Shadow

Author: Dinesh R

தலைவரில் தொடங்கி ‘தல’யில் முடிந்த மகிழ்ச்சி

தலைவரில் தொடங்கி ‘தல’யில் முடிந்த மகிழ்ச்சி

சினிமா, திரைச் செய்தி
“’என்னமோ நடக்குது’ நான் மியூசிக் பண்ற எட்டாவது படம். அஞ்சு தமிழ்ப்படம்; ஒரு கன்னடப் படம்; ஒரு தெலுங்குப் படம் பண்ணியிருக்கேன். அந்தப் படமெல்லாம் தியேட்டருக்கு வந்தது.. ஒரு வாரத்திலேயே தியேட்டரில் இருந்து எடுத்துட்டாங்க. அதனால் நான் மியூசிக் பண்றேன் என மக்களுக்குத் தெரியாம போயிடுச்சு. இந்தப் படத்துலதான் நான் மியூசிக் டைரக்டராக ரீச் ஆகியிருக்கேன். ரொம்ப சந்தோஷமா இருக்கேன். ‘தல’க்கு ஹேப்பி பர்த் டே! இன்னிக்கு நைட் பார்ட்டியிருக்கும். நான் போவேன்” என்றார் மகிழ்ச்சியுடன் பிரேம்ஜி அமரன். “இயக்குநர் ராஜபாண்டி எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். ‘இப்படிப் பண்ணலாமா?’ எனக் கேட்டால்.. ‘விருப்பப்படி பண்ணுங்க’ என எடிட்டிங் ரூம் பக்கமே வர மாட்டார். ராஜபாண்டி சார் ஸ்க்ரிப்ட் பார்த்தீங்கன்னா.. மூணு பெர்ஸ்பெக்டிவ்ல கதை அமைஞ்சிருக்கும். நான் அதை இன்னொரு வெர்ஷன்ல பண்ணலாமான்னு கேட்டப்ப.. டைரக்டர் ஒத்துக்கிட்ட...
நீ எங்கே என் அன்பே விமர்சனம்

நீ எங்கே என் அன்பே விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அரிதினும் அரிதாக வரும் நாயகிக்கு முக்கியத்துவுமுள்ள படமிது. வித்யா பாலன் நடித்த ‘கஹானி’ எனும் ஹிந்திப் படத்தினைத் தழுவி, இயக்குநர் சேகர் கம்முலா தெலுங்கிலும் தமிழிலும் ஒரே நேரத்தில் இப்படத்தை எடுத்துள்ளார். ஒரு ப்ராஜெக்ட்டிற்காக, அமெரிக்காவிலிருந்து ஹைதராபாத்திற்கு வரும் அனாமிகாவின் கணவர் திடீரெனக் காணாமல் போய்விடுகிறார். அவரைத் தேடி, அனாமிகா ஹைதராபாத் வருகிறார். அனாமிகாவின் கணவருக்கு என்னானது? அவர் கிடைத்தாரா? என்பதற்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது. இயக்குநர் நயன்தாராவை தமிழ்ப் பெண்ணாக்கி ஹைதராபாத்தில் சாமர்த்தியமாக நடமாடவிட்டுவிடுவதால், படத்தின் தெலுங்கு நெடி ஏற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது. அனாமிகா தங்கியிருக்கும் விடுதியின் ஒரு பக்கம் மசூதி, மறு பக்கம் பெரிய காளி சிலை வைத்துக் கொண்டாடப்படுகிறது. ‘அனாமிகா’ தைரியமானவர்; சக்தி மிகுந்தவர் என்பதன் உருவகமாக காளி சிலை உபயோகிப்படுத்தப்படுவதோடு...
நான் ‘குவளையத்தேவன்பட்டி’ காளி

