Shadow

Author: Dinesh R

“நான் முரட்டுப் பொண்ணு” – கார்த்திகா

“நான் முரட்டுப் பொண்ணு” – கார்த்திகா

சினிமா, திரைத் துளி
புறம்போக்கு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு குலு மணாலியில் முடித்து அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக ராஜஸ்தானுக்கு கிளம்பும் உற்சாகத்தில் இருந்தார் கார்த்திகா. "குலுமனாலியில் நடந்த படப்பிடிப்பு மிகவும் சந்தோஷமாகவும், மறக்க முடியாததாக இருந்தது. இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் பிரசித்தி பெற்ற வீடியோகேம் கதாபாத்திரமான லாரா க்ராஃப்டை போல முரட்டுத்தனமான ஆக்‌ஷன் ஹீரோயின் பாத்திரம். இது எனக்கு புதிய அனுபவம், மேலும் இந்தப் படத்தில் நான் ஆடியிருக்கும் "டேப்"டான்ஸ் பெரிய அளவில் பேசப்படும்" என்றார். "என் மேல் நம்பிக்கை வைத்து எனக்கு இந்த வாய்ப்பளித்த இயக்குநர் ஜனநாதனுக்கு என் உளமார்ந்த நன்றிகள். அவருடைய உலக அறிவு பிரம்மிப்பூட்டுகிறது. என் பார்வையில் அவர் ஒரு சரித்திர பேராசிரியராகவே தோன்றுகிறார். ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம்  ஆகியோருடன் நடிப்பதும், ஜனநாதனின் இயக்கத்தில் யூ டி.வி. motion pictures த...
அமேசான் என்கிற ஆச்சர்யம்!

அமேசான் என்கிற ஆச்சர்யம்!

கட்டுரை, மற்றவை
வருடமெல்லாம் கொட்டும் மழை. சூரிய வெளிச்சமே பார்க்காத தரை. இறுக்கமும் நெருக்கமுமாய் கண்ணுக்கெட்டிய தூரம் வரை மரங்கள் பின்னிப் பிணைந்த அடர்ந்த காடு. அதில் வசிக்கும் எண்ணற்ற அபூர்வமான பறவைகள், விலங்குகள். இவற்றோடு இதுவரை வெளி உலகத்தையே பார்த்திராத சில ஆயிரம் பழங்குடியினர். ஆச்சர்யமும், அமானுஷ்யமும் சூழ்ந்த இந்த வாழ்க்கைச் சூழலை கற்பனை செய்தாலே நம் முதுகு ஜில்லிட்டுப் போகும். மேலே சொன்ன சிறப்பான அமேசான் காடுகளையும், அதனை உருவாக்கிய பெருமையும் அமேசான் நதிக்கே போய்ச் சேரும். பூமிப் பரப்பில் உற்பத்தியாகும் கார்பன்டை ஆக்ஸைடை பெருமளவில் உட்கொள்வது இந்த காடுகள்தான். இங்கு மழை மிக அதிகமாகப் பெய்வதால் இதனை ‘மழைக் காடுகள்’ என்றும் அழைப்பர். அமேசான் காடுகளின் ஜீவாதாரமாய் விளங்கும் அமேசான் நதி உலகின் மிகப் பெரிய நதியாகும். சில இடங்களில் அதன் அகலம் சுமார் 150 மைல்கள். அதாவது 190 கி.மீ. மலைக்க வைக்கும் வ...
டேஞ்சர் டயபாலிக்கும், மகோன்னத காதலும்

