Shadow

Author: Dinesh R

வன்கொடுமையும் வரதட்சணையும்

வன்கொடுமையும் வரதட்சணையும்

கட்டுரை, சமூகம்
வன்கொடுமை சட்டம் தலித்துகளாலும் வரதட்சணை சட்டம் பெண்களாலும் தவறாக பயன்படுத்தப்படுகிறது. அதை நீக்க வேண்டும். அல்லது நமக்கு தேவையானபடி மாற்றம் செய்ய வேண்டும்.எந்த சட்டம் நியாயமாக பயன்படுத்தப்படுகிறது? சாதாரண பங்காளி தகராறுக்கு சிவில் கேஸ் போட்டா உள்ள வைக்க முடியாது. கொலை முயற்சின்னு கிரிமினல் கேஸ் தான் பலர் போடுறாங்க. விபத்து நடந்தா விபத்துன்னு கேஸ் பதிக்காம கொலைன்னு கேஸ் குடுக்குறாங்க. இந்த சட்டங்களை எல்லாம் தவறாக பயன்படுத்துவதால் அவற்றை நீக்கி விடலாமா? இவற்றை நீக்க வேண்டும் என்று அவர்கள் குரல் கொடுக்காததன் கள்ளத்தனம் என்ன?வன்கொடுமை சட்டம் யாராலும் தவறாக பயன்படுத்தப்படுவதில்லை என்று சொல்லவில்லை. அவ்வாறு நியாயமாக இதை சுட்டிக்காட்டுபவர்கள், வச்சாத்தி, தருமபுரி போன்ற சம்பவங்களுக்கு அவர்கள் ஒரு கண்டனமாவது தெரிவித்தார்களா? இல்லை. சரி, பரவாயில்லை. இந்த சட்டத்தின் மூலம் என்ன செய்ய முடியும்? அ...
சேட்டை – இசை வெளியீட்டு விழா

சேட்டை – இசை வெளியீட்டு விழா

சினிமா, திரைச் செய்தி
"எனக்கு மொழி தெரியாததால் இங்க என்ன நடக்குதுன்னு புரியலை. ஆனா இந்தப் படத்தை எப்படி ஃபேமிலி சினிமாவாக மாத்த முடிஞ்சதுன்னு தெரியலை" என ஆச்சரியமாகக் கேட்டார் 'டெல்லி பெல்லி' படத்தின் கதாசிரியர் அக்ஷத் வெர்மா.சம்பிரதாய நேர்க்கோட்டில் சென்று கொண்டிருந்த விழா கானா பாலா கையில் மைக் கிடைத்ததும் கலகலப்படைந்தது. "எனக்கு இந்தப் படத்தில் எழுத வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. தயாரிப்பாளர் பெயர் கூட சரியா வாயில நுழையலை. ஏதோ ஸ்குரூவாலான்னு சொல்றாங்க. தமண் அண்ணன் இந்தப் படத்துக்கு பாட்டு எழுதணும்னு சொல்லி லேப்டாப்பைத் திறந்து காண்பிச்சார். நிறைய கெட்டவார்த்தைங்க இருக்கிற படமாச்சேன்னு நான் திற்க்கவே வேணாம்னு சொல்லிட்டேன். நானே இப்ப தான் சினிமால பாட்டு எழுத ஆரம்பிச்சிருக்கேன். கெட்ட வார்த்தைல பாட்டு எழுதி.. எனக்கும் தடைப் போட்டாங்கன்னா நான் என்னப் பண்ணுவேன்? அப்புறம் சீன் சொன்னாங்க. காதலிச்சு பொண்ணு ஏமாத்திட...
சந்தர்ப்பவாதமும் அதிகாரமும்

