Shadow

Author: Dinesh R

ரு – அதுக்கும் மேல.!

ரு – அதுக்கும் மேல.!

சினிமா, திரைத் துளி
மரணத்தையும் தாண்டின தண்டனை ஏதேனும் உண்டா? உண்டு என்கிறார் தனது படத்துக்கு ரு என்ற வித்தியாசமான தலைப்பு வைத்திருக்கும் இயக்குநர் C. சதாசிவம்.“ரு” என்றால் ஐந்து. படத்தில் ஐந்து குற்றவாளிகள் உள்ளனர் என யூகிக்க முடிகிறது. பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு தருபவர்களுக்கு நாயகன் எத்தகைய தண்டனை வழங்குகிறான் என்பதுதான் ரு படத்தின் கதையாம். இப்படத்தில் நாயகனாக இர்ஃபானும், நாயகியாக ரக்ஷிதாவும் நடித்துள்ளனர். P.R.ஸ்ரீநார்த் என்பவர் இசையமைத்துள்ளார். நடிக்க முதல் முறையாக சம்பளம் வாங்கிக் கொண்டு நடித்துள்ள இயக்குநர் பேரரசு, “இந்தப் படத்துல எனக்குப் பிடிச்ச தங்கச்சி செண்ட்டிமென்ட் இருக்கு” என்றார். சரி.. அந்த ‘அதுக்கும் மேல’ என்னவாக இருக்கும்?...
ரு – படக்குழுவினர்

ரு – படக்குழுவினர்

சினிமா
நடிகர்கள்:   >> இர்ஃபான் >> ரக்ஷிதா >> பேரரசு >> ஆதவன் >> ரவி >> அவினாஷ் >> மீராகிருஷ்ணன்   பணிக்குழு:   >> தயாரிப்பு - வீணா ஆனந்த் >> இயக்கம் - சதாசிவம்.C >> ஒளிப்பதிவு – I .நவீங்குமார் >> இசை – P.R.ஸ்ரீநார்த் >> படத்தொகுப்பு – L.V.K.தாஸ் >> நடனம் – ராபர்ட் – ஜாய்மதி >> பாடல் – S.ஞானகரவேல் – வெ.மதன்குமார்...
கருவாட்டு கருணாகரன்

கருவாட்டு கருணாகரன்

சினிமா, திரைத் துளி
“ஒரு சிறிய ரோல் கிடைத்தாலும் தனது நடிப்பால் அதைப் பதியச் செய்யும் ஒரு நடிகன் கருணாகரன். ‘உப்பு கருவாடு’ படத்தில் அன்றாடம் நம் பக்கத்து வீட்டில் பார்க்கும் ஒரு இளைஞன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக நந்திதா நடிக்கிறார். தன்னை ஒரு கதாநாயகி என்று தன்னை குறுகிய வட்டத்தினுள் அடைக்காமல் தனக்கான நல்ல கதாப்பாத்திரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவருக்கு சரியான கதைகளும் படங்களும் கிடைக்க வேண்டும். அவ்வகையில் இருவருக்கும் ‘உப்பு கருவாடு’ ஒரு சிறந்த படமாய் அமையும்” ” எனக் கூறினார் இயக்குனர் ராதா மோகன். மேலும், “படத்தின் திறம் குறையாமல் குறுகிய காலத்தில் நான் எழுதியதை என் எண்ணத்தின்படியே கொண்டு வர உதவிய அத்தனைக் கலைஞர்களுக்கும் எனது நன்றிகள். தரத்திலும் திறத்திலும் சமரசம் செய்து கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. துரித வேகத்தில் படமெடுக்கும் போது கூட அந்தக் கொள்கையை விட்டுக...
‘வெள்ளக்கார ராணி’ பாடல் – கள்ளப்படம்

