Shadow

திரைத் துளி

“இது கொண்டாட்ட நேரம்” – ஹீரோ சந்தானம்

“இது கொண்டாட்ட நேரம்” – ஹீரோ சந்தானம்

சினிமா, திரைத் துளி
சந்தானம் கதாநாயகனாக நடிக்கும், 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு கும்பகோணத்தில் நடந்தது. படப்பிடிப்பு முடிவடைய இருப்பதால், அதைக் கொண்டாட நினைத்த படக்குழுவினருக்கு இன்னொரு கொண்டாட்டத்துக்கான காரணம் காத்திருந்தது . மூத்த ஸ்டுன்ட் இயக்குநர் விஜயன் மாஸ்டரின் பிறந்த நாள் கொண்டாட்டம் தான் அது. பட்டு வேட்டி சட்டையில் சந்தானமும், பட்டுப் புடைவையில் கதாநாயகி ஆஷ்ணா சாவேரியும் ஒரு விசேஷதுக்கான உடையில் வலம் வந்தனர். அதிரடிக் காட்சிகளில் பஞ்ச் அடிக்கும் விஜயனின் பிறந்த நாளை சிரிப்பு சரவெடியில் பஞ்ச் அடிக்கும் சந்தானம் கொண்டாடியதை விஜயன் மாஸ்டர் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். காதல் காட்சிகளில் மட்டுமின்றி , அதிரடி சண்டை காட்சிகளில் கூட சோபிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் உள்ள சந்தானம் கொண்டாட இதை விட வேறு தருணமோ , வேறு சரியான காரணமோ கிடைக்காது....
“நானே எனக்கு மேனஜர்!” – ஹன்சிகா

“நானே எனக்கு மேனஜர்!” – ஹன்சிகா

சினிமா, திரைத் துளி
அநாமதேயர்கள் தாங்கள்தான் எனக்கு மேனஜரெனத் தவறான தகவல் பரப்பி வருவதாக அறிகிறேன். எனது சினிமா தோழமைகளின் கவனத்திற்கு, நானோ என் அம்மாவோ தவிர்த்து, என் படங்களுக்கான தேதிகள் குறித்து தயாரிப்பாளரிடம் பேச வேறெவருக்கும் அதிகாரமில்லை. அநாமதேயர்களின் நடவடிக்கைகளுக்கு நாங்கள் எவ்வகையிலும் பொறுப்பில்லை. - ஹன்சிகா...
டமால் ஏன்? டுமீல் ஏன்?

டமால் ஏன்? டுமீல் ஏன்?

சினிமா, திரைத் துளி
அஞ்சு பத்து லஞ்சம் கொடுத்தாவது தன்னுடைய காரியத்தைச் சாதித்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கும் சாதாரணமானவன் நாயகன் மணி. வசதியாக வாழ்ந்து கொண்டிருந்தவன் சூழ்நிலை காரணமாக வேலையை இழக்கிறான். இதற்கிடையில் இளவரசு, காமாட்சி சுந்தரம் என்ற இரு சமூக விரோதிகளின் பிடியில் சிக்குகிறான். இந்த இருவரில் ஒருவரிடம் சிக்கினாலும் மணியின் உயிர் போவது உறுதியாகிறது. அவன் செய்த தவறு என்ன, ஏன் இவர்கள் இவனைத் தேடுகிறார்கள், மணி இவர்களிடம் சிக்கினானா அல்லது தப்பினானா என்பதே முடிவு. கதையின் நாயகன் மணியாக வைபவ். கதையின் நாயகியாக ரம்யா நம்பீசன். இளவரசாக கோட்டா சீனிவாச ரா காமாட்சி சுந்தரமாக ஷாயாஜி ஷிண்டே நடிக்கின்றனர். இவர்கள் தவிர மனோபாலா, சார்லி முதலியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். பணிக்குழு: >> எழுத்து, இயக்கம் - ஸ்ரீ >> தயாரிப்பு - கேமியோ ஃப்லிம்ஸ் சி.ஜே.ஜெயகுமார் >> ப்ரொடக்ஷன் ...
பெரும் விருட்சத்தின் விழுது நான் – ‘பத்மபூஷன்’ கமல்

