Shadow

Author: Dinesh R

தொலை தூரத்தில் அழும் குழந்தை

தொலை தூரத்தில் அழும் குழந்தை

சினிமா, திரைத் துளி
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பெரிய திரைக்கு வரும் நட்சத்திரங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருகிறது. தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடனம் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பெரும் பெயர் பெற்ற ஜாக்குலின் பிரகாஷ் தான் இப்போதைய புதிய வரவு. இணையதளங்களில் டீஸர் மூலம் பெரும் வரவேற்புப் பெற்றுள்ள 'உனக்கென்ன வேணும் சொல்லு' படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார் ஜாக்குலின். ''இந்தப் படத்தின் கதாநாயகி தேர்வு சற்றுக் கடினமாக தான் இருந்தது. வெவ்வேறு பருவங்களில் மூன்று வித்தியாசமான பரிமாணங்களில் தோன்றும் பெண்தான் என் கதையின் நாயகி. எதைப் பற்றியும் கவலைபடாத ஒரு இளம் பெண், பிரசவ வேதனை இடையே சமுதாயத்துக்கும், பொருளாதாரத்துக்கும் இடையே சிக்கித் தவிக்கும் இளம் மனைவி, உயிரோடு இருக்கும் நோயுற்ற மகன் மற்றும் ஆவியாய் பழி வாங்க சுற்றும் மகள் ஆகியோர் இடையே பரிதவிக்கும் இளம் தாய் என்ற ஒரு தேர்ந்த நடிகைக்கே சவா...
வந்தா மல விமர்சனம்

வந்தா மல விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
யாரோ ஒருவரைக் கண்டுபிடித்துக் காப்பாற்றினால், இரண்டு கோடி ரூபாய் கிடைக்குமென செயின் திருட்டில் ஈடுபடும் நான்கு நண்பர்களுக்குத் தெரிய வருகிறது. அந்த முயற்சியில், செயின் திருடர்களுக்குக் கிடைத்தது மலையா முடியா என்பதுதான் படத்தின் கதை. ஒரு காவல்துறை அதிகாரிக்கு எந்தெந்த விஷயத்திற்காகவெல்லாம் மனநலம் பாதிக்கப்படும்? இந்தப் படத்தில் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட காவல்துறை அதிகாரி உண்டு. ‘புகை பிடிக்க அரசு தடை விதித்ததால், புகை பிடிக்காமல் மனநலம் பாதிக்கப்பட்ட காவல்துறை அதிகாரி’ இளங்கோவாக வருகிறார் மகாநதி ஷங்கர். இது போன்ற சின்னச் சின்ன விஷயங்கள் படம் நெடுகும் ஈர்க்கிறது. மனநலம் பாதிக்கப்பட்ட அதிகாரியுடன் இருந்தும், நண்பர்களுக்காகப் பரிந்து பேசியும் அவஸ்தைப்படும் கான்ஸ்டபிள் பெருமாளாக கவனிக்க வைக்கிறார் செளகத். ‘கலாபக் காதலன்’ இயக்கிய இயக்குநர் இகோரின் கதாப்பாத்திரத் தேர்வுகள் அனைத்துமே கச்சிதமாக இர...
சண்டி வீரன் விமர்சனம்

சண்டி வீரன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மீண்டும் மருத நிலத்தைக் களமாக்கி திரையேற்றியுள்ளார் சற்குணம். ஓர் ஊரின் குடிநீர் ஆதாரம் மற்றொரு ஊரின் ஆளுகைக்குள் உள்ளது. அவ்விரு ஊர்களுக்கிடையில் மூளும் வெறுப்பின் முடிவென்ன என்பதுதான் படத்தின் கதை. சிங்கப்பூருக்கும் தஞ்சை, புதுகை, நாகை, திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த கிராமங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. அந்தத் தொடர்பின் பின்னணியை நேர்த்தியாக நாயகனின் அறிமுகத்துக்குப் பயன்படுத்தியுள்ளனர். ஆனால் அதன் பின் படத்தில் எந்த சுவாரசியுமும் இல்லாமல் இடைவேளையின் பொழுதே கதை தொடங்குகிறது. அதர்வா, ஆனந்தி காதல் காட்சிகள் ஈர்க்கத் தவறுவதால், படத்தில் ஒன்ற சிரமமாய் இருக்கிறது. கவுன்சிலராகவும், நாயகியின் தந்தையாகவும் லால் நடித்துள்ளார். போலிஸ் ஜீப்பை தண்ணிக்குள் தள்ளிவிட்டு, காவல்துறை அதிகாரியை எச்சரிக்கும் அளவு மிக வலுவான கதாப்பாத்திரமாகச் சித்தரிக்கப்படுகிறார். க்ளைமேக்ஸில் அந்த சித்தரிப்பு அவ...
தேசம் ஞானம் கல்வி – ரீமிக்ஸ் பாடல்

