Shadow

Author: Dinesh R

கல்லா கட்டப்படும் சித்தர்களின் மூச்சுக் கலை

கல்லா கட்டப்படும் சித்தர்களின் மூச்சுக் கலை

கட்டுரை, சமூகம்
“நம்மிடம் ஒரு பொருள் இருந்து, அதை நாம் உபயோகிக்கா விட்டால்.. அந்தப் பொருள் நம்மிடம் இல்லாததற்கு சமம்.” இந்த அற்புத தத்துவத்தை சொன்னது எந்தவொரு மேதையும் இல்லை. ஏவாளை வழிக்குக் கொண்டு வந்து ஆப்பிளைச் சாப்பிட வைக்க சாத்தான் சொன்னது. அதையே இப்ப நான் உங்களுக்கு சொல்கிறேன்.நம்மிடம் உள்ளது என்ன?“என்ன வளமில்லை இந்த தமிழ்நாட்டில்” என நான் பாட்டாவே படிச்சிடுவேன். சரி வேணாம் விடுங்க. சித்தரியல் என்ற அரிய விஷயம் நம் முன்னோர்கள் நமக்கு விட்டுப் போன பெரும் கொடை. சித்தர்கள் தான் உலகின் முதல் விஞ்ஞானிகள் என ஆதாரங்களுடன் நிருபித்தாலும்.. அதை சந்தேகிக்க தான் துணை புரிகிறது மெக்காலே கல்வித் திட்டம். நம்ம நம்பிக்கைகள் இப்படிப் பாதாளத்தில் இருக்க.. பாபா ராம்தேவ்வும், ஸ்ரீலஸ்ரீயும் அதில் நம்பிக்கை வைத்து கோடிகளில் உழல்கின்றனர். அப்படி நாம் கோடிகளில் உழலா விட்டாலும் கூட, மகிழ்ச்சியாகவும் ஆரோக்கி...
சுய புகழோ, சுய விளம்பரமோ வேண்டாம்- ‘அஜீத்’ ஆரம்பம்

சுய புகழோ, சுய விளம்பரமோ வேண்டாம்- ‘அஜீத்’ ஆரம்பம்

சினிமா, திரைத் துளி
சுய விளம்பரம் செய்யும் வகையில்  வரும் தலைப்பையோ, சுய புகழ் பாடும் தலைப்பையோ வைக்க கூடாது என்று தயாரிப்பாளரிடமும் இயக்குநரிடமும்  அஜீத் குமார்  கோரிக்கை வைக்க, கதையின் கருவுக்கு ஏற்றவாறு தலைப்பு பரிசீலிக்கப்பட்டது.தலைப்பு வைக்கப்படாத படமென, படத்தின் ஒவ்வொரு அசைவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது. இது வரை எந்த ஒரு படத்துக்கும் 'தலைப்பு' குறித்து இப்படி ஒரு விவாதமோ எதிர்பார்ப்போ இருந்ததில்லை. ஸ்ரீ சத்ய சாய் மூவீஸ் சார்பில் A.ரகுராமன் தயாரிப்பில் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத் குமாரின் நடிப்பில் வெளிவர உள்ள படத்துக்கு ஆரம்பம் என  பெயர் சூட்டப்பட்டுள்ளது. நடிகர்கள்:>> அஜீத்  >> நயன்தாரா >> ஆர்யா >> ராணா டகுபதி >> தாப்ஸி >> கிஷோர் >> அதுல் குல்கர்னி >> மகேஷ் மஞ்சுரேக்கர் >> சுமா ரங்கநாத்பணிக...
கிரிமினல்களாக யாரும் பிறப்பதில்லை”- கஸ்தூரிராஜா

