி வாங்கித் தந்தால் அதுதான் இந்த “PT சார்” திரைப்படம்.ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு கல்வி நிலையங்கள் மற்றும் கல்லூரிகள் நடத்தி கல்வித் தந்தை என்று போற்றப்பட்டு வருபவர் தாளாளர் குரு புருஷோத்தமன் (தியாகராஜன்). இவரது பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றும் கனகவேல் (ஹிப் ஹாப் ஆதி) எந்த வம்பு தும்புக்கும் போகாதவர். பள்ளியில் பணியாற்றும் சக ஆசிரியையான வானதி (காஷ்மீரா) மீது காதல் கொள்வது எந்த வம்பு தும்புக்குள்ளும் வராது என்பதால் ஒட்டு மொத்தப் பள்ளிக்கும் தெரியும்படி தைரியமாக காதலித்து வருகிறார். எதிர் வீட்டில் வசிப்பவரும் தன் பள்ளிக்கு அருகே அதே நிர்வாகத்தால் நடத்தப்படும் கல்லூரியில் இளங்கலை மூன்றாமாண்டு படிப்பவருமான நந்தினி (அனிகா சுரேந்திரன்) பள்ளியுடன் தொடர்புடைய ஒரு பாலியல் அத்துமீறல்...
The Garfield Movie விமர்சனம்

The Garfield Movie விமர்சனம்

அயல் சினிமா, திரை விமர்சனம்
திங்கட்கிழமையை வெறுக்கும், உணவை மிக மிக விரும்பும், எவரையும் மதிக்காத புசுபுசு புஷ்டி பூனையாகிய கார்ஃபீல்ட், 15 வருடங்களுக்குப் பின் வெள்ளித்திரையைக் காண்கிறது. ஜிம் டேவிஸ் என்பவரால் 1976 இல், காமிக் துண்டாக அறிமுகமான ஆரஞ்சு நிற கார்ஃபீல்ட் பூனை, உலகளவில் பல செய்தித்தாள்களில் பரவலாக இடம்பெற்று, கின்னஸ் சாதனை பெற்றுள்ளது. கார்ஃபீல்ட் உமிழும் புத்திசாலித்தனமான பகடிகள் தான் அதன் சிறப்பே! இப்படத்தில் அதை அழகாகக் கொண்டு வந்துள்ளனர். சாலையில் தனித்து விடப்பட்டு பரிதாபமாக இருக்கும் பூனையை ஜான் தத்தெடுக்கிறார். ‘ஜான் என்னைத் தத்தெடுக்கலை. நான் தான் ஜானைத் தத்தெடுத்தேன்’ என ஆரம்பிக்கும் கார்ஃபீல்டின் அட்டகாசம் முதற்பாதி முழுவதும் அற்புதமாக விரவியுள்ளது. விலையுயர்ந்த சொகுசு சோஃபாவில் அமர்ந்து, எப்பொழுதும் எதையாவது சாப்பிட்டுக் கொண்டு, CatFlix பார்க்கும் பரம சுகவாசியாக ராஜவாழ்க்கை வாழ்கிறது கார்ஃ...
இங்க நான் தான் கிங்கு விமர்சனம்

இங்க நான் தான் கிங்கு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கடனை அடைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் வெற்றிவேல், ஜமீன் வீட்டில் பெண் எடுக்கிறார். தான் சம்பந்தம் செய்யவுள்ளது திவாலான ஜமீன் எனத் தெரியாமல், கல்யாணம் முடிந்ததும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகிறார். ஏமாற்றத்துடனே தன் வாழ்க்கையைத் தொடரும் வெற்றிவேலின் வீட்டில், சென்னைக்கு வெடிகுண்டு வைக்க வரும் பயங்கரவாதி ஒருவன் எதிர்பாராதவிதமாக இறந்து விடுகிறான். பிறகு என்னானது என்பதே படத்தின் கதை. ஜமீன் விஜயகுமாராகத் தம்பி ராமையா அறிமுகமானதில் இருந்து படத்தின் கலகலப்பு இரட்டிப்பாகிறது. படத்தினைத் தாங்கும் கதாபாத்திரத்தில் பிரமாதப்படுத்தியுள்ளார். அவரது மகனாக நடித்துள்ள பாலசரவணன், சிற்சில காட்சிகளில் மட்டும் அசத்தியுள்ளார். ஆளுநர் அலுவலகத்தில், சந்தானம் சமாளிக்கும் பொழுது, குழப்பத்துடன் தரும் ரியாக்ஷங்களில் ரசிக்க வைக்கிறார். வெற்றிவேலின் மனைவி தேன்மொழி பாத்திரத்தில், பிரியாலயா நாயகியாக அறிமுகமாகியுள...
எலக்‌ஷன் விமர்சனம்

எலக்‌ஷன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
நாயகர்களின் அரசியலை விட்டுவிட்டு நடுத்தர மக்களின் அரசியலை அச்சு அசலாகக் காட்டியிருக்கிறது இந்த எலக்‌ஷன் திரைப்படம். அரசியல், தேர்தல் போன்றவைகளை வெளியில் இருந்து பார்ப்பதற்கும், அதன் அங்கமாக மாறி அதனோடு பயணிப்பதற்குமான வித்தியாசங்களை ஆணித்தரமாகப் பேசியிருக்கிறது எலக்‌ஷன் திரைப்படம். ஜனநாயகத்தின் பலமே இந்தத் தேர்தல் முறையின் மூலம் தங்களைத் ஆளப் போகிறவர்களை மக்கள் தாங்களே தேர்ந்தெடுப்பது தான் என்று நாம் மார்தட்டிக் கொண்டாலும், அப்படி மக்களால் ஒவ்வொரு முறையும் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் யாராக இருக்கிறார்கள்? நல்லவன் என்றோ, நல்லது செய்பவன் என்கின்ற நம்பிக்கையைப் பெற்ற ஒருவனோ, இந்தத் தேர்தல் நடைமுறைகளின் வழி மக்களின் தலைவன் ஆகிவிட முடியுமோ என்று கேட்டால், அதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என்பதே சத்தியமான பதில். அதைத்தான் இந்த எலக்‌ஷன் பேசி இருக்கிறது. நாற்பது ஆண்டு காலம் கட்சிக்காக நாயாக ...