Shadow

Author: Dinesh R

நிவேதா

நிவேதா

கதை, படைப்புகள்
ஒரு மாலைப் பொழுது. வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டு இருந்தாள் நிவேதா. அவளுக்கு 21 வயது. மாநிறமாய் இருந்தாலும் பார்ப்பதற்கு அழகாக இருப்பாள். பழைய டிவிஎஸ் 50இல் மிகவும் நிதானமாக, பொறுமையாக வாகனத்தை இயக்கும் பழக்கம் கொண்டவள். அன்றைக்கும் அதே நிதானமான வேகத்துடன் வீடு திரும்பிக் கொண்டு இருந்தாள். வழியில் தோழியைச் சந்தித்து சிறிது நேரம் பரஸ்பரம் பேசி மகிழ்ந்து விட்டு, ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தாள். மொத்தமும் இரு அறைகளே கொண்ட எளிமையான வீடு. ஏழ்மையான வீடும் கூட. அவளுடைய குடும்பம் அழகான அளவான குடும்பம். அம்மா,அப்பா மற்றும் தம்பி. இவர்கள் தான் இவளின் உலகம். குடும்பத்தின் மீது அளவற்ற பாசமும், அக்கறையும் கொண்டவள். அவர்களுக்கு இவள்தான் உலகம் என்று சொல்ல முடியாது. இவளது தம்பி தான் அவர்களின் உலகம். தம்பி இவளை விட 6 வயது சிறியவன். ஏனோ பெற்றோருக்கு இவளை விட, செல்லக் குழந்தையான தம்பியின் மீது பற்று ...
கோச்சடையான் விமர்சனம்

கோச்சடையான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இந்தியாவின் முதல் முழு நீள மோஷன்-கேப்ச்சர் படம், அதற்கே உரிய மழலை நடையோடு திரையில் அழகாய்த் தத்தித் தாவிப் பிரேவசித்துள்ளது. ராணா எனும் கோச்சடையான் ரணதீரன், தனது தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதோடு அவரது மரணத்திற்கும் பழிவாங்குதுதான் படத்தின் கதை. கதையை எழுதியவர் கே.எஸ்.ரவிக்குமார். அதுவும் ராஜா காலத்துக் கதை என்பதால், அவரது வழக்கமான பாணியில் அப்பா ரஜினி, அண்ணன் ரஜினி, தம்பி ரஜினி என ரஜினிகளை வரிசையாகக் கதையில் இறக்கியுள்ளார். திருப்பங்கள் பல நிறைந்த மிகச் சுவாரசியமான திரைக்கதை. ஆனால் அதை உள் வாங்கிக் கொள்ள முடியாமல், புது விதமான காட்சி அனுபவம் நம்மை ஆக்கிரமித்துக் கொள்கிறது. ரஜினி, நாகேஷ், ஜாக்கி ஷெராஃப், நாசர், ஷோபனா, ஆதி தவிர வேறு எவரையும் சட்டென்று அடையாளம் காண முடியவில்லை. படத்தில் வரும் வீரர்கள், ஊர் மக்கள் என இதர கதாபாத்திரங்கள் அனைவரின் முகமும் மெழுகு பூசினாற்போலவே உள்ளது. ராணா...
எங்கே போனாய் ரெனி!?

எங்கே போனாய் ரெனி!?

கட்டுரை, சமூகம்
மார்ச் மாதம் நான்காம் தேதி, மாலை நேரத்தில் என் மகளிடமிருந்து ஃபோன். பதட்டமான குரலில் அம்மா, “எதிர் வீட்டு ரெனி காணாமல் போய் விட்டான். அவன் நண்பர்கள் ஃபேஸ்புக்கில் போட்டிருக்கிறார்கள். உனக்கு விஷயம் தெரியுமா?” என்றாள். “அப்படியெல்லாம் இருக்காது. இரண்டு நாள் முன்பு அவன் அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது, மே மாதத்தோடு கல்லூரிப் படிப்பு முடிந்து விடுமென்றும், கலிஃபோர்னியாவில் வேலை கிடைத்துவிடும் என்றும், அவனுக்கு அங்கே ஒரு அபார்ட்மென்ட் பார்த்துக் கொடுக்க வேண்டும், புது கார் வாங்க வேண்டும் என்று பெருமிதமாய்ப் பேசிக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது.. மேலும் லண்டனில் மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும் தன் மகளும் spring break என்று ஒரு வாரம் விடுமுறையில் வந்திருப்பதை எத்தனை மகிழ்ச்சியாகச் சொன்னார்? அப்படி எல்லாம் இருக்காது.. நீ யாரையோ நினைத்துப் பேசுகிறாய்” என்றேன் மகளிடம்,. கொஞ்ச நேரத்தி...
“சச்சின் டெண்டுல்கரை நான் வியக்கேன்”

“சச்சின் டெண்டுல்கரை நான் வியக்கேன்”