சந்தர்ப்பவாதமும் அதிகாரமும்

கட்டுரை, சமூகம்
பல தடைகளைத் தாண்டி 25 ஆம் தேதி வெளிவர இருந்த விஸ்வரூபம் படத்திற்கு 15நாட்கள் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தவ்ஹீத் ஜமாத்,த.மு.மு.க., இ.மு.லீக் உள்ளிட்ட 24 அமைப்புகள்(?) ஒன்று சேர்ந்து ட்ரைலரை மட்டும் பார்த்து விட்டு இந்திய முஸ்லீம்களை இழிவுப்படுத்துகிறது.இப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று உள்துறை செயலரை சந்தித்துமனு கொடுக்கின்றனர். உடனடியாக படத்தை மேற்கண்ட அமைப்புகளுக்கு திரையிட்டு காட்ட கமல்ஹாசன் கேட்டுக் கொள்ளப்படுகிறார். அதை ஏற்று அவர்களுக்கு படம் திரையிடப்படுகிறது. படத்தைப் பார்த்து விட்டு அவர்கள் இப்படம் வெளிவந்தால் ஒட்டு மொத்த தமிழகமும் சட்டம் ஒழுங்கு கெட்டுவிடும் என்றும், இதுமுஸ்லீம்களை இழிவுப்படுத்துகிறது என்றும் ஓலமிடுகின்றனர். இதை உடனே எதிர்பார்த்திருந்த தமிழக அரசு உடனடியாக இரவோடு இரவாக ஒரு உத்தரவை வெளியிடுகிறது. இப்படத்தை வெளியிட 15 நாட்கள் தடை விதிக்கப்படு...
அற்புதத்தில் ஒருவன்

அற்புதத்தில் ஒருவன்

அரசியல், கட்டுரை
'உதகையைத் தீ உய்த்த உரவோன்..''என்னது ஊட்டியை எரித்தார்களா?' என்று மேலே உள்ள வரியைப் படித்ததும் அதிர்ச்சியும், கோபமும் எழுந்தது. ஆனால் எரித்தது யார் என்றும், எதற்கு என்றும் அறிந்ததும் ஆச்சரியமும் பரவசமும் ஏற்பட்டது.இராஜராஜ சோழன் சேரர்களிடம் நட்பு நாடி தூது விட்டிருக்கார். தூதுவனை குடமலை நாட்டு மன்னர் கைது செய்து உதகையில் சிறை வைத்து விட்டார். அது அனுமார் வாலில் நெருப்பு வைத்த கதையாகி விட்டது. தூதுவனை மீட்க சோழரின் போர்ப்படை கிளம்பியது. உதகையை எரித்து, தூதுவனை மீட்டது. அத்துடன் நில்லாமல் பாண்டியன அமரபுஜங்கன், சேரன் பாஸ்கர ரவிவர்மன் ஆகிய இருவரையும் போரில்  வென்றார். வ.பி. 1023ஆம் ஆண்டு பாண்டிய மண்டலம் சோழப் பேரரசோடு இணைந்தது. பாண்டியன் அமரபுஜங்கனை வென்றதால் இராஜராஜ சோழனுக்கு பாண்டிய குலாசினி என்ற விருதுப் பெயர் ஏற்பட்டது. இது இராஜராஜ சோழனின் முதல் போர் என்பது குறிப்பிடத்தக்க...
ஐ.ஐ.டி. என்னும் மாயை

ஐ.ஐ.டி. என்னும் மாயை

அரசியல், கட்டுரை
ஏழைகளுக்கு எட்டாக் கனி, நடுத்தர மக்களின் கனவு, அறிவை (!?) அடைய உதவும் ராஜபாட்டை. அதான் இந்தியாவின் உயர்கல்வி நிறுவனம் ஐ.ஐ.டி. இதில் படித்தால் போதும் உங்கள் வாழ்க்கையே மாறிவிடும். அறிவுக்கு  நம் அகராதியில் ஐ.ஐ.டி என்றும் பெயர் உண்டு (திரைப்படங்களில் கூட விஞ்ஞானிகள் பொல வருவார்களே!!)"மத்தாவா மாதிரி நானும் காலேஜ் படிச்சேன்.. மேரேஜ் பண்ணின்டேன்னு பேசிண்டு இருக்காம, படிச்சா ஐ.ஐ.டி ல தான் படிப்பேன்னு இப்பவே சங்கல்பம் செஞ்சுண்டு, மாமா ஆத்து டியூசனுக்கு புறப்படு. அதுக்கு முன்னாடி, பெருமாளண்ட நன்னா வேண்டிக்கோ.  27%  ரிசர்வேசன் வேணும்னு சொல்லிண்டு திரியும் அந்த நாயக்கர் ஆளுங்கெல்லாத்துக்கும்  நல்லா பாடம் கொடுண்ணு வேண்டிக்கோடா. சுப்ரீம் கோர்ட் நமக்கு எப்பவும் ஃபேவரா தான் இருக்கும். ம்ம்.. இருந்தும் என்ன செய்ய? கோபால்சாமி அய்யங்கார், கிருஷ்ணசாமி ஐயர், கே.எம் முன்ஷி இவாளாம் Dr...
கண்ணியமான ஆண்களுக்காக