பெரும் விருட்சத்தின் விழுது நான் – ‘பத்மபூஷன்’ கமல்

சினிமா, திரைத் துளி
ஜனாதிபதி மாளிகையின் சரித்திர அழுத்தமும், என்னுடன் விருது பெற்றவர்களின் தனிப்பெரும் சாதனைகளும் எனக்கு மீண்டும் பணிவு கற்றுத் தந்தது. இத்தகைய விழாக்களை நடத்தவேண்டிய அவசியமென்ன என்ற கேள்விக்கான பதில் எனக்குக் கிடைத்தது. எனக்கு வழங்கப்படும் விருது என்னை பெருமைப்படுத்த மட்டுமன்று. என் மண்ணையும் பெருமைப்படுத்தும் செயல். மீண்டுமொரு குடிமகனாக என் கடமைகளை நிறைவேற்ற உறுதிமொழி அளிக்கும் விழாவாகவும் நான் இதை உணர்ந்தேன். தேசிய கீதம் இசைத்த பொழுது மனது ஏனோ நெகிழ்ந்தது. நான் ஒரு பெரும் விருட்சத்தின் விழுது என்பதுனர்ந்து நெஞ்சம் விம்மியது. மனத்திரையில் தேசபக்தியுள்ள என் தாய் தந்தையாரின் முகம் தோன்றி மறைந்தது. கொஞ்சம் குழந்தைத்தனமான உணர்வு என்றாலும் பிடித்திருந்தது. ஒரு சிலர் இந்தியா கிரிக்கெட் விளையாடி வென்றால் புல்லரித்துப் போவார்கள். நான் இந்தியா எத்துறையில் வென்றாலும் பூரிப்படைவேன். இன்று பல்துறை வித...
49ஓ – மழைப் பாடல்

49ஓ – மழைப் பாடல்

சினிமா, திரைத் துளி
மழைதான் நம் வாழ்வின் ஆதாரம் என்பதைக் குறிக்கும் வகையில் 49ஓ படத்தின் பாடல் ஒன்று இசையமைப்பாளர் கே இசையில், 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில், “பொண்ணுங்களே இப்படித்தான்” என்ற பாடலைப் பாடிக் கவர்ந்த ஜெயமுர்த்தியின் குரலில், யுக பாரதியின் அருமையான வரிகளில் சமீபத்தில் பதிவு செய்யப்பட்டது. திரையில் கவுண்டமணி விவசாயியாகத் தோன்றி மழை வேண்டிப் பாடும் இப்பாடல் (சிங்கிள் ட்ராக்), இந்த மாதம் இறுதியில் 31ஆம் தேதி, ரேடியோ மிர்ச்சியில் வெளிவர உள்ளது. விரைவில் இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா பிரம்மண்டம்மாக நடைப்பெற உள்ளது .பாடல் வரிகள் இதோ!! அம்மா போல அள்ளித்தரும் மழைதான், அவ ஆதாரமா நின்னா இல்லை குறைதான், அவ நட்டு வச்ச நாத்தை எல்லாம் கதிர் ஆக்குறா, எங்க புள்ள குட்டி அத்தனைக்கும் பசி ஆத்தறா!!...
பாடகி கீர்த்திகா

