
கூண்டுக்குள் நம்சுதந்திரம்
பூகம்பம், புயல், சுனாமி
வந்தால்தான் நமக்குள்ளே
தேசிய ஒருமைப்பாடு
அப்பொழுதான் அனைவரும்
ஒன்றுபடுவோம்......
பரவாயில்லை அடிக்கடி
இவைகள் வரட்டும்
அந்த சில காலமாவது
ஒற்றுமையாய் இருப்போம் .....!நிவாரண நிதியிலும்
நித்தம் நித்தம்
சீர்கேடு ....!62 ஆண்டுகள் ஆகின்றது
ஆயினும் குண்டு துளைக்காத
பாதுகாப்புகுள் நம் சுதந்திர உரை ......!
சுதந்திரம் இப்பொழுது
சுத்தமாக சுற்றாத
இயந்திரம் ....!மகாத்மா சொன்னார்
எப்பொழுது ஒரு பெண்
இரவில் தனியாக
பயமில்லாமல் நடமாட
முடிகிறதோ அதுதான்
உண்மையான சுதந்திரம்
என்று .....!இன்று நிலைமை
அதைவிட மோசம்
இப்பொழுது பகலில் கூட
பெண்கள் சுதந்திரமாய்
வெளியே வரமுடிவதில்லை
பர்தா போடாமல் வெளியே
வந்தால் ஆசிட் அபிஷேகம்
அதுமட்டுமா ?பாலியல் வன்முறை
பேருந்து நிறுத்தம்,
கல்லூரிகளில்,பள்ளிகளில்,
அலுவலகங்களில்...!மொட்டுக்களுக்கு
மோக உணர்வு ஊட...