சினிமா, திரைத் துளி
‘எக்ஸ்-மேன் - கடந்த காலத்தின் எதிர்காலம்’ திரைப்படத்தின் விளம்பரத் தூதராக உள்ளார் ஹுக் ஜாக்மன். அவர் படத்தின் பிரதான பாத்திரங்களுக்கு ஏற்படும் நெருக்கடியை, கிரிக்கெட் விளையாட்டுடன் ஒப்பிட்டுப் பேசினார். “கிரிக்கெட் ஒரு மைண்ட் கேம். மன உறுதியை சோதனை செய்யும் ஒரு விளையாட்டு. சச்சின் டெண்டுல்கர் அதில் கரை கண்ட மிகத் திறமையான வீரர். அவரது மனவுறுதியும், அதை அவர் மிகச் சுலபமாக களத்தில் பயன்படுத்துவதையும் கண்டு ஆச்சரியப்பட்டுள்ளேன். ஆக சச்சினைப் போன்றே மனோபலம் கொண்ட ப்ரொஃபசர் சேவியர், எனக்கு கேப்டனாக இருப்பதையே நான் விரும்புகிறேன். ஆனா வோல்வரின் மிக மோசமான கிரிக்கெட் வீரர். கொஞ்சம் கூட பொறுமையே இல்லாதவர். ஆடு களத்தில் என்ன, எப்போது, எப்படி நடக்கும் என்பதை கிரகிப்பது சுலபமானது அல்ல. அதில் நிரந்தரமாக ஜெயிப்பது என்பது மன உறுதி மிக்க சச்சின் போன்றவர்களால் தான் முடியும்” என்றார் வோல்வரினாக நடிக்கு...
சென்னை பெண்கள் சர்வதேச திரைப்பட விழா (CWIFF)

சென்னை பெண்கள் சர்வதேச திரைப்பட விழா (CWIFF)

சினிமா, திரைத் துளி
'சென்னை பெண்கள் சர்வதேச திரைப்பட விழா (CWIFF)' முதல் முறையாக இவ்வருடம் மே 20 ஆம் தேதி முதல் மே 25 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. சென்னை பெண்கள் சர்வதேச திரைப்பட விழா, சினிமா துறையில் பெண்களின் முன்னேற்றத்திற்காக நல்ல ஒரு மேடையையும், சிறந்த வாய்ப்புகளையும் உரிய திறமை உள்ளவர்களுக்கு வழங்கி அவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும். 20-5-2014 அன்று மாலை ஆறு மணியளவில் வாணி மகாலில் நடைபெற உள்ள தொடக்க விழாவுடன் CWIFF 2014 துவங்கும். இவ்விழாவிற்கு 177 திரைப்படங்கள் உலக அளவில் 26 நாடுகளில் இருந்து வந்து குவிந்தன. இவை அனைத்தும் RKV திரையரங்கம், வடபழனியில் மற்றும் PVR திரையரங்கம், அமிஞ்சிக்கரையிலும் 20 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை திரையிடப்படும் . மொத்தம் நான்கு பிரிவுகளில் திரைப்படங்கள் வகுக்கப்பட்டன. அவை,           1) குறும்படம் (short film )           2) விளம்பரப்படம் (ad film )           3) ஆ...
வெற்றிடத்தை நிரப்பும் திரைப்படம்

வெற்றிடத்தை நிரப்பும் திரைப்படம்

சினிமா, திரைச் செய்தி
நான்கு தேசிய விருதுகளைப் பெற்ற ‘ஆதாமிண்ட மகன் அபூ’ எனும் மலையாளப் படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அரபி மொழியில் டப் செய்யப்படும் முதல் தென்னிந்தியப் படமென்ற பெருமையும் இப்படத்திற்கு உண்டு. மேலும் டர்க்கீ (துருக்கி), ஈரான், மலேசியா நாட்டு மொழிகளிலும் டப் செய்யப்பட்டுள்ளது. 100 சர்வதேச திரைப்பட விழாக்களில் இப்படம் ஸ்க்ரீன் செய்யப்பட்டுள்ளது. கோவா ஃப்லிம் ஃபெஸ்டிவலில் ‘சில்வர் பீகாக்’ விருதினைப் பெற்றுள்ளது. இப்படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது வாங்கிய மது அம்பட், மணிரத்னத்தின் அஞ்சலி படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் மொழிமாற்றத்திற்கு உதவிய விஸ்வம் நம்பீசன், “இது ஹஜ் பயணம் பற்றிய கதை. ஹஜ் பயணம் எப்படிப் பண்ணணும் எனச் சொல்லியுள்ளார் இயக்குநர் சலீம் அகமது. இந்தப் படத்தை, நான் ஒரு மனிதனின் பயணமாகத்தான் பார்க்கிறேன். ஒரு உண்மையான ம...
மனதை உலுக்கும் காதல் கதை

