Shadow

Author: Dinesh R

வடுவூர் துரைசாமி ஐயங்கார்

வடுவூர் துரைசாமி ஐயங்கார்

சினிமா, தொடர்
மாயலோகத்தில்..1931ல் தமிழ் சினிமா பேசத் தொடங்கியதற்குப் பிறகு எடுக்கப்பட்ட படங்களின் கதைகள் அனைத்துமே புராண இதிகாசங்களிலிருந்து உருவப்பட்டு சினிமாவாகத் தயாரிக்கப்பட்டவை. கதாகாலட்சேபம் மாதிரி பாடல்களுக்கிடையே கதையைத் திணித்துவிடுவார்கள். ஒரு படத்தில் ஐம்பது அறுபது பாடல்கள் என்பது சர்வ சாதாரணம். கச்சேரி கேட்கப்போகிறேன் என்பதற்குப் பதிலாக கச்சேரி பார்க்கப்போகிறேன் என்று சொல்லும் அளவில்தான் அக்காலப் படங்கள் இருந்திருக்கின்றன. அம்மாதிரியான சூழலில் 1935இல் 'மேனகா' என்றொரு படம் தயாரிக்கப்பட்டு வெளிவந்தது. அது சமகாலப் படம். சமூகப் படம். டி.கே.எஸ் சகோதரர்கள் முதலில் நாடகமாக நடித்துக்கொண்டிருந்ததைத் திரைப்படமாகத் தயாரித்தார்கள். இயக்குநர் அக்காலத்தில் பிரபலமாக இருந்த ராஜா சாண்டோ. கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் இப்படத்தின் மூலமாகத் திரை உலகில் பிரவேசித்தார். இந்தப் படத்தின் கதை வடுவூர் துரைசாமி ஐய...
நடன இயக்குநரின் யாளி

நடன இயக்குநரின் யாளி

திரைத் துளி
ஏ.பி. க்ரியேஷன்ஸ் (A.B Creations) சார்பில் நடிகை அக்ஷயா தயாரிக்கும் முதல் தமிழ்ப்படம் ‘யாளி’. கதையும் அவருடையதே! அக் ஷயா ஏற்கனவே “கலாபக் காதலன்”, “உளியின் ஓசை” போன்ற படங்களில் நடித்துள்ளார். அக்ஷயாவின் கதைக்கு, ‘காதல் கந்தாஸ்’ திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இவர் காதல், வெயில், அங்காடித் தெரு, எம் மகன், நான் மகான் அல்ல, டார்லிங் போன்ற படங்களுக்கு நடன இயக்குநராக பணி புரிந்தவர். கந்தாஸ் ஏற்கனவே “நீ நாதே நா” என்ற நேரடி கன்னட வெற்றிப் படத்தை இயக்கிவர். யாளி, இவருக்குத் தமிழில் முதல் திரைப்படம். இது காதல், காமெடி கலந்த த்ரில்லர் படமாம். இதில் தமன், அக்ஷயா, அர்ஜுன், மனோபாலா, ஊர்வசி ஆகியோர் நடிக்கின்றனர். முழுத் திரைப்படமும் மலேசியா நாட்டில் பினாங்கு, மலாக்கா, லங்காவி, டாப்பிங், ஜெண்டிங் மற்றும் கோலாலம்பூர் பகுதிகளில் மிகப் பிரம்மாண்டமாக படப்பிடிப்பு நடத்தவுள்ளனர்.  இசையமைப்பாளராக திரு. S...
மாரடைப்பு