பாடகி கீர்த்திகா

சினிமா, திரைத் துளி
நடிகர் உதயாவின் மனைவியும், ‘ரா ரா’ படத்தின் தயாரிப்பாளருமான கீர்த்திகா உதயா, பின்னணிப் பாடகியாகவும், டப்பிங் கலைஞராகவும் பல படங்களில் பணியாற்றி வருகிறார். சந்தோஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘இனம்’ படத்தின் நாயகிக்கு மூன்று மொழிகளில், பின்னணிக் குரல் ¬¬கொடுத்திருக்கிறார் கீர்த்திகா உதயா. இப்படத்திற்கு முன்னதாக விஜய் இயக்கத்தில் வெளிவந்தா ‘தாண்டவம் படத்திற்காக நடிகை லட்சுமி ராய்க்கும், ராம்கோபால் வர்மா இயக்கியுள்ள ‘நான்தாண்டா’ படத்திற்காக நாயகி அனைகாவிற்கும் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். தற்போது, ‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’ படத்தின் நாயகி அர்ஷிதாவிற்கும், ‘யாமிருக்க பயமே’ நாயகி ரூபா மஞ்சரிக்கும் பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார். “ரா ரா, நாந்தாண்டா, இனம்’ ஆகிய படங்களில் பாடல்களைப் பாடியும் இருக்கிறார். மாமனார் ஏ.எல்.அழகப்பன் - தயாரிப்பாளர், கணவர் உதயா – நடிகர், மைத்துனர் விஜ...
விஞ்ஞானி வித்யா

விஞ்ஞானி வித்யா

சினிமா, திரைத் துளி
தமிழ்த் திரைப்பட உலகில் பல்வேறு துறையைச் சார்ந்தவர்களும் நடிகர்களாக அறிமுகமாவது உண்டு. அந்த வகையில் நடிகைகள் அவ்வளவாக வருவது இல்லை. ஆனால் சமீபமாக பல்வேறு துறையை சேர்ந்தவர்களும் நடிகைகளாக அறிமுகம் ஆகிறார்கள். இயக்குநர் விஜய் இயக்கத்தில், Think Big ஸ்டுடியோஸ் தயாரிக்கும் 'சைவம்' படத்தின் மூலம் மிக முக்கிய பாத்திரத்தில் அறிமுகமாகும் வித்யா ஒரு விஞ்ஞானி ஆவார் . 'வித்யா நடிப்பின் மீதான தன்னுடைய அணுகு முறையில் மிகவும் கவனத்துடன் இருந்தார். திரை உலகின் நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வதில் ஏகப்பட்ட ஆர்வம் காட்டி வந்தார். காரைக்குடியில் நடந்த படப்பிடிப்பில் அவர் காட்டிய ஆர்வமும் ஈடுபாடும் பெருமைக்குரியது' என்று அவரது அறிமுகத்தைப் பற்றிப் பெருமையாகக் கூறினார் இயக்குநர் விஜய் . குருத்தணு உயிரியல் (Stem cell biology) என்ற பிரிவில் ஆராய்ச்சியாளராக இருக்கும் வித்யா தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் பொ...
எக்ஸ்-மேன் 2014

எக்ஸ்-மேன் 2014

சினிமா, திரைத் துளி
இந்த வருடத்தின் மிகப் பெரிய கோடைக்காலத் திரைப்படம் 'கடந்த காலத்தின் எதிர் காலம்'. வரலாற்றில் மிகப் பெரிய சாதனை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் X Men- Days of Future past தமிழில் 'கடந்த காலத்தின் எதிர்காலம்' என்ற பெயரில் மே மாதம் 23ஆம் தேதி வெளியிடப்படுகிறது . ஆங்கிலம் , ஹிந்தி , தமிழ் மற்றும் தெலுங்கில் திரையிடப்படும் இப்படம் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய படமாகும் . சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் வெள்ளோட்டம் உலகமெங்கும் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. உலகத்தரம் வாய்ந்த நடிகர்களான ஹக் ஜேக்மேன் , ஜேம்ஸ் மகவே ஆகியோர் நடிப்பில் பரயன் சிங்கர் இயக்கும் இந்த பிரம்மாண்டமான படைப்பு ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் உலகெங்கும் வெளியிட உள்ளது ....
‘நண்பேன்டா’ அனிருத்