தேசம் ஞானம் கல்வி – ரீமிக்ஸ் பாடல்

Songs, காணொளிகள்
பராசக்தி படத்தில் இடம்பெற்ற, டாக்டர் கலைஞர் அவர்கள் எழுதிய "தேசம் ஞானம் கல்வி" எனும் பாடல் தற்போது சாம் டி.ராஜ் இசையில் "வந்தா மல" படத்தில் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது.
மகேஷ் பாபுவின் ஒரு லுக்..

மகேஷ் பாபுவின் ஒரு லுக்..

சினிமா, திரைத் துளி
ஸ்ரீமந்த்துடு என்ற தெலுங்குப் படம் நேரடியாகத் தமிழிலும் வெளியாகிறது. மகேஷ் பாபுவின் முதல் நேரடி தமிழ்ப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. செல்வந்தன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.கே.ராஜராஜா தமிழ் வசனங்களை எழுதியுள்ளார். வெள்ளியன்று இப்படம் வெளிவரவுள்ளது. “தமிழ் ரசிகர்களிடம் ஒரு விஷயம் பிடிக்கும். பெரிய ஹீரோ, சின்ன ஹீரோ, சின்ன படம், பெரியப் படம் என்றெல்லாம் பார்க்க மாட்டாங்க. நல்ல படங்களை ஒட வைப்பாங்க” என்றார் ஜெகபதி பாபு. மேலும், “நானும், மகேஷ் பாபுவும் சென்னையில் இருந்தவங்கதான். அங்க போய் நடிகர்கள் ஆயிட்டோம். அவருக்கு இந்தப் படத்தில் அப்பாவா நடிச்சிருக்கேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றார். “ஒரு எமோஷனலான சீன்ல ஹீரோஸ்லாம் பொதுவா ஆ..ஊ..ன்னு கத்துவாங்க. ஆனா மகேஷ் பாபு ஒரு லுக்தான் விடுவார். இதை எங்கிருந்து பிடிச்சார்னு தெரில? ஒருவேளை அவர் வொர்க் பண்ண ஆரம்பக் கால டைரக்டர்கள...
இளங்கோவன்

இளங்கோவன்

சினிமா, தொடர்
மாயலோகத்தில்.. இளங்கோவனின் இயற்பெயர் தணிகாசலம். எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த 'அம்பிகாபதி' படத்தின் வாயிலாக திரை உலகில் அடி எடுத்து வைத்தார். தமிழ் சினிமாவில் தமிழைப் பேச வைத்த முதல் வசன கர்த்தா இளங்கோவன். இவர் 'மணிக்கொடி' இலக்கியப் பத்திரிகையில் உதவி ஆசிரியராக பணிபுரிந்திருக்கிறார். சிலகாலம் 'தினமணி' பத்திரிகையிலும் உதவி ஆசிரியராக இருந்திருக்கிறார். பி.யூ.சின்னப்பா நடித்த 'கண்ணகி' படத்தின் மூலம் புகழின் உச்சிக்கே சென்ற வசன கர்த்தா. தனது படங்களுக்கு இளங்கோவன் வசனம் எழுதுவதாக இருந்தால் மாத்திரமே நடிக்க ஒப்புக்கொள்வேன் என எம்.கே.டி.பாகவதர் கண்டிஷன் போடும் அளவிற்கு விசேஷத் திறமை படைத்தவர். திரையுலகில் கலைஞர் கருணாநிதிக்கு அடுத்து எண்ணிக்கையில் அதிகப் படங்களுக்கு வசனம் எழுதிய நபர்களில் ஒருவராக இளங்கோவனைச் சொல்ல முடியும். 1937இல் ஆரம்பித்த இவரது பணி 1957 வரையிலும் நீடித்தது. சுமார் 30 திரைப...
எது சமுதாயப் பிணி?