டேஞ்சர் டயபாலிக்கும், மகோன்னத காதலும்

கட்டுரை, புத்தகம்
“நான் டேஞ்சர் டயபாலிக்டா.. இரும்புத்தூணுடா” என ‘சரவணா (2006)’ படத்தில் விவேக் சொல்வார். டயபாலிக் என்பது சாத்தானின் குணாதிசயத்தைக் குறிக்கும் சொல். தன்னை டெரராகக் காட்டிக் கொள்ள விவேக் உபயோகிக்கும் வார்த்தை என நினைத்திருந்தேன். ஆனால் அவர் ஒரு சூப்பர் ஹீரோ. 1987ஆம் ஆண்டு டிசம்பர் மாதமே, லயன் காமிக்ஸ் இத்தாலிய நாயகனான டேஞ்சர் டயபாலிக்கை தமிழில் அறிமுகப்படுத்தியுள்ளனர். பின் 26 வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் டேஞ்சர் டயபாலிக்கை 2013இல் களமிறக்கியுள்ளனர். அதுவும் ஜுன், டிசம்பர் என இருமுறை வந்துவிட்டார். டயபாலிக்கின் பூர்விகம் இத்தாலி. அங்கே டயபாலிக் காமிக்ஸ்கள் சுமார் 40 லட்சம் பிரதிகள் விற்கின்றனவாம். இத்தாலியைவிட அதிக மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டில் அத்தகைய விற்பனை சாத்தியமாக கிழக்கில் சூரியன் அஸ்தமித்தால்தானாச்சு.ஏஞ்சலா ஜிஸானி என்ற பெண்தான் டயபாலிக் கதாபாத்திரத்தை நவம்பர் 1962 இல் உர...
பாஷா இன் ‘சைவம்’ – இயக்குநர் விஜய்

பாஷா இன் ‘சைவம்’ – இயக்குநர் விஜய்

சினிமா, திரைத் துளி
சைவம் என்ற படத்தைத் தயாரித்து இயக்கி வருகிறார் இயக்குநர் விஜய். பொதுவாகவே படத்தின் தலைப்புக்கு மிகவும் மெனக்கெடுபவர் அவர். அது போலவே, தன்னுடைய படத்தில் அறிமுகமாகும் நாசரின் மகனுக்கு சரியான பெயர் சூட்ட விரும்பினார். பல்வேறு பொருத்தமான பெயர்களின் பரீசிலித்த பிறகு, நாசர் மற்றும் அவரது மனைவி கமீலா ஆகியோரின் உதவியோடு ' பாஷா' என பெயர் இட்டு ள்ளார். Guddu என்று செல்லமாக அழைக்கப்படும் ' பாஷா' அறிமுகப் படத்திலேயே இயக்குநரை பாராட்டுப் பத்திரம் வாசிக்க வைத்து விட்டார். 'என்னுடைய படங்களில் எப்போதுமே நாசர் சாருக்கு பொருத்தமான ஒரு கதா பாத்திரம் இருக்கும். அது நான் அவருடைய தீவிர ரசிகர் என்பாதால் மட்டுமன்று. அவர் எந்த பாத்திரம் ஏற்று நடித்தாலும் அதற்கு ஜீவன் கொடுத்து விடுபவர். என்னுடைய சைவம் படத்திலும், அவருக்கு கதையின் முதுகெலும்பான ஒரு முதியவர் பாத்திரம் உள்ளது. அந்த முதியவரின் இளம் வயது பேரனாக நடிக்க ...
ஔரங்கசீப்பின் உயில்

ஔரங்கசீப்பின் உயில்

கட்டுரை, சமூகம்
இந்தியாவை ஆண்ட கொடுங்கோலர்களில் முகலாய மன்னர் ஔரங்கசீப்பை அடித்துக் கொள்ள இன்றுவரை யாருமில்லை. பெற்ற தகப்பனை சிறையில் அடைத்து சகோதரர்களை கொலை செய்து ஆட்சியைப் பிடித்தவர். தீவிரமான மதவாதி, தன் நம்பிக்கைகளை மீறுகிறவர்களை ஈவிரக்கமில்லாமல் அழித்தொழித்தவர். இத்தனை மோசமான  பின்புலம் இருந்தாலும் தன் தனிப்பட்ட வாழ்வில் மிகவும் எளிமையாய் வாழ்ந்த மனிதர். இவரது வாழ்க்கை வரலாற்றினை  மெளல்வி ஹமீதுத்தீன் என்பவர் பாரசீக மொழியில் எழுதியிருக்கிறார். அதன்  எட்டாவது அத்தியாயத்தில் ஔரங்கசீப் எழுதிய  உயிலில் சொல்லப்பட்ட விஷயங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. . 1. நான் இந்தியாவின் சக்கரவர்த்தியாய் இருந்து இந்த நாட்டை ஆண்டேன் என்பது சத்தியமானது. ஆனால் நான் என் வாழ் நாளில் ஒரு நல்ல காரியம் கூட செய்ததில்லை என்பதற்காக மிகவும் வருத்தப்படுகிறேன். எனினும் இப்போது வருந்துவதால் எந்த பயனும் இல்லை. என் இறுதிச் சடங்குகளை எ...
கோலி சோடா விமர்சனம்

