Shadow

Author: Dinesh R

மன்னிப்பாயா…???

மன்னிப்பாயா…???

கவிதை, படைப்புகள்
பத்து வருடங்களுக்கு முன் கலைந்த சோனியாவின் குங்கும பொட்டா இன்று ஆறு போல் ஓடுகிறது எம் ஈழத்தில் ...!!! நாம் என்று இருக்க... இடமொன்று இல்லையடா உனக்கு...??? கைதியாய் ஈழதிலும் அகதியாய் பிற நாட்டிலும் வாழ்வதா உன் விதி விலக்கு...??? நாடு ஒன்று இருந்தும் அண்டை நாட்டை கைப்பற்ற துடிக்கும் பாகிஸ்தானியர்களுடனா உன்னை தீவிரவாதி என்று துலாபாரம் செய்வது ...??? கோழையாய் போன தமிழனை நம்பி ஈனமாய் போன ஈழ தமிழ் மண்ணே....!!!!                  - மன்னித்து விடு என்னை...!!!!- சார்லி கவி...
உடலும் ஆத்மாவும் ஒன்றல்ல

உடலும் ஆத்மாவும் ஒன்றல்ல

ஆன்‌மிகம்
அலெக்சாண்டரின் மனம் நாலா புறமும் தறிக்கெட்டு ஓடும் குதிரைகளைப்போல் ஓடியது, அவனது சிந்தனையில் இந்தியாவை வெல்ல வேண்டும், அதில் தனது ஆட்சி அதிகாரத்தை நிலைநிறுத்த வேண்டும், அதுவும் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று ஓடியது. ஆயினும் அதில் சில சிக்கல்களும் அவிழ்க்க முடியாத மர்ம முடிச்சுகளும் மாறி மாறி தோன்றி அவனை அலைக்கழித்தது பாரதத்தை படை பலத்தால் வீழ்த்த வேண்டுமென்றால் மௌரிய பேரரசையும் அதன் கட்டுக் கோப்பான படை பலத்தையும் அழிக்க வேண்டும். அதற்குத் தடையாக இருக்கும் சாணக்கியனின் மதி நுட்பத்தை மழுங்கடிக்க வேண்டும், அது இயலுமா? தன்னால் முடியுமா? சாணக்கியனின் மதிநுட்பத்தை யாராலும் அசைத்துப் பார்க்க முடியாது என்கிறார்களே அவர் ஆயிரம் அரிஸ்டாடிலுக்கு இணையானவர் என்கிறார்களே அந்த மகா மேதையின் அறிவு பலத்தின் முன்னால் தனது சேனையின் பலம் சின்னாபின்னமாகி விடாதா? என்றெல்லாம் யோசித்து குழம்பினான், எதற்குமே அஞ்சா...
கீதை கொலைகார நூலா…?

கீதை கொலைகார நூலா…?

ஆன்‌மிகம்
உலகில் இன்று நிலைத்து நிற்கும் மதங்கள் அனைத்திற்கும் புனித நூல்கள் உண்டு. அப்படி புனித நூல்கள் இல்லாத மதங்கள் அஸ்திவாரம் இல்லாத கட்டிடம் போல் விரைவில் அழிந்துவிடும். புனித நூல்கள் இல்லாத மதங்கள் மட்டுமல்ல புனித நூல்களைப்பற்றி விழிப்புணர்வு இல்லாத மக்களை தன்னகத்தே கொண்டுள்ள மதங்கள் கூட காலச் சுழற்சியில் சிக்கி தவித்து சின்னாபின்னமாகி அழிந்து மறைந்துவிடும். அந்த வகையில் நமது இந்து மதத்திற்கு புனித நூல்களை பற்றிய பஞ்சம் ஒருபோதுமே இருந்ததில்லை ஆனால் புனித நூல்கள் பற்றிய விழிப்புணர்வு இந்து ஜனங்களுக்கிடையில் சில நூற்றாண்டுகளாக கடுமையான பஞ்சம் ஏற்பட்டுள்ளது விழிப்புணர்வு என்பதை கூட ஒரு பக்கத்தில் ஒதுக்கிவிட்டாலும் தனது மதத்திற்கு எது புனித நூல் என்றும் புனித நூல்கள் என்பது இருக்கிறதா என்று சந்தேகப்படும் அளவிற்கு இந்து மக்களிடையே அறியாமை இருள் பரவியுள்ளது.இத்தகைய பரிதாபகரமான அறியாமை நமது மக...
ஆலய வழிபாடும், வீட்டு வழிபாடும்