எது சமுதாயப் பிணி?

சினிமா, திரைத் துளி
மோர்ணா அனிதா ரெட்டி சர்வதேச விளம்பரத் துறையில் மட்டுமின்றி தியேட்டர் நாடகங்களிலும் மிகவும் பிரசித்திப் பெற்றவர். இவர் தற்போது 'உனக்கென்ன வேணும் சொல்லு ' என்ற படத்தின் மூலம் அறிமுகமாகிறார். சிறிய படம் என்ற போதிலும் படமாக்கப்பட்ட விதத்திலும், கதை அமைப்பினாலும் எல்லோரையும் கவரும் 'உனக்கென்ன வேணும் சொல்லு' இந்த மாதம் இறுதியல் உலகெங்கும் வெளி வர உள்ளது. 'என்னுடைய கதாபாத்திரம் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய கதாபாத்திரம் இல்லை. நாம் அன்றாடம் சந்திக்கும் பாத்திரம் தான் என்றாலும், இயக்குநர் ஸ்ரீநாத் ராமலிங்கம் அந்தக் கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை என்னிடம் விவரிக்கும் போது அந்தப் பாத்திரத்தின் வீரியத்தைப் புரிந்து கொண்ட நான் அந்த வேடத்தில் நடிக்கப் போவது யாரென்று அவரிடம் கேட்டுக் கொண்டே இருந்தேன். கதையைச் சொல்லி முடித்ததும் தீர்மானமாகச் சொன்னார் ' நீ தான் என்று'. சற்றே தயங்கினாலும் அவர் எனக்கு...
ஆரஞ்சு மிட்டாய் விமர்சனம்

ஆரஞ்சு மிட்டாய் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இரண்டு மணி நேரத்துக்கும் பத்து நிமிடங்கள் குறைவான நீளம் கொண்ட படம். குத்துப் பாட்டுகளோ, சண்டைக் காட்சிகளோ இல்லாத படம். தனிமையில் வாடும் முதியவரான கைலாசம், தனக்கு நெஞ்சு வலியென 108 சேவைக்கு அழைத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கிறார். கைலாசத்திடம் மாட்டிக் கொண்டு, ஆம்புலன்ஸ் ட்ரைவரும் இ.எம்.டி. (Emergemcy Medical Technician) சத்யாவும் படும்பாடுதான் ஆரஞ்சு மிட்டாய் படத்தின் கதை. விஜய் சேதுபதியின் அறிமுகத்துக்குப் பின் படம் கலகலக்கத் தொடங்குகிறது. ஆனால் படம் தொடங்கிய நாற்பதே நிமிடங்களுக்குள், படத்துள் ரசிகர்கள் ஆழத் தொடங்கும் முன்பாகவே இடைவெளி வந்துவிடுகிறது. ஏன்? எதற்கு? என்ன கதை? என்ற நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்திய பின் அசலான படம் தொடங்குகிறது. அதன் பின்னும் படத்தில் கதை எனப் பெரிதாகக் கிடையாது. உயிருடன் இருக்கும்போது தன் தந்தையின் அருமையை உணராமல் போய்விட்டோமே என மனக் கிலேசத்தில் உழலும் சத்யாவுக்கு, ...
பிரபு தேவா ஸ்டுடியோஸ்

