
மனித மனம்
நான்கு ரவுடிகள் தீபாவை துரத்திக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தனர் ....எதேச்சையாக அந்த தெரு பக்கம் வந்த சுரேந்தர் பார்த்த மாத்திரத்திலேயே துரத்தப்படுவது தன்னுடன் வேலை பார்க்கும் தீபாதான் என்பதை தெளிந்து அந்த ரவுடி கும்பலை விரட்டிப்பிடித்து அடித்து துவைக்கையில் கேட்டது அலாரம் டைம் பீஸின் மணியொலி ...கலைந்தது கனவு....
அலாரத்தை ஆப் செய்ய முயன்றபோதுதான் கௌரி முனங்கினாள் ,"ஏங்க அலாரம் அடிக்கல போன் அடிக்குது ..ஏந்தான் இப்டி இருக்கீங்களோ "என்று அந்த உறக்கத்திலேயும் தெளிவாக கடிந்து விட்டு மீண்டும் உறங்கிவிட்டாள் ...
"அட ஆமா போன் அடிக்குது "
"ஹலோ....."
"டேய் சுரேந்தரு அப்பா பேசுறேன் டா "
"என்னப்பா இந்த நேரத்ல என்ன ஆச்சு ?"
"ஒண்ணுமில்ல ....அம்மாக்கு கொஞ்சம் ஒடம்பு சரியில்ல...நீ கொஞ்சம் வந்தா தேவலைன்னு தோனுச்சு ..இப்போவே சொன்னாதான நாளைக்காவது வரமுடியும் ...அதான் சொன்னேன்..."
"சரிப்பா வரேன் ...அம்மாவ அத...