ஆலய வழிபாடும், வீட்டு வழிபாடும்

ஆன்‌மிகம்
இறைவனை வீட்டில் வழிபடுவதற்கும் ஆலயத்தில் வழிபடுவதற்கும் உள்ள வித்தியாசம் என்ன? பொதுவான வீட்டு சாப்பாட்டிற்கும் ஹோட்டல் சாப்பாட்டிற்கும் இடையே உள்ள வேறுபாடுதான் இதுவும், வீட்டு சாப்பாடுதான் கோவில் வழிபாடு, ஹோட்டல் சாப்பாடுதான் வீட்டு வழிபாடு, பொதுவாக வீட்டு சாப்பாட்டில் தான் ருசியும்.  சத்தும் அதிகளவில் இருக்கும், ஆனால் ஹோட்டல் சாப்பாட்டில் தரம் குறைவாகவே இருக்கும். கோவிலில் தீயவர்கள் நுழைந்தால் கூட நாம் கோவிலில் நுழைந்துவிட்டோம் என்று நினைத்து “இறைவா” என்னைக் காப்பாற்று என்று பிரார்த்தனை புரிவார்கள், நல்லவர்கள் நுழைந்தால் உலக அமைதி. நன்மைக்காக பிரார்த்திப்பார்கள், இதோடு இறைவனின் அருள் அவன் அமர்ந்திருக்கும் இடத்தில் மிக அதிகபட்சமாக கண்கிலடங்காத அளவில் நிறைந்திருக்கும், அதே சமயம் கோவிலுக்கு சென்று இறைவனை தரிசிக்க முடியாதவர்கள் வீட்டிலிருந்தே வழிபடலாம். ஹோட்டல் சாப்பாடு போன்றதுதான் இறைவழிபாட...
மொழியும் பழியும்

மொழியும் பழியும்

கதை, படைப்புகள்
மதிய நேரம், உண்ட உணவு தனது தாக்கத்தை என்னுள் ஏற்படுத்த,மெல்ல மெல்லஎன் முன்னே இருந்த அலுவலகத்தின் கணினி, மேஜை என அனைத்தும் மங்கலாகி கொண்டேபோகும் மாயம் நிகழத்தொடங்கியது.அமைதி என்னை சூழ்ந்த அந்த நேரத்தில் மேஜை அதிர.ச்சே,இந்த நேரத்துல தான் நமக்கு போன் வரணுமா!!. உள்ளத்தில் இருந்த எரிச்சலை பேச்சில் காட்டாமல்,"சொல்லு டா" என்றேன். "டேய் என் நண்பன் ஒருத்தனுக்கு ஏதோ ப்ரோக்ராம்மிங்ல (programming)டவுட் இருக்காம், அவன் கிட்ட உன் நம்பர் கொடுத்து இருக்கேன். போன்பண்ணுவான் பேசிக்கோ சரியா??"   "ஹ்ம்ம் சரி பேசுறேன்".அழைப்பை துண்டித்து இரண்டு நிமிடங்கள் கூட ஆகவில்லை,வேறொரு க்ரஹதிர்க்கு பயணிக்க தயாரானேன்.மீண்டும் அதே அதிர்வு,வேறு வழியில்லை தற்காலிகமாக பயணத்தை ரத்து செய்துவிட்டு அழைப்புக்கு செவி சாய்த்தேன்.தன்னை ஆங்கிலத்தில் அறிமுகப்படிதிக்கொண்டவன், மேலும் ஆங்கி...
கடவுளும் மனிதனும் ஒன்றுதானா…?