‘வெள்ளக்கார ராணி’ பாடல் – கள்ளப்படம்

Songs, காணொளிகள், சினிமா
'வாள மீனுக்கு’, ‘கத்தாழ கண்ணாலே’ பாடல்கள் வரிசையில் இயக்குனர் மிஷ்கினின் பேனா முனையில் மீண்டும் ஒரு மஞ்ச சேலை கட்டிய மைனா ஆடும் ‘வெள்ளக்கார ராணி’ என்ற துள்ளல் பாடல் ‘கள்ளப்படம்’ என்ற படத்தில் இடம்பெற்றுள்ளது. இயக்குநர் மிஷ்கினின் சிஷ்யரான வடிவேல் கூறுகையில், “மிஷ்கின் சார் தனது படங்களில் பாடல்களைத் தவிர்க்கப் போவதாகக் கூறியுள்ளார். அவர் படம் பண்றாரோ இல்லையோ, தினமும் ஒரு பாடல் கம்போஸ் செய்வார். அவருக்கு இசை ஞானம் அதிகம். எனது குருவிற்கு மரியாதை செய்யும் விதமாகவும், அவருள் இருக்கும் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில்தான் இப்பாடல் அவரது முந்தைய பாடல்களை போல் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாட்டு ஒரு ஷூட்டிங் ஸ்பாட் காட்சியாக படத்தில் வருகிறது. மிஷ்கின் சாரின் பாடல்கள் போல் ஒரு துள்ளலுடன் இருக்க வேண்டும் என்று எண்ணினோம். தயாரிப்பாளர் ஆனந்த் அவர்களுக்கும் இந்த விஷயம் பிடித்திருந்தது. மிஷ்...
நனவான மாபெரும் கனவு

நனவான மாபெரும் கனவு

சினிமா, திரைத் துளி
“பொதுவாக பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் சினிமா பார்க்கக் கூடாது என்று அதட்டுவார்கள். எனக்கு சினிமாவை உணர வைத்தவரே எங்கப்பாதான்” என்றார் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தின் இயக்குநர் ஆதிக் இரவிச்சந்திரன். இதிலென்ன என்ன விசேஷம் என்றால், ஆதிக்கின் தந்தையான ரவி கந்தசாமி, தனது மகனிடம் உதவி இயக்குநராக இப்படத்தில் பணி புரிவதுதான். “பாரதிராஜா சார், செல்வமணி சார் இப்படி பல பேர்கிட்ட 16 வருடங்களாக உதவி இயக்குநராக பணி புரிந்து வருகிறார். அப்பாவின் போராட்டத்தையோ அவருடைய அங்கீகாரம் தடைப்படும் போதும் எனக்குள்ள ஜெயிக்கனும் அப்படிங்கற வெறி வரும். நானே என்னோட பாதையைத் தேர்ந்தெடுத்து, ஜி.வி.பிரகாஷ் குமாரிடம் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தின் கதையைக் கூறி, இன்று என் முதல் படத்தை இயக்கி வருகிறேன்” என்று மகிழ்ச்சியுடன் கூறிய அறிமுக இயக்குனர் ஆதிக், “என் அப்பாவும் ஒரு படம் இயக்குவார். தேவைப்பட்டால் நான் அவருக்கு ...
தயாரிப்பாளருக்கு வாய்ப்பளித்த “கள்ளப்பட” இயக்குநர்

தயாரிப்பாளருக்கு வாய்ப்பளித்த “கள்ளப்பட” இயக்குநர்

சினிமா, திரைச் செய்தி
தமிழில் முதுகலைப் பட்டத்தை தஞ்சை பல்கலைகழகத்தில் பெற்றவர் கள்ளப்படத்தின் இயக்குநர் ஜெ.வடிவேல். விகடனில் ஆறு வருடங்கள் (2003 – 2009) நிருபராகப் பணி புரிந்தவர்; பின் இயக்குநர் மிஷ்கினிடம் நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி ஆகிய மூன்று படங்களில் உதவி இயக்குநராகப் பணி புரிந்துள்ளார். புத்தகங்கள் மற்றும் திரைப்படங்களைக் குறித்து மட்டுமே பேசும் வடிவேல் ஒரு நல்ல இயக்குநராக வேண்டுமெனச் சொல்லி தொடக்கம் முதல் உற்சாகமூட்டியுள்ளார் ஆடுகளம் நரேன். ஆக கதை எழுதும்போதே அவரை மனதில் எண்ணி ஒரு கதாபாத்திரம் படைத்துள்ளார் வடிவேல். படத்தில் ஒரு முரட்டுத்தனமான போலிஸ்காரராக சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் கவிதா பாரதி நடித்துள்ளார். “நான் பாட்டுக்கும் வண்ணதாசன் கவிதை படிச்சுட்டு, என்னை ரொம்ப மென்மையானவனா நினைச்சுட்டு இருந்தேன். அது வெளியில் தெரியாம இருக்க பெரிய மீசை வச்சேன். ஆனா இயக்குநருக்கு முரட்டுத்தனம...
இவனுக்கு தண்ணில கண்டம் விமர்சனம்

