அநாமதேயர்கள் தாங்கள்தான் எனக்கு மேனஜரெனத் தவறான தகவல் பரப்பி வருவதாக அறிகிறேன். எனது சினிமா தோழமைகளின் கவனத்திற்கு, நானோ என் அம்மாவோ தவிர்த்து, என் படங்களுக்கான தேதிகள் குறித்து தயாரிப்பாளரிடம் பேச வேறெவருக்கும் அதிகாரமில்லை. அநாமதேயர்களின் நடவடிக்கைகளுக்கு நாங்கள் எவ்வகையிலும் பொறுப்பில்லை.
- ஹன்சிகா...
அஞ்சு பத்து லஞ்சம் கொடுத்தாவது தன்னுடைய காரியத்தைச் சாதித்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கும் சாதாரணமானவன் நாயகன் மணி. வசதியாக வாழ்ந்து கொண்டிருந்தவன் சூழ்நிலை காரணமாக வேலையை இழக்கிறான். இதற்கிடையில் இளவரசு, காமாட்சி சுந்தரம் என்ற இரு சமூக விரோதிகளின் பிடியில் சிக்குகிறான். இந்த இருவரில் ஒருவரிடம் சிக்கினாலும் மணியின் உயிர் போவது உறுதியாகிறது. அவன் செய்த தவறு என்ன, ஏன் இவர்கள் இவனைத் தேடுகிறார்கள், மணி இவர்களிடம் சிக்கினானா அல்லது தப்பினானா என்பதே முடிவு.
கதையின் நாயகன் மணியாக வைபவ். கதையின் நாயகியாக ரம்யா நம்பீசன். இளவரசாக கோட்டா சீனிவாச ரா காமாட்சி சுந்தரமாக ஷாயாஜி ஷிண்டே நடிக்கின்றனர். இவர்கள் தவிர மனோபாலா, சார்லி முதலியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
பணிக்குழு:
>> எழுத்து, இயக்கம் - ஸ்ரீ
>> தயாரிப்பு - கேமியோ ஃப்லிம்ஸ் சி.ஜே.ஜெயகுமார்
>> ப்ரொடக்ஷன் ...
இயக்குநர் விஜய் இயக்கும் ‘சைவம்’ படத்தில் நாசர், சாரா தவிர அனைவருமே புதுமுகங்கள். கூத்துப் பட்டறை கலைஞர்கள், விஞ்ஞானி வித்யா, ஹெலிகாப்டர் மெக்கானிக் விக்கி, நாசரின் மகன் பாஷா என கலந்து கட்டி கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்துள்ளார் விஜய். இதற்கு உதவிய ஷண்முகராஜன், தங்கள் பாத்திரங்களை நடிகர்கள் உணர்ந்து நடிக்க ட்ரெயினிங் கேம்ப் ஒன்றும் நடத்தியுள்ளார்.
“இது என்னுடைய கதை இல்லை. நான் சின்ன பையனாக இருக்கிறப்ப எங்க அம்மா சொன்ன கதை. அவங்கதான் அன்-அஃபீஷியல் ரைட்டர், இந்தப் படத்துக்கு.
தெய்வத் திருமகள் படத்தில், விக்ரமுக்கும் சாராவுக்கும் ஒரு போட்டி இருந்தது. இந்தப் படத்தில், அப்படி நாசர் சாருக்கும் சாராவுக்கும் நடிப்பில் ஒரு போட்டி இருக்கும். ஆனா சைலன்ட்டாக ஸ்கோர் செய்திருப்பது ‘ரே பால்’ என்ற பையன்தான். படம் பார்த்து முடிக்கிறப்ப, கண்டிப்பாக இந்தப் பையனைப் பற்றி எல்லாம் பேசுவார்கள்” என்றார் இயக்கு...
ஒரு சினிமா விழா போலில்லாமல் கல்யாண நிகழ்வு போல கலை கட்டியது ‘சைவம்’ இசை வெளியீட்டு விழா. விழாவிற்கான அழைப்பிதழுடன், காய்கறிகள் அடங்கிய கவர் ஒன்றினையும் கொடுத்து அசத்தியிருந்தார் இயக்குநர் விஜய்.
ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு, குடும்பத்துடன் அனைவரும் வந்துள்ளார்களே என வந்திருந்த விருந்தினர் அனைவருமே வியந்தது குறிப்பிடத்தக்கது.சாராவுக்காக பின்னணி பாடியிருந்த உத்ரா உன்னிகிருஷ்ணன், அப்பாடலை மேடையில் பாடிக் காட்டியதும் விசிலும் கைதட்டலும் பிரமாதமாய் எழுந்தடங்கியது. சைந்தவிதான் உத்ராவைப் பாட வைக்கலாம் என ஜீ.வி.பிரகாஷிடம் பரிந்துரைத்துள்ளார். விஷூவலில் சாராவின் லிப்-சின்க் கச்சிதமாய் இருப்பது பாடலுக்கு மேலும் அழகு சேர்க்கிறது.
தெய்வத்திருமகள் படத்தில் சாராவிற்கு பின்னணிக் குரல் கொடுத்த ஷ்ரிங்காதான் சைவம் படத்திலும் கொடுத்துள்ளார். ஷ்ரிங்கா, சாரா, உத்ரா, ஆகிய மூவரும் மேடையில் தோன்றி...
சைவம் படத்தில் காரைக்குடி வாழ் செட்டியாராக நடித்துள்ளார் நாசர். ‘இந்தப் படம் தனக்கு இன்னொரு குடும்பத்தைத் தந்துள்ளது’ என நெகிழ்வுடன் ‘சைவம்’ இசை வெளியீட்டு விழா மேடையில் சொன்னார் நாசர். படத்தில் தன்னுடன் நடித்தவர்கள் ஒவ்வொருவரையும் அந்தக் கதாபாத்திரத்தின் உறவுமுறையை வாஞ்சையுடன் சொல்லி, சைவம் இசை வெளியீட்டு விழாவில் அறிமுகம் செய்து வைத்தார். கண்ணு பட வைக்கும் அழகான பெரிய குடும்பம்தான் அது என்பதில் சந்தேகமில்லை.
“எனக்கு மகள் இல்லாத குறை இந்தப் படத்தில்தான் தீர்ந்தது” என தனக்கு மகளாக நடித்தவரை மேடையில் இருந்தே தேடினார் நாசர். விழாவிற்கு சர்ப்ரைஸாக வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்த அனுஷ்காவும், இரு பக்கமும் திரும்பி அவரது மகள் யாரெனப் பார்த்துக் கொண்டிருந்தார். இதைக் கவனித்த நாசர், “எனக்கு ஒரு மகள் இருக்கா.. ஆறடி உயரத்தில்” என்றார் அனுஷ்காவைப் பார்த்து. “நான் உன்னைத்தான் என் மகள் என ச...
ஆபத்து சூழும்பொழுது, அவ்விடத்தை விட்டு மான் போல் துள்ளிக் குதித்தோடித் தப்பிக்கும் கலைக்குத்தான், ‘மான் கராத்தே’ என்று பெயர். ஆனால் போட்டி சண்டை என வந்துவிட்டால், தாங்கள் எதற்கும் சளைத்தவர்களில்லை என மான்கள் முரட்டுத்தனமாக தங்களுக்குள் முட்டி மோதிக் கொள்ளும். முக்கியமாக பெண் மானிற்கான போட்டியில். படத்தின் தலைப்பிற்கு நியாயம் செய்துள்ளனரா என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டும்.
சித்தர் அளிக்கும் எதிர்காலத்தைச் சொல்லும் செய்தித்தாளிலிருந்து படம் ஜோராய் ஆரம்பிக்கிறது. பின் பலமுறை பார்த்துச் சலித்த வழக்கமான வட்டத்திற்குள் உழலத் தொடங்கி விடுகிறது. அதுவும் சுவாரசியமின்றி. வெட்டியாய்ச் சுற்றித் திரியும் பீட்டருக்கு, வெண்ணெயால் செய்தது போலிருக்கும் யாழினி மீது காதல் வந்துவிடுகிறது. தானொரு பாக்ஸர் என பீட்டர் விட்டு யாழினியையும் காதலிக்க வைத்துவிடுகிறான். காதலுக்காக, பீட்டர் சொன்ன பொய் அவனை எங்கு கொண்...