கடவுளும் மனிதனும் ஒன்றுதானா…?

ஆன்‌மிகம்
ஏழு வர்ணங்களும் ஒரே ஒரு வர்ணத்திலிருந்துதான் தோன்றியது. ஒரு விதையிலிருந்து தான் ஆயிரக்கணக்கான விதைகள் தோன்றுகின்றன. ஆதி மனிதன் ஒருவனில் இருந்துதான் மனித சமுதாய நதி பெருக்கெடுத்து ஓடுகிறது. வேதம் என்ற மூலப்பொருளிலிருந்துதான் இன்றைய நவீன சிந்தனைகள் உருவெடுத்து உள்ளன. இந்த வேத மகுடத்தில் உபநிஷதங்கள் என்ற வைரங்கள் பொறிக்கப்பட்டு அழகுக்கு அழகு சேர்கின்றன. உபநிஷத கருத்துக்கள் பல அந்த கருத்து என்ற வனத்திற்குள் சென்று சாமான்ய மனிதர்களால் பொருட்களை அடையாளம் காண முடியாது. ஆனால் உபநிஷத ஆரண்யங்களுக்குள் வாழுகின்ற மகா புருஷர்கள் மில சுலபமாக அதன் அனைத்து அங்கங்களையும் அடையாளம் காட்டி விடுவார்கள். எனவே அதன் உட்கிடையை புரிந்து கொள்ள யோகி ஸ்ரீ ராமானந்த குருவுடம் எனது சந்தேகங்களை கேள்விகளாக சமர்பித்தேன்.கேள்வி:  உபநிஷதங்கள் பொதுவாக எதைப்பற்றி பேசுகின்றன?குருஜி: மிக சுலபமாக இந்த கேள்வியை நீ கேட்டுவிட...
இன்னுமா இப்படி மனிதர்கள்

இன்னுமா இப்படி மனிதர்கள்

கதை, படைப்புகள்
   சென்னையில் புறப்பட்டு விழுப்புரத்திற்கு நுழைந்த பிறகு தான் திருக்கோவிலுருக்கு எந்த ரோட்டில் போக வேண்டுமென்ற குழப்பம் ஏற்பட்டது அரசு மருத்துவமனை அருகில் திரும்ப வேண்டும் என்று சொன்னார்கள், அங்கு வந்து பார்த்தால் நான்கு ரோடு பிரிகிறது, எந்த ரோடு எங்கே போகிறது என்று தெரிந்து கொள்ள விளம்பர பலகைகள் வைக்கப்பட்டிருக்கிறது தான், ஆனால் அதை படிப்பதற்கு எங்கே முடிகிறது. நீத்தார் அறிவிப்பு, பிறந்த நாள் வாழ்த்து என்று ஏகப்பட்ட நோட்டிஸ் ஒட்டும் பலகையாக தான் வழிகாட்டும் பலகை பயன்படுகிறது.    மருத்துவமனை மூலையில் காரின் வேகத்தை குறைத்து கையில் துணிப்பையுடன் நின்ற ஒருவனிடம் அரகண்டநல்லுருக்கு எப்படி போக வேண்டும் என்று வழி கேட்டேன். இதோ இப்படி மேற்கு பக்கமா போற ரோடுதான் சார். இங்கிருந்து சரியா பதினாறு மைல்தான் சார், என்றார் சரி ரொம்ப நன்றி என்று வண்ட...
நான் பைத்தியம் ஆன கதை