கண்ணியமான ஆண்களுக்காக

கட்டுரை, சமூகம்
பாலியல் தொல்லைகளை எதிர்கொள்வது இந்த இந்திய திருநாட்டில் மாதவம் செய்து பிறந்த மங்கையருக்கு புதிதல்ல. பாலியல் தொல்லைகள் வார்த்தைகள் முதல் வல்லுறவு வரை எத்தகைய அழுத்தத்திலும் இருக்கலாம். ஒவ்வொரு முறை பாலியல் வன்முறை சம்பவம் நடைபெறும்போதும் எல்லா சம்பவங்களும் ஒரே விதமான முக்கியத்துவம் பெறுவதில்லை. உதாரணத்துக்கு சமீபத்தில் டெல்லியில் நடந்த சம்பவத்தின் எதிர்ப்பாக நடைபெறும் போராட்டங்கள் இன்னும் தொடர்கின்றன. ஆனால் ஆதிவாசி பெண்களை காவல் துறை கூட்டம் கூட்டமாக வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் மற்றும் குஜராத்தில் தாயையும் மகளையும் ஒரு கிராமமே வல்லுறவுக்குட்படுத்தி கொன்ற சம்பவம் போன்றன எவ்வித கவனமும் பெறவில்லை. ஏன் என்பது மிகப்பெரிய கேள்வி. இத்தகைய சம்பவங்களும் முக்கியத்துவம் பெற வேண்டும், அவர்களுக்கு கிடைக்கும் உதவியும் நியாயமும் இவர்களுக்கும் கிடைக்க வேண்டும். ஆனால் எத்தகைய பாலியல் வன்முறையோ ஈவ் டீச...
மோடி மஸ்தான் இல்லை

மோடி மஸ்தான் இல்லை

கட்டுரை, சமூகம்
இம்மாதம் 13 மற்றும் 17-ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அமோக வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக திரு. நரேந்திர மோடி முதல்வராகிறார். மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 115 தொகுதிகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் வெறும் 61 இடங்களையே பெற்று மூன்றில் ஒரு பங்கு இடங்களை மட்டுமே பிடித்துள்ளது. ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்ட காந்திகளின் தொடர் பிரச்சாரம் காந்தி பிறந்த மண்ணில் எடுபடாமல் போய் விட்டது. மோடியை வீழ்த்தியே தீருவேன் என்று கங்கணம் கட்டிய மாநில காங்கிரஸ் தலைவரான அர்ஜுன் மோத்வாடியா போர்பந்தர் தொகுதியில்  17, 146 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அதே போல் குஜராத் எதிர்கட்சி தலைவர் ஷக்தி சின்ஹ் கோகில் தோல்வி அடைந்தவர்களில் முக்கியமானவர். 'ஒருத்தனுக்கு நிக்கவே முடியலையாம்; ஒன்பது பொண்டாட்டி கேட்டுச்சாம்' என வடிவேலு...
தோனி படத்து பிரகாஷ்ராஜ்கள்

தோனி படத்து பிரகாஷ்ராஜ்கள்

கட்டுரை, சமூகம்
கசாப்பிற்கு மரண தண்டனை கொடுப்பதால், நாட்டில் rarest of the rare குற்றங்கள் குறையும் என எச்சில் தெறிக்க தீர்க்கதரிசணம் சொன்னவர்களின் எச்சில் மண்ணில் விழும் முன் டெல்லியிலொரு கொடுமையான சம்பவம் நடந்து விட்டது. உடனே பெரும்பான்மையோரின் எதிர்வினை, "அவனைக் கொல்லணும்.. இல்லை கொன்றால் இறந்து விடுவான்..  நந்தா படத்தில் வருவது போல் அவன் பிறப்புறுப்பை அறுத்து விடணும்.. இம்மி இம்மியாகத் துடிக்க வைத்துக் கொல்லணும்" என்பதாக உள்ளது. ராம்சிங்கைக் கொன்றால்தான், இனி நாட்டில் இது போல் குற்றங்கள் நிகழாது என மக்கள் நம்புகின்றனர். புரையோடிய சமூகத்தில் குற்றங்களும் குறையப் போவதில்லை. மக்களின் வெகுவான ஆதரவோடு மரண தண்டனை அரசால் படு ஜோராக நிறைவேற்றப்படுவதும் நிற்கப் போவதில்லை.  ('சீரழியும் மாணவர்கள்' - கட்டுரையைப் படிக்கப் படத்தைச் சொடுக்கவும்.)  கசாப் கொடியவன். ராம் சிங் வக்கிரம் பிடிச்சவன்...
ஓடி விளையாடு பாப்பா!!!

