
“திருடன் போலீஸ்” பற்றி எஸ்.பி.சரண்
சென்னை 28, குங்குமப்பூவும் கொஞ்சு புறாவும் , மற்றும் தேசிய விருது பெற்ற ஆரண்ய காண்டம் ஆகிய படங்களைத் தயாரித்த S .P.சரணின் கேபிடல் பிலிம் வொர்க்ஸ் நிறுவனத்துடன் கெனன்யா பிலிம் சார்பில் J . செல்வகுமார் இணைந்து தயாரிக்கும் முற்றிலும் மாறுபட்ட கதை அம்சம் கொண்ட படம் 'திருடன் போலீஸ்'.திருடன் போலீஸ் படத்தைப் பற்றி, அப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.பி.சரண், “நான் எப்போதுமே என் படங்கள் வித்தியாசமாக இருக்க வேண்டும் என மெனக்கெடுவேன். எனது முந்தையப் படங்கள், எனக்கு அத்தகைய படங்களாகவே அமைந்தன. சிறிது காலம் படத்தயாரிப்பில் நான் ஈடுபடாமல் இருந்தாலும், இப்போது 'திருடன் போலீஸ்' படத்தின் இயக்குனர் கார்த்திக் கூறிய கதை மீண்டும் உடனடியாகப் படம் எடுக்கும் ஆவலைத் தூண்டியது. எனது முந்தையப் படங்கள் போலவே இந்தப் படமும் எனது தயாரிப்பு நிறுவனத்துக்கு ஒரு மணி மகுடமாகத் திகழு...