நான் பைத்தியம் ஆன கதை

கவிதை, படைப்புகள்
சந்தைக்கு போன அண்ணன் சாயங்காலம் வரும்போது சகதியோடு வந்து நின்றான் ஏனிந்த கோலமென்று இடைமறித்து கேட்கையில் இதுதான் கட்சி கொள்கை என்றான்அறுவடைக்கு போன அப்பா அரைநாளில் திரும்பி வந்து திருவோட்டை கையில் தந்தார் சோறு போட்ட நிலமெல்லாம் கூறுபட்டு மனையாச்சி ஓடுதான் மீதமென்றார்அம்மாவின் வளையலை அடகு வைத்த காசில் கல்லூரி போன தம்பி கண்ணிரண்டும் குருடாகி வாசலில் வந்து விழுந்தான் கவர்ந்த நடிகருக்கு கற்பூரம் காட்டும்போது கண்களை சுட்டதென்றான்ஆசைக் கனவுகளை அள்ளி சுமந்தப்படி பள்ளிக் கூடம் போன தங்கை கூடாததை படித்து விட்டு கருகலைக்க காசு கேட்டாள்அப்பாவின் முதுகில் ஆயிரம் சுமையேற கணவன் வீடு போன அக்கா குடிகார புருஷனிடம் விடுதலை வாங்கித் தாவென்றாள்மலையேறி படியேறி மண்ணில் உருண்டு புரண்டு கடுந்தவம் இருந்து பெற்ற பி...
ஒரு காதல் பிரயாணம்

ஒரு காதல் பிரயாணம்

கதை, படைப்புகள்
வெள்ளியன்று இரவு இல்லத்தையடைந்து, பாசம் கலந்த அந்த உணவை  உண்டு,இரண்டு நாட்கள் ஓய்வெடுத்த  பின்னர் மீண்டும் திங்களன்று  காலை  சென்னைக்கு பிரயாணம் செய்ய வேண்டும். சற்றே கடினமான ஒன்று தான் இது.அடுத்த வெள்ளியை நினைவில் கொண்டு இடையில்  வரும்  நான்கு நாட்களை கடத்த வேண்டும்.இப்படி ஒரு ஏக்கத்தோடு நான்கு நாட்கள் (வெள்ளிகிழமை கணக்கில்  வருவதில்லை) பனி புரியும் பலருள் நானும் ஒருவன்.சென்னையிலிருந்து  புறப்படும் பேருந்து சரியாக இயங்கினால் (ஓட்டுனரும் சரியான வேகத்தில் இயக்கினால்) அதிகபட்சம் 3.30 - 3.45 மணி நேரத்தில்  விழுப்புரம்   சென்றடையலாம்.(விழுப்புரத்தில் புறப்படும் பேருந்திற்கும் சென்னையை அடைய இதே நேரம் தான்  தேவை படும் என நான் நம்புகிறேன்).  வழக்கம்போல் அந்த வாரமும் வெள்ளியன்று ...
சுயம்வரம் – 5

சுயம்வரம் – 5

கதை, தொடர், படைப்புகள்
உணவு உண்ட பின் இருவரும் ரிசல்ட் வரும் வரை காத்திருந்தனர்.திடிரென்று ஒரு இடத்தில் அனைவரும் கூட்டமாக செல்ல,அருணும் கூட்டத்துள் புகுந்தான்.வேகமாக ராஜேஷை நோக்கி ஓடிவந்தவன்,"மச்சி.. நீ  செலக்ட் ஆயிட்ட." என்றான்"நீ?""என் தலையில நேஹான்னா தான் எழுதியிருக்கு போல!! சரி விடு. என் கஷ்டம் என்னோட. நீயாவது செல்க்ட் ஆகுடா. உனக்கு சான்ஸ் அதிகமா இருக்கு.""எப்படி சொல்ற?""ஏன்னா.. ரெண்டே பேர் தான்டா ஷார்ட்- லிஸ்ட் ஆகி இருக்காங்க.""நீ சீரியசாவே பேச மாட்டியா?" என்று அவனே தகவல் பலகையை காண சென்றான். அருண் சொன்னது உண்மை என்று அறிந்ததும் அவனால் ஆச்சரியத்தில் இருந்து மீளவே முடியவில்லை."டாய்.. ஃபர்ஸ்ட் ரவுன்டுக்கு ட்ரீட் தந்துட்டு செகன்ட் ரவுன்டுக்கு போறியா அல்லது ரெண்டுக்கும் சேர்த்து அப்புறமா தர்றியா?""டேய்.. நானே டென்ஷன்ல இருக்கேன். இருபது பேர்ல...
ரத்த சரித்திரம் விமர்சனம்