கோலி சோடா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இயக்குநர் பாண்டிராஜின் ‘பசங்க’ளை அப்படியே கோயம்பேடு மார்க்கெட்டிற்கு அழைத்து வந்து அசத்தியுள்ளார் விஜய் மில்டன். மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் நான்கு பையன்கள், ஆச்சியின் உதவியால் ஒரு மெஸ் திறக்கின்றனர். அதனால் கிடைக்கும் அடையாளத்தை இழந்ததும் அதை மீட்கப் போராடுகின்றனர். இதுதான் படத்தின் கதை. புள்ளி, சேட்டு, சித்தப்பா, குட்டிமணி ஆகியோர் தங்களது பெற்றோர் யாரென அறியாதவர்கள். மெஸ் தொடங்கியதும் ஓர் அங்கீகாரம் கிடைக்கிறது. ஒரு பிரச்சனையில் ஆளுக்கொரு திசையாகப் பிரிக்கப்படுகின்றனர். நால்வரில் நாயகன் என கொள்ளத்தக்க ‘புள்ளி’, பெளத்த மடாலயத்தில் வந்து அமரும் புறாவொன்றினால் ஞானதோயம் பெறுகிறான். நால்வருக்கும் இருத்தலைவிட அடையாளத்தை(!?) மீட்டெடுப்பது முக்கியமாகப்படுகிறது (பசங்களுக்கு தாங்கள் ‘மெஸ்’ நடத்துவதால் மதிக்கப்படுகிறோம் என்ற உணர்வே போராட வைக்கிறது. மெஸ் அவர்களது அடையாளமன்று). எட்டு வருடங்களுக...
ஸ்ரீ வல்லபாச்சார்யர் எழுதிய மதுராஷ்டகம் தமிழில்..

ஸ்ரீ வல்லபாச்சார்யர் எழுதிய மதுராஷ்டகம் தமிழில்..

Songs, ஆன்‌மிகம், காணொளிகள்
[youtube]http://www.youtube.com/watch?v=fm7W4hZdi-w[/youtube] அத‌ர‌‌ம் ம‌துர‌ம் வ‌த‌ன‌ம் ம‌துர‌ம்      ந‌ய‌ன‌ம் ம‌துர‌ம் ஹ‌ஸித‌ம் ம‌துர‌ம் ஹ்ருத‌ய‌ம் ம‌துர‌ம் க‌ம‌ன‌ம் ம‌துர‌ம்      ம‌துராதிப‌தேர் அகில‌ம் ம‌துர‌ம்உன் இதழும் இனியது; முகமும் இனியது; கண்கள் இனியது; சிரிப்பும் இனியது; இதயம் இனியது; நடையும் இனியது; மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!வசனம் மதுரம் சரிதம் மதுரம்      வஸ‌னம் மதுரம் வலிதம் மதுரம் சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம்      மதுராதிபதேரகிலம் மதுரம்உன் சொல்லும் இனியது; குணமும் இனியது; உடைகள் இனியது; உடலும் இனியது; இயக்கம் இனியது; உலவல் இனியது; மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!வேணுர்மதுரோ ரேணுர்மதுர:      பாணிற்மதுர: பாதௌ மதுரௌ ந்ருத்யம் மதுரம் ஸ‌க்யம் மதுரம்      மதுராதிபதேரகிலம் மதுரம்உன் குழலும் இனியது; கால் தூசியும் இனியது; கைகள் இனியத...
யாமிருக்க பயமே!

யாமிருக்க பயமே!

சினிமா, திரைத் துளி
  'பயம்' என்ற ஒரு வார்த்தை உள்ளடக்கிய ஏராளமான அர்த்தங்களை மையமாகக் கொண்டு முற்றிலும் மாறுபட்ட கதை அம்சமும்  காட்சி அமைப்பும் கொண்ட படம் தான் 'யாமிருக்க பயமே'. விண்ணைத் தாண்டி வருவாயா, முப்பொழுதும் உன் கற்பனைகள் , நீதானே என் பொன் வசந்தம் , ஆகிய வெற்றி படங்களைத் தொடர்ந்து ஜீவா நடிப்பில், பிரபல ஒளிபதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்கத்தில் ஏராளமான பொருட்செலவில் தயாராகும் 'யான்' படத்தைத் தயாரித்து வரும் ஆர்.எஸ்.இன்ஃபோடைன்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் மற்றும் ஜெயராமன் தயாரித்து வழங்கும் அடுத்த படத்தின் தலைப்புதான் 'யாமிருக்க பயமே'. இயக்குனர் கே.வீ.ஆனந்திடம் இணை இயக்குநராக பணியாற்றிய டி.கே. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். கிருஷ்ணா, ரூபாமஞ்சரி, ஆதவ் கண்ணதாசன், கருணா மற்றும் ஓவியா நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க நைனிடாலில் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ப...
உயிருடன் ‘கடல் கன்னி’ கண்டதுண்டா?

