Search

4 பேர் 4 விதம் 4 பேச்சு

நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க

“நம்முடைய எல்லா நல்லது கேட்டதையும் நம்மைச் சுற்றி இருப்பவர்கள் ஏதேனும் கூறிக் கொண்டே இருப்பார்கள். அப்படி, முக்கிய கதாப்பாத்திரங்களின் சூழ்நிலைகளை அடிப்படையாய்க் கொண்டு நடக்கும் நிகழ்வுகளைக் கொண்டது நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க திரைப்படம். ஒவ்வொரு மனிதனின் சூழ்நிலை மற்றவர்களுக்கு எவ்வளவு நகைச்சுவையாய் இருக்கக் கூடும் என்பதை சிரிப்புடன் கூறுகிறது இப்படம்.

படத்தைப் பற்றிப் பேசிய இயக்குநர் மாதவன், “DS வாசன் ஒளிப்பதிவில், சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பில், ரிஷால் சாய் இசையமைப்பில் அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளார் யுகபாரதி. படம் விரைவில் வெளியாக உள்ளது. இதுவரை பார்த்த தொழில்நுட்பக் கலைஞர்கள், நபர்கள் எல்லோருமே நாலு வார்த்தை நல்ல விதமா தான் படத்தைப் பற்றிச் சொல்லிருக்காங்க. இது ரசிகர்களுக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும்” என்றார் நகைச்சுவையுடன். இப்படத்தை, ஸ்ரீ கிருஷ்ணா டாக்கீஸ் தயாரித்துள்ளது.