ரத்த சரித்திரம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மண்ணில் குருதி படாமல் எந்த சரித்திரமும் முழுமை அடைவதில்லை. எல்லைகளை விரிவுபடுத்துதல், இளைத்தவர்களை ஏய்த்தல், தலைமைப் பதவிக்கு விழைதல், ஆளைத் திணறடிக்கும் அழகியப் பெண்களிடம் மயங்குதல் என ஒவ்வொரு சரித்திரத்திற்குப் பின்னும், தனி மனிதன் ஒருவனின் ஆழ்ந்த அக வேட்கையே அடிநாதமாக இருக்கும். நட்பு, துரோகம், காதல், சூழ்ச்சி போன்ற சகல தந்திரங்களையும் கையாண்டு அவ்வேட்கையை தணித்துக் கொள்ள முயலும் பொழுது அடுத்த தலைமுறையினர்களுக்கு ஒரு படிப்பினையாக சரித்திரம் அங்கே உருவாகிறது. அப்படி ஐந்தாண்டுகளுக்கு (2005) முன் ஆந்திர மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய ஓர் உண்மைச் சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு 'ரத்த சரித்திரம்' என்னும் படத்தினை இயக்கியுள்ளார் ராம் கோபால் வர்மா. ஏழைப் பங்காளனான வீரபத்ராவும், அவரது மூத்த மகனும், ஆனந்தபுர மாநில அரசியல் பிரமுகர்களான நாகமணி மற்றும் நரசிம்ம தேவன் ஆகியோரால் கொல்லப்படுகின்றனர்...
சுயம்வரம் – 4

சுயம்வரம் – 4

கதை, படைப்புகள்
வினாத் தாளை திறந்ததும்,தேர்வு அறையில் இருந்த அனைவரும் சிரித்தனர். ராஜேஷ், 'அப்படி என்ன இருக்கு?' என ஆச்சரியமாகி வேகமாக வினாக்களை படித்தான்.1. சிறு வயதில் உங்களுக்கு பிடித்த லாலி பாப்பின் நிறம் என்ன?2. அமெரிக்கா ஏன் இப்படி இருக்கு?3. இந்தியாவின் முதுகெலும்பான விவசாயத்தை எப்படி நிமிர வைக்கலாம்?4. பெண்களிடம் சொல்லக் கூடாத ரகசியம்?5. ஒருவேளை இந்த தேர்வில் வென்று மணப்பெண்ணை பிடிக்கவில்லை எனில்?'அடப்பாவிங்களா.. என்ன இது உலக மகா மொக்கையா இருக்கே!!' என ராஜேஷும் சிரித்தான். அப்பொழுது அந்த அறையே அதிருவது போல ஒருவன் வினாத் தாளை வீசி எறிந்து,"வாட் தி ஹெல் இஸ் திஸ்? டோட்டல் ஹம்பக்!! டூ யூ திங்க் வீ  ஹேவ் நோ ஜாப்!! ரிடிகுலஸ். நான்சென்ஸ். ஐ ரைஸ் எ கொஸ்டின்.. கூ கேவ் யூ பெர்மிஷன் டூ ப்ளே வித் மை ப்ரிசீயஸ் டைம்" என்று ஆங்கிலத்திலே கத்தோ கத்...
சுயம்வரம் – 3