மாரடைப்பு

மருத்துவம்
பெயர்: மாரடைப்பு (Mycocardial Infarction) தோற்றம்: இதயத் தொழிற்பாடு பாதிப்படைதல்காரணம்: பிராணவாயு, குளுக்கோஸ் என்பன இதயத்தசையை அடையவிடாது பாதிப்படைவதால்.. காரணிகள்: >> பரம்பரையில் இந்நோய் உடையவர்களைத் தாக்கும் >> பால் அடைப்படையில் பெண்களை விட ஆண்களுக்கு இந்நோய் வர வாய்ப்புகள் அதிகம் >> வயது கூடக்கூட நாடிச்சுவர் விறைப்பு சுவர்களின் உட்புற கொழுப்பின் ஆவு கூடுவதால்.. >> கீழைத்தேயத்தவர்கள் உணவில் கொழுப்பு அதிகம் சேர்ப்பதால் >> நீரிழிவு வியாதி உடையவர்களுக்கு அறிகுறிகள்: >> நெஞ்சை இறுக்குவது போன்ற வலி >> மூச்சுக் கஷ்டம் >> மயக்கம் >> வாந்தி >> களைப்பு >> உடல் வெளிறல் >> குருதி அமுக்கம் குறைதல் >> வியர்த்தல் >> இதயத்துடிப்புக் கூடல் >> நாடித்துடிப்பு கனவளவு குறைதல் >> சிறுநீர் க...
ஓங்காரம்…!

ஓங்காரம்…!

ஆன்‌மிகம்
ஓமெனும் ஓங்காரத்துள்ளே ஒரு மொழி ஓமெனும் ஓங்காரத்துள்ளே உருவரு ஓமெனும் ஓங்காரத்துள்ளே பலபேதம் ஓமெனும் ஓங்காரத்துள்ளே ஒண் முத்தி சித்தியே - திருமந்திரம் ஓம் என்பதே பிரணவ மந்திரம். ஓம் என்று கூறியே மந்திரங்களை ஓத வேண்டும். ஆதியில் ஓம் என்று கூறியே வேதங்களை ஓதத் தொடங்குவர். பின்னரே "ஹரி ஓம்" என்று அதை மாற்றினர். அ , உ , ம் என்ற மூன்று எழுத்துக்களே ஓம் ஆகும். வாயைத் திறப்பதன் மூலம் அ ஒலியும் உதட்டைக் குவித்தல் மூலம் உ ஒலியும் வாயை மூடுதல் மூலம் ம் ஒலியும் ஒலிக்கும். உலகில் பேசும் மொழி எதுவாயினும் அதற்கு வாயின் இம்மூன்று அசைவுகளும் இன்றியமையாததாகும். ஓம் எந்த மொழியையும் சேர்ந்ததன்று. அது பொதுவாக இறைவனைக் குறிக்கும் ஒரு மந்திர ஒலி. தமிழைப் பொறுத்தவரை "ஓ" வின் அமைப்புப் பிள்ளையாரின் யானை முகத்தை ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கது. நாம் எழுதத் தொடங்கும் பொழுது போடும் பிள்ளையார் சுழி ( உ) தான...
சகுந்தலை (1940)

சகுந்தலை (1940)

சினிமா, தொடர்
(முக்கிய நடிகர்கள்: ஜி.என்.பாலசுப்ரமணியம்; எம்.எஸ்.சுப்புலட்சுமி; என்.எஸ்.கிருஷ்ணன்; டி.ஏ.மதுரம்; டி.எஸ்.துரைராஜ்) 1940 ஆம் வருஷம் தமிழ்த்திரையுலகிற்கு ஒரு முக்கியமான வருஷம். இந்த வருஷம் வெளிவந்து பெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் மிகவும் முக்கியமான திரைப்படம் சகுந்தலை. ஆரம்ப காலங்களில் திரைப்படங்களில் கதையை விட தலையாய அம்சமாக இருந்தது அவற்றின் பாடல்கள் தாம். புதிதாகத் தோன்றியிருந்த சினிமாவை, நாடகத்தின் தொடர்ச்சியாகவே கருதினர் அன்றைய மக்கள். பவளக்கொடி, ஸ்ரீவள்ளி போன்ற அக்கால பிரபல நாடகங்களில் பாடப்பட்டுவந்த பாடல்களினால் வெகுவாகக் கவரப்பட்டிருந்த மக்கள், அதைப் போலவே திரையிலும் எதிர்பார்த்ததன் விளைவு தான் ஆரம்பகாலப் படங்களின் ஏராளமான பாடல்களுக்கான காரணமாக இருக்க முடியும். பின்னணி பாடுவது என்கிற ஏற்பாடுகள் எல்லாம் தோன்றியிராத காலம், எனவே சினிமாவில் நடித்தவர்கள் பெரும்பாலும் பாடத் தெர...
மாயலோகத்தில்

