Shadow

Author: Dinesh R

மணிகொண்டா அரண்மனை

மணிகொண்டா அரண்மனை

சினிமா, திரைத் துளி
20 கோடி ரூபாய் பொருட்செலவில் “விஷன் ஐ மீடியாஸ்” நிறுவனம் சார்பில் D.தினேஷ் கார்த்திக், தயாரிக்கும் அரண்மனை படத்தை சுந்தர்.சி இயக்குகிறார். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஒரே சமயத்தில் எடுக்கப்பட்டுவரும் இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. சந்தானம், ஹன்சிகா மோத்வாணி, ஆண்ட்ரியா, லட்சுமி ராய், வினய், சரவணன், கோவை சரளா, மனோபாலா, ‘காதல்’ தண்டபாணி, கோட்டா சீனிவாச ராவ், சித்ரா லட்சுமணன், நிதின் சத்யா என 21 நட்சத்திரப் பட்டாளங்களுடன் இயக்குநர் சுந்தர்.சியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இயக்கியுள்ளார். 3 கோடி ரூபாய் செலவில், ஹைதராபாத்தில் உள்ள மணிகொண்டா எனும் இடத்தில் ஒரு அரண்மனையையே கலை இயக்குநர் குருராஜ் உருவாக்கியுள்ளார். மிகப் பிரம்மாண்டமான இந்த அரண்மனையை 400 ஊழியர்கள் 3 மாத காலம் இரவு பகலாக உழைத்து உருவாக்கியுள்ளனர். மூன்று கதாநாயகிகளும் நடிப்பிலும் பாடல் காட்சிகளி...
மனித உரிமை பேசும் ‘யான்’

மனித உரிமை பேசும் ‘யான்’

சினிமா, திரைச் செய்தி
R.S.Infotainment சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கும் “யான்” படம்தான் அந்நிறுவனத்தின் பெரிய பட்ஜெட் படம். படத்தின் முதல் பாடலை கவிஞர் வாலி அவர்கள் எழுதியுள்ளார். உடல் நலம் சரியில்லாமல் வீட்டை விட்டு வெளியில் வருவதைத் தவிர்த்து வந்த வாலியை, அவரது வீட்டுக்கே சென்று ஹாரிஸ் ஜெயராஜ் பாடல் வரிகளை வாங்கியுள்ளார். ஹே லம்பா லம்பா ஏன் வந்தாய் என் முன்பா போட்டாலே பார்வையில்.. அம்பா எனத் தொடங்கும் யூத்ஃபுல்லான பாடலை எழுதியுள்ளார் வாலி. படத்தின் ஸ்க்ரிப்ட்டை இயக்குநர் ரவி.கே.சந்திரன் முதலில் அபிஷேக் பச்சனிடம்தான் கொடுத்துப் படிக்கச் சொல்லியுள்ளார். எனினும் தனக்கு நன்றாகத் தெரிந்த தமிழ் மொழியில்தான், முதற்படத்தை எடுக்க வேண்டுமென பிடிவாதமாக இருந்துள்ளார் ரவி.கே.சந்திரன். ‘நீங்க இரண்டு வேலை பண்ணணும்னு நினைச்சீங்கன்னா.. உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காது’ என கே.வி.ஆனந்த் தான் ரவி.கே.சந்திரனுக்கு யோசனை அளி...
ஏ.டி.எம்.மில் ‘ஆ’…வி