‘நண்பேன்டா’ அனிருத்

சினிமா, திரைத் துளி
யுவன் சந்திரசேகர் ஷெட்யூல் ரொம்ப டைட்டாக இருந்ததால், வடகறி படத்திலிருந்து ஒரே ஒரு மெலடியுடன் விலகிக் கொண்டுள்ளார். படத்தை விரைவாக முடிக்க வேண்டுமென்பதால், படத்தில் வேறு இசையமைப்பாளரை உபயோகிக்கவும் யுவன் முழுமனதுடன் சம்மதித்துள்ளார். இந்நிலையில் அனிருத், வடகறி படத்தில் இசையமைக்க 22 வயதாகும் தனது நண்பர் விவேக் சிவாவைப் பரிந்துரைத்துள்ளார். கிளாச்சிகல் மியூசிக் பயின்ற விவேக் சிவா, அனிருத் இசையமைத்த 3, எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, இரண்டம் உலகம், வேலை இல்லா பட்டதாரி போன்ற படங்களில் சவுண்ட் இன்ஜினியராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. விவேக் சிவா, 23 வயதாகும் மெர்வின் சாலமனுடன் இணைந்து, 4 பாடல்களை வடகறி படத்திற்காக கம்போஸ் செய்துள்ளனர். லண்டன் ட்ரினிட்டி ஸ்கூலில் செர்ட்டிஃபை செய்யப்பட்ட பியானிஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் பின்னணி இசையையும் இந்த இணையே கம்போஸ் செய்கின்றனர். இ...
‘பளபள’ சந்தானம்

‘பளபள’ சந்தானம்

சினிமா, திரைத் துளி
பி.வி.பி. சினிமா சார்பில் பியர்ல்.வி.போட்லுரி மற்றும் ஹேண்ட் மேட் ஃபிலிம்ஸ் (Hand made films) தயாரிப்பில் அவர் கதாநாயகனாக நடிக்கும் 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்' படத்தின் ஃபர்ஸ்ட்-லுக் ரசிகர்களின் மத்தியிலும், திரையுலக பிரமுகர்கள் குறிப்பாக சந்தானத்தின் பரந்த கதாநாயகர்கள் நண்பர்கள் வட்டத்துக்குள்ளும் இருந்து வரும் பாராட்டு அவரை உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்த்திரையுலகில் ஏறத்தாழ எல்லா நடிகர்களுக்கும் நெருங்கிய நண்பனாக நடித்து, அவர்களுக்கு நண்பனாகவே மாறி விட்ட சந்தானத்துக்கு அவர்களின் பாராட்டு மிகவும் ஊக்கம் தந்து இருக்கிறதாம். கதாநாயகனாக நடிப்பதற்கென தீவிர எடைக் குறைப்பில் ஈடுபட்டு, இருபது வயது இளைஞன் போல் பொலிவுடன் இருக்கும் சந்தானம், இந்தப் படத்துக்காக பிரத்தியேக பயிற்சிகள் மூலம் நடனம் மற்றும் சண்டை பயிற்சியும் மேற்கொண்டு உள்ளார். இந்தப் படத்தில் சந்தானத்துக்கு இணையாக 'வல...
முடி துறந்தார் நாசர்!

முடி துறந்தார் நாசர்!

