Shadow

Author: Dinesh R

கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி

கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி

சினிமா, தொடர்
மாயலோகத்தில்..கல்கி என்கிற இலக்கியவாதியை அறியாதவர்கள் தமிழ்நாட்டில் இருக்கவே முடியாது என்கிற அளவில் மிகவும் பிரபலமான தமிழ் எழுத்தாளர். வெகுஜன வாசகர்களை இவரைப்போல் தன்வசம் இழுத்தவர்கள் மிகவும் குறைவு. 1899இல் புத்தமங்கலம் எனும் ஊரில் பிறந்தார். இது மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது. படித்துக்கொண்டிருக்கும்போதே பாதியில் படிப்பை உதறிவிட்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். 1922ஆம் ஆண்டில் முதல் சிறைவாசம். விடுதலை ஆகி வெளிவந்த பின் திரு வி. கல்யாண சுந்தரனார் ஆசிரியராக இருந்த 'நவசக்தி' பத்திரிகையில் வேலைக்கு அமர்ந்தார். சிறிது காலம் சென்றபின், நவசக்தியை விட்டு விலகி, திருச்செங்கோட்டில் ராஜாஜி நடத்தி வந்த பத்திரிகை ஒன்றின் உதவி ஆசிரியராக சேர்ந்து, திருச்செங்கோடு ஆசிரமத்திலேயே வாழ்ந்து வந்தார். 1930இல் மறுபடியும் சுதந்திரப்போராட்டம், சிறைவாசம், 1932இல் விடுதலையாகி வந்த பின், எஸ்.எஸ்.வாசனின...
திருடர்கள் ஜாக்கிரதை – பொற்பந்தல் காவல் நிலையம்

திருடர்கள் ஜாக்கிரதை – பொற்பந்தல் காவல் நிலையம்

சினிமா, திரைத் துளி
விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து JSKஃபிலிம் கார்பரேஷன் மற்றும் லியோ விஷன்ஸ் கூட்டாக தயாரிக்கும் திரைப்படம் நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும். இப்படம் வரும் 24ஆம் தேதி வெளி வருகிறது. இது ஒரு முழுநீள காமெடி திரைப்படமாகும். மக்களை மகிழ்விப்பதோடு மட்டுமின்றி  வணிக ரீதியிலும் பெரும் வெற்றி பெறும் என நம்பிக்கையில் உள்ளது தயாரிப்புத் தரப்பு. அருள்நிதிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார். சிங்கம்புலி, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ புகழ் பக்ஸ், ராஜ் ஆகியோர்களுடன் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்....
கமர்ஷியல் பரிணாமத்தில் அசோக் செல்வன்

கமர்ஷியல் பரிணாமத்தில் அசோக் செல்வன்

சினிமா, திரைத் துளி
தமிழ்த் திரையுலகில் குறுகிய காலத்தில் தனக்கென இடம்பிடித்த சில கதாநாயகர்களில் அசோக் செல்வன் ஒருவர். தனது மெல்லிய புன்னகையால் காதல் நாயகனாக பல ரசிகர்களை தன் பக்கம் இழுப்பவர். முழுநீள கமர்ஷியல் பொழுதுபோக்கு திரைப்படமாய் உருவாகியுள்ள ' சவாலே சமாளி' படத்தின் வெளியீட்டை எதிர்நோக்கியிருக்கிறார். ‘கழுகு’ புகழ் சத்யசிவா இயக்கியிருக்கும் ‘சவாலே சமாளி’ படத்தில் உள்ள தனது கதாபாத்திரத்தைப் பற்றி இவ்வாறுக் கூறினார்.  “ஒரு படத்திற்கு கதையே பிரதானம் என்று திண்ணமாய் நம்புபவன் நான். நான் இது வரை ஏற்று நடித்த பாத்திரங்கள் சீரியஸ் டைப் தான். ஒரு கமர்ஷியல் படத்தில் என்னால் ஈடு செய்ய முடியுமா என்று சந்தேகம் என்னுள் எப்பவும் இருந்தது. அதே நேரத்தில் தான் 'கழுகு' இயக்குநர் சத்யா சிவாவையும், தயாரிப்பாளர் அருண் பாண்டியனையும் சந்திக்க நேர்ந்தது. அருண் பாண்டியன் சார் தயாரிக்க, சத்யசிவா இயக்க உருவாகும் 'சவாலே சமாளி' ப...
டெஸ்பிக்கபிள் மீ 2