கிரிமினல்களாக யாரும் பிறப்பதில்லை”- கஸ்தூரிராஜா

சினிமா, திரைத் துளி
தனுஷ் நடித்த  3  படத்தைத்  தொடர்ந்து ஆர்.கே.ப்ரொடெக்ஷன்ஸ்(பி) லிட். பட நிறுவனம் சார்பாக விஜயலட்சுமி கஸ்தூரிராஜா தயாரிக்கும் படத்திற்கு “காசு பணம் துட்டு “ என்று பெயரிட்டுள்ளனர்.கஸ்தூரிராஜா இயக்கத்தில் “அசுரகுலம்” என்ற பெயரில் தயாரான படமே “காசு பணம் துட்டு” என்ற பெயர் மாற்றத்துடன் வெளிவர உள்ளது. இதே பெயரில் மலையாளத்திலும் இப்படம் தயாராகியுள்ளது. இந்தப் படத்தில் மித்ரன் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக சானியா மற்றும் மும்பையைச் சேர்ந்த சுயோசா சாவந்த் ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் பாலா என்ற புதுமுகம் நடிக்கிறார் மற்றும் வினோத், மினடிஸ், அஜீத்ராஜா ஆகியோர் நடிக்கிறார்கள்.“சென்னை குடிசைப் பகுதி மக்களின் யதார்த்த வாழ்க்கை இது. குடிசை பகுதிகளில் வாழும் மக்களை இந்தச் சமூகம் என்ன மாதிரியான நிலைமையில் வைத்திருக்கிறது?பிறக்கின்ற குழந்தைகள் யாரு...
மனுஷ்ய புத்திரனைப் போல கவிதை எழுதுவது எப்படி?

மனுஷ்ய புத்திரனைப் போல கவிதை எழுதுவது எப்படி?

கட்டுரை, சமூகம்
எங்கயாவது ஒரு டாக்டர் டிவி-ல போய் உட்கார்ந்துகிட்டு வாஸ்து படி வீடு எப்படி கட்டுறதுன்னு கருத்து சொல்ல முடியுமா? ஆனா ஒரு கவிஞனா இருந்தா எதுக்கு வேணும்னாலும் கருத்து சொல்லலாம். சாதி பிரச்சினையில இருந்து சாம்பார்ல உப்பு குறைஞ்சா என்ன பண்றதுங்கற வரைக்கும் எல்லாத்துக்கும் தீர்வு சொல்ற ஒரே தகுதி.. இந்தக் கவிஞர்களுக்குத்தான் இருக்கு.அதுனால நீங்களும் கவிஞர் ஆகறீங்க. எப்படி? அதுக்குத்தான் இந்தப்பதிவு.முதலில் கவிதை எழுதனும்னு தீர்க்கமா ஒரு முடிவு பண்ணுங்க. ஆமா கவிதை எழுதணும்னு முடிவு பண்ணின உடனே, கொலதெய்வம் கூகிளாண்டவரை மனசுல நிறுத்தி அவர்கிட்ட கோரிக்கை வச்சிட்டா.. அவர் அள்ளிக்கோ, அள்ளிக்கோன்னு கொடுத்துருவார்.உதாரணம் - http://www.poemhunter.com/poems/alone/இதைப் போல நாலைந்து வெப்சைட்.. ஹைக்கூ கவிதைகள் உள்ள வெப்சைட்ல நமக்கு என்ன வேணுமோ அதை எடுத்து, மறுபடியும் கூகிளாண்டரை கும்பிட்டு ட்...
இது நம்ம ஊருங்க!!

இது நம்ம ஊருங்க!!

கட்டுரை, மற்றவை
நம்ம ஊர். அது என்ன ஊர்? "கோயம்புத்தூர்." கோயம்புத்தூரின் பெயர்க்காரணம் தெரியுமா உங்களுக்கு?நம்ம கவியரசர் கண்ணதாசன் அவர்கள் சொல்லும் விளக்கத்தினைப் பாருங்களேன்.கன்னியரின் இதழழகை கோவையென்பார்!கனிமழலை முழுவடிவை கோவையென்பார்!தேன்தமிழில் திருக்கோவை நூலொன் றுண்டு. திறமான கவிதொகுத்த கோவை யுண்டு.இந்நகரை “கோவை” என ஏனழைத்தார்?எழில்கோயம் புத்தூர் என்றேன் படைத்தார்?என்கருத்தை யான்சொல்வேன்! தமிழறிந்தோர் இதுதவறென் றுரைத்தாலும் தவறே யாக!வஞ்சியர்கள் விளையாடும் வஞ்சி நாட்டின் மன்னருக்கு மக்களென இருவர் வந்தார்.செஞ்சரத்து வில்லவனாய் வடபாற் சென்ற செங்குட்டுவன் ஒருவன். தமிழெடுத்து அஞ்சிலம்பை யாத்தணித்த இளங்கோ அண்ணல் அடுத்தொருவன்.இவ்விருவர் குறிப்பும் பார்த்து பிஞ்சுமகன் அரசாவான் என்றுரைத்தான் பேதையொரு வேதாந்தி.அதனைக்கேட்டு முன்னவனே நாடாள...
தலைவா இசை – ஒரு பார்வை