உயிருடன் ‘கடல் கன்னி’ கண்டதுண்டா?

நம்பினால் நம்புங்கள்
இஸ்ரேலுக்கு சுற்றுலா மேற்கொண்டு சென்ற பயணி ஒருவர் கடலில் கண்ட காட்சியால் திக்குமுக்காடிப் போனார். இவர் அக்காட்சியை வீடியோ பிடித்து இருக்கின்றார்.
தொடங்கியது “புறம்போக்கு”

தொடங்கியது “புறம்போக்கு”

சினிமா, திரைத் துளி
குலு மனாலியில், எஸ்.பி.ஜனநாதனின் “புறம்போக்கு” படப்பிடிப்புத் தொடங்கியது. இயக்குநர் அமீர் ஃபர்ஸ்ட் கிளாப் அடித்துத் தொடங்கி வைத்தார். இப்படத்தை யூ டி.வி. மோஷன் பிக்சர்சுடன் இணைந்து எஸ்.பி.ஜனநாதனின் பைனரி பிக்சர்ஸ் சேர்ந்து தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முழுமையடைந்த வாழ்க்கையும் இசைப்பயணமும் – சம்பூர்ணா

முழுமையடைந்த வாழ்க்கையும் இசைப்பயணமும் – சம்பூர்ணா

கட்டுரை, மற்றவை
சம்பூர்ணா, ஒரு காஃபி டேபிள் புத்தகம். இதில் கர்நாடக இசை கலைஞர் பத்மஸ்ரீ சுதா ரகுநாதனின் இசைப்பயணம் சித்தரிக்கப்பட்டுள்ளது. இவருக்கு கடந்த ஆண்டு,  “சங்கீத கலாநிதி” விருது வழங்கப்பட்டது. இவரது ஆரம்பக்கால இசை வாழ்க்கையாக கருதப்படும், பத்மபூஷன் டாக்டர் எம்.எல்.வசந்தகுமாரியின் சிஷ்யையாக இருந்ததில் தொடங்கி, கடந்த ஆண்டு கர்நாடக இசை உலகத்தின் மிகச் சிறந்த விருதுகளில் ஒன்றான ‘சங்கீத கலாநிதி’ பட்டம்பெற்ற வரை அனைத்து நிகழ்வுகளும் இந்தப் புத்தகத்தில் பேசப்பட்டுள்ளன. “கடும் உழைப்பே, புகழுக்கும் வெற்றிக்கும் விலையாகும். ஒவ்வொரு நிமிட வேலையிலும் முழு ஈடுபாடு, வெற்றியோ தோல்வியோ, எப்போதுமே தனது சிறந்ததைத்தான் கொடுக்க வேண்டும் என்ற தீர்மானம் அவசியம். நான் இந்நிலையை அடைந்ததற்கு, எனது ஒருமைப்பட்ட குவிமையமும், என்னைச் சுற்றியுள்ள சிறந்த ஆன்மாக்களும் கடவுளும் அளித்த ஆதரவே காரணம். இந்தப் ...
நெருப்பு சூறாவளி