பிரபு தேவா ஸ்டுடியோஸ்

சினிமா, திரைத் துளி
நடனம், நடிப்பு, இயக்கத்தினைத் தொடர்ந்து தயாரிப்பிலும் ஈடுபடவுள்ளார் பிரபுதேவா. “சர்வதேச தரத்தில் கதையம்சம் உள்ள திரைப்படங்களை ‘பிரபு தேவா ஸ்டுடியோஸ்’ தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. தமிழ் மட்டுமல்லாது மற்ற மொழி திரைப்படங்களையும் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளோம். தமிழ்த்திரையுலகில் திறமைக்கு பஞ்சமே இல்லை. தேர்ந்த அனுபவமுடைய பலரைக் கொண்டிருக்கிறது. திறன் வாய்ந்த கலைஞர்கள், படைப்பாளிகள் மொழி, பிராந்தியம் என குறுகிய வட்டத்தில் சிக்கிக் கொள்ளக்கூடாது. அவர்கள் நாடெங்கும் சென்று தங்களது திறமையை வெளிக்காட்ட வேண்டும். நல்ல படைப்பாளிகளைத் தேர்ந்தெடுத்து வெவ்வேறு இடங்களுக்கு இட்டுச் செல்வதில் முனைப்பாகச் செயல்படும் 'பிரபு தேவா ஸ்டுடியோஸ்'" எனக் கூறுகிறார் பன்முகம் கொண்ட பிரபு தேவா....
பிள்ளை இல்லா தாய்

பிள்ளை இல்லா தாய்

சினிமா, திரைத் துளி
டெய்சி எனத் தலைப்பிடப்பட்ட படத்துக்கு உனக்கென்ன வேணும் சொல்லு என தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. "அனைவருக்கும் பரீட்சயமான ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ என்ற தலைப்பு, படத்திற்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளது. நாம் அன்றாடம் பார்த்து வரும் பிரச்சனையை இப்படத்தில் கையாண்டுள்ளோம். தாயில்லா பிள்ளையை ஏந்தும் இந்த சமூதாயம் பிள்ளை இல்லா தாயை மட்டும் பழிப்பதும், ஒதுக்குவதும் ஏனோ? என்ற கருத்தை உள்ளடக்கி இப்படத்தை எடுத்துள்ளோம். குழந்தை பெற இயலாத ஒரு படித்த இளம் பெண்ணை இந்த சமூகம் ஒதுக்கி வைப்பதால் அவள் படும் வேதனையும், வலியையும் அமானுஷ்ய சக்திகளின் பின் புலத்தில் கூறியுள்ளோம். ஆகஸ்ட் மாதம் இறுதியில் ‘உனக்கென்ன வேணும் சொல்லு’ படம் உலகெங்கும் வெளியாகவுள்ளது. படத்தைப் பிரம்மாண்டமாக வெளியிடும் ஆரா சினிமாஸ் நிறுவனத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள்” எனக் கூறினார் ‘உனக்கென்ன வேணும் சொல்லு (டெய்சி)’இயக்குநர் ஸ்ர...
மினியன்ஸ் விமர்சனம்

மினியன்ஸ் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
(Minions) வெறுக்கத்தக்க மனிதரான க்ரூவிடம் பணி புரியும் மினியன்ஸ்களை டெஸ்பிக்கபிள் மீ 1 & டெஸிபிக்கபிள் மீ 2 ஆகிய படங்களிலேயே பார்த்து விட்டோம். ஆனால் அவைகள் யார் என்ன ஏது போன்ற விவரங்கள் அப்படங்களில் சொல்லப்படவில்லை. அவர்களின் வரலாறைத்தான் மினியன்ஸ் படத்தில் சொல்லியுள்ளனர். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மிக மூத்த சின்னஞ்சிறு உயிரினங்கள்தான் நம் அழகு மஞ்சள் நாயகர்களான மில்லியன்ஸ். அவர்களின் ஒரே லட்சியம் ஒரு வில்லனைத் தங்களுக்குத் தலைவனாகப் பெற வேண்டுமென்பதே.! அதற்காக அவர்கள் அணுகாத வில்லன்கள் இல்லை. நம்மை ஜுராசிக் வேர்ல்டில் அச்சுறுத்திய டைனோசரான டி-ரெக்ஸ் முதல் செங்கிஸ் கான், டிராகுலா என எண்ணற்ற வில்லன்களை நோக்குகின்றனர். என்ன சாபமோ தெரியவில்லை, தாங்கள் தேர்ந்தெடுக்கும் தலைவர்களையே ஒவ்வொரு முறையும் ஒரு விபத்தில் மினியன்ஸே கொன்று விடுகிறார்கள். மனம் வெறுத்து, லட்சியம் நிற...