தலைவா இசை – ஒரு பார்வை

இசை விமர்சனம், சினிமா
முதல் முறையாக இளைய தளபதி விஜய்யின்  படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஜீ.வி.பிரகாஷ். மதராசபட்டினம், தெய்வத்திருமகள், தாண்டவம் படத்தினை தொடர்ந்து தலைவா படத்திலும் இயக்குனர் விஜயுடன் கை கோர்த்துள்ளார். ஜீ.வி.பிரகாஷ், விஜய்  ரசிகர்களின் எதிர்பார்ப்பை தன்னுடைய இசையால் பூர்த்தி செய்திருக்கிறாரா என்று பார்ப்போம். நா.முத்துக்குமாரின் வரிகளில் படத்தில் மொத்தம் 5 பாடல்கள். 1. பாடல் - தமிழ் பசங்க  பாடியவர்கள் - பென்னி டயால், ஷீஷே - சைகோ யூநிட்தமிழனாக இருப்பதின் பெருமையை வெளிப்படுத்தும் பாடல். வெஸ்டெர்ன் இசையில் ஒரு உற்சாகமான பாடல். இப்படத்தில் "டான்சராக" நடிக்கும் விஜய்க்கு, தன்னுடைய நடனத்தை வெளிப்படுத்த ஏதுவாக இப்பாடல் இருக்கும் என்று தோன்றுகிறது.2. பாடல் - யார் இந்த சாலையோரம்  பாடியவர்கள் - ஜீ.வி பிரகாஷ், சைந்தவி "யார் இந்த சாலையோரம்"...
“ராமைய்யா வஸ்தாவையா” – ஸ்ருதிஹாசன்

“ராமைய்யா வஸ்தாவையா” – ஸ்ருதிஹாசன்

சினிமா, திரைத் துளி
ஸ்ருதிஹாசன் நடிக்கவிருக்கும் அடுத்த இரண்டு படங்களின் பெயருமே, 'ராமைய்யா வஸ்தாவையா (Ramaiya Vastavaiya)' தான்.ஆனால் இரண்டுமே தமிழ்ப்படங்கள் இல்லை. ஒன்று பாலிவுட்டில். இன்னொன்று டோலிவுட்டில். ஆனால் இரண்டு படமுமே கிராமத்தில் நடப்பதாகவே கதையம்சம் கொண்டது.ஹிந்திப் படத்தில், நாணம் மிகுந்த கிராமத்துப் பெண்ணாக நடிக்கிறார். இப்படம் தெலுங்கில் பிரபுதேவாவால் தமிழில் 20005 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. சித்தார்த்தும், த்ரிஷாவும் நடித்திருந்தனர. அதே படம் தமிழில், ஜெயம்ரவி த்ரிஷா நடிக்க ரீ-மேக் புகழ் ராஜா இயக்கத்தில், 'சம்திங் சம்திங்' என வெளியானது. எட்டு வருடங்களுக்குப் பின், பிரபுதேவாவே தன் படத்தை ஹிந்தியில் ரீ-மேக்குகிறார். இப்படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு ஜோடியாக கிரிஷ் குமார் நடிக்கிறார்.ராமைய்யா வஸ்தாவையா என அதே தலைப்புக் கொண்ட தெலுங்குப் படத்திலோ, அதற்கு எதிர்மாறான முரட்டுத்தனம் மிகுந்த ப...
கற்பழிக்கப்படும் மைனர்கள்