ஏ.டி.எம்.மில் ‘ஆ’…வி

சினிமா, திரைத் துளி
உலகத்தரத்துக்கு இணையாக தொழில்நுட்பத்தில் முன்னேறி வருகிறது தமிழ் சினிமா. அம்புலி 3D படம் மூலம் தமிழ்த் திரைப்பட உலகின் கவனத்தை ஈர்த்த தயாரிப்பாளர்கள் கே.டி.வி.ஆர். Creative Frames நிறுவனமும், இயக்குநர்கள் ஹரி-ஹரேஷ் இரட்டையரும் மீண்டும் இணைந்து வழங்கும் படம் இது. 'ஆ ' என்ற சத்தம் அலறலாக வெளிப்படும்போது பயத்தையும், பயங்கரத்தையும், வலியையும் உணர்த்தும், இந்த வார்த்தையை விட பலமாக பயம் என்ற உணர்வை வெளிப்படுத்தும் வார்த்தை கிடையாது என்று கூறுகின்றனர் இயக்குநர்கள் ஹரி மற்றும் ஹரேஷ். 'ஆ' ஐந்து வித்தியாசமான தளத்தில் நடக்கும் திகில் கதை. ஜப்பான், துபாய், ஆந்திராவில் உள்ள ஓர் ஆளரவமற்ற நெடுஞ்சாலை, வங்கக் கடல் நடுவே, மற்றும் தமிழகத்தின் தென்கோடியில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள ATM ஆகிய இடங்களில் நடைபெறும் சம்பவங்களின் தொகுப்பு தான் 'ஆ'. ஆவியுலகைப் பற்றி ஆராய மூன்று இளைஞர்கள் எங்கும் சுற்றி வர, அதில் அவர...
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் விமர்சனம்

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சந்தானம் நாயகனாக அறிமுகமாகியுள்ள படம். மேலும் தெலுங்கிலும், ஹிந்திலும் பெரும் வெற்றி பெற்ற இயக்குநர் ராஜமெளலியின் ‘மரியாத ராமண்ணா’ படத்தின் ரீமேக் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு வீட்டிற்குள் சிக்கிக் கொள்கிறான் சக்தி. அவ்வீட்டு வாசற்படியைத் தாண்டினால், அவரை வெட்டி கூறு போட அரிவாள்களுடன் பல ஆட்கள் தயாராகக் காத்திருக்கின்றனர். சக்தி எப்படித் தப்பிக்கிறான் என்பதுதான் படத்தின் கதை. சக்தியாக சந்தானம். ‘டக்கரு.. டக்கரு..’ என ஆர்ப்பாட்டமாக திரையில் தோன்றுகிறார். அவர் அறவங்காடு எனும் கிராமத்திற்குப் போகும் வரை சந்தானத்தின் வழக்கமான பாணியில் கதை நகர்கிறது. அதுவும் அதிக கலகலப்பில்லாமல்.. சொல்லப் போனால், சகித்துக் கொள்ள பொறுமையும் கோருகிறது. முக்கியமாக சோலர் ஸ்டார் இராஜகுமாரன், இசையமைப்பாளர் சித்தார்த் விபின் வரும் காட்சிகள் எல்லாம் கடியின் உச்சம். அறவங்காடு எனும் கிராமத்திற்கு சந்தானம் சென்றவுடன...
யாமிருக்க பயமே விமர்சனம்

யாமிருக்க பயமே விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கொள்ளியூர் கிராமத்தில் இருக்கும் கழுகு எஸ்டேட்டைப் புணரமைத்து, ‘குளுகுளு ரிசார்ட்’ ஆகத் திறக்கிறார் கிரண். அங்கே நிகழும் அமானுஷ்ய சம்பவங்களால் செய்வதறியாது திகைக்கும் கிரணின் கதியென்ன என்பதுதான் படத்தின் கதை. கழுத கெட்டா குட்டிச் சுவர் என்பது போல் பேய் கெட்டா பாழடைந்த பங்களா போலும். எப்பொழுதாவது பாழடைந்த குடிசையில் பேய் உலாவுவதாகக் கேள்விப்பட்டுள்ளீரா? வாரிசில்லாத பணக்காரர்கள்தான் பேய்களாக மாறுகிறார்களோ என்னவோ! தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பது பேயான பின்னும் பொருந்தும் போலும். தான் வாழ்ந்த மாளிகைக்கு அந்நியர் வந்தால்தான் பேயுக்கு கோபம் வந்து விடுகிறது. ‘தனது’ என்ற பிடிப்பும், தீராத மோகமும் மனிதனுக்கு மட்டுமல்ல பேயுக்கும் உண்டு என்பதே இந்தப் படத்தின் மையக்கரு. மேலே உள்ள பத்தியில் பேய் என்ற சொல்லுக்கு பொதுப்படையான பொருள் எடுத்துக் கொள்ளக்கூடாது. மேற்கூறிய இலக்கணங்கள், “பங்களா பேய்”க...
கப்பலேறும் நட்பு