நெருப்பு சூறாவளி

நம்பினால் நம்புங்கள்
காடுகளில் மரங்கள் அல்லது காய்ந்த புற்கள் ஒன்றோடு ஒன்று உரசும் போது தீ பற்றிக் கொள்ளும். இத்தகைய காட்டுத் தீ மிகவும் ஆபத்தான ஒன்று.   சமயங்களில் காற்றின் வேகம் மற்றும் வெப்பநிலையைப் பொறுத்து இந்த காட்டுத் தீ, நெருப்பு பந்தாக உருவெடுத்து நெருப்புச் சுழலாய் மாறும். காற்றின் சுழற்சியால் செங்குத்தாய் உருவாகும் இத்தகைய தீப் பந்துகள்  சமயங்களில் 30 முதல் 200 அடி உயரமும், சுமார் 10 அடி அகலமும் கொண்ட சூறாவளியாக மாறிவிடும். காற்றின் திசை மற்றும் வேகத்தை பொறுத்து இவை அதிக நேரம் நீடிக்கும்.இத்தகைய நெருப்புச் சூறாவளியின் வெப்பம் மிகவும் அதிகமாய் இருக்கும். இதனால் இது பயணிக்கும் பாதையில் உள்ள மரங்கள், செடிகள் எல்லாம் சொற்ப நேரத்தில் தீயில் கருகிப் போகும்.மிகவும் குறுகிய நேரத்தில் பேரழிவை உண்டாக்கிடும் தன்மையுடையது நெருப்புச் சூறாவளி. மரங்கள் செடிகள் மட்டும் இல்லாமல் காட்டில் வசிக்கும் பறவ...
18 தீக்குச்சிகளும் யட்சியும்

18 தீக்குச்சிகளும் யட்சியும்

கட்டுரை, சமூகம்
ஒரு சனிக்கிழமை (நவ. 23) அன்று இரண்டு குறும்படங்களை ஏவி.எம். ப்ரிவியூ தியேட்டரில் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. இரண்டையும் இயக்கியது மணிமாறன் எனும் திரைப்படக் கல்லூரி மாணவர். அரங்கம் நிறைந்திருந்தது. நின்று கொண்டும் சிலர் பார்த்தார்கள். இதற்கே படத்தை இரண்டு முறை திரையிட்டனர். முதற்படம் 18 STICKS. முதலில் ஆங்கிலக் குறும்படமோ என நினைத்தேன். நல்லவேளையாக தமிழ்ப்படம். அதுவும் ஈழம் சம்பந்தமான படம். 2009 இல் தன் குடும்பத்தை இழந்த யோகன், முள்ளிவாய்க்காலில் குண்டுகள் வீசப்படும் இடத்தில் சிக்கிக் கொள்கிறார். இறப்பது உறுதியாகிவிட்டது. அவரைச் சுற்றி கும்மிருட்டு. அவரிடம் ஒரு தீப்பெட்டி உள்ளது. அதில் 18 தீக்குச்சிகள் இருக்கின்றன. வீடியோ கேமிராவை இயக்கி விட்டு, ஒவ்வொரு தீக்குச்சியாகப் பற்ற வைத்தவாறு, தனது குடும்பத்திற்கு என்னானது என பேசத் தொடங்குகிறார். கேமிராவைப் பார்த்துப் பேசுகிறார். ...
சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்து

கட்டுரை, மற்றவை
மனிதன் தன் கலை ஆர்வத்தினாலும், உழைப்பினாலும் உருவாக்கிய செயற்கை அழகும், அற்புதங்களும் பார்த்த மாத்திரத்தில் நம்மை வாய்பிளக்க வைத்தாலும் கூட, இயற்கை தன் போக்கில் உருவாக்கி வைத்திருக்கும் அழகின் முன்னால் அவை யாவும் இரண்டாம் பட்சம்தான்.ஒரு காலத்தில் இந்த இயற்கையோடும் அதன் எழிலோடும் இணைந்து வாழ்ந்திருந்த நாம், கால ஓட்டத்தில் நம் தேவைகளை முன்னிறுத்தி இயற்கையை அழித்தே நம் வாழ்வாதாரங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். அந்த வகையில் இன்றைய தலைமுறை இயற்கையை அதன் அழகைக் கனவிலும், காலண்டரிலும் மட்டுமே பார்த்து ரசிக்கும் துர்பாக்கிய நிலைமைக்கு வந்துவிட்டது.பரபரப்பான நம் வாழ்க்கைச் சூழலில் இயற்கைக்கு இடம் இல்லாமல் போய்விட்டது.இயற்கை என்று சொன்னாலே மலையும், மலை சார்ந்த பிரதேசமும்தான் நம் மணக்கண்ணில் விரிகிறது. மலை தன்னுள்ளே அழகையும், அதன் ரகசியங்களையும் கொட்டிக் குவித்து வைத்திருப்பதை அதனூடே பயணித...