ஓடி விளையாடு பாப்பா!!!

கட்டுரை, சமூகம்
நாங்க மூணு பேரு. எதுக்கும், யாருக்கும் பயப்பட மாட்டோம். சிம்புளா சொல்லனும்னா, பயம் இல்லாதது போலவே மெயின்டெயின் பண்ணுவோம்.  வேலை நிமித்தம் ஹாஸ்டல் வாழ்க்கை. ஹாஸ்டல் தான் எங்களுக்கு வீர-தளம் (இந்த ஆடுதளம், ஓடுதளம்னு சொல்வாங்களே அது போல!) ஆனா வீட்டில் நாங்களாம் பூனைதான்.சாம்பார் சரி இல்ல, டீ சூடா இல்ல, டி.வி. தெரில இப்படி எல்லாப் பிரச்சனையும் எங்ககிட்டதான் வரும். எங்க வாய்ஸ பயன்படுத்தி பிரச்சனைய தீர்த்துவைப்போம். அப்படிதான் ஒரு சாயங்காலம் மொட்ட மாடியில்  ஒரு பஞ்சாயத்து பண்ணிட்ருந்தோம்.நாங்க வழக்கம் போல் பேசிட்டு இருந்தோம். பேசிட்டு இருக்கும் போதே எங்களுக்கு வேற பக்கமா கவனம் போச்சு. ரோடு ஓரமா சில பள்ளி மாணவர்கள் ஸ்நாக்ஸ் வாங்கிச் சாப்பிட்டு சிரிச்சிச் சிரிச்சிப் பேசிட்டுப் போனாங்க. கொஞ்சம்தூரம் போனவுடன் ஸ்கூல் பையன்கள் ஒரு இரண்டடி பின்னால நடக்க, மகா இராணிகள் முன்னால் நடக்க ஆ....
ராஜ் கெளதமன் – “கேணி” இலக்கியச் சந்திப்பு

ராஜ் கெளதமன் – “கேணி” இலக்கியச் சந்திப்பு

கட்டுரை, மற்றவை
ஞாநி - சாதியை ஒழிக்க சாதி கலப்பு திருமணங்கள் அவசியம் என அம்பேத்கார் சொல்கிறாரே!!   எனக்கு அதில் சுத்தமாக உடன்பாடில்லை. கேட்டா காதலுங்கிறான். இவம் பண்றது காதலா? இழுத்துட்டு இல்ல ஓடுறான்! இருவர் இணைந்து வாழ்வது என்பது எவ்வளவு பெரிய விஷயம். இவங்க காதல்னு சொல்றதெல்லாம் ஒரு infatuation. மெச்சூரிட்டி இல்லாதவங்களா இருக்காங்க. நான் வயதை சொல்லல. Internal maturity-யைச் சொல்றேன். பரஸ்பரம் புரிந்து கொண்டு வர்ற காதலை நான் சொல்லல. கண்டிப்பா அதை அனைத்துத் தடைகளையும் எதிர்த்து சேர்த்து வைக்கணும். ஆனா அப்படிப்பட்டவர்கள் மிகவும் சிலரே. புதுமைப்பித்தன் கூட ஒரு கதையில் எழுதி இருப்பாரே!! குடிச்சுட்டு கிடப்பாங்களே. அப்படித்தான் ஆகிடும்.    நல்லா படிச்சேன். ஃபர்ஸ்ட் கிளாசில் பாஸாயிட்டேன். ஆனா வேலை கிடைக்கல. வேலைக்காக ஹிண்டு பேப்பர்லாம் பார்த்துட்டிருப்பேன். 'என்ன அப்ளை பண்ணிட்டியான்னு?' என...
காந்தி வழியில்..

