32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

“நூறு சாமி: அதன் உணர்வுகளால் தனித்துவமான படம்” – விஜய் ஆண்டனி

Dinesh R சேலம் Published: 04/08/2026 2 நிமிட வாசிப்பு OTT
எழுத்து அளவு:

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான இயக்குநர் சசி எழுதி இயக்கிய மனதைத் தொடும் குடும்ப நாடகமான நூறு சாமி, தாய்மை, இரண்டாவது வாய்ப்புகள் மற்றும் தாய்-மகன் உறவின் பிணைப்பைப் பேசும் படமாக அமைந்துள்ளது. இப்படம், ஆகஸ்ட் 7 முதல் ZEE5-இல் திரையிடப்படுகிறது. பிச்சைக்காரன் திரைப்படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலத்திற்குப் பிறகு, புகழ்பெற்ற இயக்குநர் சசி மற்றும் விஜய் ஆண்டனி மீண்டும் இப்படத்திற்காக இணைந்தனர். விஜய் ஆண்டனி மற்றும் பாத்திமா விஜய் ஆண்டனி ஆகியோர், விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ள இந்தத் திரைப்படம், தற்போது ZEE5-இல் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமிங் ஆகிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இப்படம், தனது குடும்பத்தை வளர்ப்பதற்காக வாழ்நாளை அர்ப்பணித்த விதவைத் தாயான செல்வியைப் பற்றியது. வாழ்க்கையின் பின்-கட்டத்தில் அவர் துணையைத் தேட முடிவு செய்யும்போது, ஆழமாக வேரூன்றிய சமூக நெறிமுறைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. சுற்றியுள்ளவர்களின் எதிர்ப்புகளைச் சந்திக்கும் செல்வியின் வாழ்க்கையின் மூலம், நூறு சாமி தாய்மை, கண்ணியம், ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் சமூகத்தின் தீர்ப்புகளை மீறி மகிழ்ச்சியைத் தழுவிக் கொள்ளும் துணிச்சலைப் பேசும் மனதை நெகிழ வைக்கும் கதையாக விரிகிறது.

இந்தக் கதையின் மையமாக, வழக்கமான பார்வைகளைத் தலைகீழாக மாற்றும் ஒரு புத்துணர்ச்சியான தாய்-மகன் உறவு அமைந்துள்ளது. ஒரு தாயின் தியாகங்களை மட்டும் கொண்டாடுவதற்குப் பதிலாக, தனது தாயின் மகிழ்ச்சிக்காக அவளுக்குத் துணையாக நின்று, அவள் விரும்பும் வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க ஊக்குவிக்கும் மகனின் பாசத்தை நூறு சாமி வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. மனதைத் தொடும் உணர்வுகளையும், அர்த்தமுள்ள சமூகக் கருத்துக்களையும் இணைத்து, தலைமுறைகளைத் தாண்டி அனைவருடனும் ஒத்திசைவாக இணையும் ஒரு கதையை இந்தத் திரைப்படம் வழங்குகிறது.

திரைப்படத்தின் டிஜிட்டல் வெளியீடு குறித்துப் பேசிய இயக்குநர் சசி, “நூறு சாமி என்பது உண்மையான உணர்வுகளிலிருந்தும், உண்மையான வாழ்க்கைகளிலிருந்தும் பிறந்த கதை. வயது அல்லது சமூக எதிர்பார்ப்புகள் எதுவாக இருந்தாலும், அன்பு, ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் மகிழ்ச்சியைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தைப் பற்றிப் பேசும் ஒரு கதையைச் சொல்ல வேண்டும் என்று நான் விரும்பினேன். திரையரங்குகளில் இந்தத் திரைப்படம் ரசிகர்களுடன் இணைந்ததற்கு நான் நன்றிக்கடமைப்பட்டிருக்கேன். இப்போது தமிழ் ZEE5 மூலம் இன்னும் பல வீடுகளுக்குச் செல்லவிருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.

விஜய் ஆண்டனி, “ஒவ்வொரு திரைப்படத்திற்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. ஆனால் நூறு சாமி அதன் உணர்வுகளால் எனக்குத் தனித்துவமானதாகத் தெரிகிறது. இந்தக் கதையின் மையத்தில் தாய் மற்றும் மகனின் உறவு இருக்கிறது. அதன் செய்தியுடன் ரசிகர்கள் ஆழமாக இணைவார்கள் என்று நான் நம்புகிறேன். இப்போது பல மொழிகளில் உள்ள குடும்பங்கள் இந்தத் திரைப்படத்தை ஒன்றாகத் தமிழ் ZEE5-இல் பார்க்க முடிவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.