சினிமா, திரைத் துளி
நடிப்பில் தனக்கென தனி ஒரு பாணியை வகுத்து வைத்துள்ள நாசர், தன்னுடைய கதாபாத்திரம் சோபிக்க எந்த விதமான முயற்சியும் மேற்கொள்வார் என்பதற்கு பல முன்னுதாரணங்கள் உண்டு. இதோ மற்றொன்று. சமீபத்தில் இயக்குநர் விஜயின் 'சைவம்' படப்பிடிப்பின் போது, அவர் ஏற்று நடித்துள்ள ஒரு முதியவர் கதாபாத்திரத்துக்கு என்று பிரத்தியேகமாக சிகை அலங்காரத்தில் ஒரு மாற்றம் செய்ய வேண்டி இருந்தது. அவரது முன் தலையில் ஒரு பகுதியை சவரம் செய்தாக வேண்டும் என்ற சூழ்நிலை. இதனால் அவர் தற்போது நடிக்கும் மற்ற படங்கள் பாதிக்கப்படுமோ என்று தயங்கிய போது இயக்குநர் விஜய், ஒப்பனைக் கலைஞரும் சிகை அலங்கார நிபுணருமான பட்டணம் ரஷீத் அவர்களை கலந்து ஆலோசித்தார். அவரது ஆலோசனையின் பேரில் நாசரின் அசல் சிகை அலங்காரம் போலவே ஒரு விக் (Wig) செய்தனர். அதனால் நாசர் மற்ற படங்களில் இடையூறு இல்லாமல் நடித்தார். படத்தின் ரஷ்சஸ் (Rushes) பார்த்த இயக்குநர், ‘நாசர் ...
எடையை ஏற்றி இறக்கும் அபூர்வ நடிகை

எடையை ஏற்றி இறக்கும் அபூர்வ நடிகை

சினிமா, திரைத் துளி
கிரிக்கெட் நமது நாட்டில் மதத்தை போல் இன்றியமையாதது என்று கூறப்படுகிறது. அத்தகைய கிரிக்கெட் விளையாட்டை தமிழ் நாட்டுக்காக விளையாடிய லக்ஷ்மி ப்ரியா சந்திர மௌலி இப்போது 'கள்ளப்படம்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். மனிதவள மேம்பாட்டுத் துறையில் மேற்படிப்பு முடித்த, தமிழ் பேசும் சென்னைவாசியான லக்ஷ்மி ப்ரியா ஆர்வத்தின் பேரில் தியேட்டர் பிளேஸ் (theatre plays) நடித்தும் வருகிறார். சமீபத்தில் 'கள்ளப்படம்' படப்பிடிப்பின் போது இயக்குநர் வடிவேல் ஒரு சில காட்சிகளுக்காக லக்ஷ்மி ப்ரியாவை ஒரு சில கிலோ எடை கூட வேண்டும் எனக் கூறினார். “அவ்வளவுதானே சார்? அப்படியே ஆகட்டும்” என்று கூறிச் சென்றார். அளவில்லாமல் சாப்பிட்ட இனிப்புகளின் உதவியால் எடையைக் கூட்டவும் செய்தார். காட்சியைப் படமாக்கிய பிறகு, இயக்குநர் மீண்டும் எடையைக் குறைக்கச் சொன்னார். தன்னுடைய சீரிய முயற்சியாலும் கடினமான உடல் உழைப்பாலும் லக்ஷ்மி ப்ரியா...
விஜய் சேதுபதியின் மெல்லிசை

விஜய் சேதுபதியின் மெல்லிசை

சினிமா, திரைத் துளி
வித்தியாசமான கதைக்களங்களில் ஜொலிக்கும் விஜய் சேதுபதி , சமீபத்தில் தான் கேட்டு வியந்த கதை என்று எல்லோரிடமும் பாராட்டும் 'மெல்லிசை' படத்தின் இயக்குநர் ரஞ்ஜித் ஜெயக்கொடி. இயக்குநர் ராமிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய இவர் இந்தப் படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார். 'நவீனமாக்கபட்ட நகர வாழ்வின் சிக்கலைச் சொல்லும் கதை. இந்த நகரத்தை எத்தனை பேர் கவனிக்கிறார்கள் என்று தெரியாது. ஆனால் இந்த நகரம் ஏதோ வகையில் அனைவரையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது.  இந்த நகரத்துக்கு கழுகு கண்கள். இங்கு எல்லோரும் சுவராசியமாக வாழ்கிறோம். ஆனால் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்கிறோமா என்பது தான் இந்த கதையின் கரு' என்றார் இயக்குநர். மேலும், படத்தின் தலைப்பைப் பற்றிப் பேசும் போது, “'மெல்லிசை’ என்பது மேலும் மேலும் கேட்கத் தூண்டும் சுகமான இசை வடிவம். இந்தப் படத்தின் கதாபாத்திரங்கள் இசை சம்பந்தப்பட்டவர்கள். அதுவே 'மெல...
‘சிலந்தி’ வில்லனின் “மது மாது சூது”