மாயலோகத்தில்

சினிமா, தொடர்
1931இல் பேச ஆரம்பித்தது தமிழ்த் திரைப்படங்கள். ஆரம்ப கால திரைப்படங்கள் அனைத்தும் புராண இதிகாசக் கதைகளையே உள்ளடக்கியதாக இருந்தன. இந்நிலையில், தமிழ்த்திரையின் முதல் சமூகப் படமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட திரைப்படம் 'மேனகா'. என்.எஸ்.கிருஷ்ணன் அறிமுகமான இத்திரைப்படத்தைத் தயாரித்தவர்கள் டி.கே.எஸ்.சகோதரர்களின் 'ஸ்ரீ சண்முகானந்தா டாக்கீஸ் கம்பெனி'. இது 1934இல் வெளிவந்தது. இக்கதையின் ஆசிரியர் வடுவூர் துரைசாமி ஐயங்கார். இவர் அக்காலத்தில் வெகுஜன ரசிகர்களால் நன்கு படிக்கப்பட்ட பல துப்பறியும் நாவல்களின் ஆசிரியர். எனவே திரைப்படம் சென்ற முதல் எழுத்தாளர் என்கிற பெருமை இவருக்கே உரியது. இவரைத் தொடர்ந்து பல எழுத்தாளர்கள் திரைத்துறைக்குள் நுழைந்தார்கள்; அல்லது அந்த எழுத்தாளர்களின் படைப்புக்கள் திரையில் பயன்படுத்தப்பட்டன. ஆரம்ப காலங்களில் திரைத்துறையில் நடப்பவைகள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டன. படப்பிடிப்பு நிலையங...
மர்மமாய் மறைந்த நதி

மர்மமாய் மறைந்த நதி

நம்பினால் நம்புங்கள்
சரஸ்வதி நதி இருந்ததாகப் பண்டைய புராணங்கள், வேதநூல்கள் அனைத்தும் ஆணித்தரமாகக் கூறுகின்றன. ஆனால் அந்த நதி தற்போது எங்கிருக்கிறது என்பது யாருக்கும் தெரியாத ரகசியமாக உள்ளது. அது பூமிக்கடியில் இன்றும் பாய்ந்து கொண்டிருப்பதாக ஒரு கருத்து வலுவாக இருந்தாலும் அதற்கு மாற்றுக் கருத்தும் இருக்கத்தான் செய்கிறது. மிகப் பழமையான இந்த மத நூல்களில் முதன்மையானதாகக் கருதப்படுவது ரிக்வேதம் ஆகும். அதில் சரஸ்வதி நதியைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நதி யமுனை நதிக்குக் கிழக்கிலும், சட்லெஜ் நதிக்கு மேற்கிலும் இருந்ததாக அதில் கூறப்பட்டுள்ளது. ஆக இவ்விரு நதிகளுக்கும் இடையே சரஸ்வதி நதி இருந்தது இதன்மூலம் நிரூபணமாகிறது. ரிக்வேதத்தின் நான்காவது பாதம் தவிர பிறவற்றில் சரஸ்வதி நதி பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ரிக் வேதத்திற்குப் பிந்தைய நூல்கள் பல சரஸ்வதி நதியின் மறைவைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. யஜூர் வேதத...
ஒரு கதையின் கதை | Krishnan Nambi

