
காவு வாங்கும் புகையிலை
அக்டோபர் 27. முகேஷ் ஹரானே இறந்த தினம். இன்றோடு நான்காண்டுகள் நிறைவாகிறது. அவர் இறக்கும் பொழுது அவர் வயது 24. திரைப்படங்களில் வரும் நாயகர்களுக்கு எந்தவிதத்திலும் குறைந்தவர் அல்லர் அவர். இளம் வயதிலேயே வேலைக்குச் சென்று, தனது தம்பியைப் படிக்க வைத்துள்ளார். திணறடிக்கும் ஏழ்மை நிலையிலும், விழிப்புணர்வு விளம்பரங்களுக்கு பணமேதும் வாங்கிக் கொள்ளவில்லை முகேஷ். இன்று நாயகர்களாகத் திரையில் சித்தரிக்கப்படும் கதாபாத்திரங்களை விட மிகவும் உயர்ந்தவர் முகேஷ்.ஓர் ஆண்டுக்கு சுமார் 1,30,000 பேர் இந்தியாவில், வாய் புற்றுநோயால் இறக்கிறார்கள். புகையிலை உபயோகிப்பவர்களுக்கு புற்றுநோயின் தீவிரம் பற்றிய புரிதல் சரியாக இருப்பதில்லை. ‘புற்றுநோய் தானே.. வந்தா பார்த்துக்கலாம்’ என்ற அலட்சியமே மேலோங்கியிருக்கிறது. எதையும் தாங்கிக் கொள்ளலாம் என இளமை தரும் உடல்வலு காரணமாக இருக்கலாம்.சிகரெட் பிடிப்பவர்களின் அருகி...
