நான் ‘குவளையத்தேவன்பட்டி’ காளி

சினிமா, திரைத் துளி
“கோவில்பட்டி பக்கத்தில் குவளையத்தேவன்பட்டி என்ற கிராமத்தில் இருந்து வந்த எனக்கு எட்டு வருடத்திற்கும் மேலான போராட்டத்திற்கு பிறகு தமிழ் சினிமாத்தாயின் செல்லப்பிள்ளைகளில் ஒருவனாக வலம் வரும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சின்ன வயதில் பள்ளிகளிலும், கோவில் திருவிழாக்களிலும் நாடகங்களில் நடித்த எனக்கு நடிப்பு மீதும் சினிமாவின் மீதும் ஈர்ப்பும் ஆர்வமும் ஏற்பட சென்னைக்கு வண்டி ஏறினேன். சென்னைக்கு வந்த பிறகுதான் தெரிந்தது, சினிமாவில் நடிக்க வாய்ப்புக் கிடைப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல என்று. சாப்பாட்டிற்கும் தங்குவதற்குமாக கிடைத்த வேலைகளைச் செய்து கொண்டு வாய்ப்புத் தேடி அலைகின்ற எத்தனையோ திறமைசாலிகள் சரியான வாய்ப்புக் கிடைக்காமல் இன்றும் கோடம்பாக்கத்தில் இருக்கின்றனர். நானும் ஏழு எட்டு வருடங்கள் டீக்கடை, மளிகைக்கடை என்று சென்னையில் பார்க்காத வேலைகள் இல்லை. காலை முதல் இரவு வரை வயித்துப்பிழைப்புக்க...
என்னமோ நடக்குது விமர்சனம்

என்னமோ நடக்குது விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஐந்து லட்ச ரூபாய் அவசரத் தேவைக்கு, பர்மாவிடம் வேலைக்குச் சேருகிறான் விஜய். வேலைக்குச் சேர்ந்த நாலாம் நாளில், விஜய்யிடமிருந்து யாரோ சுமார் 15 கோடிக்கு மேல் திருடி விடுகின்றனர். பணத்தை தவறவிட்ட விஜய்யின் கதியென்ன? அவனுக்கு ஏன் ஐந்து லட்சம் தேவைப்படுகிறது? அந்தப் பணம் விஜய்யுக்குக் கிடைத்ததா? பர்மாவின் பணத்தைக் கொள்ளையடித்தது யார்? ஏன்? போன்ற கேள்விகளுக்கெல்லாம் பதிலை விறுவிறுப்பான கதையில் அமைத்துள்ளார் இயக்குநர் ராஜபாண்டி. நாயகனாக விஜய் வசந்த். போஸ்டர் ஒட்டும் வேலை செய்பவர். அவரும், அவருக்கு அம்மாவாக நடித்திருக்கும் சரண்யா பொன்வண்ணனும் சென்னைத் தமிழ் பேசுபவராக நடித்துள்ளனர். பாச மிகுதியில் சரண்யா பொன்வண்ணனை காலால் எட்டி உதைக்கும் பாசக்காரர் விஜய் வசந்த். இப்படத்திலும், ‘என் மொவனுக்கு லட்டு மாதிரி ஒரு பொண்ணு கிடைச்சிருக்கு!’ என கண்களைப் பெரிதாக்கி மகிழும் பாத்திரமே! ஆனால் அதையும் மீறி, அவரது...
வாயை மூடி பேசவும் விமர்சனம்

வாயை மூடி பேசவும் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இயக்குநர் பாலாஜி மோகன் அசத்தியுள்ளார். பனிமலை என்னும் ஊரில் மனிதர்களை ஊமையாக்கிவிடும் விநோதமான வைரஸ் பரவுகிறது. பேசுவதால் அவ்வைரஸ் பரவுகிறது என்பதால், அவ்வூரில் பேசுவதற்கு தடை உத்தரவு பிறப்பித்துவிடுகிறது அரசு. பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை. மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் நாயகனாக இப்படத்தில் அறிமுகமாகியுள்ளார். பேசியே ஆளைக் கவிழ்க்கும் சேல்ஸ் மேன் பாத்திரத்தில் மிக அழகாகப் பொருந்துகிறார். பேசிப் புரிய வைக்க முடியாத விஷயமே உலகில் இல்லை என நம்பும் குணாதிசயம் கொண்டவன் அரவிந்திற்கு நேரெதிர் பாத்திரத்தில் நஸ்ரியா நசிம். பேசுவதற்கு தடை உத்தரவு பிறப்பித்ததற்கு மகிழும் அஞ்சனாவாகக் கலக்கியுள்ளார். தானே வகுத்துக் கொண்ட மனத்தடைகளில் சிக்கி உழல்பவரை, அரவிந்த் தான் மீட்கிறான். வழக்கம்போல் காதல்தான் என்றாலும், சலிப்பு ஏற்படுத்தாமலும் உறுத்தாமலும் காட்சிப்படுத்தியுள்...
அடுத்த தலைமுறை தமிழ் சினிமா