ஒரு கதையின் கதை | Krishnan Nambi

கட்டுரை, புத்தகம்
தமிழ் இலக்கிய உலகிலிருந்து அனேகமாக மறக்கப்பட்டுவிட்ட ஒரு சிறந்த சிறுகதையாசிரியர் கிருஷ்ணன் நம்பி. மிகக் குறைவாகவே எழுதி, மிகக் குறைவான வாசகர்களையே சென்றடைந்தவர் இவர். இவரது ‘மாஸ்டர் பீஸ்’, 1974 இல் எழுதப்பட்ட ‘மருமகள் வாக்கு’ எனும் சிறுகதை. (ஓவியம்: கார்த்திகேயன் சுகுமாரன்) அசோகமித்திரன் இக்கதையை ‘கணையாழி’ ஆசிரியராக, கையெழுத்துப் பிரதியில் படிக்கும்போதே, ஒரு மகத்தான படைப்பு என்று தனக்குப் பட்டதாகப் பதிவு செய்திருக்கிறார். எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் ஒரு கட்டுரையில்.. பொப்புத்தி, ஆதிக்கக் கலாச்சாரம் என்று கலாச்சாரத் தளத்தில் மக்களின் மனங்களைத் தகவமைக்கும் அரசியலைப் பற்றியெல்லாம் இன்று நாம் பேசத் தொடங்கியுள்ளோம். இதையெல்லாம் விளக்கமாகப் புரிய வைப்பதற்கு கிருஷ்ணன் நம்பியின் ‘மருமகள் வாக்கு’ ஒரு கதை போதும் என்கிறார். இக்கதையை மேலும் பல இலக்கியவாதிகள் மிக உயர்வாகச் சொல்லுகிறார்கள். இக்கதை பி...
பழைய பயோஸ்கோப்

பழைய பயோஸ்கோப்

சினிமா, தொடர்
'பயாஸ்கோப்' என்றதும் பயாஸ்கோப் காலத்திற்குப் போய்விடவேண்டாம். பழைய திரைப்படங்களைக் குறிக்கும் குறியீட்டுச் சொல்லாகவே இந்தத் தலைப்பு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இத்தொடரில் 1940 தொடங்கி 1960 முடிய மொத்தம் ஐம்பது திரைப்படங்களைப் பற்றிய முழுமையான குறிப்புகள் இடம்பெறுகின்றன. ஆரம்பகால திரைப்படங்கள் பற்றிய நமக்குக் கிடைக்கும் செய்திகள் போதுமானதாக இல்லை. திரைப்படம் சார்ந்து எழுதிய சில எழுத்தாளர்களும் ஏராளமான புள்ளி விவரங்களையே தந்து சென்றிருக்கிறார்கள். சிலர் கதையை மட்டும் எழுதியிருக்கிறார்கள். 'ராண்டார்கை', ஹிந்துவில் எழுதி வரும் திரைப்படம் பற்றிய கட்டுரைகள் முக்கியமானவை. அவைகள் மிகச் சுருக்கமாக இருக்கின்றன. நினைவில் வைத்துக் கொள்ள தேவையில்லாத தோல்வியுற்ற படங்களைப் பற்றியும் ஏனோ எழுதி வருகிறார்! பழைய வெற்றி பெற்ற திரைப்படங்கள் பற்றி சற்று விரிவாக (விமர்சனம் அல்ல) எழுதிப் பார்க்கவேண்டுமென்று தோன...
லாஸ் வேகஸ்