சிம்புதேவன் இயக்கம் என்ற எதிர்பார்ப்புடன் செல்பவர்களை ஏமாற்றாமல், தனது நேர்த்தியான திரைக்கதையால் எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்துள்ளார் இயக்குநர்.
நேரத்துக்கும் விதிக்கும் தொடர்புள்ளதா என நாரதருக்கு ஒரு சின்ன சந்தேகம். உலகின் மக்கள் தொகைப் பெருக்கத்தால் பிஸியாகிட்டேன் எனச் சொல்லும் பிரம்மா, தன் வேலையெல்லாம் விட்டுவிட்டு சிவபெருமானிடம் அந்தக் கேள்வியைக் கொண்டு செல்கிறார். நேரத்துக்கும் விதிக்கும் நெருங்கிய தொடர்புள்ளது என நாரதருக்கு சிவபெருமான் ‘லைவ் ஷோ’ காட்டி விளக்குவதுதான் படத்தின் கதை.
இசபெல்லாவை, அவளது திருமணத்தன்று கடத்த திட்டமிடுகிறான் தமிழ். அவன் வீட்டை விட்டு காலை 08:59க்குக் கிளம்பினால் என்னாகும், பின் ஒரு நிமிடம் கழித்து 09:00க்கும், இரண்டு நிமிடம் கழித்து 09:01க்கும் கிளம்பினால் என்னாகும் என்பதுதான் சிவன் நாரதருக்கு காட்டும் டெமோ!
மூன்று களவாணிகளாக அருள்நிதி, பிந்து மாதவி, ப...
அப்பா இறந்துவிட்டார்.
உச்சந்தலையில் இடி விழுந்ததைப் போலிருந்தது அந்த தகவல்.அந்தச் செய்தியின் தாக்கத்தை, அது தந்த உணர்வுகளை அதன் அடுத்தடுத்த கட்டத்தை உள்வாங்கவே முடியாமல் ஸ்தம்பித்த ஒரு நிலை. உடனே அம்மாவை, அக்காவை, தம்பிகளை, தங்கையைப் பார்த்தே ஆகவேண்டும் என்பது மட்டும் தோன்றியது. இச்சமயத்தில் அவர்களோடு நானிருக்க வேண்டும். அது மட்டுமே எங்கள் துயரத்தைத் தணிக்க முடியும். இப்படி ஏதேதோ தோன்றி மறைந்த துயர நிலை.
கணவரும் குழந்தைகளும் தேற்றினாலும், தீராத துயரநிலை. உடனடியாக நான் மட்டும் இந்தியா கிளம்புவது என்று முடிவெடுத்து பயண ஏற்பாட்டைத் துவக்கினால், எனக்கு விசா வாங்கவேண்டும் என்பது நினைவுக்கு வர, எதுவும் தோணாமல் நான் மட்டும் பெட்டியைத் தூக்கிக் கொண்டு ரயிலில் நியூயார்க் போக முடிவெடுத்தேன். முதல் முறையாக கணவரின் துணையில்லாமல் நியூயார்க் பயணம்.
இந்தியத் தூதரகம் எங்கிருக்கிறது, அங்கே யாரைப் பா...
‘பழிக்குப் பழி’ என்ற கதைக்கரு கொண்ட தென் கொரியத் திரைப்படம் இது. ஆனால், கண்ணுக்குக் கண், இரத்தத்திற்கு ரத்தம் என நாம் வழக்கமாக யூகிப்பது போன்ற கதையம்சம் கொண்ட படமில்லை. படம் மனிதனின் பழி வாங்கும் மனநிலையை மட்டும் பேசாமல், தான்வகுத்த சமூகக் கட்டுபாடுகளுக்குத் தன்னை எந்தளவுக்கு ஒப்படைத்துள்ளான் என்பதையும் நுணக்கமாகச் சித்தரிக்கிறது.