அடுத்த தலைமுறை தமிழ் சினிமா

சினிமா, திரைத் துளி
“படத்தின் பெரும் பகுதிகள் படமாக்கப்பட்டுவிட்டன. இனி சில காட்சிகளும் ஒரு பாடலும் மட்டுமே படமாக்கப்படவுள்ளது. அதற்காகப் படக்குழுவினர் இந்த மாத இறுதியில் பூனே புறப்பட்டுச் செல்கின்றனர். படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்று ஹிந்தியில் இடம்பெறுகிறது. அப்பாடலில் ராஜ்பரத்தையும் தேஜஸ்வினியையும் நடிக்க வைத்துப் படமாக்கப்பட்டுள்ளது. நெருக்கமான காட்சிகளைக் கொண்ட பாடலாகவும் அதேசமயம் மிக அழகாகவும் படமாக்கப்பட்டுள்ளது. டான்ஸ் மாஸ்டர் விஜி இதற்கு நடனம் அமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் முகேஷின் ஒளிப்பதிவும், ஆர்ட் டைரக்டர் செந்திலின் அழகான அரங்க வடிவமைப்பும் படம் பார்ப்பவர்களைச் சொக்கவைக்கும். இது அடுத்த தலைமுறைக்கு சினிமாவைக் கொண்டு செல்லும் முயற்சி. இதில் மாற்று சினிமாவிற்கான முக்கிய கூறுகளோடு அழகியல் சார்ந்து புதிய பாணியில் கதை சொல்ல முயன்றிருக்கிறேன். இது முழுக்க முழுக்க எப்படி ஒரு கதைசொல்லி, கேட்பவர்களுக்க...
தைரியமும் தன்னம்பிக்கையும் தரும் பாக்சிங்

தைரியமும் தன்னம்பிக்கையும் தரும் பாக்சிங்

சினிமா, திரைத் துளி
குருந்துடையார் புரொடக்ஷன்ஸ் சார்பாக நிர்மல் தேவதாஸ் தயாரிக்கும் படம் ‘நாங்கெல்லாம் ஏடாகூடம்’. R.விஜயகுமார் இயக்கத்தில் சார்லஸ் மெல்வின் இசையமைப்பில் மனோஜ் தேவதாஸ், வீணா நாயர், ஜார்ஜ் விஜய், விசாகர், ராஜேஷ், பாலாஜி, ஹென்சா, மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் இயக்குநரான R.விஜயகுமார், இயக்குநர்கள் வடிவுடையான், நகுலன் பொன்னுசாமி, சிவா ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். படம் பற்றி இயக்குநர் R.விஜயகுமார் கூறியதாவது, “வேற ஒரு டைட்டில் வச்சிருந்தோம். அது கிடைக்கிறதுல கொஞ்சம் பிரச்சனையா இருந்தது. ‘பாடல் வரில ‘நாங்கெல்லாம் ஏடாகூடம்’ என வரும். அதையே தலைப்பு வைக்கலாம்னு முடிவு பண்ணோம். படத்துக்கும் அது பொருந்துச்சு. ஹீரோவோட கேரக்டர், எதைச் செஞ்சாலுமே ஏடா கூடமாவே செய்வாரு. அவர் குரு நாதர் என்ன சொல்றாரோ, என்ன நினைக்கிறாரோ அதைச் செய்யாம, அதுக்கு ஏடாகூடமா செய்வாரு. அதுதான் படத்தோட தலைப்பு...