லாஸ் வேகஸ்

கட்டுரை
எந்த முகூர்த்தத்தில் எங்கள் ஊருக்கு ‘ஆல்பனி’ என்று பேர் வைத்தார்களோ தெரியவில்லை, வருடத்தின் முக்கால் வாசி நாட்களுக்கும் மேலாய்க் கொட்டும் பனியும், நடுங்கும் குளிருமாய் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. அதிலும் டிசம்பர் மாதப் பனியைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். போன வருட டிசம்பர் மாத பனியிலிருந்து சில நாட்களாவது தப்பிக்க என்ன செய்யலாமென யோசித்த போதுதான், குளிர் குறைவான லாஸ் வேகஸ் பயணத்திட்டம் உதித்தது. கல்லூரி விடுமுறையில் வீட்டுக்கு வந்த மகளுக்கு இந்தப் பயணத்திட்டம் பிடித்துப் போக மகனுக்கு அத்தனை இஷ்டமில்லை. ”ஏம்ப்பா, சரியா டிசம்பர் 25, கிறிஸ்துமஸ் அன்னிக்கே கிளம்பனுமா? எனக்கு கிறிஸ்துமஸ் கிப்ஃட் இல்லையா?? அடுத்த நாள் போகலாமே....” என சுணங்கியவனிடம், “இதுதான் இந்த வருட கிறிஸ்துமஸ் பரிசு” என்று சொன்னதில் மிகவும் கடுப்பாகி விட்டான். ஒரு வழியாகப் பேசி, உனக்கான கிஃப்ட்டை இந்தவருடம் சாண்டா ஆன்லைனில...
நாம் ஏன் பால் அருந்த வேண்டும்?

நாம் ஏன் பால் அருந்த வேண்டும்?

மருத்துவம்
பாலில் பெரும்பாலும் பசும்பால் அல்லது எருமைப் பால் பயன்படுத்தப்படுகின்றன. அரிதாக ஆட்டின் பாலையும் அருந்துகின்றனர். பாலைப்போல் சத்துள்ள உணவு வேறொன்றும் இல்லை. தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு பசும்பாலே தாய்பால். பசும்பால் எளிதில் ஜீரணமாகும். எனவே குழந்தைகளுக்கு பசுவின் பாலே சிறந்ததாகும். பல ஆயுர்வேத மருந்து உண்பவர்களுக்கு பசும்பாலே பரிந்துரைக்கப்படுகிறது. நமது உடலுக்குத் தேவையான புரதம், கனிய உப்புக்கள், கொழுப்பு, கேல்சியம், உயிர்ச்சத்து வகைகள் என்பன அனைத்தும் பாலில் அடங்கியுள்ளன. அதனால் அனைவரும் நாள்தோறும் பிரதான உணவு வகைகளுக்கு மேலதிகமாகக் குறைந்தது ஒரு கோப்பை பாலாவது அருந்த வேண்டும். உடலின் சூட்டைப் பாதுகாக்க கொழுப்பு வேண்டும். அதுவும் பாலில் நிரம்ப உள்ளது. விசேஷம் என்னவென்றால் இதிலுள்ள கொழுப்பு எளிதில் செரிமானம் அடையக் கூடியது. பாலைக் காய்ச்சும்போது மேலே ஆடை படிகிறதல்லவா? அதுதான் க...
82 வயது அம்மணி

82 வயது அம்மணி

சினிமா, திரைத் துளி
இயக்குநர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கும் மூன்றாவது படமான அம்மணியை, ‘டேக் எண்டர்டெயின்மென்ட் (Tag Entertainment)’ நிறுவனர் திரு. வெண் கோவிந்தா தயாரிக்கும் இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் முழு வேகத்தில் நிறைவுற்று வருகிறது. படத்தைப் பற்றிப் பேசிய தயாரிப்பாளர், “நிஜ வாழ்க்கை கதாப்பாத்திரத்தை அடிப்படையாய்க் கொண்டது இக்கதை. ஒவ்வொரு மனித வாழ்க்கையும் மனிததத்தின் சம நிலையை பேணுவதற்காகவே என்ற அற்புதமான எண்ணத்தின்பால் அமைந்ததே ‘அம்மணி’. இத்தகைய நல்ல கதையை எனக்கு கொடுத்த எனது இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி.  ‘விண்ணைதாண்டி வருவாயா’ படத்தில் நடித்த சுப்புலட்சுமி பாட்டி இப்படத்தில் முதன்மைக் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். பகல் இரவென பாராமல் பரபரவென ஷூட்டிங்கில் உற்சாகத்துடன் இருப்பார். பாட்டி என்றழைத்தால் பிடிக்காத 82 வயதான இந்நடிகை அவரை ‘‘அக்கா’ன்னு கூப்பிடுங்க’ என்பார். அவரது உற்சாக...