கற்பழிக்கப்படும் மைனர்கள்

கட்டுரை, சமூகம்
2007 - 5,045 2008 - 5,446 2009 - 5,336 2010 - 5,484 2011 - 7,112 2012 - 8, 541கடைசி ஆறாண்டில், இந்தியாவில் கற்பழிக்கப்பட்டுள்ள மைனர்களின் எண்ணிக்கை என National Crime Records Bureau (NCRB) வெளியிட்டுள்ள அறிக்கை இது.*டெல்லியில் மட்டும் எப்பொழுதும் 300க்கு குறையாமல் போலீசாரிடம் வழக்குகள் பதியப்படுமாம். 2012 இல் 415 வழக்குகள் பதியப்பட்டிருக்காம்.*எப்பொழுதும் மத்தியப் பிரதேசம் தான் முதலிடமாம் (2008 இல் மட்டும் உத்திரப் பிரதேசம் முதலிடம் பெற்றுள்ளது).2012 இல் கொல்லப்பட்ட மைனர்களின் எண்ணிக்கை: 1,597உத்திரப் பிரதேசம் - 449 மகாராஷ்டிரா - 201 பீகார் - 128 டெல்லி - 39 (ஜம்மு & காஷ்மீரில் மட்டும் எந்த மைனரும் கொல்லப்பட்டதாக வழக்கு பதியப் படவில்லை.)2012 இல் சிசுக்கொலை: 81மத்தியப் பிரதேசம் - 17 (2007 இல் 61) உத்திரப் பிரதேசம் - 14  மகாராஷ்டிரா - 11(200...
“என் பெயரில் மோசடி” – பிரபு சாலமன்

“என் பெயரில் மோசடி” – பிரபு சாலமன்

சினிமா, திரைத் துளி
இயக்குநர் பிரபுசாலமன் பெயரை சொல்லி பிரபல சினிமா இயக்குநர்களிடமும் நடிகர்கள் நடிகைகளிடமும், " 'நான் பிரபு சாலமன் பேசுகிறேன். என் உறவினரின் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை. நான் இரண்டு லட்சம் கொடுத்துள்ளேன் மீதி மருத்துவச் செலவிற்காக உங்களால் முடிந்த பணத்தை கொடுத்து உதவுங்கள் என்று சொல்லி லட்சக் கணக்கில் பணம் கேட்டுள்ளனர். பணத்தை வங்கிக்கணக்கில் போடுங்கள்' என்று கூறி ஏமாற்றி உள்ளனர். அதை நம்பி சில சினிமா பிரபலங்கள் அந்த வங்கிக்கணக்கில் பல லட்சம் பணம் போட்டுள்ளனர். என் பெயரை சொல்லி ஏமாற்றுகின்றனர்.  அதை யாரும் நம்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அப்படி யாரவது கேட்டால் பணம் கொடுக்கவேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இதுபோல் தயாரிப்பாளர் காஜா மொய்தீன் மற்றும் வேதம்புதிது கண்ணன், நடிகர் சாந்தனு ஆகியோரின் பெயரைப் பயன்படுத்தி மோசடி செய்துள்ளனர். அதை செய்த நபர்தான் என் ...
“குட்டிப் பயலே, எதை தேடி நீ ஓடுற?” – சிம்பு

“குட்டிப் பயலே, எதை தேடி நீ ஓடுற?” – சிம்பு

சினிமா, திரைத் துளி
சிம்பு  செய்தியில்  இல்லாத நாளே இல்லை! தனது ஆன்மீகப் பயணம், அவர் படங்கள் குறித்த சர்ச்சை என்று  செய்தியில் நிறைந்த வண்ணம் இருப்பார். இப்போது அவருக்கு பிடித்தமான, தோதுவான களத்தில் மீண்டும் இறங்குகிறார். அதாவது தானே பாடல் எழுதி, தன்னுடைய குரலிலேயே பாடவும் உள்ளார். தான் நடிக்கும் படங்களுக்கு மட்டுமே இவ்விரண்டையும் சிம்பு செய்வது வாடிக்கை. தற்போது தன்னுடைய நண்பரும் தயாரிப்பாளரும் நடிகருமான வி.டி.வி.கணேஷ் தயாரித்து நடிக்கும் படத்தில் ஒரு முக்கியமான பிரதானமான பாத்திரத்தில்  நடிப்பதோடு, கதை விவாதத்திலும் கலந்துக் கொள்கிறார்.  பெரும் ஈடுப்பாட்டுடன் இருந்து வரும் சிம்பு தொடர்ந்து தனது பங்களிப்பாக ஒரு பாடலை இயற்றி சொந்த குரலில் பாடவும் செய்து உள்ளார். அவர் இயற்றிப் பாடிய பாடல் வரிகள் இதுதான்.'குட்டிப் பயலே.. குட்டிப் பயலே.. எதை தேடி நீ ஓடுற?சுட்டிப் பயலே.. ...
ஓடும் ட்ரெயினில் இருந்து குதித்த மிஷ்கின்