கப்பலேறும் நட்பு

சினிமா, திரைத் துளி
நட்பைப் பற்றிய கதைக்கு தமிழ்த் திரையுலகில் எப்பொழுதும் தனி மவுசு உண்டு. தாய்ப்பாசம், காதலைத் தொடர்ந்து அதிக அளவில் விவாதிக்கப்பட்ட கதை நட்புதான். 'கப்பல்' என்ற பெயரில் தயாராகும் புதிய படத்தின் மைய அம்சம் 'நட்பு'. ஐ ஸ்டுடியோஸ் என்னும் புதிய நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும் இந்தப் படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார் கார்த்திக் ஜி கிருஷ். இவர் இயக்குநர் சங்கரிடம் இயக்கம் பயின்றவர் . 'நட்பு எல்லோரையும் கவரும் அம்சமாகும். வீட்டுக்கு ஒரு பிள்ளை என்ற இந்தக் காலக்கட்டத்தில் நட்பு மட்டுமே ஒரு பிள்ளையின் குணாதிசயத்தை, வளர்ந்த பின்னரும் தீர்மானிக்கிறது. தனக்கு மட்டுமே உரியவர் என்ற மனப்பான்மை எல்லா உறவிலும் தழைத்தாலும், நட்பில் அந்த உணர்வு மேலிடும் போது வரும் பிரச்சினையை விவாதிக்கும் படம் தான் 'கப்பல்'. வைபவ் என்னுடைய கதையின் நாயகன் பாத்திரத்துக்கு பொருத்தமாக இருந்தார் .மங்காத்தா படத்தில் வைபவ்வை...
கிராமத்தில் விழும் விண்கல்

கிராமத்தில் விழும் விண்கல்

சினிமா, திரைத் துளி
EYE CATCH MULTIMEDIA நிறுவனத்தின் தயாரிப்பில் அப்படிப்பட்ட அறிவியல் பின்னணியில் ஒரு கிராமத்துக் கதையாக உருவாகியிருக்கும் படம், ‘அப்புச்சி கிராமம்’. பிறந்த தேதியைத் தெரிந்த கொண்ட நமக்கு, நம்முடைய இறக்கும் தேதி தெரிந்தால் நம் வாழ்க்கையிலும், நமக்குள்ளும் எப்படியெல்லாம் மாற்றங்கள் ஏற்படும் என்பதே அப்புச்சி கிராமத்தின் மையக்கரு. தமிழ் சினிமாவின் திறமையை பாலிவுட்டில் அதிர வைக்கும் வெற்றியின் மூலம் நிரூபித்த இயக்குநர் திரு.A.R.முருகதாஸிடம் துணை இயக்குநராகப் பணியாற்றிய VI.ஆனந்த், ‘அப்புச்சி கிராமம்’ படம் மூலமாக இயக்குநராக அறிமுகமாகிறார். “அறிவியல் பின்னணியில் கிராமத்துக் கதை எடுக்கும் தைரியம் எனக்கே இல்லை. VI.ஆனந்த அதைப் பண்றார் என்பது பெருமையாக இருக்கு” என்றார் முருகதாஸ். பல படங்களில் இணைந்து நடித்த நாசரும் கிட்டியும், இப்படத்தில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு இணைந்து நடித்துள்ளனர். மேலும் கஞ்ச...