காந்தி வழியில்..

கட்டுரை, சமூகம்
எங்க மாவட்டத்தில் தீவிர மரம் வளர்ப்புத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த கலெக்டரால் சட்டமியற்றப்பட்டது. குறைந்த பட்சம் மாவட்டத் தலைநகரில் மட்டுமாவது, தெருவோரம் காலியாக உள்ள இடங்கள், அரசுக்குச் சொந்தமாக உள்ள இடங்கள், யாவையும் மரக்கன்றுகள் நட்டு நகரத்தை பசுமையாக்கி விட வேண்டும் என்று முனைப்போடு சட்டமாகவும் இயற்றினர். அரசு அதிகாரிகள் மும்மரமாக செயல்பட, கலெக்டர் தன் கையால் முதல் கன்றை நட்டு, திட்டத்தை தொடங்கி வைத்தார்.அரசு அதிகாரிகள் தான் எப்ப எங்க யாரு  மாற்றலாவர்கள் என தெரியாதே!! அந்த சிங் கலெக்டருக்கு மாற்றல் கிடைச்சது. சில வருடங்கள் கழித்து, சிறப்புக் கலெக்டராக எங்க மாவட்டத்திற்கே ஆய்விற்கு வந்தார். ஒரு நகரம் பசுமையானதற்கு தான் காரணமென மகிழ்ச்சியோடு வந்தவர் கண்களுக்கு சாலையோரங்களில் செடிகள் எதுவும் தென்படவில்லை. கோவத்தில் சூடு தணிவதற்குள் என்ன நடந்தது என கண்டுபிடிக்க முழு வீச்சில் வி...
நீங்களும் பயங்கரவாதி தான் – மரண தண்டனை குறித்து

நீங்களும் பயங்கரவாதி தான் – மரண தண்டனை குறித்து

அரசியல், கட்டுரை
கசாப்பிற்கு நடந்தது போல் நாளைக்கு உங்களுக்கும் நடக்காது என்பது என்ன நிச்சயம்? கசாப் யாரோ ஒரு பயங்கரவாதி.. நானோ இந்திய திருநாட்டின் குடிமகன் என்ற அலட்சியம் வேண்டாம். யார் பயங்கரவாதி என்பதை நிர்ணயிப்பது அரசாங்கம். எவரையும் பயங்கரவாதி என முத்திரை குத்தும் 'பவர்' அரசிடம் உள்ளது. (உ.தா.: பேரறிவாளன், சாந்தன், முருகன்). ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்ற இந்திய அரசாங்கம் சில சட்டதிட்டங்களை வகுத்துள்ளது. ஆனால் இந்திய மக்களின் பேரால் சட்டதிட்டங்களை மீறி கசாப்பிற்கு தண்டனையை நிறைவேற்றியுள்ளது இந்திய அரசு.கருணை மனு எழுத, மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிக்கு சட்ட உதவியினை அரசு அளிக்க வேண்டும். ஆனால் அப்படி எந்த உதவியும் கசாப்பிற்கு அளிக்கப்படவில்லை. தன் கருணை மனுவை தானே எழுதுவது என்பது ஒருவனது மூளையை அவனே அறுவை சிகிச்சை செய்து கொள்வது போன்று மிக அபத்தமான செயல்.நவம்பர் 5 ஜனாதி...
காக்கர்லா

