
ஜவான்- விமர்சனம்
பெரிய ஹீரோக்களின் திரைப்படங்கள், கமர்ஷியல் இயக்குநர்களின் திரைப்படங்கள் ஆகியவற்றில் நாம் கேட்கக்கூடாத கேள்வி, 'கதை என்ன?' என்பது. ஏனென்றால் பெரும்பாலும் அது ஒரே கதை தான். நல்வழியில் செல்லும் நாயகனின் வாழ்க்கையைத் தீய வழியில் செல்லும் வில்லன் சிதைப்பான். நாயகன் மீண்டு வந்து பழிவாங்குவார். சில சமயங்களில் நாயகன் பழிவாங்கத் தவறினால் அவரின் மகன் வந்து பழி வாங்குவார். இதன் வகையறாக்கள் அப்பாவும் மகனும் சேர்ந்து பழி வாங்குவது, அப்பாவிற்காக மகன் பழி வாங்குவது, மகனுக்காக அப்பா பழி வாங்குவது என உலக சினிமா வரலாறு தொடங்கியதில் இருந்து இது தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கம். உதாரணத்திற்கு நம் இயக்குநர் அட்லியின் படங்களில் முதல் படமான ‘ராஜா ராணி’யை மட்டும் விட்டுவிட்டு பிற படங்களைப் பாருங்கள்.
’தெறி’ தன் குடும்பத்தைச் சிதைத்தவனைப் பழி வாங்கும் ஹீரோ. “மெர்சல்’ தன் அப்பா அம்ம...