ஓடும் ட்ரெயினில் இருந்து குதித்த மிஷ்கின்

சினிமா, திரைத் துளி
தனது தயாரிப்பு நிறுவனமான 'லோன் வொல்ஃப் (Lone wolf)' என்கிற தயாரிப்பு நிறுவனத்துக்குக்கு, இயக்குநர் மிஷ்கின்  இயக்கி  நடித்து வரும் படம் 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' என்பது எல்லோரும் அறிந்த விஷயமே! வழக்கு எண்: 18/9 இல் நாயகனாக நடித்த ஸ்ரீ, ஆட்டுக்குட்டி குணம் கொண்ட கதாபாத்திரத்திலும், மிஷ்கின் ஓநாயின் குணாதிசயம் கொண்ட கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர்.இப்படத்தின் 'ஃபர்ஸ்ட்  டீசர்' சமீபத்தில் வெளியானது. அதில் ஓடும் ட்ரெயினில் இருந்து மிஷ்கின் குதிப்பது போலொரு காட்சி வருகிறது.இது பற்றி இப்படத்தின் ஃபைட் மாஸ்டர் 'பில்லா' ஜகன், ''ரயில் வேகம் காரணமாகவும் அதன்  தண்டவாளத்தை ஒட்டி நிறைய தூண்களும் கம்பங்களும் இருந்ததால் இக்காட்சியை டூப் வைத்து செய்து விடலாம் என நினைத்தேன். ஆனால் மிஷ்கினோ 'தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதால் இதை நான் தான் பண்ணுவேன்' என பிடிவாதமாகக் கூ...
“எல்லோரையும் கவர வேண்டும்” – கணேஷ் வெங்கட்ராமன்

“எல்லோரையும் கவர வேண்டும்” – கணேஷ் வெங்கட்ராமன்

சினிமா, திரைத் துளி
அறிமுகமான  'அபியும் நானும்' முதல் கமலஹாசன் மோகன்லால் நடிப்பில் உருவான 'உன்னை போல் ஒருவன்', வெளி வர இருக்கும் 'தீயா வேலை செய்யணும் குமாரு', 'சந்திரா' முதல் 'எங்கேயும் எப்போதும்' சரவணன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் லிங்குசாமியின் 'இவன் வேற மாதிரி' உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரமாக நடிக்கும் கணேஷ் வெங்கட்ராமன், "நல்ல கதாபாத்திரங்கள் கிடைப்பது அரிது. அதிலும் நல்ல இயக்குனர், நல்ல தயாரிப்பு நிறுவனம் என்ற கூட்டணியுடன் அமைவது  என்பது அறிய வரம். எனக்காக படம் ஓடும் காலம் வரும் வரை ஓடும் படத்தில் நடிக்க வேண்டும் என்பதே  என் குறிக்கோள். மேற்கூறிய ஒவ்வொரு படத்திலும் என்னுடைய கதாபாத்திரம் ஒன்றுக்கொன்று வித்தியாசம் காட்டும். இணை நாயகன், துணை நாயகன் என இல்லாமல் படம் பார்க்கும் எல்லோரையும் என் கதாபாத்திரம் கவர வேண்டும். அதுதான் என் உண்மையான வெற்றி. மக்கள்  மத்தியில் என் மு...
“கமல் என் குரு” – பேராசிரியர் கு.ஞானசம்பந்தம்