டெஸ்பிக்கபிள் மீ 2

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
(Despicable Me 2) வெறுக்கத்தக்க மனிதரான க்ரூ, மூன்று பெண் குழந்தைகளின் பாசக்கார தந்தையாக மாறி விடுகிறார். அதுவும் சிறு வயதில் தன் தாயிடமிருந்து கிடைக்கப் பெற்ற அலட்சியமும் அசிரத்தையும், அவர் மனதிலூன்றி க்ரூவை நல்ல தகப்பனாக மாற்றி விட்டிருந்தது. அது மட்டுமின்றி, உலகின் தலை சிறந்த வில்லனாக வேண்டுமென்ற லட்சியத்தை எல்லாம் மூட்டை கட்டிவிட்டு, ஜாம் & ஜெல்லி செய்து விற்பவராக தொழிலையும் மாற்றி விடுகிறார். யாரோ ஒரு பிரகஸ்பதி, ஓர் ஆய்வுக்கூடத்தையே திருடி விடுகிறான். அவனைப் பிடிக்க, 'பாம்பின் கால் பாம்பறியும்' எனச் சொல்லி க்ரூவின் உதவியை நாடுகிறது ஏ.வி.எல். (Anti-Villian League). க்ரு வில்லனைக் கண்டுபிடிக்கும், முன் ஏ.வி.எல். அதிகாரியான லூசி வைல்ட் மீது காதலில் விழுந்து விடுகிறார். வில்லனைக் கண்டுபிடித்தாரா என்றும் அவரது காதல் என்னானது என்பதும்தான் படத்தின் முடிவு. அந்த பிரகஸ்பதியின் பெயர் எல்...
கண்ணீர் அஞ்சலி – படக்குழுவினர்

கண்ணீர் அஞ்சலி – படக்குழுவினர்

சினிமா
நடிகர்கள்:>> கருணாகரன் >> ராஜேந்திரன் >> பார்வதி நாயர் >> ஆனந்த் ராஜ் >> மனோ பாலா >> மதிவாணன்தொழில்நுட்பக் கலைஞர்கள்:>> தயாரிப்பு – S. சுப்பையா >> நிர்வாகத் தயாரிப்பாளர் – P. ராஜ்குமார் (எ) ராக்கி >> தயாரிப்பு நிர்வாகி – D. முருகன் >> இயக்குநர் – குகன் சென்னியப்பன் >> இசை – சுந்தர மூர்த்தி >> ஒளிப்பதிவு – நிகேத் பொம்மி >> படத்தொகுப்பு – கிருபாகரன் புருஷோத்தமன் >> கலை – சதிஷ்குமார் நாராயணன் >> சண்டை – “மிரட்டல்” சிவா >> உடை வடிவமைப்பாளர் – ஜேம்ஸ் ஆபிரகாம் >> மக்கள் தொடர்பு – நிகில்...
வை.மு. கோதைநாயகி அம்மாள்

வை.மு. கோதைநாயகி அம்மாள்

சினிமா, தொடர்
மாயலோகத்தில்..சென்னை திருவல்லிக்கேணியில் 1901 ஆம் ஆண்டு பிறந்தவர் வை.மு. கோதைநாயகி அம்மாள். இவரது குடும்பம் ஒரு ஆசாரமான வைஷ்ணவ குடும்பமாகும். தனது ஆறாவது வயதிலேயே திருமணமான இவர் பள்ளி சென்று முறையாகக் கல்வி பயின்றதே கிடையாது. சுய முயற்சியில் பின்னாட்களில் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு போன்ற மொழிகளில் தேர்ச்சி பெற்றார். ஆரம்பத்தல் வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஜே ஆர் ரங்கராஜு போன்று துப்பறியும் நாவல்களே எழுதி வந்த இவர், நாளடைவில் குடும்பப் பாங்கான நாவல்கள் எழுதுவதிலும் தேர்ச்சி பெற்றார். இவரது முதல் முயற்சி ஒரு நாடகம். 'இந்திர மோகனா' என்று பெயர். தமிழ் எழுதுவதற்கு முறையான தேர்ச்சி அப்போது பெற்றிருக்காத அந்நேரம், வாய்மொழியாக இவர் கூற அவரது தோழி ஒருவர் எழுதிக் கொடுத்திருக்கிறார். வை.மு. கோதைநாயகி அம்மாளின் முதல் நாவல் 'வைதேகி'. இந்நூலை பிரபல துப்பறியும் நூலாசிரியர் வடுவூர் துரைசாமி ஐயங்கார் ...
டெஸ்பிக்கபிள் மீ 1