காக்கர்லா

கட்டுரை, புத்தகம்
காக்கர்லாவை நேரில் சந்திக்கப் போகிறோம் என்ற குறுகுறுப்பு ஒரு வாரமாகவே இருந்தது. ஒரு வழியாக டிசம்பர் 11, 2011 அன்று கிளம்பி அங்கே சென்றே விட்டேன். அங்கே என்பது புக் பாயின்ட் ஹால். அந்த அங்கேவிற்கு இதற்கு முன் நான் சென்றதில்லை. குத்து மதிப்பாக ஸ்பென்சர் பிளாசா எதிரில் என்பதை மட்டும் தெரிந்து கொண்டு பஸ் ஏறி விட்டேன். ஸ்பென்சர் பிளாசா நிறுத்தத்தில் இறங்கி, சாலை சந்திப்புகளைக் கடந்து எதிர்புறம் சென்றால், அங்கே இருந்தது மாநகர காவல்துறை அலுவலகம். சரி புக் பாயின்ட் அந்தப் பக்கம் அல்லது இந்தப் பக்கம் எங்கேயாவது நகர்ந்து போயிருக்கும் என இருபுறமும் தேடினேன்.  ஆனால் புக் பாயின்ட் கண்ணில் தட்டுப்படவில்லை. அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சாலையில் நடந்து செல்லும் மக்கள் நடமாட்டத்தை அங்குக் காண இயலவில்லை. ஏன் புத்தக வெளியீட்டு விழாவை ஞாயிறு அன்று வைக்கிறார்கள்?? அன்றாவது யாரேனும் வரக் கூடும் என்பதாலா!...
மனுஷ்ய புத்திரனும் பதினாறு நாற்காலிகளும்

மனுஷ்ய புத்திரனும் பதினாறு நாற்காலிகளும்

மற்றவை
நடு நாயகமாக மனுஷ்ய புத்திரன் வீற்றிருக்க அவரின் இரு பக்கமும் 16 காலி நாற்காலிகள் மேடையில் இருந்தது. உயிர்மையின் ஆதர்ச தொகுப்பாளர் ரோகினி நாற்காலிகளை நிரப்ப ஒவ்வொருவராக அழைத்தார். முதலில் வெள்ளை பைஜாமாவில் வந்திருந்த கவிப்பேரரசு வைரமுத்துவை மேடைக்கு அழைத்தார். அரங்க விதிமுறையின் படி மேடையில் எவரேனும் ஏறினால் கை தட்டல் ஒலி எழுந்தது. அப்படியே நாற்காலிகள் கை தட்டலின் ஊடே நிரம்பத் தொடங்கியது. எழுத்தாளர் இமையம் என்று ரோகினி அழைத்ததும், யாராவது எழுகிறார்களா என அனைவரையும் போல அரங்கைச் சுற்றும் முற்றும் பார்த்தேன். யாரோ ஒருவர் வெள்ளை வேட்டி சட்டையோடு எழுந்து மேடைப் பக்கமாக நடந்தார். சரி அவர் தான் இமையம் போலும் என மெல்ல கை தட்டத் தொடங்கினார்கள். ஆனால் அவரோ தனக்கும் அந்த விழாவிற்கும் சம்பந்தம் இல்லாதது போல் தலையைக் குனிந்து கொண்டு மிக அசிரத்தையாகவும், நிதானமாகவும் நகர்ந்தார். மெல்ல எழுந்த கை தட்டல் அ...
தொட்டுத் தொடரும் வன்மம்

தொட்டுத் தொடரும் வன்மம்

அயல் சினிமா, சினிமா
நாடு, மொழி, இனம், சாதி என எந்தவித பாரபட்சமும் பார்க்காத ஒன்று இருக்கிறது என்றால் அதுதான் பெண்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படும் வன்முறை. இத்தகைய வன்முறைகள் நடக்காத நாடும் இல்லை, நாளும் இல்லை.15ஆம் நூற்றாண்டு முதல் 18ஆம் நூற்றாண்டுக்கு இடைப் பட்ட காலத்தில் சூனியக்காரிகள் என அடையாளப்படுத்தப்பட்டு கொல்லப் பட்ட பெண்களின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம். ஐரோப்பாவில் தான் இத்தகைய கொடூரச் செயல் மதத்தின் பெயரால் பெரிய அளவில் நிகழ்த்தப் பட்டது. பொதுவில் உலகம் முழுவதுமே சூனியக்காரிகள் என சந்தேகப்பட படும் பெண்களின் நிலை அவலமும், துயரமுமானது.இன்றும் ஆஃப்ரிக்காவில் பெண்களுக்கு எதிராக இத்தகைய கொலைகள் வாடிக்கையாக இருப்பது கவலை தரும் செய்தி.சூனியக்காரிகள் என சந்தேகப்படுபவர்களைக் கொல்வது ஒரு சடங்காகவே பாவிக்கப்பட்டது. அவர்களை எங்கு, எப்படிக் கொல்ல வேண்டும் என வழிகாட்டும் ஒரு புத்தகமே லத்தீன...