மனதை உலுக்கும் காதல் கதை

சினிமா, திரைத் துளி
ஆர்யா, தன் ‘தி ஷோ பீப்பிள்’ தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்த ”அமர காவியம்” படத்தினைத் தனது பிரத்தியேக நண்பர்கள் சிலருடன் பார்த்துள்ளார். கண்கள் கலங்க படம் பார்த்து முடித்த ஆர்யா, அவர் நடிக்கும் ஒரு படத்தின் ஷூட்டிங்கிற்கு அவசரமாகக் கிளம்பிச் சென்று விட்டார். உணர்ச்சிகளை அடக்கத் தெரியாத ஆர்யா, 143 கேக்குகளை ஆர்டர் செய்து தனது யூனிட்டுக்கும் நண்பர்களுக்கும் அளிஹ்துள்ளார். 143 என்பது காதலின் குறியீடாக இருப்பதால், அதே எண்ணிக்கையில் கேக்குகள் வாங்கினேன் என பெரிய புன்னகையுடன் சொன்னார் ஆர்யா. “படத்தைப் பார்த்து நான் அசந்துட்டேன். படத்தின் இயக்குநர் ஜீவாசங்கர் என் நண்பர்; படத்தின் நாயகன் சத்யா என் தம்பி. இருவரும் உலகத்தரமான காத கதையை அளித்துள்ளனர். ஒரு நாயகனாக நான் நெகிழ்ந்துள்ளேன். ஆனா முதல் முறையாக ஒரு நல்ல திரைப்படத்தைத் தயாரித்ததற்காகப் பெருமைப்படுகிறேன். இந்தப் படத்தின் வரவேற்பினைப் பொறுத்...
“பயம் சிறுத்தையால்தான்” –‘யாமிருக்க பயமே’ மயில்சாமி

“பயம் சிறுத்தையால்தான்” –‘யாமிருக்க பயமே’ மயில்சாமி

சினிமா, திரைச் செய்தி
‘யாமிருக்க பயமேண்’ எதிர்பார்த்ததை விட வெற்றிகரமாக திரையரங்கில் ஓடி வருகிறது. எம்.ஜி.ஆர். படங்களைத் தவிர எந்தப் படத்தையும் பார்க்க விரும்பாத மயில்சாமியை, தினம் 5 நபர்களுக்குக் குறையாமல் தொலைபேசியில் அழைத்துப் பாராட்டி வருகின்றனராம். “எனக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது. அதனால் வருத்தப்படுறேன். ஹிந்தி பேசக் கூடத் தெரியாது. அதனால் வேதனைப்படுறேன். ஆங்கிலம் சுத்தமா வராது. அதனால் வெட்கப்படலை. ஏன் சொல்றேன் என்றால்.. தமிழ்நாடு தவிர வேற எங்கயும் ஷூட்டிங்குக்குப் போக மாட்டேன். பெரும்பாலும் தவிர்த்துடுவேன். ஆனா ‘யாமிருக்க பயமேன்’ படத்துக்கு நைனிட்டாலில் 3 நாள் ஷூட்டிங் எனச் சொன்னாங்க. டெல்லி ஏர்போர்ட்டில் இறங்கி அங்கிருந்து கார்ல போறேன் போயிட்டே இருக்கு. 10 மணி நேரத்துக்கு மேல ட்ராவல். எடுத்துட்டுப் போனதும் காலியாகிடுச்சு (இடதுக்கையால் பாட்டிலை சைகை காட்டுறார்). முன்பே இது மாதிரிதான் ஹைதராபாதில்...
ஃபாக்ஸின் எக்ஸ் – மேன்

ஃபாக்ஸின் எக்ஸ் – மேன்

சினிமா, திரைத் துளி
இதுவரை கண்டிராத தொழில்நுட்ப அதிசயங்களின் அடுத்த கட்டம் தான் X-Men days of the future past. சூப்பர் ஹீரோஸ் படங்களுக்கு என்று என்றுமே ஒரு தனி ரசிகர் கூட்டம் உண்டு. காமிக்ஸ் வடிவத்திலும், தொடராகவும் எல்லோரையும் கவர்ந்த எக்ஸ் - மேன் குழந்தைகளை மட்டுமின்றி பெரியவர்களையும் கவரும் என்பதில் ஐயமே இல்லை. 3-டி படங்கள் பார்பதற்கு சரியான சாதனைகள் மட்டுமே அவசியம் இல்லை, அந்த காட்சி அமைப்புக்கு ஏற்ப பிரம்மாண்டமும் கதைக்களமும் அவசியம். அத்தகைய பிரம்மாண்டத்தைச் சாத்தியப்படுத்த, தொழில்நுட்பத்தின் உச்சத்தைப் படத்தில் உபயோகப்படுத்தியுள்ளனர் என்றால் மிகையாகாது. ‘திரைப்படங்களில் தொழில்நுட்பம்’ என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் , X-Men days of the future past இதுவரை வந்த படங்களில் மிகச் சிறந்த படமாக இருக்கும் என திரையுலக வல்லுநர்கள் கணிக்கின்றனர்.ஹக் ஜேக்மேன் ஏழாவது முறையாக நீண்ட கொடிய நகங்களுடனும், பண்டைய கால...