சுயம்வரம் – 3

கதை, தொடர், படைப்புகள்
முதல் பகுதி.. இரண்டாம் பகுதி.. ராஜேஷ் ஈ மெயில் அனுப்பி இரண்டு வாரங்கள் ஆகியிருந்தது. அலுவலகத்தில் வேளை பளு அதிகம் இருந்தது அவனுக்கு. பணி முடித்து வீடு திரும்பும் முன் அலுவலக நண்பர்களுடன் அருகே இருந்த 'கஃபே டே(cafe day)' போனான் ராஜேஷ். அன்றைய வேலை பளுவின் அலுப்பு மிகுதியாக இருந்தது.தேனீர் அருந்திக் கொண்டே  ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது அவனது நண்பன் அருண், "உனக்கு வர போற பொண்ணு, பார்க்க எப்படி இருக்கணும்னு எதிர்பாக்குற?" என்றான் ராஜேஷிடம். "ரொம்ப சிம்பிள். பார்த்த உடனே 'ஷீ இஸ் லுக்கிங் ப்யூட்டிஃபுல்' அப்படின்னு சொல்ல தோனனும், 'ஷீ இஸ் சோ ஹாட்' ன்னு சொல்ற மாதிரி இருக்க கூடாது" என்றான் ராஜேஷ்."அப்போ என் ஆளு நேஹா பார்க்க எப்படி இருக்கா?" என்று அருண் கேட்க, "வேணாம் டா சொன்னா உனக்கு கஷ்டமா இருக்கும்" என்று சொல்லி வீட்டுக்கு செல்ல தொடங்கி...
காதல் தூதன்

காதல் தூதன்

கதை, தொடர், படைப்புகள்
மாலை நேரம், சில்லென்று வீசும்  தென்றலை ரசித்தப்படி பூங்காவினுள்   நுழைந்தேன். வாயிலில் படர்ந்திருந்த  கொடிகள் புன்னகைத்தவாறே  வரவேற்றன. மழையை எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த மயில் அப்பொழுது  தான் தன் மீது விழும் தூறல்களை உணரத் தொடங்கியது போலும். மெல்ல தன் தோகையை விரிக்க ஆரம்பித்தது.நான் அருகிலிருந்த  புல் தரையில் அமர்ந்துக் கொண்டு ஒரு நொடி கண்களை மூடினேன்.குழந்தையை  பாசத்துடன்  தனது  மடியில்  தாங்கிக்கொள்ளும் அன்னையை   போல், இயற்கை அன்னை  அவள்  மடியில் என்னை தாங்கிக்  கொண்டிருப்பதை உணர்தேன். சுகமான  நொடிகள் அவை.கண் திறந்து சுற்றும்  முற்றும்  பார்த்த போது ,அருகே &nb...
சுயம்வரம் – 2

சுயம்வரம் – 2

கதை, தொடர், படைப்புகள்
"அவன் எங்க சாப்பிட்டானா??" என்று தன் மனைவியிடம் கேட்டார் பத்மநாபன்."வீட்டுக்கு வந்ததுல இருந்து அந்த பொட்டிய வச்சிக்கிட்டு என்னமோ பண்ணிட்டு இருக்கான்" என்றார் அவன் தாய்.மடி கணினிக்கு ராஜேஷின் தாய் வைத்த பெயர் "பொட்டி".ராஜேஷின் அறைக்கு சென்றவர், "என்ன ஆபீஸ் வேலையா??"  என்று கேட்டார்.அசடு வழிந்துகொண்டே, "அந்த பொண்ணுக்கு அனுப்ப என்னுடைய தகவல்கள் அனைத்தையும் தயார் படுத்திகிட்டு இருக்கேன்" என்றான். "அட.. உனக்கு கூட பொறுப்பு வந்துடுச்சு போல!! சரி.. சரி.. காட்டு பார்ப்போம்" என்று அதனை பார்க்க தொடங்கியவர்,"டேய்.. ராஜேஷ்  என்னடா இதெல்லாம். நீ எந்தெந்த கம்பெனில எத்தன வருஷம் வேலை பார்த்த என்ன கிழிச்சன்னு யாரு கேட்டா ??" என்றார் கடுப்பாக."அவ தான் ஈ மெயில் அனுப்ப சொல்லி இருக்காளே!!" என்றான் ராஜேஷ்... "அதுக்காக ஏதோ வேலைக்கு அப்ளை பண்ற மாதி...