டெஸ்பிக்கபிள் மீ 1

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
(Despicable Me 1) ‘டெஸ்பிக்கபிள் மீ’ என்றால் ‘வெறுக்கத்தக்க நான்’ எனப் பொருள் கொள்ளலாம். இந்தப் படத்தின் நாயகனான “க்ரூ” தன்னை அப்படித்தான் அழைத்துக் கொள்வார்; மற்றவர்களும் அப்படியே தன்னை நினைக்கவேண்டும் என விரும்புபவர். அவரின் வீட்டு சோஃபாவையே பெரிய முதலை வடிவத்தில் வைத்திருக்கும் கொடிய ரசனைக்காரர். க்ரூவின் அறிமுகத்தின்போதே அவரது குணத்தை அழகாக காட்டியிருப்பார்கள். அழும் சிறுவன் ஒருவனுக்கு பலூன் ஊதி அவனைச் சமாதானப்படுத்திவிட்டு, அவன் மகிழ்ச்சியுடன் பலூனின் மென்மையில் மனம் லயிக்கும்போது, அந்த பலூனை ஊசியால் குத்தி மகிழ்வார். இதுதான் க்ரூ. க்ரூவின் ஒரே லட்சியம், உலகின் ஈடியிணையற்ற வில்லன் எனப் பெயரெடுப்பதுதான். ஆனால், ‘வெக்டர்’ என்பவன் எகிப்தின் பெரிய பிரமிடான கிசாவைத் திருடி விடுகிறான். அதைக் காரணம் காட்டி, ‘எவில் வங்கி (Bank of Evil)’-இல் நமது நாயகரான க்ரூவுக்கு லோன் தர மறுக்கின்றனர். என...
கதவு தட்டப்பட்டது..!

கதவு தட்டப்பட்டது..!

நம்பினால் நம்புங்கள்
லில்லி ஆன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். 'டொக்... டொக்...' கதவு தட்டும் சத்தம் கேட்டு கண் விழித்தாள். பெட்ரூம் லைட்டைப் போட்டாள். இரவு மணி 11:55. இரவு பணிக்குப் போன தன் கணவன் நிக்சன், ஏதாவது காரணமாக வீடு திரும்பி விட்டானா என்ற சிந்தனையுடன் நைட் கவுனைச் சரி செய்துகொண்டு பெட்ரூமை விட்டு ஹாலுக்கு வந்தாள். 'நிக்சன்' - என்று குரல் கொடுத்தாள். பதில் இல்லை. இரண்டு வினாடி நிசப்தம். பிறகு மீண்டும், 'டொக்... டொக்...' 'யாரது?' - உரக்கக் கேட்டாள். இப்போதும் பதில் இல்லை. சிறிது நேர அமைதிக்குப் பின், அதே சீரான இடைவெளியில், இரண்டு முறை மீண்டும் கதவு தட்டப்பட்டது. அந்த ஏரியாவில் இரவு நேரங்களில் அவ்வப்போது திருட்டு நடப்பதை லில்லி பேப்பர்களில் படித்திருக்கிறாள். அப்போது கதவைத் திறப்பது ஆபத்து என்று நினைத்த லில்லி, தன் கணவனுக்கு ஃபோன் செய்ய முடிவெடுத்தாள். ஹாலில் இருந்து போன் செய்ய பெட்ரூமுக்குத் ...
பெற்றோர்களே இது உங்களுக்குத்தான்..!

பெற்றோர்களே இது உங்களுக்குத்தான்..!

கட்டுரை
ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் குழந்தைகளைப் புரிந்து கொள்வது என்பது சவாலான விஷயமே! ஓடி ஓடிச் சம்பாதிக்கும் நாம், நமது குழந்தைகளின் மனதைப் புரிய ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், குழந்தைகள் சிறுவயது முதல் தங்கள் முக பாவனை, நடை, பேச்சு, செயல்களின் மூலம் கருத்துக்களைப் பிரதிபலிக்கிறார்கள். விருப்பு, வெறுப்பு, செயல், புரிதல் தன்மை முதலியன குழந்தைகளைப் பொருத்து மாறுபடும். உதாரணத்திற்கு, ஒரு சில குழந்தைகளுக்கு விளையாடப் பிடிக்கலாம்; அவர்களைக் கடிந்து வேறு ஒரு செயலைச் செய்யத் தூண்டும்போது மன அழுத்தத்தை விதைத்து அவர்களது சிறிய ஆசையையும் தேக்கி வைக்கிறோம். நம் அதிகாரத்தை உபயோகித்து அவர்களது ஆசைகளை நிராகரிக்கும்போது, நம் மேல் ஒரு வெறுப்பு, பயம் வர நாமே காரணமாகிறோம். அதிகாரத் தோரணையை விடுத்து, அன்புடன் அவர்களின் கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் விளக்கம் கொடுக்கும்போது குழந்தைகள் ஏற்றுக் கொள்வார்கள். வளர...