Shadow

“எல்லோரையும் கவர வேண்டும்” – கணேஷ் வெங்கட்ராமன்

அறிமுகமான  ‘அபியும் நானும்’ முதல் கமலஹாசன் மோகன்லால் நடிப்பில் உருவான ‘உன்னை போல் ஒருவன்’, வெளி வர இருக்கும் ‘தீயா வேலை செய்யணும் குமாரு‘, ‘சந்திரா‘ முதல் ‘எங்கேயும் எப்போதும்’ சரவணன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் லிங்குசாமியின் ‘இவன் வேற மாதிரி‘ உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரமாக நடிக்கும் கணேஷ் வெங்கட்ராமன், “நல்ல கதாபாத்திரங்கள் கிடைப்பது அரிது. அதிலும் நல்ல இயக்குனர், நல்ல தயாரிப்பு நிறுவனம் என்ற கூட்டணியுடன் அமைவது  என்பது அறிய வரம். எனக்காக படம் ஓடும் காலம் வரும் வரை ஓடும் படத்தில் நடிக்க வேண்டும் என்பதே  என் குறிக்கோள். மேற்கூறிய ஒவ்வொரு படத்திலும் என்னுடைய கதாபாத்திரம் ஒன்றுக்கொன்று வித்தியாசம் காட்டும். இணை நாயகன், துணை நாயகன் என இல்லாமல் படம் பார்க்கும் எல்லோரையும் என் கதாபாத்திரம் கவர வேண்டும். அதுதான் என் உண்மையான வெற்றி. மக்கள்  மத்தியில் என் முகம் பிரபலமாக, பிரபலமாக என்னை கதாநாயகனாக வைத்து கதைகள் எழுதி வரும் இயக்குனர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். மும்பையில் பிறந்து வளர்ந்தாலும் எனக்கு தமிழ் மொழி அந்நிய மொழி இல்லை, மிகவும் பரிச்சயமான மொழி. இன்று  எனக்கு தமிழ் மொழி பிரசித்தம். ‘ தீயா  வேலை செய்யணும் குமாரு ‘ படத்தில் எனக்குக் கிட்டிய வாய்ப்பு என்னை தமிழ் நாட்டின் பட்டித் தொட்டி எங்கும் பிரபலமாக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இனிமேல் இடைவெளி இல்லாமல் நானும் தீயா வேலை செய்யணும்” என்று பெருமிதத்துடன் கூறினார்.