‘சிலந்தி’ வில்லனின் “மது மாது சூது”

சினிமா, திரைத் துளி
“சிலந்தி” படத்தில் வில்லன் வேடத்தில் நடித்தவர் சந்துரு. இவர் ராஜஷந்ரு (Rajashanthru) என்று தனது பெயரை மாற்றிக் கொண்டிருப்பதுடன். “மது மாது சூது (Madhu Maadhu Soodhu)” என்ற படத்தைத் தயாரித்து இயக்கி ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தின் கதாநாயகிகளாக பெங்களூரைச் சேர்ந்த மாடல் சந்தனா மற்றும் சென்னையைச் சேர்ந்த விக்னேஷா அறிமுகமாகிறார்கள் மற்றும் நிறைய புதுமுக நடிகை, நடிகர்கள் அறிமுகமாகிறார்கள் இப்படத்தைப் பற்றி ராஜஷந்ரு, “போதைக்கு அடிமையான ஒரு இளைஞனின் வாழ்க்கையை மையமாக வைத்து கதை அமைக்கப்பட்டுள்ளது. 2014 புத்தாண்டு பிறக்கும் அந்த ராத்திரியில் ஒரு ஹைடெக்கான பாரில் அந்த இளைஞ சந்திக்கும் எதிர்பாராத சம்பவங்களின் தொகுப்பை வைத்து பரபரப்பாக இப்படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளோம். திருப்பூரில் உள்ள ஒரு பாரை வாடகைக்கு எடுத்து அதன் உள்கட்டமைப்பை (interior) ரூபாய் 50-லட்சம் செலவில் மாற்றி அமைத்து 40-நாட்கள...
கமலின் உத்தமனும் மனோரஞ்சனும்

கமலின் உத்தமனும் மனோரஞ்சனும்

சினிமா, திரைத் துளி
உத்தமன் என்ற 8ஆம் நூற்றாண்டுக் கூத்துக் கலைஞன் பாத்திரத்திலும், மனோரஞ்சன் என்ற 21ஆம் நூற்றாண்டின் சினிமா உச்ச நட்சத்திரமாக மற்றொரு பாத்திரத்திலும் கமல்ஹாசன் நடிக்கிறார். மனோரஞ்சனைக் கண்டெடுத்த நட்சத்திர அந்தஸ்திற்கு உயர்த்திய, குருவாக சினிமா இயக்குநராக K.பாலசந்தர் அவர்களும் நடிக்கிறார். மனோரஞ்சனின் மனைவியாக ஊர்வசியும், மனோரஞ்சனின் மாமனாராக திரு.K.விஸ்வநாத்தும், 8ஆம் நூற்றாண்டில் நடக்கும் உத்தம வில்லனின் கதையில் மனநோயால் பாதிக்கப்பட்ட இளவரசியாக பூஜா குமாறும், 21ஆம் நூற்றாண்டுக் கமலின் ரகசியக் காதலியாக ஆண்ட்ரியா ஜெரமியாவும் நடிக்கின்றனர். முத்தரசன் என்ற 8ஆம் நூற்றாண்டுக் கொடுங்கோல் சர்வாதிகாரியின் பாத்திரத்தில் நாசரும், ஜேகப் ஜக்காரியா என்ற பாத்திரத்தில் ஜெயராமும், ஜெயராமின் வளர்ப்பு மகளாக கதையின் முக்கிய பாத்திரமொன்றில் பார்வதி மேனனும் நடிக்கிறார்கள். M.S.பாஸ்கர் சொக்கு செட்டியார் என்ற ...