“கமல் என் குரு” – பேராசிரியர் கு.ஞானசம்பந்தம்

சினிமா, திரைச் செய்தி
மு.கு.: “கேரள நாட்டிளம் பெண்களுடனே” – இசை வெளியீட்டு விழாபூ படத்தின் இசையமைப்பாளரான எஸ்.எஸ்.குமரன், “கேரள நாட்டிளம் பெண்களுடனே” என்ற படத்தை தயாரித்து இயக்குகிறார். வைரமுத்துவின் வரிகளுக்கு அவரே இசையமைத்தும் இருக்கிறார். இந்தப் படத்தில் நாயகனுக்கு தந்தையாக நடித்திருக்கும் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், “பேசிய அனைவரும் என் அருமை நண்பர் வைரமுத்துவை விழா நாயகன் என சொல்றாங்க. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனா உண்மையான நாயகன் எஸ்.எஸ்.குமரன் தான். குடும்பத்தோடு கொண்டாடும் விழாக்கள், இப்ப தமிழர்களிடமிருந்து மறைந்து விட்டது. இந்தப் படம் அந்தக் குறையைப் போக்கும். குடும்பத்தோடு அனைவரும் வந்து பார்க்கும்படியான படமிது. தமிழர்கள் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தவங்க. நான் பெங்களூரில் ஒரு நண்பரிடம், “தனியா இருக்கீங்களா கூட்டுக் குடும்பமா இருக்கீங்களா!?” எனக் கேட்டேன். “கூட்டுக் குடும்பமா...
அனைகா – பலம் வாய்ந்தவள் | நிறைவானவள்

அனைகா – பலம் வாய்ந்தவள் | நிறைவானவள்

சினிமா, திரைத் துளி
"இந்தியாவில் பிறந்தாலும் ஹாங் காங்கில் ஒரு பிரபல கட்டடக் கலை  அதிபரின் ஒரே மகளான நான் இந்தியாவுக்கு வந்திருந்த போது..  என் தோழியுடன்   மும்பையிலுள்ள ஒரு உயர்ந்த கட்டடத்தின் லிப்ஃடில் இயக்குநர் ராம் கோபால் வர்மாவை  சந்திக்க நேர்ந்தது. என்  தோழி அவர் தான் RGV  என அறிமுகபடுதியபோதுக் கூட எனக்கு அவரை தெரியவில்லை. பின்னர் என் தோழி மூலம் அவர்  படத்தில் என்னை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ய விரும்புகிறார் என்றதும் முதலில் தயங்கினாலும் பின்னர் ஒப்புக் கொண்டேன். அந்த முடிவுக்கு அவரது கதையும் அவருடைய மேக்கிங்  ஸ்டைலும் முக்கிய காரணம். லிப்ஃட் பயணம் என்னை இவ்வளவு தூரம் தூக்கி செல்லும் என்பதை நான் எதிர்பார்கவில்லை. அவர் இயக்கத்தில் அறிமுகமாகும் பாக்கியம் எனக்கு கிட்டியது  என்னால்  நம்பவே முடியவில்லை. இரு மொழிகளில் தயாராகும் 'நான்தாண்டா' திரைப் படம் என்னை நி...
“இவ்வுலகில் எல்லோருக்கும் இடமுண்டு” – ஆதி

“இவ்வுலகில் எல்லோருக்கும் இடமுண்டு” – ஆதி

சினிமா, திரைத் துளி
விஜய் சேதுபதி , சிவ  கார்த்திகேயன் , அதர்வா, விக்ரம் பிரபு  என்ற தன்னுடைய சக வயது நடிகர்களை சிலாகித்துப் பாராட்டிப் பேசுகிறார் ஆதி."அவர்களுடைய வெற்றி என்னைப் போன்ற மற்ற நடிகர்களுக்கு ,எங்களது நேரம் வரும் போது  நல்ல கதைகள் கிட்டக் கூடும் என்ற நம்பிக்கையை ஊட்டுகிறது .இது என் தாய் எனக்கு கற்று தந்த பாடம். இவ்வுலகில் எல்லோருக்கும் இடம் உண்டு என்பது தாரக மந்திரம் போல் சொல்லியே வளர்த்தார். அந்தப் பாடமே என்னை வெற்றியிலும் தோல்வியிலும் ஒரே மாதிரியான மன நிலையில் நிதானமாக செயல் பட வைக்கிறது" என் கிறார் ஆதி.இந்த மனநிலைக்கு அவரது  சகோதரர் சத்யா பிரபாஸ்  இயக்கத்தில் உருவாகும் 'யாகாவாராயினும் நா காக்க' படத்தின் தலைப்பும் காரணமாக இருக்குமா என்றக் கேள்விக்கு ,'இருக்கலாம்..  இந்தப் படம் நிச்சயமாக  என் திரைப்பட வரலாற்றில் ஒரு மைல் கல்லாக இருக்கும்" என்றார்.  ...