ஒரு மனிதனைப் பதினைந்து வாருடங்கள் தனியாக ஓர் அறையில் அடைத்து வைத்தால் அவன் மனநிலை எப்படியிருக்கும்?
ஓ-டேசு என்பவரை ஓரிரவு கடத்தி விடுகின்றனர். அவரது மனைவியும் கொல்லப்பட, அந்தப் பழியும் ஓ-டேசு மீது விழுகிறது. யார் கடத்தினார்கள், எதற்குக் கடத்தினார்கள் என்று தெரியாமல் பதினைந்து வருடம் அறையில் அடைப்பட்டு உள்ளார். அறையில் இருக்கும் தொலைக்காட்சிதான் ஒரே துணை. மனைவி கொல்லப்பட்டதையும் அதில்தான் தெரிந்து கொள்கிறார். அந்தக் கொடும் தனிமையால் அவர் பைத்தியமாகிவிடாமல் ...
ஜனாதிபதி மாளிகையின் சரித்திர அழுத்தமும், என்னுடன் விருது பெற்றவர்களின் தனிப்பெரும் சாதனைகளும் எனக்கு மீண்டும் பணிவு கற்றுத் தந்தது. இத்தகைய விழாக்களை நடத்தவேண்டிய அவசியமென்ன என்ற கேள்விக்கான பதில் எனக்குக் கிடைத்தது.
எனக்கு வழங்கப்படும் விருது என்னை பெருமைப்படுத்த மட்டுமன்று. என் மண்ணையும் பெருமைப்படுத்தும் செயல். மீண்டுமொரு குடிமகனாக என் கடமைகளை நிறைவேற்ற உறுதிமொழி அளிக்கும் விழாவாகவும் நான் இதை உணர்ந்தேன்.
தேசிய கீதம் இசைத்த பொழுது மனது ஏனோ நெகிழ்ந்தது. நான் ஒரு பெரும் விருட்சத்தின் விழுது என்பதுனர்ந்து நெஞ்சம் விம்மியது. மனத்திரையில் தேசபக்தியுள்ள என் தாய் தந்தையாரின் முகம் தோன்றி மறைந்தது. கொஞ்சம் குழந்தைத்தனமான உணர்வு என்றாலும் பிடித்திருந்தது. ஒரு சிலர் இந்தியா கிரிக்கெட் விளையாடி வென்றால் புல்லரித்துப் போவார்கள். நான் இந்தியா எத்துறையில் வென்றாலும் பூரிப்படைவேன். இன்று பல்துறை வித...
மழைதான் நம் வாழ்வின் ஆதாரம் என்பதைக் குறிக்கும் வகையில் 49ஓ படத்தின் பாடல் ஒன்று இசையமைப்பாளர் கே இசையில், 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில், “பொண்ணுங்களே இப்படித்தான்” என்ற பாடலைப் பாடிக் கவர்ந்த ஜெயமுர்த்தியின் குரலில், யுக பாரதியின் அருமையான வரிகளில் சமீபத்தில் பதிவு செய்யப்பட்டது. திரையில் கவுண்டமணி விவசாயியாகத் தோன்றி மழை வேண்டிப் பாடும் இப்பாடல் (சிங்கிள் ட்ராக்), இந்த மாதம் இறுதியில் 31ஆம் தேதி, ரேடியோ மிர்ச்சியில் வெளிவர உள்ளது. விரைவில் இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா பிரம்மண்டம்மாக நடைப்பெற உள்ளது .பாடல் வரிகள் இதோ!!
அம்மா போல அள்ளித்தரும் மழைதான்,
அவ ஆதாரமா நின்னா இல்லை குறைதான்,
அவ நட்டு வச்ச நாத்தை எல்லாம் கதிர் ஆக்குறா,
எங்க புள்ள குட்டி அத்தனைக்கும் பசி ஆத்தறா!!...