இவனுக்கு தண்ணில கண்டம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சின்னத்திரை நடிகர் தீபக் நாயகனாக நடிக்கும் முதற்படம். இப்படத்தில், ஜீ டி.வி.யின் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியை பயங்கரமாகக் கலாய்த்துள்ளனர். தனக்கு எதுவும் சரியாக நடக்க மாட்டேங்குது என்ற விரக்தியில் நண்பர்களுடன் டாஸ்மாக் செல்கிறான் சரவணன். மிதமிஞ்சிய போதையில் தனக்குத் தானே சரவணன் வைத்துக் கொள்ளும் ஆப்புதான் ‘இவனுக்கு தண்ணில கண்டம்’ படத்தின் கதை. மார்க் எனும் கதாபாத்திரத்தில் வருகிறார் ‘நான் கடவுள்’ ராஜேந்திரன். இரண்டாம் பாதியின் நாயகன் இவர்தான். ஓடாத திரையரங்கத்தில் அவர் அறிமுகமாகும் காட்சியே அட்டகாசமாக உள்ளது. அவரது வேதனையும், லட்சியமும்தான் படத்தின் சுவாரசியமே.! ஆரண்ய காண்டத்தில் மறக்க இயலாத பாத்திரத்தில் நடித்திருந்த ‘பாக்ஸர்’ ஆறுமுகம், இப்படத்தில் சூடு பாஸ்கராக வருகிறார். ‘என் பணம் எப்ப வரும்’ என அவர் பணம் கேட்கும் மாடுலேஷன் செமயாக உள்ளது. இயக்குநர் வித விதமான கதாபாத்திரங்களின் ம...
எனக்குள் ஒருவன் விமர்சனம்

எனக்குள் ஒருவன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
லூசியா எனும் கன்னடப் படத்தை மீள் உருவாக்கம் செய்துள்ளார் இயக்குநர் பிரசாத் ராமர். லூசியா, தென்னிந்தியத் திரைப்பட ரசிகர்கள் பெருமையாக காலரை உயர்த்திக் கொள்ள உதவிய படம். முறைப்படியாக உரிமை வாங்கி தமிழில் எடுத்துள்ளனர். தியேட்டர் ஆர்டிஸ்டாக இருந்து திரைத்துறையில் நுழைந்த பவன் குமாரின் பெயரே திரைக்கதையில் வருகிறது. ஒருவன்தான் வாழ நினைக்கும் வாழ்க்கையைப் பற்றி கனவு காண்பதுதான் எனக்குள் ஒருவன் படத்தின் கதை. சித்தார்த்தின் கேரியரில் கண்டிப்பாக இது முக்கியமானதொரு படமாக அமையும். வாழும், வாழ நினைக்கும் என இரண்டு வாழ்க்கையையும் நடிப்பில் வித்தியாசப்படுத்திக் காட்டியுள்ளார். ஜிகர்தண்டா, காவியத் தலைவன் எனும் படங்களுக்குப் பிறகு, படத்தின் தனியொரு பிரதான பாத்திரமாக அவர் நடிப்பில் வந்திருக்கும் படமிது என்பது குறிப்பிடத்தக்கது. தியேட்டர் ஓனராகவும், நடிகரின் மேனேஜராகவும் வழக்கம் போல் நரேன் அசத்தியுள்ளார்....
தொப்பி விமர்சனம்

தொப்பி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
குற்றப் பரம்பரையைச் சேர்ந்த பட்டியல் இனத்தவனான சித்தன், தனது லட்சியமான காவல் துறையில் சேருகிறானா இல்லையா என்ற கேள்விக்கான பதில்தான் கதை. படத்தின் தலைப்பு போடும்பொழுதே, பொம்மலாட்ட பாணியில் குற்றப்பரம்பரை எப்படி உருவாகின என்ற செய்தியைச் சொல்லி விடுகிறார் இயக்குநர் யுரேகா. படத்தின் பலம் அதன் இயல்பான கதாபாத்திரங்கள். படத்தின் முதற்பாதி மிகவும் கலகலப்பாகப் பயணிக்கிறது. மலைவாசிகளின் தலைவராக வரும் G.M.குமார் அதகளம் செய்துள்ளார். திருடச் செல்பவர்களை ஆசிர்வாதம் செய்து அனுப்புதல், ஏ.டி.எம். மெஷினைப் பெயர்த்தெடுப்பது, பேயோட்டுவது, பேயைக் கொண்டு போலிஸை ஓட்டுவது என G.M.குமார் படத்தின் கலகலப்பிற்குப் பொறுப்பேற்கிறார். காவல்துறை அதிகாரியாக வரும் அருள்தாஸும் பிரமாதப்படுத்தியுள்ளார். பில்லி சூனியத்திற்குப் பயப்படுவது, சித்தனின் வளர்ச்சியைக் கண்டு பொறுமுவது, உறவாடிக் கெடுக்கும் நைச்சியத்துடன் நடந்து கொள்வ...